My Authors
Read all threads
🌺Who is punishable? Public or Politician??🌺

இந்த தலைப்பில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இதைப் பற்றிப் பல விஷயங்கள் பேசிய பெண்மனி, தமிழில் போடுங்கள் அக்கா.... அதுதான் மனதில் நிற்கும் எனச் சொன்னது பளிச்சென முகத்தில் அறந்தது போல் உணர்த்தியது.

அப்படி என்ன பேசினோம்?
நேற்று, நமது மான்புமிகு தமிழக முதல்வரைப் பாராட்டிப்🤔 போட்டிருந்த பதிவில், TASMAC பற்றியும் ஒரு வரி வந்தது. இன்று அதைப் பற்றி ஒரு தினக்கூலித் தொழிலாளியான ஒரு பெண் பேசுவதைக் கேட்டு, அவளுடன் பேச்சுக் கொடுத்தேன்.

அவளுக்கு இருக்கும் மனம், நமது நாட்டின் அரசியல் வியாதிகளுக்கு இல்லையே
என யோசிக்க வைத்தது அவள் கருத்துகள். ”தயவு செய்து அவள் என்ன சொல்லியிருப்பாள் எனக் கடந்து போகாமல், அதன் சுருக்கத்தைப் படிக்க வேண்டுகிறேன்.🙏

”உச்சநீதி மன்றத்தில் அவசர அவசரமாக வழக்குப் போட்டு, அனுமதி வாங்கிட்டாங்க, எங்க தாலியறுக்க. இதில் தாலிக்கு தங்கம்னு வேஷம் எதுக்கு?
ஈமக்கடனுக்கு கடன் வாக்காமல் இருக்கவா?
அப்பா காலத்திலெல்லாம், வேலை முடிஞ்சு பகல்ல மட்டும் புளிக்காத கள்ளோ பதநீரோ சாப்பிடுவாங்க. மதுங்கறது, பனம் இருப்பவன் மட்டும் சாப்பிட்டான்.

ஆசைப்பட்டாலும் எட்டாக் கனியாக இருந்ததால, மது இங்கே பரவல்லை. போதைக் கள்ளைக் கூட ஊர்க்கோடித் தோப்புல
குடிச்சுட்டு, அமைதியா வந்து படுத்துடுவாங்க. அதுக்கே, சிலரை ஊரை விட்டு ஒதுக்கி வச்சாங்க, பிள்ளைங்க கெட்டுரும்னு.

அன்னிக்கே ராஜாஜி தெருவில் நின்று கெஞ்சினாராம் அந்த கருனாநிதியிடம்... அரசு மதுபானக் கடையைத் திறக்கக் கூடாதுன்னு. அப்பா, ஓமாந்தூரார் பத்திப் பேசும் போதெல்லாம் அழுவார்
அவர் சுத்தம் செஞ்ச தமிழகத்தை இவனுக, சாதியும் போதையும் வச்சு அழிக்கப் போறானுகன்னு. அப்படித்தானே ஆயிருக்கு?

மோடி குடும்பத்துக்கு ஆயிரம் குடுத்ததுக்கு, “இதை வச்சு என்ன குடும்பம் நடத்த முடியும்? 3000 வேணும், 5000 வேணும்”னு கூப்பாடு போட்டவங்கள்ல எத்தனை பேரு எங்களைப் போல அடித்தட்டு
வாழ்க்கை வாழறாங்க? அவங்களுக்கு, பேர் வாங்கத்தானே பேசினாங்க? இவங்க தர்ற பணத்த ரெண்டே நாள்ல குடிச்சு தீத்துடுவாங்க.

கொஞ்சம் சந்தோஷப் பட்டோம், 40 நாளுக்கு மேல திறக்கலை. இப்படியே மூடினா நல்லதுன்னு...

பஞ்சாப்ல அங்க சட்டபூர்வ விற்பனை, அதுக்கே அனுமதி தந்தாங்க. இங்க அப்படி இல்லையே...
எதெதுக்கு அடுத்தவனைக் காட்டறதுன்னு விவஸ்தை இல்லையா? அங்க சீக்கியர்கள் கத்தி வச்சுக்கறது சட்டமாம், இங்கயும் அதுக்கு கேஸ் போட்டு அனுமதி வாங்குவாங்களா?

தாய்லாந்துல விபச்சாரம் கூட சட்டப்படி சரி. இங்கயும் சட்டப்படி உரிமை தருவாங்களா தமிழ்நாட்டுல? இப்படி எங்களப் பேச வச்ச கேவலத்தை விட
இன்னும் தி.மு.க. வைக் கை காமிக்கிறது ரொம்ப கேவலம். எத்தனை கடையை மூடிட்டாங்க? லஞ்சம் தராத கடையை மூடினாங்க.

எலைட்ல ஆயிரம் ரூவாய்க்கு குறஞ்சு சரக்கு கிடைக்காதுங்கறாங்க. இதோ... இந்த ஆளு 250 ரூவாய்க்கு தினம் ஒரு பாட்டில் வாங்கறான். பத்தாவது படிக்கிற பொம்பளைப் புள்ளைங்க,
அரசு பள்ளிச் சீருடையோட வந்து தைரியமா வாங்குதுங்க. இதுல, சின்ன பிள்ளைங்க வாங்க முடியாதுன்னு வாய் வேற...

இந்தக் கேவலத்துக்கு, நேரடியா வருஷத்துக்கு இத்தனை குடும்பம்னு எங்களுக்கு அரசே விஷம் கொடுத்து கொல்லலாம். திருடனுக்கு பயந்து, ஒரு வீட்டுல புகுந்தா அவன் மகா திருடனா இருக்கான்.
இவங்க மொத்த பேரையும் ஒழிச்சு, இவனுக பணத்தைப் புடுங்குனாலே எல்லாருக்கும் நம்ம அரசே நிதி உதவி செய்யலாம். அத்தனை கொள்ளை...

நம்ம ஓமாந்தூரார், காம்ராஜர், ராஜாஜி போல நாட்டுக்கு உழைக்க நினக்கற, படிச்ச சின்னவங்களை பொறுப்புகள்ல வைக்கனும். அதுக்கு முன்னால நம்ம நீதித் துறையை மாத்தி
அமைக்கனும்கா. அவங்களே பாதி திருடச் சொல்லித் தராங்க. எல்லாத்துலயும் மத்தவங்களைக் காமிக்கறவங்களுக்கு, மோடி ஊரு குஜராத், பீஹார் எல்லாம் மதுவே இல்லாத இடமா இருக்கறது மட்டும் தெரியலையா?

மதுக்கடை திறக்கக் கூடாதுன்னு கேஸ் போட்டவருக்கு ஒரு லட்ச ரூவா அபராதம், தமிழக அரசு விதிச்சிருக்காம்.
ஒன்னு தான் புரியலை...

இந்த பாழாயிட்டிருக்கு ஊருல, இவங்களை ஆட்சியில உக்கார வச்சதுக்கு, எங்களுக்கு தண்டனை தரணுமா?

இல்லை... இப்பேர்ப்பட்ட எல்லா அரசியல்வாதிகளுக்கும், பொது மக்கள் சேந்து தண்டனை தரணுமா?

இதப்போய் நான் வெளியில பேசினா, யாரு சொல்லித் தந்தாங்கன்னு இதே ஆளுங்க கேப்பாங்க.
நாங்க படிச்சு முன்னேறனும்னு சொல்வாங்க. ஆனா, எதித்துப் பேசிட்டா பிடிக்காது. படிச்சாலும் இவங்களுக்கு கைக்கூலியா தான் இருக்கனும், அப்பத்தான் பிடிக்கும்.

இல்லைன்னா, எங்களுக்கும் சாவு தான் பரிசு. ஏதாவது பொய் கேஸ் போட்டு, அதை தற்கொலை ஆக்கிடுவாங்க. இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு
இங்க இருக்கறதை விட, அந்த யோகி சாமியார் மாதிரி ஆளுங்க ஊர்ல போயாவது வாழ ஆரம்பிச்சுரனும். வெக்கமில்லாம, டி.வி-ல வந்து, கடையத் திறந்ததுக்கு ஆதரவா பேசுறாங்க.

தேசப் பற்றுங்கறது பொறப்புல வரணும் அக்கா. பெத்தவங்களும் ஊட்டி வளக்கணும். இந்தப் பணத்துக்கு இவங்க ஊத்திக் கொடுக்கறதுக்கு பதிலா,
எத்தனையோ நல்ல விஷயங்களைப் பண்ணலாம்.

இவங்க சம்பளத்தை 75% குறைச்சு, தேவை இல்லாத சலுகையையும் மத்திய அரசு நிறுத்தினா, ஒரு வேளை அரசியல் வேணாம்னு இவங்களே போகலாம்.

மோடி அதச்செஞ்சு, நம்ம வயித்துல பால வாக்கட்டும். கடவுள் தான் இந்த நாட்டைக் காப்பாத்தனும் அக்கா”.

மனம் வலிக்கிறது....
இந்த பொதுமக்களில், நடுத்தர, அடிமட்ட மக்கள் பலர் குடும்பம் தன்னை இழந்துவிடுமோ என்ற பயத்தில் பேசவே பயப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்தது யார்?

இவர் கூட, தன் பெயரைக் கடைசி வரை சொல்லவில்லை. அத்தனை பயம்.... அவள் கேட்டது உண்மை.
தண்டிக்கப்பட வேண்டியது....

இந்த அரசியல் வியாதிகளா??

இங்கு வாழும் நாமா??

பதிலை வரும் தேர்தலில் நாம் தான் காட்ட வேண்டும்.

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!