கோவையில் தொழில் வளர்ச்சி: ரெடியாகிறது ராணுவ தளவாட உற்பத்தி!
கோவை:கள்ளப்பாளையத்தில் ராணுவ தளவாடங்களை உருவாக்கும் பொது வசதி மையம், இன்குபேஷன் சென்டர் உள்ளிட்டவை 45 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது, கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, தமிழகத்தில் கோவை, ஒசூர், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய, ஒரு மண்டலம் உருவாக்கப்பட்டது.
கோவையில் கொடிசியாவுடன் இணைந்து, ராணுவ பொது வசதி மையம், இன்குபேஷன் சென்டர் போன்றவை துவங்க திட்டமிடப்பட்டது.
நிர்மலா சீதாராமன் ராணுவ அமைச்சராக இருந்தபோது, முதல் கட்டமாக பொது வசதி மையம் ஒன்றை ஏற்படுத்த, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தற்போது இதற்கான பணிகள், கொடிசியா தொழில்நுட்ப பூங்காவில் துவங்கப்பட்டுள்ளன.
கொடிசியா தொழில்நுட்ப பூங்கா, கள்ளப்பாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவிலும், மோப்பிரி பாளையத்தில், 225 ஏக்கர் பரப்பளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அமையவுள்ள இப்பூங்காவில், தொழில் துவங்குவோருக்கு நிலம் ஒதுக்கி, ஓரிரு நிறுவனங்கள் உற்பத்தியையும் துவங்கி விட்டன.15 முதல் 20 நிறுவனங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு அப்ரூவல் பெறப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப பூங்காவை, சுற்றுச்சூழலுக்கு மாசற்ற வகையிலான, 'பசுமை' பூங்காவாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கள்ளப்பாளையத்தில் அமையவுள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கென, 20 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கொடிசியா தொழில்நுட்ப பூங்காவில், ராணுவ தளவாட பொருட்களை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள், அதிகளவில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.'இன்குபேஷன் சென்டர்' அமைக்க, கொடிசியா சார்பில் 10 கோடி ரூபாயும், அரசின் பங்காக 10 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது.
இடம் மற்றும் கட்டடங்களில், கொடிசியா 5 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இங்கு கட்டுமான பணிகள் நிறைவு பெறும் வரை, ராணுவ தளவாட வசதி மையம், கொடிசியா வளாகத்தில் செயல்படும் என, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
இதுவரை நுால் மில்கள், பம்ப்செட், கிரைண்டர் உற்பத்திக்கென அறியப்பட்ட கோவை, இனி ராணுவ தளவாட தயாரிப்பு எனும், அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது, நம் கோவை தொழில் வளர்ச்சியின் அடுத்தகட்டமாக பார்க்கப்படுகிறது.
கோவையில் ராணுவ தளவாட பொது வசதி மையம், கள்ளப்பாளையத்தில் உள்ள கொடிசியா தொழில் பூங்காவில், அமைக்க திட்டமிடப்பட்டு செயலுக்கு வந்துள்ளது. 45 கோடி ரூபாய் செலவில் பொது வசதி மையம், ஆய்வகம், கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
கொடிசியா தொழில்நுட்ப பூங்காவில், நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. கட்டுமான பணிகளுக்கான அப்ரூவல் பெறப்பட்டுள்ளது. கள்ளப்பாளையம், மோப்பிரிபாளையத்தில் மின்சாரம், தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
-ராமமூர்த்தி
தலைவர்,
கொடிசியா
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🇮🇳🙏1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
🇮🇳🙏2
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதிதில் அவரை எல்லாரும்' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை
' பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது.....அத்வைத மடாதிபதியை அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
கொரோனா கால வசூல் ராஜாக்கள் இவர்கள் தான்..! பெயர் பட்டியல் வெளியானது
தமிழகத்தில் கொரோனா காலத்தை பயன்படுத்தி நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக 9 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளிடம் வசூல் ராஜாக்களாக வலம் வந்த அந்த மருத்துவமனைகளின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சொந்தமான 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் 2008 ஆம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்களில் அவர் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான் என்பதனை அவர்களாலேயே மறுக்க முடியாது. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் திமுக தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது.
திமுகவின் வரலாறு என்பதே இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது.
முன்பு இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.
இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டதுதான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம்.
இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்ட நபர் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி.
மத்திய அரசின் திட்டம் 2020 ஏப்ரல் 24, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் அமைச்சகம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகும்.
வருவாய் / நிலப் பதிவுத் துறை என்பது ட்ரோன்கள் மூலம் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கான நோடல் ஏஜென்சி ஆகும். ட்ரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை பிரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இது கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களின் உரிமை பற்றிய பதிவை உருவாக்கும். வங்கிகளிடமிருந்தும் பிற நோக்கங்களிலிருந்தும் கடன் வாங்க அவர் அதைப் பயன்படுத்தலாம்.