My Authors
Read all threads
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
பறவை மனிதன் பால்பாண்டி.
பாப்பா., அங்கே பார்! அதுதான் கூழைக்கிடா..pelican., இதுக்கு பேர் பாம்புதாரா ..இங்கிலீஷ்லே.. என பைனாகுலரை மகளிடம் தந்து கொண்டே யோசிச்சேன்.
Darters சார் என்றது ஒரு குரல்.
திரும்பினால் வெள்ளந்திச் சிரிப்போட மெலிதாக ஒருவர்.,
ஐ! எவ்ளோ பேர்ட்ஸ்! வெளிநாட்டுப்பறவைகள் எல்லாம் எவ்ளோ அழகா இருக்குல்லே என்றான் மகன்.
தம்பி, இங்கே இருக்கும் பறவைகள் எல்லாம் அவங்க அம்மா இங்கேயே முட்டை போட்டு, இங்கேயே குஞ்சா பொறிஞ்சு, இங்கேயே உணவூட்டப்பட்டு, இங்கேயே பறக்கக் கத்துகிட்டு, வருடத்துக்கு எட்டு மாசம் இங்கேயே இருப்பவை..
ரஷ்யாவிலே, யூரோப்லே, வட ஆப்பிரிக்காவிலே பனி உருகி ஏரி,குளம்லாம் தெரியும்போது உள்ளே நிறைய மீன்கள் கிடைக்கும். அதை சாப்பிட வருஷத்துக்கு நாலு மாசம் அங்கே போயிட்டு, முட்டை போட திரும்ப இதே கூந்தன்குளத்துக்கு வந்துரும். இப்போ சொல்லுங்க! இதுங்களுக்கு சொந்த ஊர் எது? வருஷத்துக்கு எட்டு
மாசம் வாழும் நம்ம இந்தியாவா? 4 மாசம் வலசை போய் விட்டு வரும் ஐரோப்பாவா?
இந்தியா என்றனர் கோரஸாக எனது பிள்ளைகள். 48 வது வயதில் நானும் புதிதாகக் கற்றுக்கொண்ட பாடம் அது. கற்றுக் கொடுத்த ஆசான் பால் பாண்டி எனும் பறவை மனிதன்.
நெல்லை கூந்தன்குளம் உலகப் புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம்
என்பதை நாம் அறிவோம். அந்தக் குளம் இன்னமும் உயிர்ப்போடு, வெளிநாடுப் பறவைகளின் சே..சே! நமது நாட்டுப் பறவைகளின் சொர்க்கமாக, பாதுகாப்பாக இருப்பதின் காரணம், தனது வாழ்நாள் எல்லாம் இந்தப் பறவைகளுக்காகவே அர்பணித்து வாழும் இந்த Bird Watcher பால்பாண்டியும், அவரது மனைவி மறைந்த வள்ளித்தாய்
இருவரும்தான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் பல மைல்கள் குளங்களிலும், கண்மாய்களிலும் அலைந்துத் திரிந்து பறவைகள் கட்டியிருக்கும் கூடுகள் பத்திரமாக உள்ளனவா என பார்ப்பதுதான் கணவன், மனைவியின் முழுநேர வேலையாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? பல சமயங்களில் கூடுகளில் இருந்து குஞ்சுகள்
எகிறி கீழே விழுந்து விடும். அவைகளால் பறந்து மீண்டும் கூட்டில் ஏற முடியாது. இதற்காகவே காத்திருக்கும் நரி போன்ற சிறுவிலங்குகள் அவைகளை தின்றுவிடும் முன்பு, மீட்டெடுத்து மீண்டும் கூட்டில் சேர்ப்பார் இந்தப் பறவை மனிதன். பரந்து விரிந்த நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எந்தெந்தப்
பறவைகள் கூடு கட்டியுள்ளன என்பது இவருக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால், இவரிடம் சொல்லிவிட்டுதான் கூடே கட்டுமோ என நாம் வியக்கும் வண்ணம் இவருக்கும், அந்தப் பறவைகளுக்கும் அத்தனை அந்நியோன்யம் உண்டு. மனிதர்களில் மாமனிதராக வாழும் இவர் ஓர் அபூர்வப் பிறவி. சென்ற ஆண்டு நல்ல மழைப்
பெய்து குளங்கள் எல்லாம் நிரம்பி ஏறக்குறைய அத்தனை வகைப் பறவைகளும் வந்து கூடு கட்டியவுடன் என்னை புறப்பட்டு வரும்படி பலமுறை அழைத்தார். என்னால் போக முடியவில்லை. இந்த ஆண்டும் குளங்கள் நிரம்புகின்றன. எப்படி இருக்கிறார் பால்பாண்டி என அழைத்தபோது, பெரிய விபத்தில் சிக்கி மீண்டதை அறிந்தேன்.
பால்பாண்டியின் ஒரே கவலை சொந்த வீடோ, சொகுசான வாழ்க்கையோ, தன் பிள்ளைகளின் எதிர்காலமோ அல்ல. எப்போதுமே அவருடைய கவலை அன்றைக்கு மீன் வாங்கத் தேவையான காசை எப்படி புரட்டுவது என்பதுதான். ஆம்! எப்படியும் ஒரே நேரத்தில் நூறு பறவைக் குஞ்சுகளையாவது இந்தத் தம்பதிகள் தங்கள் பிள்ளைகளைப் போல
பராமரித்து வருவார்கள். தங்களிடம் கிடைக்கும், தாங்கள் ஈட்டும் பணம் அத்தனையும் செலவிட்டு மீன்கள் வாங்கி வந்து சொந்தப் பிள்ளக்கு ஊட்டுவதைப் போல ஊட்டி விடுவார்கள். இப்படியான மனிதர்கள் இருப்பதால்தான், தமிழகத்தின் பெருமைகளுள் ஒன்றாக கூந்தன்குளம் சரணாலயம் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தின்
மகத்தான மைந்தர்கள் என நான் எப்படி தி.க.சி, வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா போன்ற ஆளுமைகளைக் கருதுகிறேனோ, அதே போலவே இந்தப் பறவை மனிதன் பால்பாண்டியையும் பார்க்கிறேன். இவரைப் பற்றிய குறிப்புகளை உடன் இணைக்கிறேன். தவறாமல் யூ டியூப் வீடியோவையும் பாருங்கள். இப்படியான மனிதர்களால்தான்
இவ்வுலகம் உய்யும் என்கிறார் திருவள்ளுவர்.
இப்போது வேண்டுகோள் : இவரைப் போல பறவைகள் குறித்து அறிந்த வெறொரு மனிதர் நான் அறிந்து இல்லை. புகழ்பெற்ற சலீம் அலிக்கு நிகரானவர். ஆனால் படிக்காதவர். இவரது ஒரே வருமானம், சரணாலயத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழிகாட்டியாக
இருந்து பெறும் சன்மானம் மட்டும்தான். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக கரோனா பேரிடரால் பயணிகள் வருகை ஏதுமின்றி மிகவும் துன்பப்படுகிறார்! இதற்கிடையில் இவருக்கு நேர்ந்த விபத்து வேறு! சரணாலயம் மூடப்பட்டுள்ளது என்பது பறவைகளுக்குத் தெரியாதே! எனவே கூட்டிலிருந்து கீழே விழும் குஞ்சுகள்
விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை மீட்டெடுத்து வளர்க்கும் பணி இவரால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரே தேவை அவைகளுக்கு தினமும் மீன் வாங்கவும், இவரது வாழ்வாதாரத்துக்குமான பணம்தான். பால்பாண்டியின் வங்கி எண்ணை இத்துடன் இணைத்துள்ளேன்.
நண்பர்கள் உங்களால் இயன்றதை அவருக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கோருகிறேன். அந்தப் பறவைகளுக்கு ரேஷன் கார்டு கிடையாது. ஆயிரம் ரூபாய் கிடையாது. ஒன்றிணைவோம் வா விற்கு அழைத்து உதவி கோர தெரியாது. அவைகளுக்கென இருப்பது பால்பாண்டி மட்டுமே!. பால்பாண்டிக்கு ஆதரவாக நாம் இருப்போம். நன்றி.


பறவை மனிதன் பால்பாண்டி க்கு உதவிட முன்வரும் நல் உள்ளங்களுக்கு நன்றி.. 🙏

s palpandi
SBIN 0001021
State Bank of India
Nanguneri
mobile no : 94862 05438
முதல் உதவி என்னிடமிருந்து. பால்பாண்டிக்கு உதவிய விவரத்தை நண்பர்கள் (விரும்பினால்) இங்கே பின்னூட்டமாக இடவும். அவரை அழைத்துச் சொல்லி விடுகிறேன். தனது வங்கிக்கணக்கில் பணம் வந்துள்ளதைக் கூட அறிய இயலாத கிராமத்து மனிதர் அவர்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SKP KARUNA

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!