#BharathVruksh
1)ஸரஸ்வதி தேவி
ப்ரும்மா படைக்கும் செயலைச் செய்வதற்கு முதலில் அவருக்கு ஆன்ம ஞானம் வேண்டும் என்பதால், விஷ்ணு பகவான் அவருக்கு அந்த சக்தியையும் சேர்த்துப் படைத்தார். அதனால் ப்ரும்மா தோன்றியதும், ஜீவன்களைப் படைப்பதற்கு,
அதற்கான சக்தியாக ப்ரும்மாவினுள் இருந்த ஸரஸ்வதியானவள், அவரோடே தோன்றியவள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே அவர் தன்வசம் இருந்த ஞான சக்தியைத் தனியாக, ஸரஸ்வதியின் ரூபமாகத் தந்தார் என்பதையே, ஸரஸ்வதி தேவியானவள் ப்ரும்மாவின் நாவில் இருந்து தோன்றினாள் என்று தேவி பாகவதம் கூறுகின்றது.
அடுத்தது, ஜீவன்களாகிய நம்மைப் படைத்ததும், நாம் முதலில் செய்வது என்ன? கற்றல்….. பிறந்ததும் கற்கிறோமா?? எப்படி என்கிறீர்களா?? எங்கே…..
பிறந்ததும், தாயின் வாசத்தை அறியக் கற்கிறோம்;
சிறு சப்தங்களை கவணிக்கக் கற்கிறோம்; கண்களால் பார்ப்பதை மனதில் பதிய வைக்கக் கற்கிறோம்;
இருந்த நிலையில் இருந்து உடலை மாற்றி எழுந்து நடக்கக் கற்கிறோம்;
வார்த்தைகள் கற்கிறோம்;
உண்ணக் கற்கிறோம்;
பேசக் கற்கிறோம்;
உலகைக் கற்கிறோம்…..
இப்படியாக, பிறந்தது முதல் நாம் விடாது செய்யும் காரியம் கற்பது. ஆதலால், ஜீவ ஸ்ருஷ்டிக்கு ப்ரும்மனுக்கு தேவைப்பட்ட ஞானமே, வாழ்விலும் நமக்குத் தேவை. அந்த ஞானம் என்பது தூய்மையான மனதுடன்,
புத்தகத்தில் படிப்பது போக, பெரியவர்கள் கூறுவதைக் கேட்டு அறிவது.
*செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை*
பகவான் விஷ்ணுவானவர் காக்கும் செயலை மேற்கொண்ட போது, ப்ரும்மாவுடன் சேர்த்து ஞான சக்தியை அவரில் படைத்தது போல், ப்ரபஞ்ஜத்தில் ஜீவன்கள் வாழ அவர் படைத்த மற்றொரு சக்தி தான் ஸ்ரீ லக்ஷ்மீ எனப் போற்றப்படும் தேவி. இந்த லக்ஷ்மீ தேவியைத் தான், யோக சக்தி என்றும்
லக்ஷ்மீ என்பதற்கு *ஸௌந்தர்யம், அழகு, உயர்ந்த நாயகனின் மனைவி* என்று பல அர்த்தங்கள் உள்ளன. எனவே *ஸ்ரீ லக்ஷ்மீ* என்பது
கால மாற்றத்தால் செல்வம் என்பது உருமாற்றம் கொள்கின்றதே ஒழிய அதன் தன்மை என்பது மாறவோ அழியவோ இல்லை.
ஆனால், கொடுப்பதற்கு முதலில் நம்மிடம் இருக்க வேண்டும் அல்லவா?
“அதான் ப்ரபஞ்சத்தை இறைவன் படைத்து விட்டாரே!!
என்ற குழப்பம் வரும். அதாவது, ப்ரபஞ்ஜம் படைக்கப் பட்டாலும், ஆதியில் பூமியானது முழுவதுமாக நீரால் சூழப்பட்டு இருந்தது. பின்னரே, கடல் மட்டம் இறங்கி, *Plate Tectonics* எனப்படும் *கண்டத்தட்டு இயக்கவியல்* மூலம்
பூமியில் நிலம் மட்டும் இல்லை. நீரும் இருக்கின்றது. *நீர் நிலைக*ளையே *நீளா தேவி*
நீர் நிலைகளைப் பெரிதாகச் சொல்வது இல்லை. ஆதலால் தான், பகவான் ஸ்ரீதேவியை தன் மனைவியாக இதயத்தில் வைத்துக் கொண்டதாகச் சொல்வதோடு, அதன் இன்னொரு சக்தியாகிய
ஒருவருக்கு மூன்று பேர் துணைவியர் என்றால் அது களங்கம் ஆகாதா என்றால், ஆகாது! என்று மறை பொருள் அறிந்த நம்மாழ்வார்,
என்கிறார். இங்கு கோவலர் மடப்பாவை என்று நப்பின்னையை மற்ற இருவரோடு (திருமகள், நிலமகள்) காட்டுவதால், அவள் நீளா தேவி (நீர்மகள்) என்பதும் புலனாகிறது. இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால்
இதன் காரணமாகத்தான் ஸ்ரீ தேவி, பூதேவியைப் பார்த்து வணங்கும் நாம்,
ப்ரும்மாவின் இரு புருவங்களின் மத்தியில் இருந்து ருத்ரன் என்னும் சிவ பெருமான் தோன்றியது பார்த்தோம். ஜீவன்களின் தாமஸ குணத்தை அழித்து, கர்ம வினைக்கேற்ப ஜீவன்களின் வாழ்வு பூமியில் முடிக்கும் செயலைச் செய்ய முக்கிய ஆதாரமாக இருப்பது ப்ராண சக்தி தான்.
அந்த சக்தியானது வீர்யத்தின் முழு வடிவமாக இருக்கும். அந்த சக்தியானது, ப்ரபஞ்ஜங்களின் அனைத்துச் சக்திகளையும் தன்னில் அடக்கச் செய்யும் சக்தியாக இருக்கும்.
தன்னிடமிருந்து தோன்றிய சக்தியை சிவனுக்கு அளித்துச் சேர்த்ததைத் தான்,
*சக்தியில்லையேல் சிவமும் சவமே* என்று மறைமுகமாக முன்னோர் கூறினர். இது சிவ பெருமானைத் தாழ்த்துவது அல்ல.
எல்லா ஜீவராசிகளும், உடலின் வலப்புறம் ஆண்மைத் தன்மையோடும், இடப்புறம் பெண்மத் தன்மையோடும் இருக்கும். சரி பாதியாக இருந்தாலும், வலது கையில் இருக்கும் சக்தி இடது கையில் இருப்பதில்லை அல்லவா?
அதற்கு, நாம் நம்மை முதலில் உணர்ந்து வாழ வேண்டும். அவ்வாறு நம்மை உணர,
அது விலகிட, தெய்வத்தை அறிந்து அடைய,
உயிரகாரம் ஆகிடும் உடலுகாரம் ஆகிடும்
உயிரையும் உடலையும் ஒன்றுவிப்ப தச்சிவம்
உயிரினால் உடம்புதா னெடுப்பவா றுரைக்கினே!!”
(Reference : சித்தர் பாடல்கள் – சிவவாக்கிய சித்தர்)
இவ்வாறே, விஷ்ணுவின் தமக்கையென சக்தியாகிய பார்வதியை
(மேலே முப்பெரும் தெய்வங்களையும், அவற்றின் தேவியர் பற்றியும் கொடுக்கப் பட்டிருப்பது எல்லாம் அறிமுகமே. அறிய வேண்டியவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தான். பெரியோர் இவற்றை எல்லாம் கடந்து,
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁








