“உன் மகன் மேல் கொண்ட பாசத்தால் தான் தவறு செய்தாள். அதற்கான தண்டனையும் தானே ஏற்றாள். அவள் உன்னிடம் கொண்ட பாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
என அறிவுரை கூறினார். பின்னர் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, ஒரு நல்ல நாளில், பலதேச மன்னர்கள், அயோத்திவாசிகள், ஸுக்ரீவ, ஹனுமன் சுற்றங்கள்,
அதனால் மிகவும் சஞ்சலப்பட்டு, வருத்தத்துடன் இருந்தார் ராமர்.
இதிஹாஸம் பிறந்தது:
வால்மீகிக்கு ராமரின் வரலாறு எப்படித் தெரிந்தது? அவர் எவ்வாறு அதை லவ – குசர்களுக்குச் சொல்லித்தந்தார்?
த்ரிலோக ஸஞ்சாரியான நாரதர், ஸங்க்ஷேப ராமாயணம் என்னும் பெயரில் 100 ஸ்லோகத்தில் ராம சரிதத்தை வால்மீகி முனிவருக்கு போதித்தார். அது முதல், வால்மீகியின் மனதில் ராமசரிதையே ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஆண் க்ரௌஞ்ச பக்ஷியை வேடுவன் ஒருவன்
मा निषाद प्रतिष्ठाम्त्वं अगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एकमवधीः काम मोहितम् || १-२-१५
யத் கிரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காம மோஹிதம் ||
என்றார். அதாவது,
“ஹே வேடனே! க்ரௌஞ்ச பக்ஷிகள் சந்தோஷமாக இருந்த போது, அதை அம்பெய்தி கொன்றுவிட்டாயே… நீ வெகுகாலம் இருக்க மாட்டாய்….”
என்பது போல் அர்த்தம் காட்டும்.
“நான் ஏதோ ஸ்லோகம் சொன்னது போல் மனதில் படுகிறதே….” என வினவினார். பரத்வாஜரும்,
“ ஆம் ஆச்சார்ய: தங்கள் நாவில் இருந்து அழகிய ஸ்லோகம் ஒன்று வெளிப்பட்டது” என்றார்.
மா – லக்ஷ்மி தேவி
நிஷாத: – கணவர் (மஹாவிஷ்ணு)
அகம – அஸாத்யமான
ஷாஸ்வதீ: – பூமி
ஸமா: – இணை
யத் – அந்த
க்ரௌஞ்ச – ராக்ஷஸன் என்றும் பொருள்
மிதுநாத் – தம்பதி
ஏகம் – ஒருவன்
வதீ: – வதைக்கப்பட்ட
காம – காமம்
மோஹிதம் – மோகத்தினால்
என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள் என ப்ரும்மா வால்மீகியின் முன் தோன்றி கூறினார்.
அவரைக் கண்டதும் வால்மீகி மஹரிஷி, அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் தந்து பூஜித்து நமஸ்கரித்தார். ப்ரும்மா மனம் மகிழ்ந்து,
“யாமே ஸரஸ்வதி தேவியை உம் வாக்கிலே ஆவிர்பவித்திருக்கிறோம் (தோன்ற வைத்திருக்கிறோம்). நாரதர் உம்மிடம் சொன்ன ராம சரித்ரத்தை நீர் விஸ்தாரமாக, ஒரு காவியமாக்குங்கள்…
அவரது சரித்ரத்தில் நடந்தவை அனைத்தும் உமது யோக சக்தியால் உமக்குத் தெரியும்.
இப்படி எல்லாம் தெரிய வரும். அதை அப்படியே எழுதுங்கள்…. அதில் ஒரு பொய்யும் இருக்காது….
என ஆஸீர்வதித்தார்.
“ஸீதாயா” சரிதம் மஹத்” என்னும் பெயரில், ஸீதாதேவி சரித்ரம், ராமரின் வாழ்க்கை, ராவண வதம் என, தன் மனதில் யோகத்தால் வந்த நிகழ்வுகள் கண்டு,
என ஆஸீர்வதித்தார்.
“ஸீதாயா” சரிதம் மஹத்” என்னும் பெயரில், ஸீதாதேவி சரித்ரம், ராமரின் வாழ்க்கை, ராவண வதம் என, தன் மனதில் யோகத்தால் வந்த நிகழ்வுகள் கண்டு,
"ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் |
ரகுவர சரிதம் முநிப்ரணீதம் தஸஸிரஸஸ்ச வதம் நிஸாமயத்வம் ||"
(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் = உபகதைகளுடனும், சரியான ஸந்தங்களின்
ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் = ஒரே மாதிரியான மதுரமான அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்
ரகுவர சரிதம் முநிப்ரணீதம் = முநிவரால் இயற்றப்பட்ட ரகுவம்ஸத்தில் வந்த அந்த ராமரின் சரிதத்தை
தஸஸிரஸஸ்ச வதம் = பத்துதலையுடையவனை வதைத்த (ராவணனை வதைத்த)
உபகதைகளுடனும், சரியான ஸந்தங்கள் கூடியதும்; ஒரே மாதிரியான மதுரமான, அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்; ராவணனை வதைத்த, ரகுவம்ஸத்தில் வந்த; முநிவரால் இயற்றப்பட்ட ராமரின் சரித்ரத்தை;
அடுத்த தொடரில் லவ - குசன் சரித்ரம் ஆரம்பம்...
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁