அதிர்ச்சி??
மலாவியில் கொரோனாவால் 5 மாதமாக பள்ளி மூடப்பட்டதில் 7000 பள்ளி மாணவிகள் கர்ப்பம்...
இத்தகவல் அதிர்ச்சியா? வேதனையா? இயல்பானதா?
இந்நிகழ்வு கடந்து செல்லக் கூடியதா? கவனிக்கப்பட வேண்டியதா?
இதன் காரணம் அறியாமையா? பாலியல் கொடுமையா?
இக்கேள்விகளுக்கான பதிலை அவர்கள் தரப்பிலிருந்து பார்த்தால் சரியா? நம் தரப்பிலிருந்தா?
ஊடகங்கள் பாலியல் மீறல் என்கின்றன. ஆனால், இதுவரை உண்மையான காரணம் தெரியவில்லை.
சரி. முதலில் இதை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்ப்போம்...
80% Protestand 20% RC கிறித்துவர்கள். இதில் 1/5 முஸ்லீம்கள். 10க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள்... இவை Bantu Languages எனப்படும்.
இவர்கள் சராசரி வயது 50. 15 வயதுக்கும் கீழே 50% . 30க்கும் கீழே 30% மக்கள். இக்கண்டத்தின் அதிக பிறப்பு, அதிக இறப்பு இரண்டும் இங்குதான். இறப்பில் ஒரு முக்கியக் காரணம் HIV.
ஆண்கள் உடலின் முன்புறம் மட்டும் மறைக்கும்படியான ஆடை அணிவார்கள்.
*சபித்வா* எனும் பெரிய மலையை இறைமலை என எண்ணுகிறார்கள். இதனால், அங்கு கிடைக்கும் உணவினை யாருக்கும் பகிரவோ, கிடைத்ததைச் சொல்லவோ மாட்டார்கள். மீறினால் உணவு மறைந்துவிடும் என நம்புகிறார்கள்.
இவர்களில் பெண்கள் பருவமடைந்த சிறிது காலத்தில் ஏதேனும் ஆணுடன் உறவில் இருக்க வேண்டும். இருந்தால் தாய் மகிழ்வாள். இல்லையெனில், மகளை பாரம்பரிய மருத்துவரிடம் சோதிக்க அழைத்துச் செல்வார்.
10 வயதுக்கு பூப்படையும் பெண் 11-12 வயதுக்குள் பிள்ளை பெறுவது இயல்பாக இருந்தது.
இப்படிப்பட்ட கலாச்சாரத்தில், இந்நிகழ்வை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 5 மாதத்தில் 7000 என்பதால் விஷயம் செய்தியானதே தவிர, இங்கே ஊடகங்கள் சொல்வது போல் பாலியல் வன்கொடுமைகள்
இப்போது இதைப் பெரிதாகப் பேசி, “அப்படியா?🤔” என மக்களைப் பார்க்க வைப்பது இங்குள்ள மீடியாக்கள்... ஏன்?
தன் மகள் திருமணத்தின் முன் உறவிலிருந்தால், அதை “ஆம்...”
நம் ஊரில்கூட 8வது படிக்கும் ஒரு மாணவி, Interval time ல் toiletல் ரகசியமாகப் பிள்ளை பெற்றதை நாம் அறிவோம். இத்தனை பெண்ணியம், பெண்சுதந்திரம், பெண்விடுதலை என நீங்கள் பேசுவது
மது அருந்தி, தானே அதை தைரியமாக YouTube ல் போடும் பெண்கள், காதலித்தவன் அழைத்தான் என, குடும்பத்திற்குத் தெரியாமல்
இன்னும் பட்டியல் நீளும்.. இதுதானே உங்கள் விருக்ஷத்தின் கனி? இதில் பெண் வாழ்வு கெடுவது தவிற, நல்ல விஷயம் என்ன உள்ளது?
அங்கேயும் மாமியாராக இருப்பவர் அறிவார், ஒரு பெண் எப்போது கர்ப்பம் தரித்தால்
பின் நல்ல நாள் பார்த்து, இருவீட்டார் இணைந்து சாந்தி முகூர்த்தம் செய்வார்கள். அதன்பின் குடும்ப வாழ்வை அவள் தொடங்குவாள். யோசித்துப் பாருங்கள்...
அப்பெண் கணவனைக் கண்டாலும் பேசாது நாணவயப்பட்டு, வளர்ந்ததும் வரும் உடலியல் மாற்றத்தால் கவரப்பட்டு, காதல் உணர்ந்து, பின் நல்ல நாளில் பெற்றோர், உற்றோர்,
பெண்ணுக்கு அந்நிய வீடாகத் தெரியாது, தன்வீடு எனும் உணர்விருக்கும், அங்குள்ளோரைப் புரிந்து வைத்திருக்க நேரம் கிடைத்ததால், அவர்களுக்கேற்றபடி நடக்க முடியும், மாமியாரின் செயல்களை கவனிப்பதால் பின்னளில்
அவள் வளர கணவன் துணைநிற்கையில், சமுதாயத்தில் உள்ள புழுக்களும் எட்டியே நிற்கும்.
இந்த சந்தோஷத்தில் இவளுக்கு எங்கிருந்து மதுவும், திருட்டுத்தனமும் வரும்?
சிறு உளவியல்தான் நம் அழகிய குடும்பத்தை ஆரோக்யமாக இட்டுச் சென்றிருக்கிறது. புகழுக்கும், ஆணவத்துக்கும், காசுக்கும் ஆயிரம்
மலாவி தகவல் அதிர்ச்சியுமல்ல, வேதனையுமல்ல, முறைப்படி இயல்பானது
இந்நிகழ்வு நமக்குக் கடந்து செல்லக் கூடியதல்ல... நமது தலைமுறைப் பெண்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க (மனம், உடல் இரண்டிலும்) கவனிக்கப்பட வேண்டியது.
இதன் காரணம் அங்கு வாழ்க்கை முறை. ஆனால் இங்கு அதிகமிருப்பது பாலியல் வண்முறை...
மலாவியில் சந்தோஷம். நமக்கு? இது சமுதாயத்தின் மீது குற்றம். ஒருவர் தவறான நடவடிக்கைகளை, முற்போகு என முன்வைக்கையில், அவர் எத்தனை போராடினாலும், திரும்பி நின்று அடக்கியிருக்க வேண்டாமா? ஆனால், இங்கிருந்த சாக்கடைப்புழுக்கள்
இதைச் செய்தவரைக் கண்டிக்காது விட்ட சுயநல சமுதாயத்தின் மீதுதான் தவறு...
ஆனால், இந்த 300-500 ஆண்டுகளுக்கு முன் இந்த ப்ரச்சனை இல்லையே? அப்போதும் உறவுல் திருமணம் இருந்ததே
”இனம் இனத்தோடு சேரும்” எனும் வார்த்தையை மறந்தோம்... சிக்கல் ஆரம்பித்தது.
இதன்மூலம் பால்ய விவாஹத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லவில்லை, ஆனால் உறவில் திருமணத்தை முன்னெடுக்கலாம்.
எதையும் துணிந்து செய்யத் துணைநிற்கலாம், அறியாமை எனக்கூறி திருட்டுத்தனத்திற்கு அல்ல
பெண்கள் இல்லாத் துறையில்லை என ஆக்கலாம், ஆனால் பெண்மை இல்லாத் தாயாக அல்ல.
இதைத் தவறென்றால் பெண் சமுதாயமே.... நாளை பாலியல் கொடுமை, கற்பு போனது என்றெல்லாம் கதறாதே... ஆணை மட்டும் சாடாதே!!
தனக்கான பெண்ணைத்தவிர பிற பெண்களை தன் தமக்கையாக நினைக்கக் கற்றுத் தரவேண்டும், போகப் பொருளாக அல்ல.
ஒரு பெண்ணிற்கு துண்பமெனில், ”அவள் உன் தமக்கையெனில் என்ன செய்வாய்?” என்ற
அன்பாய் இருந்தால் ஒரு பெண் எந்த அளவு அவனுக்கு உயிராயிருப்பாள் எனப் புரியவைக்க வேண்டும், ஆணாதிக்கம் அல்ல.
தன் மகளுக்கு ஒரு கணவன் எத்தனை பாதுகாப்பாக இருப்பான் என்பதை அறிய வாழ்ந்து காட்ட வேண்டும்.
முன்னோர் எழுதிய நூல்களும், ஆன்மீகமும் போதித்து, அவை கூறும் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, பிள்ளைகளை ஆரோக்யமான சமுதாயத்திற்கு ஆணிவேராக வளர்க்க முயன்றால்.... இனி வரும் காலம் சுகமே...
🍁வாஸவி நாராயணன்🍁