#BharathVruksh
🌿வஸிஷ்டரின் வாழ்க்கை 🌿
வஸிஷ்டரை *ப்ரும்மரிஷி* என்கிறது வேதம். இதற்குக் காரணம் அவரது பிறப்பு!!
அவர் ஆதியாக ப்ரும்மாவின் மூச்சிலிருந்து தோன்றிய ப்ரஜாபதிகளில் ஒருவராதலால்,
மேலும், அக்னிவழி நுழைந்து, வருணபகவானால் ஸ்வீகரிக்கப்பட்டு, ப்ரஜாபதி மூலம் அகஸ்த்யர், வஸிஷ்டர் எனும் இரு மகன்கள் தோன்றினார்கள் என்கிறது புராணங்கள். இதனால் இவர்கள் மைத்ராவருணி என்றும் அழைக்கப்படுகிறார்கள்
ரிக் வேதத்தில் இவர் கூறியதாக பல ஸ்லோகங்கள் உள்ளன. விஸ்வாமித்ரருடன் போட்டியிட்டாலும்,
ஒரு யோகிக்கு முதலில் வேண்டியது பணிவே… அதைப்பெற்றுவிட்டாய்…. அதனால் இன்று முதல் நீ ப்ரும்மரிஷி ஆகிறாய் என வஸிஷ்டர் ஆஸீர்வதித்தார்.
எதிரிகளானாலும், அவர்களது மேன்மைகளும் போற்றப்பட்டன. படித்தவர்கள், ஞானம் பெற்றால் மட்டும் போதாது, அகந்தை ஒழிந்திருக்க வேண்டும்.
மேலும், முனிவர்கள் அனைவரும் ப்ரம்மச்சாரிகள் அல்லர். ஆதிகாலங்களில், அவர்கள் வைஷ்ணவத்தில் கூறப்படுவது போல், க்ருஹஸ்தனாக இருந்தே
அவள் மட்டும் தனியாக இருக்கிறாரா என்றால் இல்லை. வஸிஷ்டரும் அருந்ததியும் இரு நக்ஷத்ரங்களாக வானில் இருக்கின்றனர் என்கிறது புராணம்.
எனவே கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் அவ்வாறு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே அருந்ததி நக்ஷத்ரம் காட்டப்படுகின்றது.
revivaloftrueindia.com/2013/07/twin-s…
tifr.res.in/~archaeo/paper…
🌿விஸ்வாமித்ரரின் வாழ்க்கை🌿
ப்ரும்மரிஷி என வஸிஷ்ட மஹரிஷியால் போற்றப்பட்டவர் விஸ்வாமித்ரர் (எ) கௌஸிகர். சந்த்ரவம்ஸத்தில் வந்த குசர் என்னும் க்ஷத்ரிய ராஜனின் மகன் குசநாபர். இவருக்குக் காதிராஜன் என்னும் மகன் பிறந்தார்.
இவர் மன்னராதலால், பிறப்பால் க்ஷத்ரியர். வேட்டைக்காக ஒரு முறை இவர் சென்றபோது, வஸிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்தில் தேவ பசுக்களான
“நானும் தவம் புரிந்து, உமது வாயால் என்னை ப்ரும்ம ரிஷி எனச் சொல்ல வைக்கிறேன்”
எனச் சூளுரைத்தார்.
“ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜீடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர :ப்ரசோதயாத்”
ஒரு க்ஷத்ரியனாக விஸ்வாமித்ரர் தன் குடிகளின் நலனுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் ஒரு ப்ராமணரான முனிவரையும் எதிர்க்கத் தயங்கவில்லை. இவ்விடத்தில் அவனது க்ஷத்ரிய தர்மம் சரிதான்.
ஒரு க்ஷத்ரியனுக்குக் கோபம் இருக்க வேண்டியது தான். ஆனாலும், நாட்டையே துறந்து,
ஆனால், தன்னை நல்லவிதமாக இன்னும் உயர்த்திக் கொள்ளும் நிலைக்குதான் போனார். மேலும், அதன் மூலம் அவர் முனிவரானதும் எல்லா நாட்டிற்கும் நன்மை ஒன்றே செய்தார்.
இங்கே ஒரு க்ஷத்ரியன் – அவனது பெற்றோர் க்ஷத்ரிய வம்ஸம், தமக்கை க்ஷத்ரிய வம்ஸம் – ஆனால் இவர் மட்டும் ப்ராமணர் ஆனது எவ்வாறு? அப்பேர்ப்பட்டவர் ஞானிகளாலும் போற்றப்படுவது எவ்வாறு?
வர்ணபேதம் என்பது குலத்தாழ்ச்சி இல்லை என்பதற்கு ஆதாரமானது இவர் வாழ்க்கை. மேலும் வர்ணம் என்பது, குணத்தால், அறிவால் நம் நிலையை உயர்த்திக் கொள்வதில் தான் உள்ளது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்வது.
haryanatourism.gov.in/Destination/vi…
🌿வால்மீகியின் வாழ்க்கை 🌿
முதல் இதிஹாஸம் எனும் ஒன்றை உலகில் இயற்றியவர் வால்மீகி மஹரிஷி. நாரதர் வால்மீகியிடம்,
“16 குணங்களும் கொண்ட மனிதனைப் பார்த்ததுண்டா பூவுலகில்?”
என்றார். வால்மீகியோ
”அப்படி ஒருவர் இருக்கிறாரா?”
”அப்படிப்பட்ட ராமரைப் பற்றி கூறுகிறேன் கேள்”
எனக்கூறி, நூறு ஸ்லோகத்தில் நாரதர் ராமரின் சரித்ரத்தைக் கூறுகிறார். இதற்கு *ஸங்க்ஷேப ராமாயணம்* என்று பெயர்.
”வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே |
வேத ப்ரசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா || ”
”பூமியிலே தஸரதனின் மைந்தனாக, ஸ்ரீ ராமனாக அவதரித்த பிறகு, அந்த வேதம் பார்த்தது….
”அந்த பகவானே ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்துவிட்டார்… இனி நாம் என்ன செய்ய இருக்கிறது?”
என்று நினைத்து, ஸ்ரீமத் ராமாயணமாக வால்மீகியின் வாயிலாக வெளிப்பட்டு விட்டது…”
வேடுவராக மட்டும் இருந்திருந்தால் இவர் க்ஷத்ரியராக இருந்திருப்பார். ஆனால், இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக
என்றனர்.
“குடும்பத் தலைவனாகையால் எங்களைக் காக்க வேண்டியது உனது கடமை. அதை நீ திருடிச் செய்வதால் ஏற்படும் பாவத்தை நாங்கள் எப்படிப் பங்கு ஏற்போம்?” எனக் கேட்டனர்.
🍁
அவர்கள் ராமநாமத்தை உபதேஸித்து, அதையே திரும்பத் திரும்ப ஜபம் செய்யும்படிக் கூறினர். அவருக்கு ”ராம” என்று கூட வரவில்லை….
அதன்படி ரத்னாகரனும் ”மரா… மரா…” என்றே உச்சரித்துக் கொண்டிருந்தார். அது நாளடைவில் “ராம… ராம…” என ஆனது.
அதுகூடத் தெரியாத அளவிற்கு அவர் தவத்தில் மூழ்கினார். கடும் தவம் புரிந்தார்.
வாழ்க்கையின் வளர்ச்சியில் ஆண்களே ஒரு குடும்பத்திற்கான பொறுப்பினை வகிக்க வேண்டியவர்கள் எனும் தர்மம் வழக்கத்தில் வந்துவிட்டது தெரிகின்றது.
இதுவரை பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மனிதர்களின் குனாதிசயம் ரத்தத்தின் அணுக்களில் ஊறியது;
அனைவரும் போற்றும் ராமாயணத்தை எழுதியவர், ஆரம்ப காலத்தில் ஒரு திருடன் என்பதால் அவரை யாரும் தூற்றவோ மறுக்கவோ இல்லை. அவரது தகுதியை மதித்தனர்.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁