நவராத்திரி ஸ்பெஷல் !

நவராத்திரி - பூக்களும், நைவேத்தியங்களும்!

ஸ்ரீ பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடன் போர் புரிந்து வீழ்த்தினாள். இவ்வாறு சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த விழாவே நவராத்திரி மகோற்சவம்.

🙏🇮🇳1
*நவராத்திரி, உத்தரபிரதேசத்தில் "ராம்லீலா' என்ற பெயரிலும் வங்காளிகள் "காளிபூஜை', "துர்க்கா பூஜை' என்றும் கர்நாடகத்தில் "தசரா பூஜை' என்றும் கொண்டாடுகின்றனர்.

*தில்லியில் விஜயதசமி அன்று ராவணன் பொம்மைகளை எரித்து ராவணன் சம்காரமாக கொண்டாடுகின்றனர்.

🙏🇮🇳2
*நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் துர்க்கா; அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி; கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி பூஜையாகவும் பத்தாம் நாள் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

🙏🇮🇳3
*விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.

🙏🇮🇳4
*நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். "துர்காஷ்டமி' என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்.

🙏🇮🇳5
*நவராத்திரியில் ஒன்பது நாள்களிலும் தேவி ஒன்பது வடிவங்களில் காட்சியளிக்கிறாள். குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா என்னும் ஒன்பது வடிவங்களில் தேவி காட்சி தந்து அருள்புரிகிறாள்.

🙏🇮🇳6
*நவராத்திரியின் ஒன்பது நாள்களிலும் விரதம் இருப்பது சிறப்பு. படுக்கை, தலையணை உபயோகிக்காமல் படுப்பதும் நல்லதே. பெண்கள் காலை, மாலை நீராடி அம்பாள் பூஜை செய்து லலிதா சகஸ்ர நாமம், துர்க்கா சப்தமி, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற சுலோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

🙏🇮🇳7
விஜயதசமி அன்று இரவு பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்து ஓரிரு பொம்மைகளை எடுக்க வேண்டும். மறுநாள் கொலுவை எடுத்துவிடலாம்.

*விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவது சிறப்பான வழிபாடாகும். ஒருசமயம், பரமேஸ்வரி வன்னி மரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள்.

🙏🇮🇳8
அதுசமயம் சீதாதேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமன் வன்னிமரத்தை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான். அஞ்ஞாத வாசத்தை மேற்கொள்ளப் புறப்பட்ட பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னிமரத்துள் வைத்துச் சென்றதாக புராணங்கள் உரைக்கின்றன.

🙏🇮🇳9
*நவராத்திரி கொலுவை பராசக்தியின் விஸ்வரூப தரிசனம் என்றும் கூறலாம். எல்லாமுமாக இருப்பது சக்தியே என்பதைச் சுட்டிக்காட்டும் பரிணாம வளர்ச்சியை விளக்கி இவை அன்னையின் அருளாலேயே நடைபெறுகிறது என்பதை உணர்த்துவதே கொலுவின் தத்துவமாகும்.

🙏🇮🇳10
*அமாவாசையன்று பூஜைப் பொருள்களை சேமித்து உபவாசம் இருந்து பிரதமையன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும்.

🙏🇮🇳11
*பகலில் செய்யும் பூஜை இறைவனுக்கும் இரவில் செய்யும் பூஜை இறைவிக்கும் உரியவை என்பது பொதுவான வழக்கமாகும். ஆனால் நவராத்திரி ஒன்பது நாள்களிலும் பகலிலும் இரவிலும் செய்யும் பூஜைகள் தேவிக்கே நடைபெறுகின்றன.

🙏🇮🇳12
*ஒன்பது நாள்களிலும் தேவியை பூஜிக்க முடியாதவர்கள் அஷ்டமியன்றாவது அவசியம் ஜகன்மாதாவை பூஜிக்க வேண்டும்.

முதல்நாள்வடிவம்: மகேஸ்வரி
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
🙏🇮🇳13
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

🙏🇮🇳14
இரண்டாவது நாள்வடிவம் : ராஜராஜேஸ்வரி
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

🙏🇮🇳15
நைவேத்தியம் : புளி யோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

🙏🇮🇳16
மூன்றாவது நாள்வடிவம் : வாராகி
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

🙏🇮🇳17
நான்காம் நாள்வடிவம் : மகாலட்சுமி
திதி : சதுர்த்தி
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

🙏🇮🇳18
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.

🙏🇮🇳19
ஐந்தாம் நாள்வடிவம் : மோகினி
திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும்.
வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

🙏🇮🇳20
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

🙏🇮🇳21
ஆறாம் நாள்வடிவம் : சண்டிகாதேவி
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

🙏🇮🇳22
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

🙏🇮🇳23
ஏழாம் நாள்வடிவம் : சாம்பவி துர்க்கை
திதி : சப்தமி.கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.

🙏🇮🇳24
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

🙏🇮🇳25
எட்டாம் நாள்வடிவம் : நரசிம்ம தாரினி
திதி : அஷ்டமி
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

🙏🇮🇳26
ஒன்பதாம் நாள்வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

🙏🇮🇳27
9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம்.

இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள்.🙏🇮🇳28
அதனால் இந்த தினம் விசேஷமானது.எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் என்பது நம்பிக்கை.

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

17 Oct
“திருமலை  திருப்பதி  தரிசன  நடை முறைகள்"

திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை  மட்டும்  தரிசித்துவிட்டு வருவது தவறு.    திருமலை  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி  மரபு இருக்கிறது...  இந்த மரபு ராமானுஜர் காலத்தில்,  அவரால்  தொடங்கி,  கடைபிடித்து  வரப்படுகிறது.

🇮🇳🙏1 Image
திருப்பதிக்குச்சென்றால்  திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன்  முதலில்  வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்

🇮🇳🙏2
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.

கீழ்திருப்பதியில்  பேருந்து நிலையத்திலிருந்து  5வது கிலோமீட்டரில்    அமைந்துள்ளது.  இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். 

🇮🇳🙏3
Read 49 tweets
16 Oct
மஹா பெரியவா - பெயர் எப்படி வந்தது ?

ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதிதில் அவரை எல்லாரும்' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார். Image
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை
' பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது.....அத்வைத மடாதிபதியை அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
Read 13 tweets
16 Oct
கொரோனா கால வசூல் ராஜாக்கள் இவர்கள் தான்..! பெயர் பட்டியல் வெளியானது
தமிழகத்தில் கொரோனா காலத்தை பயன்படுத்தி நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக 9 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளிடம் வசூல் ராஜாக்களாக வலம் வந்த அந்த மருத்துவமனைகளின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.
Read 8 tweets
16 Oct
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சொந்தமான 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் 2008 ஆம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்களில் அவர் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read 5 tweets
16 Oct
இந்துமத எதிர்ப்பில் கட்டப்பட்ட திமுகவின் வரலாறு

திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான் என்பதனை அவர்களாலேயே மறுக்க முடியாது. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் திமுக தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது.
திமுகவின் வரலாறு என்பதே இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது.

முன்பு இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.
இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டதுதான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம்.

இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்ட நபர் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி.
Read 14 tweets
16 Oct
ஸ்வாமித்வா யோஜனா திட்டத்தினால் என்ன நன்மைகள்

ஸ்வாமித்வா திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசின் திட்டம் 2020 ஏப்ரல் 24, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் அமைச்சகம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகும்.
வருவாய் / நிலப் பதிவுத் துறை என்பது ட்ரோன்கள் மூலம் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கான நோடல் ஏஜென்சி ஆகும். ட்ரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை பிரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இது கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களின் உரிமை பற்றிய பதிவை உருவாக்கும். வங்கிகளிடமிருந்தும் பிற நோக்கங்களிலிருந்தும் கடன் வாங்க அவர் அதைப் பயன்படுத்தலாம்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!