My Authors
Read all threads
#வீரேகியமுனிவர்
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் அண்ணாமலையார்
கோவிலை சிதைக்க எண்ணினான்.
அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அரசன் "நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள்
தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?"
அதற்கு அந்த ஐவர்
"எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்" என்றனர். அதற்கு அரசன் " உம் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து
சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்" என்று கூறி வெட்டிவிட்டான்.
உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் "வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார்
உடனே வடக்கே சென்றுதேடினர்.
ஓம் நமசிவாய என்று
ஜபிக்கும்
சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற ஐவரும் பதினைந்து வயது பாலகனை கண்டனர்.
ஐவரும் "இச்சிறு பாலகனா
கடவுள் சொன்ன
பக்தன்
" என ஏளனம் செய்தனர்"
அப்போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது .
அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம்
கூறி புலியை சாந்தப்படுத்தி அவர்களை காப்பாற்றினான்.
ஐவரும் கோவிலில் நடந்ததை கூறி
அச்சிறுபாலகனை அழைத்து வந்தனர்.
அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த சிறுவன் அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினார்.
அண்ணாமலையாரை மனதில் நினைத்து நமசிவாய
5. மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர் பெறச்செய்தார்.
அதை நம்ப மறுத்த முகலாய அரசன்
"நீ ஏதோ சித்து வேலை
செய்கிறாய் " எனக் கூறி நம்ப மறுத்தான்.
"சரி மற்றொரு வாய்ப்பு தருகிறேன்
இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் " .
என கூறினான்.
அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான்.
அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர்.
அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது.
அதில் பல ரக
பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.
இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி என்று சொன்னார்
நம் பெரிய நந்தியை
பார்த்து " இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை
மாற்றி மடக்கி வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியை கைவிட்டு கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான்.
சிவபெருமானை நோக்கி அனைத்து கோவில்களிலும் நந்தி இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து
அமர்ந்திருப்பார். .

நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர்.

அண்ணாமலையார் பெரிய நந்திக்கு உயிர் கொடுத்தார்.
நந்தி தேவர் எழுந்து நின்று
கால் மாற்றி மடக்கி வைத்து
உட்கார்ந்தார்.அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய
நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார்.
அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான்.
அன்று அண்ணாமலையார் ஆலயம் வந்த பாலகன் தான் வீரேகிய முனிவர் ஆவார்.
அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம்.
இக்கிராமம் திருவண்ணாமலைக்கு வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறார்..
அவர் நினைவாக ,பர்வதமலை அருகே சீலப்பந்தலில் என்கிற சிநந்தல்
கிராமத்தில வீரேகிய முனிவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது.
இங்கே இவரின் ஜீவ சமாதியும் இருக்கிறது
#படித்ததில்பிடித்தது
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with #AnationalistWarrior

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!