My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿வஸிஷ்டரின் வாழ்க்கை 🌿

வஸிஷ்டரை *ப்ரும்மரிஷி* என்கிறது வேதம். இதற்குக் காரணம் அவரது பிறப்பு!!

அவர் ஆதியாக ப்ரும்மாவின் மூச்சிலிருந்து தோன்றிய ப்ரஜாபதிகளில் ஒருவராதலால்,
அவர் ப்ரும்மாவின் மகன் என்கிறார் வால்மீகி தனது ராமாயனத்தில்.

மேலும், அக்னிவழி நுழைந்து, வருணபகவானால் ஸ்வீகரிக்கப்பட்டு, ப்ரஜாபதி மூலம் அகஸ்த்யர், வஸிஷ்டர் எனும் இரு மகன்கள் தோன்றினார்கள் என்கிறது புராணங்கள். இதனால் இவர்கள் மைத்ராவருணி என்றும் அழைக்கப்படுகிறார்கள்
என்று கூறுகிறது ரிக் வேதம். இவர் *கர்தம ப்ரஜாபதி – தேவஹூதி* எனும் தம்பதியினரின் மகளும், கபில முனிவரின் சகோதரியுமான அருந்ததியை மணந்து கொண்டார். (இவர் அனஸூயையின் மகள் அருந்ததி அல்ல).

ரிக் வேதத்தில் இவர் கூறியதாக பல ஸ்லோகங்கள் உள்ளன. விஸ்வாமித்ரருடன் போட்டியிட்டாலும்,
இவரை வெல்ல இயலாத விஸ்வாமித்ரர் ஒருநாள் இரவில் இவர்களை அழிக்க, மறைந்து வந்த போது, வசிஷ்டர் அருந்ததியிடம் விஸ்வாமித்ரரின் வீரத்தையும், அவரது கொள்கைப் பிடிப்பில் இருக்கும் முயற்சியையும் பற்றிக் கூறி, க்ஷத்ரியரான அவரது உயர்ந்த பண்புகளையும் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்ட விஸ்வாமித்ரர், தனது எண்ணத்தால் வெட்கப்பட்டு, வஸிஷ்டரின் காலில் வீழ்ந்தார். தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

ஒரு யோகிக்கு முதலில் வேண்டியது பணிவே… அதைப்பெற்றுவிட்டாய்…. அதனால் இன்று முதல் நீ ப்ரும்மரிஷி ஆகிறாய் என வஸிஷ்டர் ஆஸீர்வதித்தார்.
இக்ஷ்வாகு குலத்தில் உள்ளவர்க்கு குலகுரு ஆனார்.

🌿அது கூறும் தர்மம்🌿

வஸிஷ்டர் இக்ஷவாகு குலத்தின் குலகுருவாக இருந்தாலும், அனைத்து க்ஷத்ரியர்களுக்கும் ஆச்சார்யனாக விளங்கினார் என்பதை குஹனின் வாழ்க்கை மூலம் அறிந்தோம்.
அன்றைய காலத்து குருமார்கள், அவர்களது ஆசான் எனும் தகுதிக்கு ஏற்ப எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கூறுகிறது அவர் வாழ்க்கை.

எதிரிகளானாலும், அவர்களது மேன்மைகளும் போற்றப்பட்டன. படித்தவர்கள், ஞானம் பெற்றால் மட்டும் போதாது, அகந்தை ஒழிந்திருக்க வேண்டும்.
அதற்கு முதலில் பணிகின்ற தன்மை வேண்டும். அதுவே நான் என்னும் அஹங்காரத்தை அழிக்கவல்லது என்பதை அக்கால தர்மத்தில் கடைபிடித்து வாழ்ந்தது தெரிகிறது.

மேலும், முனிவர்கள் அனைவரும் ப்ரம்மச்சாரிகள் அல்லர். ஆதிகாலங்களில், அவர்கள் வைஷ்ணவத்தில் கூறப்படுவது போல், க்ருஹஸ்தனாக இருந்தே
வானப்ரஸ்த வாழ்வு (துறவு வாழ்வு) வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரிகிறது. வஸிஷ்டரின் மனைவி *அருந்ததி* நக்ஷத்ரமாக என்றும் ஒளிரும் அருளைப் பெற்றாள் என்பதறிவோம்.

அவள் மட்டும் தனியாக இருக்கிறாரா என்றால் இல்லை. வஸிஷ்டரும் அருந்ததியும் இரு நக்ஷத்ரங்களாக வானில் இருக்கின்றனர் என்கிறது புராணம்.
”இதில் என்ன பெருமை? ஏன் திருமணமானால் கூட, அம்மி மிதித்து வலம் வந்ததும் அருந்ததியைப் பார்க்க வைக்கிறார்கள்?” என்னும் கேள்வி நமக்குத் தோன்றும்.

இந்த ப்ரபஞ்ச தத்துவத்தின் அடிப்படையில், ஒரு கோள் சூரியனைச் சுற்றும். துணைக்கோள் அந்தக் கோளினைச் சுற்றும் என்பது நியதி.
ஆனால், வஸிஷ்ட (Mizar) – அருந்ததி (Alcor) நக்ஷத்ரங்களில் வஸிஷ்டரை அருந்ததி சுற்றவில்லை. மாறாக இரண்டு நக்ஷத்ரமும், ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன.

எனவே கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் அவ்வாறு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே அருந்ததி நக்ஷத்ரம் காட்டப்படுகின்றது.
References :
revivaloftrueindia.com/2013/07/twin-s…

tifr.res.in/~archaeo/paper…

🌿விஸ்வாமித்ரரின் வாழ்க்கை🌿

ப்ரும்மரிஷி என வஸிஷ்ட மஹரிஷியால் போற்றப்பட்டவர் விஸ்வாமித்ரர் (எ) கௌஸிகர். சந்த்ரவம்ஸத்தில் வந்த குசர் என்னும் க்ஷத்ரிய ராஜனின் மகன் குசநாபர். இவருக்குக் காதிராஜன் என்னும் மகன் பிறந்தார்.
அவருக்குப் பிறந்த குழந்தைகளே *விஸ்வாமித்ரர்* மற்றும் *ஸத்யவதி* ஆவர். குசரின் பரம்பரையில் தோன்றியதால், விஸ்வாமித்ரருக்கு கௌஸிகர் என்னும் பெயரும் உண்டு.

இவர் மன்னராதலால், பிறப்பால் க்ஷத்ரியர். வேட்டைக்காக ஒரு முறை இவர் சென்றபோது, வஸிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்தில் தேவ பசுக்களான
காமதேனுவும், அதன் மகள் நந்தினியும் இருப்பது கண்டு, க்ஷத்ரியருக்கான ஆதிக்க குணத்தால், அவற்றைக் கவர்ந்து போக எண்ணினார்.

ஆனால் அவர் எத்தனை முயன்றும் அவற்றை கொண்டு செல்ல முடியவில்லை. அவரது முயற்சிகள் எல்லாம் வஸிஷ்டரின் தவவலிமையின் முன் தோற்றுப் போயின.
இவ்வாறு ஆனதன் காரணம், வஸிஷ்டர் ப்ரும்மரிஷி ஆனவர். அவரது தபோபலத்தால் தான் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை அறிந்ததும், வஸிஷ்டருடன் ஏற்பட்ட ஒரு கோபத்தில்,

“நானும் தவம் புரிந்து, உமது வாயால் என்னை ப்ரும்ம ரிஷி எனச் சொல்ல வைக்கிறேன்”

எனச் சூளுரைத்தார்.
அதன் பின் நாட்டைத் துறந்து, வேதங்கள் கற்று, வாழ்க்கை முறையை முழுதும் மாற்றி, தவம் புரிந்து இறுதியில் ப்ரும்மரிஷி என வஸிஷ்டரைச் சொல்ல வைத்தார்.

அதில் க்ஷத்ரிய வாழ்க்கையைத் துறந்து, ப்ராமண தர்மத்தை முழுதும் ஏற்று, இறுதியில் ப்ராமணராக மாறினார்.
க்ஷத்ரியராக அவருக்கு இருந்த அஹங்காரமும், வஸிஷ்டர் மேலிருந்த கோபமும் தொலைந்து, நாட்பட, நாட்பட, தவத்தினால் மனம் அமைதியுற்று, வேதங்கள் அறிந்ததில் ஆணவம் அழிந்து, ப்ரும்மரிஷி ஆனார்.

“ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜீடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர :ப்ரசோதயாத்”
🌿அது கூறும் தர்மம் 🌿

ஒரு க்ஷத்ரியனாக விஸ்வாமித்ரர் தன் குடிகளின் நலனுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் ஒரு ப்ராமணரான முனிவரையும் எதிர்க்கத் தயங்கவில்லை. இவ்விடத்தில் அவனது க்ஷத்ரிய தர்மம் சரிதான்.

ஒரு க்ஷத்ரியனுக்குக் கோபம் இருக்க வேண்டியது தான். ஆனாலும், நாட்டையே துறந்து,
வர்ணம் மாறும் அளவிற்கு வீராப்பு தேவையா என்றால்…. இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், தன்னை நல்லவிதமாக இன்னும் உயர்த்திக் கொள்ளும் நிலைக்குதான் போனார். மேலும், அதன் மூலம் அவர் முனிவரானதும் எல்லா நாட்டிற்கும் நன்மை ஒன்றே செய்தார்.
தஸரதரையும் ஜனகரையும் சம்மந்தி ஆக்கியது முதல், பல நாட்டு மன்னர்களுக்கும் குருவாக இருந்து நன்மை புரிந்தார்.

இங்கே ஒரு க்ஷத்ரியன் – அவனது பெற்றோர் க்ஷத்ரிய வம்ஸம், தமக்கை க்ஷத்ரிய வம்ஸம் – ஆனால் இவர் மட்டும் ப்ராமணர் ஆனது எவ்வாறு? அப்பேர்ப்பட்டவர் ஞானிகளாலும் போற்றப்படுவது எவ்வாறு?
எனவே இது, வர்ணாஸ்ரம வாழ்க்கை முறையின் மேல் நமது தவறான புரிதலுக்கு ஒரு சவுக்கடி.

வர்ணபேதம் என்பது குலத்தாழ்ச்சி இல்லை என்பதற்கு ஆதாரமானது இவர் வாழ்க்கை. மேலும் வர்ணம் என்பது, குணத்தால், அறிவால் நம் நிலையை உயர்த்திக் கொள்வதில் தான் உள்ளது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்வது.
Reference : Vishwamithra ka Tila
haryanatourism.gov.in/Destination/vi…

🌿வால்மீகியின் வாழ்க்கை 🌿

முதல் இதிஹாஸம் எனும் ஒன்றை உலகில் இயற்றியவர் வால்மீகி மஹரிஷி. நாரதர் வால்மீகியிடம்,

“16 குணங்களும் கொண்ட மனிதனைப் பார்த்ததுண்டா பூவுலகில்?”

என்றார். வால்மீகியோ

”அப்படி ஒருவர் இருக்கிறாரா?”
என யோசித்த போது,

”அப்படிப்பட்ட ராமரைப் பற்றி கூறுகிறேன் கேள்”

எனக்கூறி, நூறு ஸ்லோகத்தில் நாரதர் ராமரின் சரித்ரத்தைக் கூறுகிறார். இதற்கு *ஸங்க்ஷேப ராமாயணம்* என்று பெயர்.

”வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே |
வேத ப்ரசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா || ”
வேதம் கூறும் பரம்பொருளானது,

”பூமியிலே தஸரதனின் மைந்தனாக, ஸ்ரீ ராமனாக அவதரித்த பிறகு, அந்த வேதம் பார்த்தது….

”அந்த பகவானே ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்துவிட்டார்… இனி நாம் என்ன செய்ய இருக்கிறது?”

என்று நினைத்து, ஸ்ரீமத் ராமாயணமாக வால்மீகியின் வாயிலாக வெளிப்பட்டு விட்டது…”
புராணங்கள் கூறும் வால்மீகியின் கதையைப் பார்ப்போம்... இவர் ஒரு மஹரிஷிக்குப் பிறந்தவர். ஆனால் ஒரு வேடுவரால் கண்டெடுக்கப்பட்டு, *ரத்னாகரன்* எனும் நாமத்துடன் வளர்க்கப் பட்டார்.

வேடுவராக மட்டும் இருந்திருந்தால் இவர் க்ஷத்ரியராக இருந்திருப்பார். ஆனால், இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக
திருட்டு, வழிப்பறிக் கொள்ளை போன்றவை செய்து தனது வாழ்க்கையை நடத்தினார். எனவே இவர் ஸூத்ர தர்மத்தைக் கொண்டு வாழ்ந்த ஒரு ஸூத்ரர்.

இவர் ஒரு முறை, வழியில் வந்த முனிவர்களை, அவர்களிடம் உள்ளதைத் தந்து செல்லும்படி மிரட்டினார்.

அப்போது அவர்கள், இவர்மீது இரக்கம் கொண்டு,
“நீ கேட்டதைத் தருகிறோம். இதோ எங்களிடமுள்ள சிறு தானியங்கள். ஆனால், நீ உன் அகம் சென்று, அவர்களுக்காகத் திருடுகிறாயே… நீ கொண்டு செல்லும் பொருட்களைப் பிரித்துக் கொள்பவது போல், திருடுவதால் ஏற்படும் பாவத்தையும் பங்கு பிரித்துக் கொள்வார்களா எனக் கேள்...”

என்றனர்.
எதிர்பாராத வார்த்தையால் குழம்பியவர் வீட்டில் உள்ளோரிடம் சென்று அவர்கள் சொன்னதைக் கேட்டார். ஆனால் அவர்களோ…

“குடும்பத் தலைவனாகையால் எங்களைக் காக்க வேண்டியது உனது கடமை. அதை நீ திருடிச் செய்வதால் ஏற்படும் பாவத்தை நாங்கள் எப்படிப் பங்கு ஏற்போம்?” எனக் கேட்டனர்.

🍁
தான் யாருக்காக வாழ்கிறோம் என நினைத்தோமோ, அவர்களே இவ்வாறு கூறியதில் உடைந்து போனவர், மீண்டும் அம்முனிவர்களைத் தேடி வந்து, தனக்கு தெளிவை அளிக்கும்படிக் கேட்டார்.

அவர்கள் ராமநாமத்தை உபதேஸித்து, அதையே திரும்பத் திரும்ப ஜபம் செய்யும்படிக் கூறினர். அவருக்கு ”ராம” என்று கூட வரவில்லை….
முனிவர்கள் அருகில் உள்ள “மரா” என்னும் ஒருவகை மரத்தைக் காட்டி, இதன் பெயரையே உச்சரித்துக் கொண்டிரு. பகவான் உனக்கு ராமநாமம் வழங்குவான் என்றனர்.

அதன்படி ரத்னாகரனும் ”மரா… மரா…” என்றே உச்சரித்துக் கொண்டிருந்தார். அது நாளடைவில் “ராம… ராம…” என ஆனது.
அவரது திருநாம ரத்னாகரருடைய மனம் நன்கு தெளிவுற்றது. அவர் தொடர்ந்து அதே இடத்தில் அமர்ந்து தவம் புரியப் புரிய, அவரைச் சுற்றிப் புற்று எழுந்து, அவரை முழுதும் மறைத்துவிட்டது.

அதுகூடத் தெரியாத அளவிற்கு அவர் தவத்தில் மூழ்கினார். கடும் தவம் புரிந்தார்.
பல காலம் கழித்து, அம்முனிவர்கள் அவ்வழியே வரும்போது, இவரது ராமநாமக் குரல் புற்றிலிருந்து வருவதைக் கண்டனர்.

அவரை ”வால்மீகி, எழுந்து வா… நீ மஹரிஷியாகி விட்டாய்….” எனக் கூறினர். குருமார்களின் குரல் அவரது தவத்தைக் கலைத்தது. புற்றில் இருந்து எழுந்து வந்து அவர்களை வணங்கினார்.
அதனால், **புற்றில் இருந்து தோன்றியவர்** என்னும் அர்த்தத்தில் இவருக்கு **வால்மீகி** என்னும் பெயர் வந்தது.

அதே தமஸா நதிக்கரையிலேயே குடிலமைத்து, ப்ராமண தர்மத்தைப் பின்பற்றி வாழ ஆரம்பித்து, ஸூத்ரராக இருந்தவர் ப்ராமணர் ஆனார்.

From Hunter and Robber RATHNAAGAR to Sage VAALMIKI
🌾அது கூறும் தர்மம் 🌾

வாழ்க்கையின் வளர்ச்சியில் ஆண்களே ஒரு குடும்பத்திற்கான பொறுப்பினை வகிக்க வேண்டியவர்கள் எனும் தர்மம் வழக்கத்தில் வந்துவிட்டது தெரிகின்றது.

இதுவரை பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மனிதர்களின் குனாதிசயம் ரத்தத்தின் அணுக்களில் ஊறியது;
அது அப்படியே அடுத்த தலைமுறைக்கும் வந்தது (Conditioned Genes). அதனால் வாழ்க்கைமுறையில் ஸூத்ர வர்ணத்தில் வளர்ந்திருந்தாலும், உள்ளூறிய பரம்பரை வழக்கம் ஒரு சிறு கேள்வியில் தூண்டப்பட்டு, அவரை மீண்டும் ப்ராமண வர்ணத்திற்கே மாற்றியது.
இதில், வாழ்க்கை நவீனமாகத் துவங்கியதுமே, சுயநலமும் வளர்ந்தது என்பது வால்மீகியின் குடும்பத்தினரின் பதிலில் தெரிகிறது.

அனைவரும் போற்றும் ராமாயணத்தை எழுதியவர், ஆரம்ப காலத்தில் ஒரு திருடன் என்பதால் அவரை யாரும் தூற்றவோ மறுக்கவோ இல்லை. அவரது தகுதியை மதித்தனர்.
அதை விட முக்கியமாக… வர்ணாஸ்ரம தர்மம் மூலம் ஸநாதன தர்மம் என்னும் ஹிந்து மதம் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது என்னும் வீணர்களின் தற்போதைய கூக்குரலும் பொய்யாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!