My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

வெளி நாடுகளில் ராமனின் பெயர்த் தடங்களா?? எனும் ஆஸ்சர்யத்தின் பதிலைப் பார்ப்போமா...

🌿38) ராமரின் பெயர்த்தடங்கள் 🌿

உலகமெங்கும் ராமரின் பெயரில் இடங்கள் மற்றும் மக்கள் பெயர்கள் உள்ளதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.
அவற்றில் நாம் சில இடங்களில் உள்ளதை மட்டும் தற்போது பார்ப்போம்... இவை IRAQ, LEBANON, SYRIA, EGYPT, SOUTH AMERICA ஆகிய இடங்களில் உள்ளவை.

இவை அனைத்தும் ”ராம்” எனும் வார்த்தையில் ஆரம்பிப்பதைக் காணலாம்!!

1) Ra-allah – Place at Palastein now under Israel ;

🌞ரா–அல்லாஹ்
2) Ramathiam – Place in Israel called Ramathiam, which is nothing but a corruption of ‘Ramadhaam’, means - place of Ram, like Akshaydhaam.

Dental ‘th’ can become ‘dh’, and in transliterating sounds, ‘a’ can become 'I’ or ‘ai’ ;

🌞ராமாதியம் – இஸ்ரேலில் உள்ள பகுதி.
(Ref : Wiki)
3) Rameshe – Male name in Iran, Iraq, Syria, Lebanon, like Navaye Rameshe ; Ramin ; Ramshad ;

Pronunciation differs some where for 'Rameshe' as 'Raa'/'Ra' ; 'shae'/'shi' ;🌞

4) Ramadi (Ar-Ramādī) – Central city of Iraq ; also formerly rendered as Rumadiyah or Rumadiya🌞
5) Ramzi – Male name like Ramzi Yunus, Ramz bin al-shibh ; Ramzi without surnames in Northern Europe; South Africa; U.S; Canada ; 🌞

6) Ramzu – Male name like Ramzu Munshir, Amr Ramzu, Ramzu Yunus ;
ராம்ஸூ (ராமேஷூ – ராமரின் அம்பு. இதிலிருந்து வந்தவை ராவம்ஸூ, ராம்ஸி போன்றவை).🌞
7) Ramirez – Spanish / Latin name (son of ramiro) ;
ராமிரேஜ் 🌞

8) Rami – Jew Name (In Arabic one who throws the arrow - i.e., similar to Rameshu meaning) ;
ரமி 🌞

9) Ramesys – The title of Egypt’s ancient rulers, the dynasty of ramesis, with the Sanskrit words 'Ram Esha',
meaning “Rama – the God” was spelled as Ramesys. It also means - Rulers were the descendants of Sri Rama – God ;
ரமேஸிஸ் 🌞

ராமேஷூ என்றால் ராமர் குறிபார்த்து அம்பெய்தது எனப் பொருள். அதனால் தான் அங்கே ராமர் சிவனை வழிபட்டதை வைத்து, ராமேஸ்வரம் எனப்பட்டது.
இதன் பழங்காலப் பெயர் *கந்தமாதனம்* என்பதாகும். இது புராணங்களில் வருகிறது.

வ்யாஸ முனிவரின் மஹாபாரதத்தின் நான்கு இடங்களில் – ராமோபாக்யானம், ஆரண்யக பர்வம், த்ரோண பர்வம், தஸரத கதாநக் ஆகிய இடங்களில் ராமாயண வரலாறு பற்றி வருகிறது.
பௌத்தர்களின் இலக்கியத்தில், தஷ்ரத் ஜடக், அநாமக் ஜடக் மற்றும் தஷ்ரக் கதாநக் ஆகிய பெயர்களில் ராமரின் வரலாறு குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னுமே சற்று உயர்ந்த அறிவியல் ஆதாரம் தேடினால்....

🌿39) ராமரின் பிறப்பு 🌿

வால்மீகி ராமாயணம் – பால காண்டத்தில் (1 : 8 : 8 – 1 : 8 : 10)
ராமர் சித்திரை மாதம் 9 – ம் திதி, சுக்ல பக்ஷத்தில், பகல் பொழுதில் க்ரஹங்கள் கீழ்க்கண்ட விதத்தில் அமைந்திருக்கும் பொழுது பிறந்தார் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

1. ஸூர்யன் மேஷத்தில்
2. சுக்ரன் மீனத்தில்
3. செவ்வாய் மகரத்தில்
4. சனி துலாத்தில்
5. குரு கடக ஆரம்பத்தில்
6. சந்த்ரன் புணர்வஸூ எனும் புணர்பூசத்தின் அருகில், மிதுனத்தில்
இருந்தது என்கிறது. இதில் ஒரு ஆஸ்சர்யம்…

நக்ஷத்ரங்கள் மற்றும் க்ரஹநிலைகள் வால்மீகி எழுதியிருந்த விதத்தில், 25° N ; 81° E எனும் விதத்தில் அயோத்தியின் அக்ஷரேகை, தீர்க்கரேகையில் அமையும்படி வைத்து, Software மூலமாக,
Solar Calendar எனும் ஸூர்ய நாட்காட்டியை Lunar Calander எனப்படும் சந்த்ர நாட்காட்டிக்கு மாற்றிப் பார்த்தால், மிகச்சரியாக இருக்கிறது!!
துளியும் துல்லியம் தப்பவில்லை.

அது தற்போதைய நாட்காட்டியின் கணக்குப்படி, 10th January 5114 BC எனும் தேதி, பகல் 12 – 1 மணியைக் காட்டுகிறது.
இதே நாளில், நேரத்தில் தான் *ராமநவமி* இன்றும் கொண்டாடப்படுகின்றது.

5114 வருடம் முந்தையது என்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வால்மீகி எழுதிய அதே நாளில் அவர் கூறிய வானிலைக் கோள்களின் நிலை துல்லியம் தப்பாதிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

Solar Eclipse during War with Khar-Dushan
🌿40) கரன் – தூஷணன் வதம் 🌿

மேலும் ராமாயணத்தின், ஆரண்ய காண்டத்தில், அவர்கள் காட்டுக்கு வந்த 13 ½ ஆண்டுகளில், ராமர் கரன் மற்றும் தூஷணனை வதைத்த தினம் ஒரு *ஸூர்ய க்ரஹனம்* நிகழ்ந்ததைப் பற்றிய குறிப்பினை வால்மீகி மஹரிஷி அளித்துள்ளார்.
மேலும், அன்று அமாவாஸ்யை என்றும், அன்றைய தினம் செவ்வாய் க்ரஹம் நடுவில் இருந்ததாகவும், ஒரு பக்கத்தில் புதன், சுக்ரன் மற்றும் வியாழன் க்ரஹங்களும் ; மறு பக்கத்தில் ஸூர்யன், சந்த்ரன் மற்றும் சனி க்ரஹங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குறிப்பையும், அதே குறிப்பிட்ட Software ல் பதிவிட்டுக் கணக்கிட்டபோது, *பஞ்சவடி* என அவர் குறிப்பிட்டுள்ள, கரன் – தூஷணன் வதம் நடந்த அதே இடத்தில், 20° N ; 73° E ல் இருந்த வான்கோள்களின் நிலை; 7th October 5077 BC அன்றும் அவர் குறிப்பிட்டுள்ள படி துல்லியமாக இருந்திருக்கிறது.
வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில 🌒க்ரஹனங்கள்🌒பற்றிய ஆய்வும் நடத்தப்பட்டுள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

1. கிஷ்கிந்தா காண்டத்தில் (4 : 15 : 3) , வாலி வதம் செய்யப்பட்ட அன்று ஸூர்ய க்ரஹனம் பற்றி உள்ளது. ஆய்வாளர்களின் Software மூலம் ஆராய்ந்ததில்,
அது 3rd April 5076 BC என்னும் நாளைக் காட்டியது. அதுவே அந்த வருடத்தில் நிகழ்ந்த ஒரே 🌒ஸூர்ய க்ரஹனம்.

2. ஸுந்தர காண்டத்தில் (5 : 19 : 4; 5 : 29 : 7; 5 : 35 : 87) அசோக வனத்தில் ஹனுமன் சந்தித்த அன்று 🌒சந்த்ர க்ரஹனம் எனும் குறிப்பு உள்ளது.
ஆய்வாளர்களின் Software மூலம் ஆராய்ந்ததில், அது இலங்கையின் கொழும்புவிலிருந்து (70° N ; 80° E) எனும் கோணத்தில், வான்கோளின் நிலைப்படி, 12th September 5076 BC அன்று, அங்கே மாலை 4.15 pm முதல் சந்த்ர க்ரஹனம் துவங்கியதைக் காட்டியது.

இவ்வாறாக ஆய்வுகளின் முடிவுகளில் க்ரஹங்களின் நிலைகள்,
வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருப்பதைக் கொண்டு ஆய்ந்து கணக்கிடப்பட்டபோது, அவை உண்மையாகவே கிட்டத்தட்ட 5100 BCல் இதே க்ரஹநிலை இருந்ததை உறுதிசெய்கின்றன.

இதனை தொல்லியல், தொல்தாவரவியல், மரபணு, கடல்சார்வியல், புவியியல், சுற்றுச்சூழல், மற்றும் தொலையுணர்வு ஆகியவையும் உறுதிசெய்கின்றன.
ஆனால் இதிலும் ஒரு சிறு ப்ரச்சனை உள்ளது....

ராமாயணம் நடந்தது த்ரேதாயுகத்தில். கலியுகம் 4,32,000 வருஷங்கள். இதைப்போல இருமடங்கு த்வாபர யுகமும், மும்மடங்கு த்ரேதா யுகமும், நான்கு மடங்கு க்ருத யுகமும் அதிகமானது. அதாவது இன்றிலிருந்து 8,69,121 ஆண்டுகளுக்கு முன்னால்.
அதைக் கொண்டு பார்க்கையில் 5,114 வருடம் முன் ராமர் பிறந்தார் என்பதை ஏற்க முடியவில்லை.

அதே சமயம், க்ரஹங்களின் சுழற்சி முறையைக் கொண்டு பார்க்கையில், 4,32,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை க்ரஹங்கள் ஒரே விதமான நிலையில் மீண்டும் வந்துசேரும். அதாவது, அவை முதலில் தோன்றிய நிலைக்கே திரும்ப வரும்.
அப்படிப் பார்க்கையில், 4.37,100 ஆண்டுகளுக்கு முன்னர் த்வாபர யுகத்திலும், 8,69,100 ஆண்டுகளுக்கு முன்னும் நிகழ்ந்திருக்க வேண்டும்...

இதன் அடிப்படையில் பார்த்தால், அதற்கு முன்னும் த்ரேதாயுகத்தில் இதே க்ரஹநிலை வந்திருக்க வேண்டும்.
அதாவது 13,01,100 ஆண்டுகள் முன்பும் இந்நிலை வந்திருக்க வேண்டும்.

சில கல்வெட்டுக்களின் காலத்தைக் கொண்டும், சில பழைய தமிழ் செயுள்களில் வரும் காலத்தை அல்லது நிகழ்வுகளைக் கொண்டும் கூட, ராமரின் பிறப்புத் தேதியைக் கணிக்கின்றனர். ஆனால், இது எந்தளவிற்குச் சரியானது என்பதில்
அவர்களிலேயே ஒருமித்த கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை...

நாம் பிற ஆதாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் தான். ஆனால், இன்று காலக்கனிப்புக் கூறும் ஆய்வாளர் முடிவிலேயே பல வித்யாசங்கள் உள்ளது. Accurate என்று ஏற்றுக்கொள்ளும்படி ஒரே முடிவு இன்னும் வரவில்லை. அப்படியானால், இதே போல தோராயமான,
அல்லது அவர்கள் கேள்விப்பட்டதன் அடிப்படையிலான ஆய்வுகளின் முடிவினைக்கூட கல்வெட்டுகளில் பொறித்திருக்கலாம்; நமக்குத் தெரியாது!

எனவே, இன்றிலிருந்து பின்னால் சென்று ஆய்வது பற்றிய முடிவுகள் எனது மனதுக்கு ஏற்புடையதாக இல்லை…. ஆய்வாளர்கள் மன்னிக்கவும்….
எனவே, ராமசேது போல் இருக்கும் ஆதாரங்களின் சரியான காலத்தைக் கணக்கிட்டால் மட்டும் தானே ஆய்வின் அடிப்படையில் நாம் ராமரின் சரியான பிறந்த தேதி, நேரத்தைக் கணக்கிட முடியும்??

அது எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத வரை, முன்னோர் வார்த்தையை ஏற்றுக் கொள்வதால்
நாம் எதிலும் குறைந்துவிடப் போவதில்லை. நிரூபணம் கூட, முன்னோர் வாக்கிற்கான வலுவே தவிர, அதனால் வால்மீகி வாக்கு பொய்க்கப் போவதில்லை.

🌿41) மூத்த மொழியாம் தமிழில் சில ஆதாரங்கள்🌿

1) பெருமைக்குரிய சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டத்தின் ஆய்ச்சியர் குரவைப் பாடலில்...
விஷ்ணுவின் அவதாரங்களில் ராமரும் துதிக்கப்படுகின்றார்.

”மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!!”
2) அகநானூற்றுப் பாடலில் தனுஷ்கோடியில் ராமர் போருக்காக ஒரு ஆலமரத்தினடியில் அமர்ந்து ஆலோசனை செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது.

”வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த,
பல்வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தின்றால் இவ்வழுங்கல் ஊரே!”
Source : அகநானூறு -70

3) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் மன்னன், புலவர்கட்கும் பிறருக்கும் பொன்பரிசளித்த செயுளில் ராமன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்கமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு” (அணிந்துகொண்டனர்)

– புறநானூறு 378
“தமிழ் வழி ஆதாரம் மட்டுமே ஏற்போம்….”

என்போர்க்கும் இவ்வாறு பல உதாரணங்கள் நமது நூல்களில் இருக்கின்றன. இத்தனை ஆதாரங்களும் இங்கே கொடுக்கப் பட்டிருப்பது, ராமர் வாழ்ந்தார் என்று விவாதிப்பதற்காக அல்ல...

ராமாயணம் உண்மை எனில், அதில் குறிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளும் உண்மை.
அவை உண்மை எனில், அதை வைத்து அக்காலத்து வாழ்க்கை முறை இப்படித்தான் இருந்துள்ளதாகத் தெரிகிறது என்பதை இங்கே கொடுத்துள்ள விதமும் உண்மை.

இதில் அது இல்லை…. இது இல்லை…. என விதண்டாவாதம் வேண்டுமானாலும் பேசலாம் அல்லது ஆதாரமற்ற எதிர்கேள்வியும் குற்றச்சாட்டும் வைக்கலாமே ஒழிய….
இல்லை என அறுதியிட கண்டிப்பாக முடியாது. ஏனெனில், ஒன்றை உண்டு என ஆதாரத்துடன் நாம் நிரூபிக்கையில்…. இல்லை என நிரூபிக்கவும் ஸ்திரமான அறிவியல் ஆதாரங்களைக் காட்ட வேண்டும்…

இதுவரை அது இல்லை. எனவே அஹங்காரம் நீக்கி, உள்ளதை உள்ளபடி ஏற்போருக்கு இதில் சொல்லியிருப்பவை புரியும்.
அத்தகைய புரிதலோடு மேற்கொண்டு த்ரேதாயுதத்தில் வர்ணத்திலிருந்து ஜாதிகள் என தற்போது உள்ள உபவர்ணங்கள் எவ்வாறு வந்திருக்கிறது என்பதையும் வரும் தொடரில் பார்ப்போம்….

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!