My Authors
Read all threads
🌺அடேயப்பா.... பஹூத் அறிவு தான்....🌺

இங்கே டைரக்டர் லக்ஷ்மி ராமக்ருஷ்ணன் அவர்கள் மற்றும் டாக்டர் ஷாலினி இருவரும் இந்த கந்த சஷ்டி கவசம் பற்றி விவாதம் செய்ததற்கான லிங்க உள்ளது.

இதில் மிகமிக வருந்தத்தக்க் ஒரு விஷயம்... அவன் பேசியதில் தவறு இல்லை என ஷாலினி பேசுவது.
அவன் பேசிய வார்த்தை க்ராமத்து பாஷை, அதுதான் இவங்களுக்கு ப்ரச்சனை என்கிறார்; ஆனால் டைரக்டர் வார்த்தை இடத்துக்கிடம் மாறுபடும். ஆனால் intention அங்கே தவறாக இருக்கிறது என்கிறார். அதை ஷாலினி ஒப்புக்கொள்ளவில்லை.

Sex education இல்லையா என்கிறார் டாக்டர். அதற்காக பெற்றோர் உன்னைப் பெற்ற
விதத்தில், தாய் தந்தை இப்படி எல்லாம் நடந்தார்கள் என ஒருவர் வர்ணித்தால் ஏற்போமா? எனக்கேட்டால், ”எனக்கு அது பெரிதாகத் தெரியாது, நாங்களே அதைச் சொல்லிக் கொடுக்கிறோம்” என்கிறார்.

”அப்படியானால் Sex education மட்டும் எதுக்கு? Porn site போதுமே?” என்றால் அதை டாக்டர் ஏற்பாரா?
”அந்த சகோதரரைத் தட்டிக்கொடுத்து, சொல்லிக் கொடுப்பதை விட்டு, கைது செய்யச் சொல்வது தவறு” என்கிறார் டாக்டர்.

“அப்ப பெண்ணுறுப்பின் ஆழம் பார்ப்பாரா முருகன்? Bra தைத்துத் தருவாரா?” எனக்கேட்பது அறியாமையா எனக்கேட்டால், “அவன் வளர்ந்த விதம் அப்படி, அதனால் விட்டுப் போக வேண்டும்” என்கிறார்.
”கேள்வி கேட்காமல் எப்படி முன்னேறுவது?” என்கிறார் ஷாலினி. முன்னோரும் கேட்கச் சொன்னார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தை, முருகன் கைவேல் போல, கூர்ந்து கவனித்து, அகன்ற மனதோடு பார்த்து, ஆழ்ந்து கற்று, அவ்வாறு செய்கையில் வரும் சந்தேகங்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பதே சரி.
ஒன்றை அறிந்து கொள்ள கேட்பதற்கும், இழிவுபடுத்த அதைப்பற்றிக் கேட்பதற்கும் வித்யாசம் உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பது சரியென்னும் ஷாலினி வாதம் தவறு.

அடுத்து, ”1850-ல் அவர் மருத்துவக் கடவுள்; அங்கு வேண்டி பஞ்சாமிர்தம் உண்டால் நோய் தீரும் எனும் நம்பிக்கை இருந்தது.
இன்றும் அதையே படிப்பது மூடத்தனம் என்கிறார். அந்த நம்பிக்கையை விட்டு முன்னேறச் சொல்கிறார்” என்கிறார் ஷாலினி.

போகர் எனும் சித்தர் நவ பாஷாணம் கொண்டு செய்த சிலையில், நோய் தீர்க்கும் சக்தி இருந்தது. அதனால் தான் அதில் அபிஷேகம் செய்து, அதைப் ப்ரஸாதமாக எல்லோருக்கும்
தருவார்கள். அதையும் தான் இந்த அரசியல்வியாதி ஜந்துக்கள், அர்ச்சகரை மிரட்டி பஞ்சாமிர்தத்தோடு வழித்து வாங்கி வாங்கி, அவரின் காலும் சூம்ப வைத்து விட்டார்கள்.

அபிஷேக மூர்த்திகள் எவற்றால் செய்யப்படும்? கர்ப்பக்ருஹ மூர்த்திகள் எவற்றால் செய்யப்படும்? அவற்றின் தனித்துவம் என்ன?
அவற்றின் சக்தி என்ன? இவை வேறுபடக் காரணம் என்ன? எவ்வித மூர்த்திகளுக்கு அபிஷேகம் உண்டு? எவ்வித மூர்த்திகளுக்கு அபிஷேகம் கிடையாது?

இவற்றில் எவ்வித மூர்த்திகளுக்கு எவற்றால் மட்டும் அபிஷேகம் செய்ய வேண்டும்? அதன் காரணம் என்ன? அவை எவ்வகைப் பிணியைத் தீர்க்க வல்லன?
இவற்றைச் சித்தர்கள் எழுதியுள்ளார்கள் “தமிழில்”... அச்செயுள்களின் உண்மையான விளக்கம் என்ன? அவ்வகை மூர்த்திகளின் உருவங்கள் மூலம் அவர்கள் மக்களுக்கு எவ்வித தத்துவதை உணர்த்துகிறார்கள்?

அவதாரமாக வாழ்ந்த ஸ்ருஷ்டிகள் தவிர(அவதாரங்களுக்க்கான ஆதாரம் உள்ளதை,
இன்றைய விஞ்ஞானம் நிரூபித்தும் நம்பாதவர்களுக்கு அல்ல) பிற தெய்வ உருவங்களின் தாத்பர்யம் என்ன?

எவ்வித சக்தியை எவ்வாறெல்லாம் வர்ணித்து வடித்துள்ளனர் முன்னோர்? அதன் விளக்கம் என்ன? கோவில்களும், வேத மந்த்ரங்களும், ஸ்லோகங்களும், பாடல்களும் (தமிழ், ஸமஸ்க்ருதம் இரண்டிலும் தான்)
எழுதியதன் காரணம் என்ன? அதில் உள்ள விஞ்ஞான நுட்பம் என்ன? அதைப் பின்பற்றுவதால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன?

எனும் குறைந்தபட்சக் கேள்விகளுக்காவது சரியான பதிலை ஆய்ந்து அறிந்திருந்தால், இந்நேரம் பேசியவனே மனம் மாறியிருப்பான். தன் தவறு உணர்ந்திருப்பான்.
இது எதுவுமே சரியாகச் செய்யாமல் ஷாலினி, இது மருத்துவக் கடவுள் எனும் நம்பிக்கை மட்டும் தான் எனக் கூறுவது எப்படிச் சரியாகும்? நாம் ஒரு துறையில் வல்லவர் என்றால், அது பற்றி மட்டும் பேசுதல் கற்றோர்க்கு அழகு.

இல்லையா... பேசப்போகும் விஷயம் பற்றி, நடுநிலை மனதோடு ஆய்ந்தறிந்து,
புரிந்து பேச வேண்டும்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

ஆனால், ஒரு திராவிடச் சிந்தனாவாதியிடம் இதை எதிர்பார்க்க முடியாது. இங்கே லக்ஷ்மி ராமக்ருஷ்ணன் அவர்கள் யாருடன் பேசுகிறோம் என அறிந்து பேசினாரா இல்லையா எனச் சந்தேகம் வருகிறது.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். அப்பேர்ப்பட்ட இடத்தில் இவர் பேசாது ஒதுங்குதல் நலம்.

ஏனெனில், ஔவைப்பாட்டி சொன்னது போல்

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்...
அதனால் நம் கருத்தை நாம் பதிவிடுவதோடு ஒதுங்கினால், நமக்கும் மதிப்பு,வருத்தமும் குறைவு.

இதை அவர் தவறாக நினைத்தாலும், நான் நல்லெண்ணத்தின் பேரில் சொல்கிறேன். புரிந்துகொள்ள மறுப்பவரிடம் பேசுதல் வீண். இதே ஷாலினி, ஈ.வே.ராவை கேவலமாகத் தூற்றிப் பேசினால் ஒப்புக் கொள்வாரா?
”அவர் பாவம்... தெரியவில்லை. சொல்லித் திருத்தலாம்” என்பாரா? ஒருவன் அச்சிலையில் காவி வர்ணம் ஊற்றி விட்டானாம்... அவனைக் கைது செய்யலாம், வர்மாவைக் கைது செய்யலாம்.... ஏனென்றால் அவர்கள் உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறார்கள்.

அப்படியானால் இந்த புத்திசாலி என்ன குழந்தையா?
இவரை மட்டும் சொல்லித் திருத்த? கேவலம்...

எல்லோருக்கும் வாழ்வில் பல ப்ரச்சனைகள் உண்டு. அவற்றைத் தாண்டியும் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து வாழவேண்டும்.

தமிழன் இசை பறை, ஆட்டம் க்ராமிய நடனங்கள், முருகன் மட்டும் தான் கடவுள், மந்த்ரங்கள், ஸ்லோகங்கள், பரதம், பிற இசைகள்,
நடனங்கள் எல்லாம் ஆரியம்.... ஏனிந்த மனப்போக்கு? இவர்கள் தங்களுக்கென ஒன்றை ஒதுக்கிக் கொண்டு, அது பிறவற்றை விடத் தாழ்ந்தது என ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள்.

இதனால் பிறவை உயர்ந்தது என ஒரு எண்ணம் மனதில் வருகிறது. அதனால், அவர்கள் செயல் மீது ஒரு வெறுப்பு தோன்றுகிறது.
பணக்காரன் வாழ்க்கை முறை ஒருவனுக்கு ஆர்ப்பாட்டம் எனத் தோன்றும். அவன் தர்மம் செய்து வாழ்ந்தால் ஊதாரி என்போம், அமைதியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போனால் திமிர் என்போம், சந்நியசி எனில் பரதேசி என்போம், அதிகம் படித்தவன் ஒரு நன்மை சொல்லிவிட்டால், அவனைப் பார்த்து கர்வி என்போம்...
இப்படி ஒவ்வொரு விதத்தில் நம்மை விட மேல்நிலையில் இருப்பவனைப் பார்த்து ஒவ்வொரு வார்த்தை சொல்கிறோம்....

அப்படியானால் நாம் யார்? எந்நிலையில் உள்ளோம்? என்பதை ஆராய்ந்தால், இவை அனைத்துமே Inferiority Complex-ன் வெளிப்பாடு என்பதை அறியலாம்.
ஆனால் வருத்தம் என்னவென்றால், இதை நாம் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டோம்.... சரி ஒப்புக் கொள்ள வேண்டாம். மாற முயற்சிக்கலாம் அல்லவா? அதுவும் மாட்டோம்.... இது மிகவும் தவறான போக்கு.

இதன் விளைவு தான் திராவிடக் கொள்கைகளும், ஈவேரா பின்பற்றலும்....

வாழ்வில் ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றவாறு
ஒவ்வொரு இசையையும், வாத்தியங்களையும் பிரித்தார்கள். மனநிலைக்கு ஏற்ப அதை உபயோகித்தார்கள். சிலர் அதீத மனவலியில் அழுகையைத் தேடுவார்கள், சிலர் மௌனத்தைத் தேடுவார்கள், சிலர் பக்தியைத் தேடுவார்கள், சிலர் மெல்லிசையைத் தேடுவார்கள், சிலர் பறையிசையைத் தேடுவார்கள்...
இது மனிதர்கள் வாழும் சமூக மனநிலைக்கு ஏற்ர்ப மாறுபடும். இதே தமிழகத்தில் ஆதி காலத்தில் பிற இசை இல்லை என்பதற்கு சான்று இல்லை. ராவணன் யாழ் இசைப்பதில் வல்லவன் என்கின்றனர். அவன் எங்கள் தமிழினம் என்கின்றனர். அப்படியானால் யாழும், வீனையும் நம் இசை தானே?
இங்கு மாற வேண்டியது நம் மனம். எதைப் பார்த்தால் பொறாமை வருகிறதோ, அதை நன்கு கற்று, அதில் நம்மை முன்னேற்றிக் கொண்டால் Inferiority complex தானாகப் போகப் போகிறது.

அதற்கு முனைய மாட்டேன் என்றால்.... அவர்கள் கத்திக் கொண்டே இருக்கட்டும், குறை சொல்லிக் கொண்டே இருக்கட்டும்,
இதனால் நற்பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.

பகுத்து அறிதலைக் கூடத் தவறாகப் புரிந்து பேசும் “பஹூத் அறிவு” வாதிகளிடம் வாதம் வீண். அவர்களுக்கு ஒரு தண்டனை தப்பு (தவறு அல்ல) செய்வதை நிறுத்துவதற்காக அளிக்கப்பட வேண்டும். அது பள்ளி ஆசிரியர் நாம் திருந்த அடிப்பது போல்.
அதைத்தடுத்த லக்ஷணம் தான் இன்றைய பள்ளி மாணவர்களின் ஒழுக்கக்கேடு அதிகரித்ததன் காரணம். இதை ஏற்காதோர் பற்றி எனக்குக் கவலை இல்லை.

ஆவுடையப்பனுக்கு நல்ல தீனி....🤦‍♀️🤦‍♀️என்ன பிழைப்போ🤦‍♀️

ஆனால் இந்த திராவிடத் தாங்கிகளின் ”பஹூத் அறிவு தான்....” தாங்க முடியவில்லை....

@threader_app compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!