🌾3 : 2🌾
மூன்று தெய்வங்களின் செயல்களும் அதன் காரணங்களும்
🌿ப்ரும்மா🌿
முதலில் ஜீவராசிகள் பூமியில் பிறவி எடுக்க, முதலில் ஏதோ ஒரு வடிவில் பிறக்க வேண்டும். அந்த பிறப்பை நிர்ணயிக்க, அதற்கென உள்ள தெய்வம் தான் ப்ரும்மா.
நாபிக் கொடியில் இருந்து 18 இதழ் கொண்ட தாமரையில் ப்ரும்மா இருக்கும் ரூபத்தைப் பல இடங்களில் நாம் பார்க்கலாம். இவர் அனைத்து ஜீவன்களையும்,
அந்த காரியங்களுக்கு தான் கர்மா என்று பெயர். அதாவது வினை (இங்கு வினை என்பது செயல் எனப் புரிந்து கொள்ள வேண்டும்).
அவ்வாறு அநுபவிக்க, அந்த ஜீவனானது இந்த பிறப்பி்ல் எந்த இடத்தில், என்னவாக,
இதில் நம் முன்னோர் வாக்குப்படி, முதலில் ஒரு ஆன்மா ஓரறிவு உயிரினமாகத் தோன்றும்.
ஏன் எனில், அப்போது இந்த ஜீவனிற்கு சுயமாக எதையும் தர்மத்தின் அடிப்படையில் யோசிக்கத் தெரியாது.
ஆனால் இறுதி வரை தர்மத்தின் வழி நடந்து, மறு பிறவிக்கான கர்மாவைச் சேர்க்காத வரை, அந்த ஆன்மாவானது பரமாத்மாவைச் சென்று சேராது.
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே*
எனப் பாடுகின்றார். இவ்வாறு ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு விதமாய்ப் பிறப்பெடுக்க வைப்பதால் ப்ரும்மா படைக்கும் கடவுள் ஆகிறார்.
அடுத்ததாக, விஷ்ணு பகவான். ப்ரும்மாவின் தோற்றத்திற்கு பல புராணங்கள் உள்ளன. ஆனால் விஷ்ணு, சிவன் இவர்கள் இருவரில் யார் யாரைப் படைத்தனர் என்னும் பெரிய கேள்வி என்றும் எல்லோர் மனதிலும் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.
இதற் பதிலுக்கு வேதங்களைத் தொகுத்து வழங்கிய வியாஸர்
நாரதர் அவரது குழப்பத்தைக் கண்டு, அதற்கான காரணத்தை வினவினார். அவரது குழப்பத்தைக் கேட்டு அறிந்தவர், ஸாத்விக வழியில்
நாமும் இக்குழப்பத்திற்கு விடையை அதிலேயே தேடுவோம். விஷ்ணு பகவானுக்கு ஆதியந்தம் அற்றவர் என்று பெயர். முதலில் அதை விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பார்ப்போம்!
அவன் மூலமற்றவன்; ஆனால் ப்ரபஞ்ஜத்தில் அவனே அனைத்திற்கும் மூல முதலானவன்;
பூமியும் பூமி போன்ற ப்ரபஞ்ஜமும் கொண்ட, அனைத்து ஜீவராசிகளின் பாரத்தைத் தாங்குபவன் அவனே;
இப்ப்ரபஞ்ஜத்தின் அற்புத ஒளி பொருந்திய மகிமை அவனே;
மிக அழகிய நேர்த்தியான தோள் அணிகலன்களைத் தரித்தவன் அவனே;
எல்லா ஜீவன்களும் அவனே;
எல்லா ஜீவன்களையும் படைக்க மூல காரணமானவனும் அவனே;
எல்லா தீய சக்திகள் மற்றும் அஸுரர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி, தீமையை அழிக்கும் மூலகாரணம் நானே!
ஆஹுஸ்த்வா-ம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்-நாரத-ஸ்ததா |
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே ||
*என்றுமுள்ள புருஷனாகவும், ப்ரகாஸிக்கும் முதல் தேவனாகவும், பிறப்பில்லா தெய்வமாகவும் கூறினர்;
நீயும் அவ்வாறே கூறுகிறாய்*
என்றான். அதற்கு பகவான்,
இந்த்ரியாணாம் மன-ஷ்சாஸ்மி பூ:தானா-மஸ்மி சேதனா || (22 – 394)
வேதங்களுள் ஸாமவேதமாய் இருக்கிறேன்; தேவர்களுள் இந்திரனாய் இருக்கிறேன்; இந்த்ரியங்களுள் மனஸாய் இருக்கிறேன்; ப்ராணிகளிடம் உணர்வாய் இருக்கிறேன்;
வஸூனாம் பாவக-ஷ்சாஸ்மி மேரு:
ஷிகரிணா-மஹம் || (23 – 395)
ருத்ரர்களில் ஷங்கரனாய் இருக்கிறேன்; யக்ஷ-ரக்ஷர்களுள் குபேரனாக இருக்கிறேன்; வெளிச்சக் கதிரில் அக்னியாக இருக்கிறேன்; சிகரம் கொண்ட பர்வதத்தில் மேருவாக இருக்கிறேன்;
பூமியில் நாம் பிறந்து விட்டால் போதுமா? வாழ வேண்டும் அல்லவா? அதற்கு நமக்கு என்ன வேண்டும்? பூமியில் ஜீவன் (நாம்) வாழ ஆதாரமாக, ஆன்ம பலம் பெற வேண்டும்.
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை, நம் ஒவ்வொருவருக்குமான கர்மா என்ன என்பது விதிக்கப் பட்டுள்ளது. அதன்படி நாம் வழுவாமல் நடந்தால்
எனவே நம் வாழ்நாளில் நம் செய்யும் ஒவ்வொரு காரியமும், தர்ம – அதர்ம விதியில் ஏதே ஒன்றுக்கு உட்பட்டு விடும். அவ்வாறு ஒரு விதியின் கீழ் ஆட்படும் காரியங்களுக்கு,
அதில் இந்த ஜீவனின் வாழ்க்கை முடிந்து போகையில் மீதம் இருக்கும் பலன்களுக்கு ஏற்றவாறு மேலே சொன்னபடி, ப்ரும்மா அதற்கான மறு பிறவியைத் தருவார்.
எனவே, ஒவ்வொரு பிறவியிலும் இந்த ஜீவன் அநுபவப்பட்டு, திருந்தி, அதர்மங்களை விட்டு, தர்மவழிப்படி வாழ ஆரம்பிக்கும்.
ஆதலால் இந்த ஜீவன் பிறவியின் போது அடைய வேண்டிய அத்தனை வினைகளையும் தர்மம் தவறாது கொடுத்து, அந்த ஜீவனை வழிநடத்திக் காப்பதற்கான தெய்வமே விஷ்ணு. எனவே அவரே காக்கும் தெய்வம் ஆகிறார்.
இறுதியாகச் சிவ பெருமான். அவரது தோற்றம் பற்றியும் பலவித புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மஹாபாரதத்தின் மோக்ஷ தர்மப் பகுதியில் முப்பெரும் தெய்வம் பற்றிக் கூறுகையில் அவர்களின் தோற்றம் பற்றிக் கூறும் ஸ்லோகத்தில்,
நாராயண: பரே தேவஸ்
தஸ்மாஜ் ஜாதஷ் சதுர்முக:
ஸசஸர்வ - க்ஞாதாம் கத:
ஆதி முதல்வனான நாராயணன் என்னும் விஷ்ணுவிடம் இருந்து சதுர்முகம் கொண்ட தெய்வமாகிய ப்ரும்மா தோன்றினார். அப்படியே, ப்ரும்மாவிடம் இருந்து ருத்ரணாகிய சிவன் தோன்றினார் என்று உள்ளது. ஸ்ரீமத் பாகவதத்திலும் இது பற்றிய ஒரு கதை உள்ளது.
ஜனகர்
ஸனந்தனர்
ஸனாதனர்
ஸனத் குமாரர்
ஆகிய நால்வரும். இவர்கள் பிறவியெடுத்ததும், அவர்களின் தர்மமான லௌகிக வாழ்வில் ஈடுபடாமல்,
எனவே அவர்களை அழிக்க, தனது இருபுருவ மத்தியில் இருந்து சக்தியை வெளிப்படுத்தினார்.
(அதாவது, ஸத்வ குணத்துடன் இருக்கும் விஷ்ணுவிடம் இருந்து ஜீவன்களில் ரஜோ குணத்தை அளிக்கும் ப்ரும்மாவும், அவற்றின் தாமஸ குணத்தை அழிக்கும் ருத்ரணாகிய சிவனும் பிறந்தனர்.)
*திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்* என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந்நூலில்
*கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழில்ஆர் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய், விளங்கொளியாய்,
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்*
(Source: சிவபுராணப் பாடல் - 25)
எனக்கூறி, அப்படிப்பட்ட இறைவனைப் புகழ்வது தவிர நான் வேறேதும் அறியேன் என்கிறார்.
ஆனால், இதே *தேவி மஹாத்மிய*த்தில், சிவன் மஹா ருத்ரனாகக் கூறப்படுகிறார்.
ஆனால் அதில் விஷ்ணு மட்டும் அழிவற்றவராய் என்றும் நித்தியமானவராக இருந்து,
(”கொல்வது எமதர்மன் இல்லையா?” எனக் கேள்வி வரும். சிவன் தரும் கணக்கின் படி, சரியான நேரத்தில் எமன் இட்டுச் செல்வான்.)
நாம் ஏற்கனவே விஷ்ணு பகவான் நாம் நமது வாழ்வில் பண்ணுகின்ற கர்மாக்களுக்கான நல்வினை, தீவினை இரண்டையும் தான் நமக்குத் தருவார் என்பதைப் பார்த்தோம். அந்த கர்மவினைக்கான பலன்களை நாம் அநுபவித்துக் கொண்டு வருகையில் நம் பிறவிக்காலம் முடிந்ததும்,
அதில் நம் கர்மாவுக்கு ஏற்ற முடிவின் காலம் வருகையில், கர்ம பலனுக்கு ஏற்ற நல் மோக்ஷத்தையோ, துண்பமான இறப்பையோ,
இம்மூன்று செயல்களுக்கான தெய்வங்களைப் பார்த்தோம்.
வாழ்க்கையில் எப்படி கல்வி கற்க?
தர்ம நெறியுடன் வாழ?
உடலும் மனமும் எப்படி கட்டுப்படுத்தி வாழ?
என்பது கேள்வி ஆகிறது.
அதற்காகத்தான், அந்த தெய்வங்களுடன் இணைந்து இருக்கும்படியான தேவிகளாக
லக்ஷ்மி
பார்வதி
என மூன்று பெண் தெய்வங்களையும் காட்டினர்.
(பொதுவாக நம் முன்னோர் எல்லா விஷயங்களையும் கதை, உறவு, இப்படியே தந்ததன் காரணம், நாம் எளிதில் புரிந்து கொண்டு மறக்காது இருக்கவே. மற்றபடி இதில் விவாதங்களுக்கு இடமில்லை.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁
Elders & genius whom know these all well pls forgive me. Bt this is mainly for persons whom are in confusion on our religion, today's anti-youth & kids, to understand easily with proof or reference. So till your known details come in post, pls accept & tolerate🙏
”சிவ புராணம் 25-ம் பாடல் விளக்கத்தில், *புகழுமாறு ஒன்றறியேன்* என்பது இறையைப் புகழக்கூடத் தெரியாதவன் என்று மாணிக்கவாசகர் தம்மை தாழ்த்திக் கூறியது.” என வாசிக்கவும்.🙏





