திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🇮🇳🙏1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
🇮🇳🙏2
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.
🇮🇳🙏3
தாயாரின் பரிந்துரை அடிப்படையில்தான் பெருமாளின் கருணை கிடைக்கும்.
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
🇮🇳🙏4
இங்கு சிறப்பு தரிசனத்துக்கு இருபது ரூபாயும், நூறு ரூபாயும் வாங்குகிறார்கள்.
தேவஸ்தான மண்டபத்தில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது.
கார்த்திகைமாத சுக்லபட்ச பஞ்சமியில் பிரமோத்சவம் நடைபெறும்.
🇮🇳🙏5
2வது கோவில் கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள். கோவிந்தராஜ சுவாமி கோயில், (Sri Govindarajaswamy Temple), கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து நான்காவது கிலோமீட்டரில் நகரத்தின் நடுவில் அமைந்துள்ளது.
🇮🇳🙏6
முகமதியர்கள் படையெடுப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்த கோவிந்தராஜ சுவாமி இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தார்.
🇮🇳🙏7
முகமதியர்கள் அச்சுறுத்தல் முடித்தபிறகு கோவிந்தராஜ சுவாமி திரும்பவும் சிதம்பரத்துக்கு எடுத்து சென்றபின்பு இராமானுசரால் 1130இல் இக்கோயில் நிறுவப்பட்டது. இக்கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இயங்குகிறது.
🇮🇳🙏8
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
இக்கோயிலின் மூலவர் கோவிந்தராஜர் திருமலையில் குடிகொண்டுள்ள வெங்கடேஸ்வரருக்கு மூத்தவர் எனக் கருதப்படுகிறது.
🇮🇳🙏9
ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் கோவிந்தராஜரின் காலடியில் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி உடனுறைந்துள்ளனர்.
கோவிந்தராஜர் கோயில் வளாகத்தினுள் பார்த்தசாரதி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர் கோயில்கள் துணைக் கோயில்களாக உள்ளது.
🇮🇳🙏10
மேலும் இக்கோயில் வளாகத்தில் புண்டரீக வல்லி, ஆண்டாள், ஆழ்வார்கள், இலக்குமி நாராயண சுவாமி, அனுமார், திருமலை நம்பி மற்றும் இராமானுசர் ஆகியவர்களின் தனி சன்னதிகள் அமைந்துள்ளது.
🇮🇳🙏11
திருமலையில் வரும் காணிக்கைகள் அனைத்தும் கோவிந்தராஜ ஸ்வாமி வசம் ஒப்படைக்கப்பட்டு இங்கேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழக்கம் மாற்றப்பட்டு கணக்குகள் மட்டும் கோவிந்தராஜ ஸ்வாமி வசம் ஒப்படைக்கப்படுகிறது.
🇮🇳🙏12
பிறகு வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
3வது கோவில் கீழ் திருப்பதியில் இருந்து பஸ் அல்லது கார் மூலமாக ஸ்ரீனிவாச மங்காபுரம் சென்று ஸ்ரீனிவாச பெருமாளை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.
🇮🇳🙏13
இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், உருவத்தில்,உயரத்தில்,அலங்காரத்திலும் எந்த வித்தியாசமும் இருக்காது. அருகில் சென்று நன்கு வணங்கலாம். கீழ் திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 12வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
🇮🇳🙏14
காலை5-30மணி முதல் இரவு 7-30 மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
இங்கு சிறப்பு தரிசனத்துக்கு 5 ரூபாயும், அர்ச்சனைக்கு 5 ரூபாயும் வாங்குகிறார்கள்.
🇮🇳🙏15
பத்மாவதி தாயாருடன் திருமணம் முடிந்தவுடன் திருமலைக்கு செல்லாமல் அகஸ்தியர் ஆசிரமத்தில் பத்மாவதி தாயாருடன் ஸ்ரீனிவாச பெருமாள் 6 மாதம் தங்கியிருந்தார்.
அங்கிருந்து திருமலைக்கு செல்லும்முன்
🇮🇳🙏16
" இந்த இடத்தில் கல்யாண ஸ்ரீனிவாச பெருமாளாக கோவில் கொள்வதாகவும், இந்த இடம் ஸ்ரீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படும்., திருமலையில் ஸ்வாமியை தரிசிப்பதால் கிடைக்கும் பலன் ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் தரிசனம் செய்வதில் கிடைக்கும். அத்துடன்
🇮🇳🙏17
திருமணம் ஆகாதவர்கள் இங்கு கல்யாண உற்சவம் செய்து காப்பு கட்டிக்கொண்டால் மனதிற்கு பிடித்த நல்ல துணையுடன் திருமணம் ஆகும். புதுமண தம்பதியர் இங்கு கல்யாண உற்சவம் செய்து காப்பு கட்டிக்கொண்டால் மனதிற்கு பிடித்த அற்புத வாழ்க்கை கிடைக்கும்" என்றும் அருளினார்.
🇮🇳🙏18
பிறகு வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
4வது கோவில் கபிலேஸ்வர் சுயம்பு லிங்க சிவாலயம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 3.3 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.
🇮🇳🙏19
விலாசம்: K T Rd, Srinivasa Nagar, N G O Colony, Tirupati, Andhra Pradesh 517507. திருமலை மலைப்பாதையை நோக்கி செல்லும்போது, மலையை நெருங்கும்போது பாதையிலிருந்து பார்த்தாலே கபிலதீர்த்த அருவி தெரியும் .
🇮🇳🙏20
திருமலையில் உள்ள சேஷாத்திரி, நீலாத்திரி, கருடத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்திரி, நாராயணதிரி, வெங்கடாத்திரி ஆகிய ஏழு மலைக்குன்றுகளின் அடிவாரத்தில் கபில மகரிஷியால் கொண்டுவரப்பட்ட சேஷாசலம் என்ற கபிலதீர்த்த அருவியும்,
🇮🇳🙏21
சரோவர் ஏரி என்ற கபிலதீர்த்த தடாகமும், கபிலேஸ்வரர் எனும் சுயம்பு லிங்க சிவாலயமும் அமைந்துள்ளது.
ஆதிகாலத்தில் கபிலேஸ்வரசிவாலயம் அருகிலிருந்து திருமலைக்கு நடைவழி பாதை இருந்தது. பாதை மிகவும் செங்குத்தாக இருந்ததால் தற்போதுள்ள அலிபிரிக்கு அருகில் பாதை அமைக்கப்பட்டது.
🇮🇳🙏22
திருமலையில் உள்ள புண்ணியதீர்த்தங்களில் திருமலையின் அடிவாரத்திலுள்ள புண்ணியதீர்த்தம் இதுமட்டுமே. கபிலதீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்.
🇮🇳🙏23
கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தில் மூன்றுலோகத்தில் உள்ள அணைத்து புண்ணிய தீர்த்தங்களும் கபிலதீர்த்தத்தில் 240 நிமிடங்கள் சேர்வதாகவும், அப்போது கபிலதீர்த்தத்தில் நீராடினால் சகலப்பாவங்களும் விலகி மோட்சம் கிட்டும் என கூறப்படுகிறது.
🇮🇳🙏24
குலோத்துங்க சோழன், பல்லவமன்னர்கள், விஜயநகரப்பேரரசு உட்பட பலமன்னர்களாலும் பராமரிக்கப்பட்ட இக்கோவிலில் விஜயநகரப்பேரரசு மன்னர் கிருஷ்ணதேவராயர் சிலை உள்ளது.
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
🇮🇳🙏25
கார்த்திகை தீபம், ஸ்கந்தஷஷ்டி, தெப்ப உற்சவம், ஆருத்ரா தரிசனம், மஹாசிவராத்திரி, அன்னாபிஷேகம் ஆகியவை விசேஷ பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது.
🇮🇳🙏26
அதற்குப் பிறகு திருமலையேறி,
5 வதாக மலை மேல் உள்ள ஆகாசகங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும். முன்பு திருப்பதி மலையிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீரை அதிகாலையில் அர்ச்சகர்கள் எடுத்து வந்து,
🇮🇳🙏27
ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).
🇮🇳🙏28
தற்போது புனிதம் கருதி ஆகாச கங்கை தீர்த்தத்தை மனிதர்கள் உபயோகப்படுத்தும் இடத்திற்கு மேல் இருந்து பைப் லைன் மூலம் ஆனந்த நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. திருமலை ஆனந்த நிலையத்தில் அபிஷேகத்திற்கும், இதர சடங்குகளுக்கும் ஆகாச கங்கை தீர்த்தமே உபயோகப்படுத்தப்படுகிறது.
🇮🇳🙏29
திருமலை வெங்கடாசலபதி தாமரை மலர் பாதங்களுக்கு கீழே இந்த தீர்த்தம் உருவாவதாக கூறப்படுகிறது. எல்லாக்காலங்களிலும் இந்த தீர்த்த அருவி நீர் வருகிறது. பக்தர்கள் தொட்டு வணங்க அருவியிலிருந்து சிறிய பிரிவு ஒன்று பிரித்து விடப்பட்டுள்ளது.
🇮🇳🙏30
மேல் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 4 வது கிலோ மீட்டரில் ஆகாச கங்கை அருவி அமைந்துள்ளது. கீழே மலைச்சரிவில் இறங்கி மனிதர்கள் தீர்த்தமாடுகிறார்கள்.
🇮🇳🙏31
அதற்குப் பிறகு
6 வதாக பாபநாசம் ஆகிய தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
இது ஆகாயகங்கை தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. தற்போது பாபவிநாசம் தீர்த்தத்தின் குறுக்கே பாபவிநாச அணை கட்டப்பட்டு அந்த நீர் திருமலையில் வாழும் மக்களுக்கு விநியோகிக்க படுகிறது.
🇮🇳🙏32
பாபவிநாசம் தீர்த்தத்தில் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு சுவர் எழுப்பி வடிகால்கள் மூலம் நீர் விழச்செய்து அதில் பக்தர்கள் தீர்த்தமாட ஏற்பாடுசெய்துள்ளார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடை மற்ற தனித்தனி இட வசதி செய்துள்ளார்கள்.
🇮🇳🙏33
தீர்த்தத்திற்கு அருகில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு தீர்த்தமாடினால் முன்ஜென்ம வினைகள் உட்பட அனைத்து பாவங்களும் தீரும். திருமணம் கூடிவரும். குழந்தை வேண்டுவோர் தீர்த்தமாடி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இதற்கு சிறிது தூரத்தில் வேணுகோபாலஸ்வாமி கோவில் உள்ளது.
🇮🇳🙏34
அதற்குப் பிறகு
7 வது இடம் ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தம், வராகமூர்த்தி பெருமாள் கோவில்.
ஸ்வாமி புஷ்கரணியின் தீர்த்தத்தை பம்ப் செய்து, ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தத்தின் தென்மேற்கு கரையில் குழாய் மூலம் தீர்த்தமாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.
🇮🇳🙏35
இங்கு தீர்த்தமாடிய பின்பு வராகமூர்த்தி பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து வணங்கிய பின்பு திருமலை வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டும். வராகமூர்த்தி பெருமாள் கோவில் ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தத்தின் வடமேற்கு கரையில் உள்ளது.
🇮🇳🙏36
ஆதியில் திருமலையில் வராகமூர்த்தி பெருமாள் மட்டுமே கோவில் கொண்டிருந்தார். வெங்கடாசலபதி திருமலையில் தங்க, வராகமூர்த்தி பெருமாளிடம் அனுமதி கேட்டு, அவர் சம்மதத்துடன் கோவில் கொண்டார்.
🇮🇳🙏37
ஆகவே அவருக்கு நைவேத்தியம் செய்து வணங்கிய பின்புதான் திருமலை வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டும்.
🇮🇳🙏38
வராகமூர்த்தி பெருமாள் கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஆறு மணி முப்பது நிமிடம் முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
🇮🇳🙏39
அதற்குப் பிறகு
8 வதாக தரிசனம் செய்யவேண்டிய இடம் ஆனந்த நிலையத்தில் வெங்கடாசலபதி பெருமாள்.
🇮🇳🙏40
கோவிலுக்குள் நுழையும்
முன்பு (படி காவிலி என அழைக்கப்படும் ) ராஜகோபுரத்தை, ஆண்கள் தலைக்குமேல் கை தூக்கி குவித்தும், பெண்கள் மார்புக்கு அருகில் கை குவித்தும் வணங்க வேண்டும். பெண்கள் தலைக்குமேல் கை தூக்கக்கூடாது.
🇮🇳🙏41
பின்பு வரிசையில் வரும்போது ராஜகோபுர வாசற்படியை மிதிக்காமல் தாண்டி செல்லவேண்டும்; கொடிமரத்தை வணங்கி, அதற்க்கு அடுத்துள்ள
நடிமி படி காவிலி : இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும்.
🇮🇳🙏42
கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
🇮🇳🙏43
" வெண்டிவாகிலி "என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது. வெள்ளி கவசம் மூடிய (நமிடி படி காவிலி என அழைக்கப்படும் )
🇮🇳🙏44
சிறிய வாசலுக்கு முன்பு சற்று நின்று உங்கள் கோரிக்கையை மனதுக்குள் சொல்லி பெருமாளை வேண்டிக்கொண்டு, வாசற்படியை மிதிக்காமல் தாண்டி செல்லவேண்டும். பின்பு மூலஸ்தானம் சென்று, துவாரபாலகர்களை வணங்கி மூலவரையும் வணங்க வேண்டும்.
🇮🇳🙏45
பின்பு வெளியில் வந்தவுடன் மூலஸ்தான தங்க கோபுரத்தில் வெள்ளி பிரபை வைத்து TTD தேவஸ்தானத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ள மூலஸ்தான தங்க கோபுர வெங்கடாசலபதியிடம் உங்கள் கோரிக்கைகளையும், வேண்டுதல்களையும் பொறுமையாக மனதுக்குள் கூறி வணங்கி வேண்டுங்கள்.
🇮🇳🙏46
இங்கு பலர் சற்று உயரமான படிகள் மீது நின்று வணங்கிக்கொண்டு இருப்பார்கள். இங்கு உங்களை யாரும் அவசரப்படுத்த மாட்டார்கள். பின்பு காணிக்கை செலுத்துவதாக இருந்தால், உண்டியலில் செலுத்துவது,
🇮🇳🙏47
கோவிலில் இலவச பிரசாதம் வாங்குவது ஆகியவற்றை முடித்துக்கொண்டு , சாமிக்கு முதுகு காட்டாமல் ராஜகோபுரத்துக்கு வெளியில் வாருங்கள். மூலவர் தரிசனம் பார்த்த பின்பு ராஜகோபுரத்துக்கு வெளியே வரும்வரை எங்கும் அமரக்கூடாது.
🇮🇳🙏48
இந்த விதிமுறைகளில் வெங்கடவனை வணங்கி புன்னிய பலன்களை அடைவோம்.
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதிதில் அவரை எல்லாரும்' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை
' பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது.....அத்வைத மடாதிபதியை அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
கொரோனா கால வசூல் ராஜாக்கள் இவர்கள் தான்..! பெயர் பட்டியல் வெளியானது
தமிழகத்தில் கொரோனா காலத்தை பயன்படுத்தி நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக 9 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளிடம் வசூல் ராஜாக்களாக வலம் வந்த அந்த மருத்துவமனைகளின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சொந்தமான 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் 2008 ஆம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்களில் அவர் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான் என்பதனை அவர்களாலேயே மறுக்க முடியாது. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் திமுக தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது.
திமுகவின் வரலாறு என்பதே இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது.
முன்பு இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.
இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டதுதான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம்.
இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்ட நபர் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி.
மத்திய அரசின் திட்டம் 2020 ஏப்ரல் 24, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் அமைச்சகம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகும்.
வருவாய் / நிலப் பதிவுத் துறை என்பது ட்ரோன்கள் மூலம் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கான நோடல் ஏஜென்சி ஆகும். ட்ரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை பிரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இது கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களின் உரிமை பற்றிய பதிவை உருவாக்கும். வங்கிகளிடமிருந்தும் பிற நோக்கங்களிலிருந்தும் கடன் வாங்க அவர் அதைப் பயன்படுத்தலாம்.
சித்தர்கள் விண்வெளிப் பயணம் போன்று காலப் பயணம் என்ற ஒன்றை கூறுகின்றார்கள். காலப்பயணம் என்பது கொள்கை வடிவில் உள்ளது. இது சாத்தியந்தான் என்று ஸ்டீபன் ஹாகின்ஸ் கூறுகின்றார்.
காலப்பயணம் செய்ய அண்டவெளி புழுத்துளை (Worm hole) தேவைப்படுகின்றது. இத்துளை நம்மைச் சுற்றியே உள்ளதாகவும் ஸ்டீபன் கூறுகின்றார். இதனுள் செல்ல அணு வடிவம் எடுத்து மிகுந்த வேகத்தில் செல்ல வேண்டுமாம். பயணம் முடிந்தவுடன் மீண்டும் சுய உருவம் பெற வேண்டுமாம்.
கோள்களின் நகர்வை வைத்து காலம் கணக்கிடப்படுகின்றது. பொருள்களின் மாற்றங்களைக் காலத்தின் நீளம் கொண்டு கணக்கிடுகின்றோம். பொருள்களில் மாற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்திப் பார்ப்பது காலப் பயணமாகும்.