My Authors
Read all threads
#Thread தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் அடுத்த பெரும் சவால் :
5 கிலோ அரிசி, 25 ரூபாய் பணம் தருகிறார்கள் என்பதற்காக குடும்பக் கட்டுப்பாட்டு ஆப்பரேஷன் செய்து கொண்ட தலைமுறையை நீங்கள் அறிவீர்களா? 70 களில் இந்திரா காந்தி கொண்டு வந்த குடும்பக்கட்டுப்பாடுத் திட்டம் போலொரு தீவிரமாக செயல்
பட்டத் திட்டம் நாட்டில் வேறெதுவும் இல்லை. அதிலும் டெல்லியில் சாலையில் நடந்து சென்ற ஆண்களைத் தூக்கிச் சென்று ஆப்பரேஷன் செய்து அனுப்பினார் சஞ்சய் காந்தி என பரவலான குற்றச்சாட்டு உண்டு. இந்தியாவின் வறுமைக்கு அதிகமான மக்கள் தொகைதான் காரணம் என அரசு உறுதியாக நம்பியது. நாம் இருவர் நமக்கு
இருவர் என்பதுதான் அப்போதைய பிரபலமான கொள்கை முழக்கம். தமிழ் சினிமாக்களில் கூட அதிகம் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தைக் கேலி செய்யும் காட்சிகள் பல வரும். ஒரு திரைப்படத்தில் நாகேஷ் குசேலன் வேடம் போட்டு அதிகமான குழந்தைகள் பெற்றதால் அவதிப்படுவதைப் போன்ற ஓரங்க நாடகம் இடம்பெற்றது.
அரசியல் மேடைகள் முதல் ஆசிரியர்கள் வரையிலும் அளவானக் குடும்பத்தை வலியுறுத்திக் கொண்டே வந்தக் காரணத்தால், தமிழகம் மெல்ல ஒரு குடும்பம், இரு குழந்தைகள் கான்செப்ட்டுக்கு மாறத் தொடங்கியது. எனக்கு முந்தைய தலைமுறையில் மூன்று குழந்தைகளுக்குக் குறைவாக நான் கண்டதில்லை. எனக்குப் பிந்தைய
தலைமுறையில் இரண்டாவது குழந்தையைக் காண்பதே அரிதாகிக் கொண்டு வருகிறது. கேட்டால், ஒரு குழந்தைக்கே அலுத்து சலித்துப் போய் விடுகிறோம் என்கிறனர். இப்படியாக, தமிழகத்தின் மக்கள் தொகை மிகவும் கட்டுக்குள் வந்து தேசிய அளவில் முதல் இரண்டு இடத்தில் இருந்து அரசின் கொள்கையை சிறப்பாக பின்பற்றும்
மாநிலமாக ஆகியுள்ளோம். கேரளம், பாண்டி, கர்நாடகமும் கூட நம்மைப் போல மக்கள் தொகை கட்டுக்குள் உள்ள மாநிலங்களே! ஜஸ்ட் 20 வருடங்கள் முன் வரை கூட பல குழந்தைகளைப் பெற்று வந்த ஆந்திர மாநிலமே இப்போது சீராக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆக, மொத்தம் தென் மாநிலங்கள் மக்கள் தொகைக்
கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்படுகிறது. சரி! இதில் என்ன சவால்?
மத்திய அரசின் புதியக் கொள்கைகள் மூலம் வகுக்கப்படும் அனைத்துத் திட்டங்களின் அடிப்படைக் காரணியாக மக்கள் தொகை நெருக்கம் (people density) மாறி விட்டது. அதன் மூலம் பகிர்ந்து அளிக்கப்படும் நிதிகள் மக்கள் தொகைக்கு ஏற்பவே
தரப்படுகின்றன. புரியும்படி சொல்ல வேண்டுமெனில் (உதாரணத்துக்கு) தமிழகம் மத்திய அரசின் வரித்தொகுப்புக்கு 70 ரூபாய் இங்கிருந்து வரியாக வசூலித்துக் கொடுத்து, பிறகு அதிலிருந்து தனது பங்காக 45 ரூபாய் பெறுகிறது. உத்திரபிரதேசமோ வெறும் 40 ரூபாய் வசூலித்துக் கொடுத்து தனது பங்குக் தொகையாக
60 ரூபாய்களை பெறுகிறது. அதாவது அந்த மாநிலத்தால் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் குறைவு. ஆனால், மத்தியஅரசின் மக்கள் தொகை அடர்த்தி கணக்கீட்டு முறையால் அந்த மாநிலம் பெறும் தொகை அதிகம். ஆனால், தமிழகம் அதிகமாக வரி வருவாயை ஈட்டித் தந்தாலும், மக்கள் தொகை அடர்த்தி குறைவு
என்பதால் அது திரும்பப் பெறும் தொகை மிகக் குறைவு. இதே நிலைதான் பெரும்பாலான தென் மாநிலங்களுக்கும். cow belt எனப்படும் மத்திய இந்திய மாநிலங்கள் அவர்களது கட்டுக்கடங்காத மக்கள் தொகையின் காரணமாக, வளர்ந்த மாநிலங்களின் உழைப்பையும் சேர்த்து உறுஞ்சுகின்றன என்பதே உண்மை. உ.பி, பீகார்,
ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஒரு குடும்பத்தில் குறைந்தது 4,5 குழந்தைகள் உள்ளனர். அதிலும் பெரும்பாலான குழந்தைகள் ஆண் குழந்தைகள் என்பது வியப்பு. நான் திருப்பூரில் சந்தித்துப் பேசிய ஒரு வட இந்திய இளைஞனுக்கு 6 சகோதரர்களாம்! அந்த 7 பேருமே தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் வேலை செய்கின்றனர்
இந்த cow belt states மக்கள் தொகை கணக்கின் மூலம் எல்லாவிதத்தில் அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றாலும், அவைகளின் வளர்ச்சி என்னவோ பூஜ்யம்தான். இன்னமும் பல மாவட்டத் தலைநகரங்களுக்கு இரவு 7 மணிக்கு மேல் பேருந்துகள் செல்லாது. ஒட்டு மொத்த தேசிய வளர்ச்சிக் குறியீட்டை மிகவும் பின்னுக்கு
இழுக்கும் இந்த மாநிலங்கள், எந்த மக்கள் தொகையைக் காட்டி அதிக நிதியை பெறுகின்றனவோ, அந்த மக்கள் தொகையில் உள்ள பல கோடி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பைக் கூட உருவாக்கித் தர இயலாத மோசமான நிலைதான் படு சோகம்.
இது இருக்கடும்! இன்னொரு பெரிய சவால் தமிழகத்துக்கு காத்திருக்கிறது.
அது, அதே மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி, நாடாளுமன்ற, ராஜ்ய சபை இடங்களும் குறைக்கப்படப் போகிறது. இப்போது உள்ள 543 இடங்களில் 39 இடங்கள் தமிழகத்து உள்ளது. இப்போது மக்களவை சீரமைப்பின் உத்தேசத் திட்டம் மக்கள் தொகை அடிப்படையில் அமைய இருப்பதால் மொத்த இடங்கள் 600
ஆகவும், அதில் தமிழகத்தின் மக்களவை தொகுதிகள் 32 ஆகவும் குறைக்கப்பட இருக்கிறதாம்! அதே போலவே மாநிலங்களவையிலும் குறைக்கப்படும். இனி, இந்திய அளவில் எந்தவொரு சட்டமாக்கலிலும் தமிழகத்தின் பங்கு இருக்கவே இருக்காது. மைய அரசின் எல்லா திட்டங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படும் மாநிலம்
எல்லா வகையிலும் வஞ்சிக்கப் படும் நகைமுரணை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இனி, நமது இளைஞர்களை நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என சொல்லவும் முடியாதளவு ஒரு குடும்பம், ஒரு குழந்தை மோகம் பரவி வருகிறது. வட இந்திய மாநிலங்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதும் நம்மால் இயலாது.
இருக்கும் ஒரே வழி, மத்திய அரசு எல்லா திட்டங்களுக்கும் ‘மக்கள் தொகை அடர்த்தியை’ அளவுகோலாக வைத்து வடிவமைப்பதை மாற்றக் கோருவதே! அதை வலியுறுத்தி செய்ய வைக்கும் political will இப்போதைய அரசுக்கு இல்லை என்பது தெளிவு. ஆட்சி மாற்றம் நிகழும் முன் மேலதிக பாதிப்பை எப்படி தடுக்கப் போகிறோம்?
வரப்புக்குச் சண்டை இட்டால்தான் வயலாவது மிஞ்சும். நமது 60 ஆண்டுகால உழைப்பை, முன்னேற்றத்தை இழுத்துப் பிடித்து சமன் செய்ய பார்க்கின்றனர். முழு அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி மட்டுமே இவைகளுக்குத் தீர்வு. அதை நோக்கி மட்டுமே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
(approximate data only).
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SKP KARUNA

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!