My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

கச்ச அனுஜாமி – நீ போகலாம், உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன்
ரணார்திதஸ்த்வம் – இன்றைக்கு நன்றாக யுத்தம் செய்து அடிபட்டுக் களைத்திருக்கிறாய் ராத்ரிம்சரராஜ லங்காம் – இரவில் சுற்றும் ராக்ஷஸர்களின் ராஜனே
லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய்க்கொள்…

ஆஷ்வாஸ்ய – களைப்பு நீங்க ஆஸுவாஸப் படுத்திக்கொண்டு
நிர்யாஹி ரதீச தன்வீ – ரதத்தில், அம்புவில் எடுத்து மீண்டும் யுத்தத்திற்கு வா
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது எனது பலத்தை நீ பார்க்கக் காட்டுகிறேன்…

என்கிறார்.
இதைத்தான் கம்பன், தனது கவிநடையில் அழகாக, மனதில் தைத்து நிற்கும்படி,

”ஆளையா! உனக்கு அமைந்தன மாருதமறந்த
பூளையாயின கண்டனை; இன்றுபோய் போர்க்கு
நாளவா எனநல்கினன் – நாகிளங் கமுகின்
வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்”

அரக்கர்களை ஆள்கின்ற ஐயா! உனது படைகளனைத்தும்,
பெருங்காற்றில் உதிர்ந்து பறக்கும் பூக்கள் போலாயின. எனவே இன்று போய் நாளை வா என்றான், இளங்கமுகு (கமுகு – பாக்கு) மரத்தில் மீன்கள் துள்ளி விளையாடும் நீர்-நில வளம் கொண்ட கோஸல தேசத்து வள்ளலாகிய ராமன் என்று வர்ணிக்கிறார்.

அப்படியும் அவனதை அவமானமாக நினைத்து ராமரைக் கொல்ல யத்தனித்தானே
ஒழிய, மனம் திருந்தவில்லை. இறுதியில் ராமரின் பானத்தால் ஸம்ஹாரம் செய்யப்பட்டான். மண்டோதரியும், பிற மனைவிகளும் துயருற்றுக் கதறினர். அண்ணனுக்கான ஈமக்கடன்களைத் தான் செய்ய வேண்டுமென விபீஷணன் ராமரிடம் கேட்க,

Temple Preah Khat at AngkorWatt : A pediment depicting the battle of Lanka.
“என்னிடம் கேட்பதேன் விபீஷணா… இது உன் கடமை அல்லவா? சென்று நிறைவேற்று….”

எனக்கூறிய ராமர், எதிரியே ஆனாலும், அவன் ஒரு மன்னன் ஆனதால், அவனுக்குரிய இறுதி மரியாதைகளைச் செய்தார் ராமர்.

ராவண வதமும் ஆனது. அசோகவனத்தில் அமர்ந்திருந்த ஸீதையை நோக்கி, ராம-லக்ஷ்மணரும் ஹனுமனும் வந்தனர்.
ஸீதா தேவி மகிழ்ச்சியோடு ராமரை நோக்கி வந்தாள். ஸீதையைக் கண்ட ராமர் புன்சிரிப்போ, மகிழ்ச்சியோ, ஆனந்தமோ இன்றி, அமைதியாக நின்றார்.

Divurumpola Temple – The sacred site where Sita Devi took her oath and performed the Agni Pariksha
லக்ஷ்மணனும் விபீஷணனும் பதறிப்போய் ராமரிடம் அவரது செயலுக்குக் காரணம் கேட்க,

“என் மனைவி மேல் எனக்கு ஸந்தேகமில்லை…. ஆனால், இத்தனை காலம் இவள் இங்கே ஒரு அஸுரனின் கோட்டையில் வாழ்ந்து வந்திருக்கிறாள்.

இவளை இப்படியே அழைத்துக் கொண்டால், இவள் நடத்தை பற்றிப் பேசி,
உலகம் இவளைத் தூற்றுமே என்றுதான் யோசிக்கிறேன்…. இவள் களங்கமற்றவள் என்பதை இந்த உலகில் நிரூபிக்க வேண்டாமா??”

என்றார். இதைக்கேட்ட ஸீதை,

“எனது கற்பின் வலிமை உண்மை என்றால், நான் இப்போதே அக்னிப் பரீட்சை செய்து எனது கற்பை நிரூபிப்பேன் இவ்வுலகுக்கு”

எனக்கூறி,
லக்ஷ்மணனை தீமூட்டச் சொன்னாள். அங்கேயே அக்னி வளர்த்து, அதில் இறங்கினாள். அவளது கற்பின் நெருப்பு அக்னியையும் சுட்டதோ என்னவோ? அக்னிதேவன் அவளை அப்படியே வெளியில் ஏந்தி வந்தார்.

“ராமா… துன்பத்திலும், ஒரு கணமும் உனை மனதினின்று பிரியாத இக்கர்புடை மகளை நீ என்னில் இறக்கியது தவறு.
இவள் துளியும் குற்றமற்றவள். அப்பழுக்கற்ற ஸீதையை இவ்வாறு பேசியது தவறு என உணர்ந்து, அவளை ஏற்பாயாக. இது எனது ஆணை…”

என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.
🌱விபீஷணன் பட்டாபிஷேகம் 🌱

பின்னர், விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, உடனடியாக அயோத்தி கிளம்பினார். விபீஷணன் அவரை சற்று தங்கி, ஒரு நாளாவது ஓய்வெடுத்துப் போகுமாறு வேண்டினார். ஆனால் ராமரோ,

“எனது கானக வாசம் நிறைவுற்றது. அங்கே எனது தாய் தந்தையையும் இழந்து,
எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார். இப்போது கிளம்பினால் தான் மூன்று மாதத்திற்குள் சென்று சேர முடியும்”

என்றார். அதற்கு விபீஷணன் அவரைச் சமாதானம் செய்து,

“ஹே ராமா…. கலங்காதே! எனது ஒன்றுவிட்ட தமையன் குபேரன் தான் இந்த லங்காபுரியை ஆண்டு வந்தான்.
என் அண்ணன் ராவணன் அவனை வென்று, விரட்டியடித்து, இந்நாட்டைக் கைப்பற்றினான். இங்கே குபேரன் வைத்திருந்த விமானங்கள் அண்ணனிடம் உள்ளன. அதில் நீங்கள் விரைவாக அயோத்தியை அடையலாம்.”

”மேலும் அவன் வைத்துள்ள புஷ்பக விமானம் என்னும் விமானத்திற்கு, ஓட்டுநர் தேவையில்லை.
உனது மன அலைகளைக் கட்டுப்படுத்தி அதில் செலுத்தி, எந்த வேகத்தில், எவ்வளவு உயரத்தில், எத்திசையில் போக வேண்டும் விமானம் என நினைக்கிறாயோ, அந்த எண்ண அலைகளை க்ரஹித்து, அது அவ்விதமே உம்மைக் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் அயோத்தியை மூன்று மணி நேரத்தில் சென்று அடையலாம்.
எனவே, குளித்து உணவு மட்டுமாவது உண்டு கிளம்புவாய் ராமா…”

என வேண்டினார். அவ்விதமே, அவர் உணவு கொண்டு, விபீஷணனிடம் விடைபெற்று, மனைவியுடனும் தம்பியுடனும் மீண்டும் அயோத்தி திரும்பினார் ராமர். ராமர் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருகையில், வானிலிருந்து தெரியும் இலங்கையின் அழகை,
”இலங்கை ராவணனின் எண்ணற்ற விமானங்களால், அழகாக ஜொலிக்கிறது…”

என வர்ணிக்கிறார்.

Source : Valmiki Ramayanam – Yudha Kaandam – Sargam 20.
5000years old Pushpaka Vimana of Ravana Found An Ancient Vimana found in the cave of Afghanistan said to be used in Maha Bharat.

Reference :

இதனிடையே தந்தை மரணத்தால் கைகேயி மனமுடைந்து,
”என்னால் தான் கணவன் மாண்டார், ராமன் வனம் சென்றான், பரதன் எனது முகத்தை இறுதிவரைப் பார்க்க மாட்டேன் என்றான்…. இத்தனைக்கும் காரணமான நான், இனி ராமன் வந்து அழைக்கும் வரை வெளியில் வர மாட்டேன்…”

எனக்கூறி தன் அறையிலேயே 14 ஆண்டுகள் சிறையிருந்தாள். ராமபிரான் திரும்பி வந்து,
கைகேயியை அழைத்து, அவளை வணங்கினார். நந்திக்ராமத்தில் துறவியாக வாழ்ந்து வரும் தம்பி பரதனிடம் தாம் திரும்பிவந்த செய்தியைச் சொல்ல ஹனுமானை அனுப்பினார்.

பரதனைச் சந்தித்த ஹனுமான், நடந்த எல்லாவறறையும் விரிவாகக் கூறினான். அண்ணன் திரும்பிய செய்தி கேட்டுப் பரவசம் கொண்ட பரதன்,
நந்திக்ராமத்தில் தனைத் தேடி ராம – லக்ஷ்மணரும் ஸீதையும் வருவது கண்டான். கண்ணீர் பொங்கியவனாக ஓடிவந்த பரதன் ராமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அவர் அவனைச் சமாதானம் செய்தார்.

”இனி இத்துடன் ராஜ்ய பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் அண்ணா…”

எனக்கதறிய பரதனை அணைத்துக் கொண்டார்.
இவ்வுலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்கும் பரதா என ஆசி கூறினார். மேலும், அவன் தாயை நிராகரித்த செயலுக்கும் அவனைச் சமாதானம் செய்தார்.

“உன் மகன் மேல் கொண்ட பாசத்தால் தான் தவறு செய்தாள். அதற்கான தண்டனையும் தானே ஏற்றாள். அவள் உன்னிடம் கொண்ட பாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அது ஒரு தாயின் தர்மம், தன் மகனை மேலோங்கச் செய்வது எனத்தெரியாதா? அதனால், தாயை மன்னித்து, அவள் முகம் பார்த்துப் பேசுவாய் பரதா….”

என அறிவுரை கூறினார். பின்னர் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, ஒரு நல்ல நாளில், பலதேச மன்னர்கள், அயோத்திவாசிகள், ஸுக்ரீவ, ஹனுமன் சுற்றங்கள்,
விபீஷணன், சொந்தங்கள் எல்லாம் சூழ்ந்து வாழ்த்த, முனிவர்கள், தேவர்கள் ஆஸீர்வதிக்க, அகிலமே மகிழும் வேளையில் ராஜ்ய பொறுப்பை ஏற்றார்.

Sri Ramar Pattabishekam
நாட்கள் நகர்ந்தன… இதனிடையே, தினமும் ஒற்றர்கள் நாட்டு நடப்பைப் பற்றிச் சொல்லுகையில் ஒரு நாள், ஸீதை அஸோக வனத்தில் தனித்திருந்ததைப் பற்றி ஊரில் மக்கள் தவறுதலாகப் பேசுவதை ஒற்றர் மூலம் அறிந்தார்.

அதனால் மிகவும் சஞ்சலப்பட்டு, வருத்தத்துடன் இருந்தார் ராமர்.
விஷயம் அறிந்த ஸீதை, அவரது மேண்மை ஓங்க, குடிகள் தர்மம் தவறாது வாழ, அயோத்தியின் நல்லாட்சிக்காக, தானே அவரைப் பிரிந்து வால்மீகி முனிவரிடம் தஞ்சம் அடைந்தாள்.

இதிஹாஸம் பிறந்தது:

வால்மீகிக்கு ராமரின் வரலாறு எப்படித் தெரிந்தது? அவர் எவ்வாறு அதை லவ – குசர்களுக்குச் சொல்லித்தந்தார்?
அதற்கொரு கதை உள்ளது.

த்ரிலோக ஸஞ்சாரியான நாரதர், ஸங்க்ஷேப ராமாயணம் என்னும் பெயரில் 100 ஸ்லோகத்தில் ராம சரிதத்தை வால்மீகி முனிவருக்கு போதித்தார். அது முதல், வால்மீகியின் மனதில் ராமசரிதையே ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் வால்மீகி, தனது சிஷ்யன் பரத்வாஜ முனிவருடன் தமஸா நதியில் ஸ்நானம் செய்ய வருகிறார். பரத்வாஜர் கையில் வல்கலம் (மரவுரி), மாந்தோல் முதலியன கொண்டு பின் தொடர்கிறார்.

அப்போது அங்கே இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஆண் க்ரௌஞ்ச பக்ஷியை வேடுவன் ஒருவன்
அம்பெய்தி கொன்றுவிட்டான். இது கண்டு மனம் வலித்த வால்மீகியின் வாக்கிலிருந்து அவரையறியாது ஸ்லோகம் போல சில வார்த்தைகள் வெளிப்பட்டு விட்டன. அவர் வேடனைப் பார்த்து,

मा निषाद प्रतिष्ठाम्त्वं अगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एकमवधीः काम मोहितम् || १-२-१५
மா நிஷாத! பிரதிஷ்டாம்ப்த்வம் அகம: ஷாஸ்வதீ: ஸமா: |
யத் கிரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காம மோஹிதம் ||

என்றார். அதாவது,

“ஹே வேடனே! க்ரௌஞ்ச பக்ஷிகள் சந்தோஷமாக இருந்த போது, அதை அம்பெய்தி கொன்றுவிட்டாயே… நீ வெகுகாலம் இருக்க மாட்டாய்….”

என்பது போல் அர்த்தம் காட்டும்.
வேதனையில் சொன்ன வால்மீகி சட்டென்று உணர்வு மீண்டவர் போல் தன் சிஷ்யனிடம்,

“நான் ஏதோ ஸ்லோகம் சொன்னது போல் மனதில் படுகிறதே….” என வினவினார். பரத்வாஜரும்,

“ ஆம் ஆச்சார்ய: தங்கள் நாவில் இருந்து அழகிய ஸ்லோகம் ஒன்று வெளிப்பட்டது” என்றார்.

மா – லக்ஷ்மி தேவி
நிஷாத: – கணவர் (மஹாவிஷ்ணு)
ப்ரதிஷ்டாம்த்வம் – பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
அகம – அஸாத்யமான
ஷாஸ்வதீ: – பூமி
ஸமா: – இணை
யத் – அந்த
க்ரௌஞ்ச – ராக்ஷஸன் என்றும் பொருள்
மிதுநாத் – தம்பதி
ஏகம் – ஒருவன்
வதீ: – வதைக்கப்பட்ட
காம – காமம்
மோஹிதம் – மோகத்தினால்
”பூமியில் ராக்ஷஸ தம்பதிகளிலேயே அஸாத்யமான இணையில்லாத ஒருவன், காம மேஹத்தினால் லக்ஷ்மிதேவியின் கணவர் மஹாவிஷ்ணுவால் வதைக்கப்பட்டான். அவனை வதைத்த ஹே ராமா, பல்லாண்டு பல்லாண்டு வாழ்க”

என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள் என ப்ரும்மா வால்மீகியின் முன் தோன்றி கூறினார்.
10,000 வருஷங்களுக்கும் மேலாக தவம் செய்வோருக்கு மட்டுமே தரிஸனம் தரும் ப்ரும்மா, வால்மீகியின் ராமநாம ஜபத்தின் வலிமையால் அவருக்கு தரிஸனம் தந்தார்.

அவரைக் கண்டதும் வால்மீகி மஹரிஷி, அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் தந்து பூஜித்து நமஸ்கரித்தார். ப்ரும்மா மனம் மகிழ்ந்து,
வால்மீகியை அருகில் அமர்த்தி,

“யாமே ஸரஸ்வதி தேவியை உம் வாக்கிலே ஆவிர்பவித்திருக்கிறோம் (தோன்ற வைத்திருக்கிறோம்). நாரதர் உம்மிடம் சொன்ன ராம சரித்ரத்தை நீர் விஸ்தாரமாக, ஒரு காவியமாக்குங்கள்…

அவரது சரித்ரத்தில் நடந்தவை அனைத்தும் உமது யோக சக்தியால் உமக்குத் தெரியும்.
அவர்களே மறந்து போனவை கூட உமக்குத் தெரிய வரும்… ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்தவை முதல், அவர்கள் ரகஸ்யமாகப் பேசியதும், சிரித்ததும், ஹனுமானின் ப்ரபாவமும்…

இப்படி எல்லாம் தெரிய வரும். அதை அப்படியே எழுதுங்கள்…. அதில் ஒரு பொய்யும் இருக்காது….
நீங்கள் எழுதும் இக்காவியம் மலை, நதிகள் பூமியில் உள்ளவரை இருக்கும். இக்காவியம் பூமியில் இருக்கும் வரை, நீங்கள் ப்ரும்ம லோகம் முதல் எல்லா லோகத்திலும் ஸஞ்சாரம் செய்துகொண்டு, சிரஞ்ஜீவியாக இருப்பீர்கள்…. மம: ஆஸீர்வாதஸ்ய:”

என ஆஸீர்வதித்தார்.
மஹரிஷி மனம் நிறைந்து, பயபக்தியுடன் ப்ரும்மதேவர் கூறியபடி ஸ்ரீ ராம சரித்ரத்தை 24,000 ஸ்லோகங்களில் ஒரு காவியமாக வடித்தார்.

“ஸீதாயா” சரிதம் மஹத்” என்னும் பெயரில், ஸீதாதேவி சரித்ரம், ராமரின் வாழ்க்கை, ராவண வதம் என, தன் மனதில் யோகத்தால் வந்த நிகழ்வுகள் கண்டு,
உள்ளது உள்ளபடி 24,000 ஸ்லோகங்கள் அநுஷ்டுப் சந்தஸில் இயற்றிவிட்டார்.

"ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் |
ரகுவர சரிதம் முநிப்ரணீதம் தஸஸிரஸஸ்ச வதம் நிஸாமயத்வம் ||"

(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் = உபகதைகளுடனும், சரியான ஸந்தங்களின்
பிரிவு, சேர்க்கை இவைகளுடன் கூடியதும்,

ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் = ஒரே மாதிரியான மதுரமான அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்

ரகுவர சரிதம் முநிப்ரணீதம் = முநிவரால் இயற்றப்பட்ட ரகுவம்ஸத்தில் வந்த அந்த ராமரின் சரிதத்தை

தஸஸிரஸஸ்ச வதம் = பத்துதலையுடையவனை வதைத்த (ராவணனை வதைத்த)
நிஸாமயத்வம் = கவனித்து நாம் பெறுவோம்/ ஆஸ்சர்யத்துடன் நாம் அநுபவிப்போம்.)

உபகதைகளுடனும், சரியான ஸந்தங்கள் கூடியதும்; ஒரே மாதிரியான மதுரமான, அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்; ராவணனை வதைத்த, ரகுவம்ஸத்தில் வந்த; முநிவரால் இயற்றப்பட்ட ராமரின் சரித்ரத்தை;
ஆஸ்சர்யத்துடன் நாம் அநுபவிப்போம்…. என்கிறார்.

அடுத்த தொடரில் லவ - குசன் சரித்ரம் ஆரம்பம்...

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!