My Authors
Read all threads
🌺மக்களே.... இதற்கு பதில் என்ன?🌺

அதிர்ச்சி??

மலாவியில் கொரோனாவால் 5 மாதமாக பள்ளி மூடப்பட்டதில் 7000 பள்ளி மாணவிகள் கர்ப்பம்...

இத்தகவல் அதிர்ச்சியா? வேதனையா? இயல்பானதா?

இந்நிகழ்வு கடந்து செல்லக் கூடியதா? கவனிக்கப்பட வேண்டியதா?

இதன் காரணம் அறியாமையா? பாலியல் கொடுமையா?
இது செய்தவர்களின் மீது குற்றமா? சமுதாயம் மீது குற்றமா?

இக்கேள்விகளுக்கான பதிலை அவர்கள் தரப்பிலிருந்து பார்த்தால் சரியா? நம் தரப்பிலிருந்தா?

ஊடகங்கள் பாலியல் மீறல் என்கின்றன. ஆனால், இதுவரை உண்மையான காரணம் தெரியவில்லை.

சரி. முதலில் இதை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்ப்போம்...
Malawi தென்கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகள் பட்டியலில் வரும். ஏழை நாடுகள் பட்டியலிலும் உள்ளது. இயற்கை வளம் அதிகமுடையது.

80% Protestand 20% RC கிறித்துவர்கள். இதில் 1/5 முஸ்லீம்கள். 10க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள்... இவை Bantu Languages எனப்படும்.
1968 -1994 Chewa மட்டும் தேசிய மொழியாக இருந்தது. தற்போது 20-25% ஆங்கிலம் பேசுகிறார்கள்.

இவர்கள் சராசரி வயது 50. 15 வயதுக்கும் கீழே 50% . 30க்கும் கீழே 30% மக்கள். இக்கண்டத்தின் அதிக பிறப்பு, அதிக இறப்பு இரண்டும் இங்குதான். இறப்பில் ஒரு முக்கியக் காரணம் HIV.
கல், தாவரம், நதி, மலை, நீர், பூமி, காற்று, ஆகாயம், நெருப்பு என அனைத்திலும் கடவுள் உண்டு எனும் நம்பிக்கையை ஆழமாகக் கொண்டவர்கள். Vimbuza எனும் பாரம்பரிய நடனத்தின் மூலம் வைத்தியம் செய்யப்படுகிறது.

ஆண்கள் உடலின் முன்புறம் மட்டும் மறைக்கும்படியான ஆடை அணிவார்கள்.
பெண்கள் உயர்ந்த மணிகளைக் கொண்டு மார்பை மூடுவர். மேலாடை அணிவதில்லை.

*சபித்வா* எனும் பெரிய மலையை இறைமலை என எண்ணுகிறார்கள். இதனால், அங்கு கிடைக்கும் உணவினை யாருக்கும் பகிரவோ, கிடைத்ததைச் சொல்லவோ மாட்டார்கள். மீறினால் உணவு மறைந்துவிடும் என நம்புகிறார்கள்.
இதைத்தாண்டி சில விசித்திர வழக்கங்கள் உள்ளதாக, ஆஃப்ரிக்கா சென்று வந்தவர்கள் மூலம் அறிந்தோம்.

இவர்களில் பெண்கள் பருவமடைந்த சிறிது காலத்தில் ஏதேனும் ஆணுடன் உறவில் இருக்க வேண்டும். இருந்தால் தாய் மகிழ்வாள். இல்லையெனில், மகளை பாரம்பரிய மருத்துவரிடம் சோதிக்க அழைத்துச் செல்வார்.
திருமணத்தின் முன் வேறு ஆணுடன் உடலுறவு கொள்ளாத பெண்ணை, கர்ப்பத்துக்கு தகுதியற்றவளாக நம்பி ஏற்பதில்லை. அவள் கர்ப்பம் தரித்தாலோ அல்லது பிள்ளை பெற்றாலோ தான் நம்பிக்கை வந்து மணம் செய்வர் ஆடவர்.

10 வயதுக்கு பூப்படையும் பெண் 11-12 வயதுக்குள் பிள்ளை பெறுவது இயல்பாக இருந்தது.
தற்போது சில காலமாகத்தான் எல்லா பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்கின்றன. இப்போது விஷயத்துக்கு வருவோம்...

இப்படிப்பட்ட கலாச்சாரத்தில், இந்நிகழ்வை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 5 மாதத்தில் 7000 என்பதால் விஷயம் செய்தியானதே தவிர, இங்கே ஊடகங்கள் சொல்வது போல் பாலியல் வன்கொடுமைகள்
மட்டுமே காரணமா என்றால் அதன் பதில் கேள்விக்குறியே! உகாண்டாவிலும் பெண் விஷயத்தில் இதே நிலை உள்ளது. அதனால் அந்நாட்டில் இது பெரிய ப்ரச்சனையாக எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பில்லை.

இப்போது இதைப் பெரிதாகப் பேசி, “அப்படியா?🤔” என மக்களைப் பார்க்க வைப்பது இங்குள்ள மீடியாக்கள்... ஏன்?
இங்கே நம் சமூக அமைப்பு வித்யாசமானது. மைக்கைப் பிடித்து, “பெண் அவள் விருப்பப்படி வாழலாம், அவளுக்கு உரிமையில்லையா? உணர்வில்லையா?” என ஆரம்பித்து, காது கூசும் உரிமைகள் பேசும் அதே ஆண், தன் மனைவி பத்தினியாக வேண்டுமென்கிறான்.

தன் மகள் திருமணத்தின் முன் உறவிலிருந்தால், அதை “ஆம்...”
எனச்சொல்லி மணமகன் தேடுவானா? மாட்டான். ஏனெனில், அவனுக்கும் சமுதாய வட்டத்தில் வாழ்வது பாதுகாப்பு எனத் தெரியும்.

நம் ஊரில்கூட 8வது படிக்கும் ஒரு மாணவி, Interval time ல் toiletல் ரகசியமாகப் பிள்ளை பெற்றதை நாம் அறிவோம். இத்தனை பெண்ணியம், பெண்சுதந்திரம், பெண்விடுதலை என நீங்கள் பேசுவது
கூட இருந்தும், கலவிப்பாடம் இருந்தும், 21 க்கு மேல் திருமண வயது சட்டமாக்கப்பட்டும், பெண்கல்வி முன்னேற்றம் கண்டும், எதனால் பாலியல் கொடுமை அதிகரிக்கிறது?

மது அருந்தி, தானே அதை தைரியமாக YouTube ல் போடும் பெண்கள், காதலித்தவன் அழைத்தான் என, குடும்பத்திற்குத் தெரியாமல்
அவனுடன் செல்லும் பெண், முனைவர் எனும் பெயர் சொல்லிக்கொண்டு, தரமற்ற வார்த்தைகலால் பேசும் பெண், மனைவி போதையில் மகளைக் கொடுமைப்படுத்தியதை கூறி வருந்தும் பழைய கணவன்...

இன்னும் பட்டியல் நீளும்.. இதுதானே உங்கள் விருக்ஷத்தின் கனி? இதில் பெண் வாழ்வு கெடுவது தவிற, நல்ல விஷயம் என்ன உள்ளது?
நம் முன்னோர்கள் பால்ய விவாஹம் செய்தனர். சிறு வயதில் இதைச் செய்து, பருவமடைந்ததும் அவளை மணமகன் வீட்டில் விடுவார்கள். பொதுவாக சொந்தங்களுக்குள்ளேயே திருமணமும் இருந்தது. அதனால், பெண் பழக ஏதுவாக இருந்தது.

அங்கேயும் மாமியாராக இருப்பவர் அறிவார், ஒரு பெண் எப்போது கர்ப்பம் தரித்தால்
அவள் உடல் தாங்கும் என்று... அதற்கேற்ற வயது வரும்வரை அவளைத் தன்னுடன் வைத்திருப்பார். அதற்குள் மகன் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பிப்பான்...

பின் நல்ல நாள் பார்த்து, இருவீட்டார் இணைந்து சாந்தி முகூர்த்தம் செய்வார்கள். அதன்பின் குடும்ப வாழ்வை அவள் தொடங்குவாள். யோசித்துப் பாருங்கள்...
சிறு வயதில் இருவரிடையே “நீங்கள் ஒருவருக்கொருவர் உங்களுக்கானவர்” எனும் எண்ணத்தை ஏற்படுத்தி, அதை ஊர்ஜிதப்படுத்த விவாஹம் செய்து, பருவவயது வரை தாய் நல்லது, கெட்டது சொல்லித்தந்து, சொந்தத்திலேயே அவளை மணமுடிப்பதால், உறவும் பலப்பட்டு, சிறுவயதில் உறவினர் குடும்பத்தில் வாழ ஆரம்பித்து,
மகளைப் போல மாமியார் கவணிப்பில், அவரிடம் மரியாதையும், பாசமும் அதிகமாகி, அவர் இவள் உடல்வாகை அறிந்து, அதற்கேற்ப இவளை தயார் செய்து,

அப்பெண் கணவனைக் கண்டாலும் பேசாது நாணவயப்பட்டு, வளர்ந்ததும் வரும் உடலியல் மாற்றத்தால் கவரப்பட்டு, காதல் உணர்ந்து, பின் நல்ல நாளில் பெற்றோர், உற்றோர்,
சுற்றம் ஆசியுடன் ஒன்று கலந்து வாழ ஆரம்பிக்கையில், அந்த வாழ்க்கையில் எத்தனை பலன்கள்?

பெண்ணுக்கு அந்நிய வீடாகத் தெரியாது, தன்வீடு எனும் உணர்விருக்கும், அங்குள்ளோரைப் புரிந்து வைத்திருக்க நேரம் கிடைத்ததால், அவர்களுக்கேற்றபடி நடக்க முடியும், மாமியாரின் செயல்களை கவனிப்பதால் பின்னளில்
குடும்ப வழக்கப்படி இவளதை நடத்த முடியும், காத்திருந்து, பார்த்து வளர்ந்த காதல் இன்னும் இறுகி பந்தம் வலுவாகும், பெண் மனதில் பாதுகாப்பு நம்பிக்கை ஓங்கி இருக்கும், அவள் மனதில் பெண்மையும் ததும்பி நிற்கும்..
அவள் வளர கணவன் துணைநிற்கையில், சமுதாயத்தில் உள்ள புழுக்களும் எட்டியே நிற்கும்.
சரியான வயதில் பெண் தாயாவதால், கர்ப்ப சிக்கல், பாலில்லாப் ப்ரச்சனை என எதுவுமில்லை... உடலில் நல்ல வலுவிருக்கையிலேயே நாளை பாட்டியாவாள், அதனால் இரண்டாம் தலைமுறையையும் நன்கு வளர்க்க முடியும்....

இந்த சந்தோஷத்தில் இவளுக்கு எங்கிருந்து மதுவும், திருட்டுத்தனமும் வரும்?
நிறைந்த வாழ்க்கையும், புரிந்த மனைவியும், பெற்றோர் கண்கானிப்பும், கூட்டுக் குடும்பமும் சூழ்ந்த ஆண் மனம், பிற பெண்ணை பலாத்காரம் செய்ய எவ்வாறு முற்படும்?

சிறு உளவியல்தான் நம் அழகிய குடும்பத்தை ஆரோக்யமாக இட்டுச் சென்றிருக்கிறது. புகழுக்கும், ஆணவத்துக்கும், காசுக்கும் ஆயிரம்
பேசினாலும்.... இம்மலாவி நிகழ்வை நாம் பெரிதாகப் பேசுவது எதனால் புரிகிறதா? நம் உடலில் ஊறிய நல்வழக்கம் என்ன இருந்தாலும், உள்ளிருந்து ஏதோ குரல் கொடுக்கிறதல்லவா? இப்போது அக்கேள்விகளை நம் சமூகத்தில் வைத்துப் பாருங்கள்...

மலாவி தகவல் அதிர்ச்சியுமல்ல, வேதனையுமல்ல, முறைப்படி இயல்பானது
அல்ல... என மனம் ஏற்க மறுப்பது.

இந்நிகழ்வு நமக்குக் கடந்து செல்லக் கூடியதல்ல... நமது தலைமுறைப் பெண்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க (மனம், உடல் இரண்டிலும்) கவனிக்கப்பட வேண்டியது.

இதன் காரணம் அங்கு வாழ்க்கை முறை. ஆனால் இங்கு அதிகமிருப்பது பாலியல் வண்முறை...
சில இடங்களில் அறியாமை! அதைத் தாண்டி கண்டிப்பு அற்ற சுதந்திரம்!

மலாவியில் சந்தோஷம். நமக்கு? இது சமுதாயத்தின் மீது குற்றம். ஒருவர் தவறான நடவடிக்கைகளை, முற்போகு என முன்வைக்கையில், அவர் எத்தனை போராடினாலும், திரும்பி நின்று அடக்கியிருக்க வேண்டாமா? ஆனால், இங்கிருந்த சாக்கடைப்புழுக்கள்
இதைத் தனக்குச் சாதகமாகப் பயண்படுத்திக் கொண்டு, அவர்களை ஆதரித்ததோடு அல்லாமல், மக்களையும் பலவகையில் ஏமாற்றி, இவர்கள் கூற்று சரி என நினைக்கும் அளவிற்கு மூளைச்சலவை செய்து விட்டார்கள்...

இதைச் செய்தவரைக் கண்டிக்காது விட்ட சுயநல சமுதாயத்தின் மீதுதான் தவறு...
ப்ரிட்டிஷார் நம் கட்டுக்கோப்பைக் குலைக்க, சொந்தத்தில் திருமணம்தான் ஊனமான குழந்தைகள் பிறக்கக் காரணம் என்றார்கள், அதற்கான ஆதாரத்தை அறிவியல் ரீதியாக தயரித்துக் கொடுத்தார்கள். நம்பினோம்..

ஆனால், இந்த 300-500 ஆண்டுகளுக்கு முன் இந்த ப்ரச்சனை இல்லையே? அப்போதும் உறவுல் திருமணம் இருந்ததே
அன்று ஏனிந்த உடல்குறைபாடுகள் இல்லை? என எத்தனை பேர் கேட்டிருப்பார்கள்? இல்லை... ஏனெனில் அவன் மேதை என நம்மை இவர்கள் எண்ண வைத்துவிட்டனர். தாவரத்திலேயே Hybrid ஆரோக்யமானதில்லை, முட்டை, கோழி என எதிலும் இல்லை...

”இனம் இனத்தோடு சேரும்” எனும் வார்த்தையை மறந்தோம்... சிக்கல் ஆரம்பித்தது.
நம் முன்னோர் வார்த்தைகள் மறந்தோம், வாழ்க்கைமுறை எதிர்த்தோம், கல்விமுறை மறுத்தோம், வரம்புகள் மீறினோம்... இன்று முட்டாள்களாக, அடுத்த அடி எங்கே எப்படிப் போவதெனத் தெரியாது முழிக்கிறோம்!

இதன்மூலம் பால்ய விவாஹத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லவில்லை, ஆனால் உறவில் திருமணத்தை முன்னெடுக்கலாம்.
சொந்தத்தை வலுவாக்கலாம். பெண்கல்வியில் மேம்படட்டும், ஆனால் தக்கவயதில் மணமுடித்து வைக்கலாம். தைரியம் போதிக்கலாம், அசட்டு தைரியமல்ல, எதையும் கேட்டுத் தெளியச் சொல்லலாம், எதிர்வாதம் புரிய அல்ல.

எதையும் துணிந்து செய்யத் துணைநிற்கலாம், அறியாமை எனக்கூறி திருட்டுத்தனத்திற்கு அல்ல
கலவியல் கற்பிப்பது பாதுகாப்புக்காக எனக் கூறலாம், பரீட்சித்துப் பார்த்தால் தவறில்லை என்றல்ல.

பெண்கள் இல்லாத் துறையில்லை என ஆக்கலாம், ஆனால் பெண்மை இல்லாத் தாயாக அல்ல.

இதைத் தவறென்றால் பெண் சமுதாயமே.... நாளை பாலியல் கொடுமை, கற்பு போனது என்றெல்லாம் கதறாதே... ஆணை மட்டும் சாடாதே!!
அதே சமயம் ஆண்கள் தவறு செய்தால், முன்காலம் போலக் கடுமையான தண்டனைகள் தர வேண்டும், தப்பிக்க அரசியல் கை அல்ல.

தனக்கான பெண்ணைத்தவிர பிற பெண்களை தன் தமக்கையாக நினைக்கக் கற்றுத் தரவேண்டும், போகப் பொருளாக அல்ல.

ஒரு பெண்ணிற்கு துண்பமெனில், ”அவள் உன் தமக்கையெனில் என்ன செய்வாய்?” என்ற
யோசிப்பை ஆழமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும்.

அன்பாய் இருந்தால் ஒரு பெண் எந்த அளவு அவனுக்கு உயிராயிருப்பாள் எனப் புரியவைக்க வேண்டும், ஆணாதிக்கம் அல்ல.

தன் மகளுக்கு ஒரு கணவன் எத்தனை பாதுகாப்பாக இருப்பான் என்பதை அறிய வாழ்ந்து காட்ட வேண்டும்.
மகனுக்கு, பெற்றோரை முதியோர் இல்லத்தில் கொண்டுவிட அல்ல.

முன்னோர் எழுதிய நூல்களும், ஆன்மீகமும் போதித்து, அவை கூறும் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, பிள்ளைகளை ஆரோக்யமான சமுதாயத்திற்கு ஆணிவேராக வளர்க்க முயன்றால்.... இனி வரும் காலம் சுகமே...

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!