சித்தர்கள் விண்வெளிப் பயணம் போன்று காலப் பயணம் என்ற ஒன்றை கூறுகின்றார்கள். காலப்பயணம் என்பது கொள்கை வடிவில் உள்ளது. இது சாத்தியந்தான் என்று ஸ்டீபன் ஹாகின்ஸ் கூறுகின்றார்.
காலப்பயணம் செய்ய அண்டவெளி புழுத்துளை (Worm hole) தேவைப்படுகின்றது. இத்துளை நம்மைச் சுற்றியே உள்ளதாகவும் ஸ்டீபன் கூறுகின்றார். இதனுள் செல்ல அணு வடிவம் எடுத்து மிகுந்த வேகத்தில் செல்ல வேண்டுமாம். பயணம் முடிந்தவுடன் மீண்டும் சுய உருவம் பெற வேண்டுமாம்.
கோள்களின் நகர்வை வைத்து காலம் கணக்கிடப்படுகின்றது. பொருள்களின் மாற்றங்களைக் காலத்தின் நீளம் கொண்டு கணக்கிடுகின்றோம். பொருள்களில் மாற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்திப் பார்ப்பது காலப் பயணமாகும்.
உதாரணமாக 2500-ஆம் ஆண்டு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதனை நமது உடலில் மாற்றம் இல்லாமல் 2500-ஆம் ஆண்டிற்குச் சென்று பார்ப்பது. அல்லது கிருஷ்த்து பிறப்பிற்கு முன்னுள்ள காலத்திற்குச் சென்று பார்ப்பது காலப்பயணம்.
தமிழ்ச் சித்தர்கள் இப்படிப்பட்ட காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கோரக்க சித்தர் தாம் செய்த காலப்பயணத்தின் அனுபவங்களைப் பாடல்களாகச் சந்திர ரேகை என்கின்ற நூலில் பாடல் 194 முதல் 199 வரை பதிவு செய்துள்ளார்.
கலியுகத்தின் பிறப்பு முதல் முடிபு வரை நடக்கும் நிகழ்ச்சிகளை இப்பாடல்களில் உரைத்துள்ளார்.
தமது காலப் பயணத்தைக் கோரக்கர் பதிவு செய்தது போல் விண்வெளிப் பயணத்தைத் திருமூலர் பதிவு செய்திருக்கின்றார். இதற்கு “கெவுணம் பாய்தல்” என்ற சித்தர் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேற்று கிரக வாசிகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்று நாம் இன்று விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் திருமூலர் விண்வெளியில் உள்ள மனிதர்களிடம் பேசியுள்ளார். அவரது பயண விவரங்களை தமது பாடல்களிலும் பதிவு செய்துள்ளார்.
மேலும் இப்பிரபஞ்சம் 1008 அண்டங்களை உடையது என்ற தகவலையும் கூறுகிறார்.
விண்வெளி பயணத்திற்குச் சிவயோகம் செய்து காய சித்தி அடைந்து உடலை ஒளி உடலாக மாற்ற வேண்டும். இதனால் கணக்கில்லாத வேகத்தில் செல்ல முடியும். மேலும் குளிகை ஒன்றையும் தயார் செய்தார்.
திரவ பாதரசத்தை அணு மாற்றம் செய்து திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன்பின் உலோகங்கள் ரத்தினங்கள் (உப ரசங்கள் 120) பசானங்கள் ஆகியவற்றின் அணுக்களை திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து (சாரணை) பாதரசத்தின் நிறையைத் தங்கத்தின் நிறைக்குச் சமமாகக் கொண்டு வரவேண்டும்.
இவ்விதம் ஒரு முறை சாரணை செய்தால் அந்த குளிகைக்கு ‘சகம்’ என்று பெயர். 14 முறை சாரணை செய்தால் ‘கமலினி’ என்று பெயர். 17 முறை சாரணை செய்தால் ‘சொரூபம்’ என்று பெயர். இந்த கமலின் மற்றும் சொரூப குளிகையினை விண்வெளி பயணத்திற்குப் பயன்படுத்தினார்கள்.
அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்திதாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .ஒண்டிஇருந்தது ஓடி நுழை என்றார்கண்டி கமலினி காணீர் சொரூபமே
சித்தரைக் கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே-– திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 353, 354
பிரபஞ்சத்தைப் பற்றி சிவன் விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது. ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன். சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன். அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகமும் எனது வேகமும் ஒத்துப் போகவேண்டும்.
எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.
நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடி வந்து அண்டத்துக்குள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்து அண்டத்துள் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள் இருந்தனர்.
அங்குள்ள சித்தர் ஒருவரைக் கண்டு பணிவான வணக்கம் சொன்னேன். அந்த விண்வெளி சித்தர் என்னிடம், ‘எத்தனை வகைச் சித்தி செய்து உள்ளீர்கள்?’ என்றார். நான், ‘அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன்’ என்றேன். அதற்கு அவர், ‘இன்னும் நீங்கள் இளமையான சித்தராகவே உள்ளீர்…
மேலும் பல சித்திகள் செய்யுங்கள்’ என்றார். பிறகு நான் அங்கிருந்து வெளியேறினேன்.
என்றே நுழைந்தேன் அயலொரு அண்டத்தில்கண்டேன்சிததரை கடிபதுமை போல .
தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டதுஅண்ட நிராகாரத்து அடைந்த பெரியோர். —பாடல் 356
பெரியோர் தனைகண்டேன் பேராய் வலம் வந்தேன் நரியோ மௌனம் மென்று அப்பால் நுழைந்திட்டேன்பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறிவிரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே. –– பாடல் 357
அதன்பின் வேறொரு அண்டத்தில் நுழைந்திட்டேன். அங்கும் சித்தர்களைக் கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல் இருந்தார்கள். அவர்களைக் கைகூப்பி வணங்கினேன். அவர்கள் மேனியினை தடவிப்பார்த்தேன். அவர்கள் பிடிபடவில்லை.
அவர்கள் நிராகரன் என்ற கடவுள் நிலை அடைந்த பெரியவர்கள் என்று அறிந்தேன். அவர்களை வலம் வந்தேன். அவர்கள் மெளன யோகத்தில் இருக்கின்றார்கள். பிறகு அந்த அண்ட உச்சிக்குச் சென்றேன். அங்கிருந்து அடுத்த அடுக்குக்குள் விரைவாய் நுழைந்தேன்.
நன்றி: வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி”
பகிர்வு;சஞ்சிகை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🇮🇳🙏1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
🇮🇳🙏2
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதிதில் அவரை எல்லாரும்' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.
இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை
' பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது.....அத்வைத மடாதிபதியை அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....
கொரோனா கால வசூல் ராஜாக்கள் இவர்கள் தான்..! பெயர் பட்டியல் வெளியானது
தமிழகத்தில் கொரோனா காலத்தை பயன்படுத்தி நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக 9 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளிடம் வசூல் ராஜாக்களாக வலம் வந்த அந்த மருத்துவமனைகளின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சொந்தமான 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் 2008 ஆம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்களில் அவர் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான் என்பதனை அவர்களாலேயே மறுக்க முடியாது. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் திமுக தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது.
திமுகவின் வரலாறு என்பதே இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது.
முன்பு இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.
இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டதுதான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம்.
இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்ட நபர் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி.
மத்திய அரசின் திட்டம் 2020 ஏப்ரல் 24, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் அமைச்சகம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகும்.
வருவாய் / நிலப் பதிவுத் துறை என்பது ட்ரோன்கள் மூலம் சொத்துக்களை ஆய்வு செய்வதற்கான நோடல் ஏஜென்சி ஆகும். ட்ரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை பிரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இது கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களின் உரிமை பற்றிய பதிவை உருவாக்கும். வங்கிகளிடமிருந்தும் பிற நோக்கங்களிலிருந்தும் கடன் வாங்க அவர் அதைப் பயன்படுத்தலாம்.