கொரோனா கால வசூல் ராஜாக்கள் இவர்கள் தான்..! பெயர் பட்டியல் வெளியானது
தமிழகத்தில் கொரோனா காலத்தை பயன்படுத்தி நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக 9 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளிடம் வசூல் ராஜாக்களாக வலம் வந்த அந்த மருத்துவமனைகளின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.
இதனை தங்களுக்கு சாதகமாக்கிய சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை தங்க முட்டை இடும் வாத்துக்களாக கருதி எவ்வளவு பணம் பெற இயலுமோ அந்த அளவிற்கு பணம் வசூல் செய்தனர். இதனை கட்டுப்படுத்த கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்தது.
இருந்தாலும் சில தனியார் மருத்துவமனைகள் அடங்கியபாடில்லை.
இது குறித்து தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொரோனா நோயாளிகளிடம் வசூல் ராஜாக்கள் போல கூடுதல் கட்டணம் வசூலித்த 9 மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி திரும்பபெறப்பட்டுள்ளது.
அதன்படி பல மடங்கு கட்டணம் வசூலித்ததாகவும், நோயாளிகள் உயிரிழப்பை கட்டுப்படுத்த தவறியதாகவும் சேலம் ப்ரியம் மருத்துவமனை, கீழ்பாக்கம் பீவெல் மருத்துவமனை, தூத்துக்குடி சிட்டி மருத்துவமனை, திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை,
தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை, விருது நகர் சிட்டி மருத்துவமனை, கோயமுத்தூர் ஸ்ரீ லட்சுமி மெடிக்கல் செண்டர் மருத்துவமனை, ராணிப்பேட்டையில் 150 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருவதாக கூறப்பட்ட ஸ்கட்டர் நினைவு மருத்துவமனை என மொத்தம் 9 மருத்துவமனைகள்
பலகட்ட புகாருக்குள்ளானதால் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கிய மேலும் 18 பிரபல தனியார் மருத்துவமனைகள் பணத்தை திருப்பிக் கொடுத்து சமரசம் செய்து கொண்டுள்ளதால் அவற்றின் அனுமதி ரத்தாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
பாலிமர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🇮🇳🙏1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
🇮🇳🙏2
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதிதில் அவரை எல்லாரும்' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை
' பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது.....அத்வைத மடாதிபதியை அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சொந்தமான 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் 2008 ஆம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்களில் அவர் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான் என்பதனை அவர்களாலேயே மறுக்க முடியாது. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் திமுக தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது.
திமுகவின் வரலாறு என்பதே இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது.
முன்பு இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.
இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டதுதான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம்.
இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்ட நபர் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி.
மத்திய அரசின் திட்டம் 2020 ஏப்ரல் 24, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் அமைச்சகம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகும்.
வருவாய் / நிலப் பதிவுத் துறை என்பது ட்ரோன்கள் மூலம் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கான நோடல் ஏஜென்சி ஆகும். ட்ரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை பிரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இது கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களின் உரிமை பற்றிய பதிவை உருவாக்கும். வங்கிகளிடமிருந்தும் பிற நோக்கங்களிலிருந்தும் கடன் வாங்க அவர் அதைப் பயன்படுத்தலாம்.
சித்தர்கள் விண்வெளிப் பயணம் போன்று காலப் பயணம் என்ற ஒன்றை கூறுகின்றார்கள். காலப்பயணம் என்பது கொள்கை வடிவில் உள்ளது. இது சாத்தியந்தான் என்று ஸ்டீபன் ஹாகின்ஸ் கூறுகின்றார்.
காலப்பயணம் செய்ய அண்டவெளி புழுத்துளை (Worm hole) தேவைப்படுகின்றது. இத்துளை நம்மைச் சுற்றியே உள்ளதாகவும் ஸ்டீபன் கூறுகின்றார். இதனுள் செல்ல அணு வடிவம் எடுத்து மிகுந்த வேகத்தில் செல்ல வேண்டுமாம். பயணம் முடிந்தவுடன் மீண்டும் சுய உருவம் பெற வேண்டுமாம்.
கோள்களின் நகர்வை வைத்து காலம் கணக்கிடப்படுகின்றது. பொருள்களின் மாற்றங்களைக் காலத்தின் நீளம் கொண்டு கணக்கிடுகின்றோம். பொருள்களில் மாற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்திப் பார்ப்பது காலப் பயணமாகும்.