#BharathVruksh
கச்ச அனுஜாமி – நீ போகலாம், உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன்
ரணார்திதஸ்த்வம் – இன்றைக்கு நன்றாக யுத்தம் செய்து அடிபட்டுக் களைத்திருக்கிறாய் ராத்ரிம்சரராஜ லங்காம் – இரவில் சுற்றும் ராக்ஷஸர்களின் ராஜனே
ஆஷ்வாஸ்ய – களைப்பு நீங்க ஆஸுவாஸப் படுத்திக்கொண்டு
நிர்யாஹி ரதீச தன்வீ – ரதத்தில், அம்புவில் எடுத்து மீண்டும் யுத்தத்திற்கு வா
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது எனது பலத்தை நீ பார்க்கக் காட்டுகிறேன்…
என்கிறார்.
”ஆளையா! உனக்கு அமைந்தன மாருதமறந்த
பூளையாயின கண்டனை; இன்றுபோய் போர்க்கு
நாளவா எனநல்கினன் – நாகிளங் கமுகின்
வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்”
அரக்கர்களை ஆள்கின்ற ஐயா! உனது படைகளனைத்தும்,
அப்படியும் அவனதை அவமானமாக நினைத்து ராமரைக் கொல்ல யத்தனித்தானே
எனக்கூறிய ராமர், எதிரியே ஆனாலும், அவன் ஒரு மன்னன் ஆனதால், அவனுக்குரிய இறுதி மரியாதைகளைச் செய்தார் ராமர்.
ராவண வதமும் ஆனது. அசோகவனத்தில் அமர்ந்திருந்த ஸீதையை நோக்கி, ராம-லக்ஷ்மணரும் ஹனுமனும் வந்தனர்.
“என் மனைவி மேல் எனக்கு ஸந்தேகமில்லை…. ஆனால், இத்தனை காலம் இவள் இங்கே ஒரு அஸுரனின் கோட்டையில் வாழ்ந்து வந்திருக்கிறாள்.
இவளை இப்படியே அழைத்துக் கொண்டால், இவள் நடத்தை பற்றிப் பேசி,
என்றார். இதைக்கேட்ட ஸீதை,
“எனது கற்பின் வலிமை உண்மை என்றால், நான் இப்போதே அக்னிப் பரீட்சை செய்து எனது கற்பை நிரூபிப்பேன் இவ்வுலகுக்கு”
எனக்கூறி,
“ராமா… துன்பத்திலும், ஒரு கணமும் உனை மனதினின்று பிரியாத இக்கர்புடை மகளை நீ என்னில் இறக்கியது தவறு.
என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.
பின்னர், விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, உடனடியாக அயோத்தி கிளம்பினார். விபீஷணன் அவரை சற்று தங்கி, ஒரு நாளாவது ஓய்வெடுத்துப் போகுமாறு வேண்டினார். ஆனால் ராமரோ,
“எனது கானக வாசம் நிறைவுற்றது. அங்கே எனது தாய் தந்தையையும் இழந்து,
என்றார். அதற்கு விபீஷணன் அவரைச் சமாதானம் செய்து,
“ஹே ராமா…. கலங்காதே! எனது ஒன்றுவிட்ட தமையன் குபேரன் தான் இந்த லங்காபுரியை ஆண்டு வந்தான்.
”மேலும் அவன் வைத்துள்ள புஷ்பக விமானம் என்னும் விமானத்திற்கு, ஓட்டுநர் தேவையில்லை.
நீங்கள் அயோத்தியை மூன்று மணி நேரத்தில் சென்று அடையலாம்.
என வேண்டினார். அவ்விதமே, அவர் உணவு கொண்டு, விபீஷணனிடம் விடைபெற்று, மனைவியுடனும் தம்பியுடனும் மீண்டும் அயோத்தி திரும்பினார் ராமர். ராமர் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருகையில், வானிலிருந்து தெரியும் இலங்கையின் அழகை,
Reference :
இதனிடையே தந்தை மரணத்தால் கைகேயி மனமுடைந்து,
எனக்கூறி தன் அறையிலேயே 14 ஆண்டுகள் சிறையிருந்தாள். ராமபிரான் திரும்பி வந்து,
பரதனைச் சந்தித்த ஹனுமான், நடந்த எல்லாவறறையும் விரிவாகக் கூறினான். அண்ணன் திரும்பிய செய்தி கேட்டுப் பரவசம் கொண்ட பரதன்,
”இனி இத்துடன் ராஜ்ய பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் அண்ணா…”
எனக்கதறிய பரதனை அணைத்துக் கொண்டார்.
“உன் மகன் மேல் கொண்ட பாசத்தால் தான் தவறு செய்தாள். அதற்கான தண்டனையும் தானே ஏற்றாள். அவள் உன்னிடம் கொண்ட பாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
என அறிவுரை கூறினார். பின்னர் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, ஒரு நல்ல நாளில், பலதேச மன்னர்கள், அயோத்திவாசிகள், ஸுக்ரீவ, ஹனுமன் சுற்றங்கள்,
அதனால் மிகவும் சஞ்சலப்பட்டு, வருத்தத்துடன் இருந்தார் ராமர்.
இதிஹாஸம் பிறந்தது:
வால்மீகிக்கு ராமரின் வரலாறு எப்படித் தெரிந்தது? அவர் எவ்வாறு அதை லவ – குசர்களுக்குச் சொல்லித்தந்தார்?
த்ரிலோக ஸஞ்சாரியான நாரதர், ஸங்க்ஷேப ராமாயணம் என்னும் பெயரில் 100 ஸ்லோகத்தில் ராம சரிதத்தை வால்மீகி முனிவருக்கு போதித்தார். அது முதல், வால்மீகியின் மனதில் ராமசரிதையே ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஆண் க்ரௌஞ்ச பக்ஷியை வேடுவன் ஒருவன்
मा निषाद प्रतिष्ठाम्त्वं अगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एकमवधीः काम मोहितम् || १-२-१५
யத் கிரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காம மோஹிதம் ||
என்றார். அதாவது,
“ஹே வேடனே! க்ரௌஞ்ச பக்ஷிகள் சந்தோஷமாக இருந்த போது, அதை அம்பெய்தி கொன்றுவிட்டாயே… நீ வெகுகாலம் இருக்க மாட்டாய்….”
என்பது போல் அர்த்தம் காட்டும்.
“நான் ஏதோ ஸ்லோகம் சொன்னது போல் மனதில் படுகிறதே….” என வினவினார். பரத்வாஜரும்,
“ ஆம் ஆச்சார்ய: தங்கள் நாவில் இருந்து அழகிய ஸ்லோகம் ஒன்று வெளிப்பட்டது” என்றார்.
மா – லக்ஷ்மி தேவி
நிஷாத: – கணவர் (மஹாவிஷ்ணு)
அகம – அஸாத்யமான
ஷாஸ்வதீ: – பூமி
ஸமா: – இணை
யத் – அந்த
க்ரௌஞ்ச – ராக்ஷஸன் என்றும் பொருள்
மிதுநாத் – தம்பதி
ஏகம் – ஒருவன்
வதீ: – வதைக்கப்பட்ட
காம – காமம்
மோஹிதம் – மோகத்தினால்
என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள் என ப்ரும்மா வால்மீகியின் முன் தோன்றி கூறினார்.
அவரைக் கண்டதும் வால்மீகி மஹரிஷி, அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் தந்து பூஜித்து நமஸ்கரித்தார். ப்ரும்மா மனம் மகிழ்ந்து,
“யாமே ஸரஸ்வதி தேவியை உம் வாக்கிலே ஆவிர்பவித்திருக்கிறோம் (தோன்ற வைத்திருக்கிறோம்). நாரதர் உம்மிடம் சொன்ன ராம சரித்ரத்தை நீர் விஸ்தாரமாக, ஒரு காவியமாக்குங்கள்…
அவரது சரித்ரத்தில் நடந்தவை அனைத்தும் உமது யோக சக்தியால் உமக்குத் தெரியும்.
இப்படி எல்லாம் தெரிய வரும். அதை அப்படியே எழுதுங்கள்…. அதில் ஒரு பொய்யும் இருக்காது….
என ஆஸீர்வதித்தார்.
“ஸீதாயா” சரிதம் மஹத்” என்னும் பெயரில், ஸீதாதேவி சரித்ரம், ராமரின் வாழ்க்கை, ராவண வதம் என, தன் மனதில் யோகத்தால் வந்த நிகழ்வுகள் கண்டு,
"ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் |
ரகுவர சரிதம் முநிப்ரணீதம் தஸஸிரஸஸ்ச வதம் நிஸாமயத்வம் ||"
(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் = உபகதைகளுடனும், சரியான ஸந்தங்களின்
ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் = ஒரே மாதிரியான மதுரமான அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்
ரகுவர சரிதம் முநிப்ரணீதம் = முநிவரால் இயற்றப்பட்ட ரகுவம்ஸத்தில் வந்த அந்த ராமரின் சரிதத்தை
தஸஸிரஸஸ்ச வதம் = பத்துதலையுடையவனை வதைத்த (ராவணனை வதைத்த)
உபகதைகளுடனும், சரியான ஸந்தங்கள் கூடியதும்; ஒரே மாதிரியான மதுரமான, அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்; ராவணனை வதைத்த, ரகுவம்ஸத்தில் வந்த; முநிவரால் இயற்றப்பட்ட ராமரின் சரித்ரத்தை;
அடுத்த தொடரில் லவ - குசன் சரித்ரம் ஆரம்பம்...
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁