நாலு தலைச் சாமிகள்,
மூன்று கண் சாமிகள்,
மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலைச் சாமி,
ஆனை முகச்சாமி, ஆழிவாய்ச்சாமி,
பருந்தேறும் சாமி,
காளை ஏறும் கடவுள்,
காக்கை மீது பறக்கும் கடவுள்,
தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம்,
🔥🔥🔥
ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணை களிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே.
🔥🔥🔥
இந்தச் சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.
🔥🔥🔥
நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்கா ராதிகள், அப்பம், பாயசம் அக்காரவடிசல் கேட்காத சாமி!
🔥🔥🔥
அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும், நம்மிடத்திலிருந்து “தியானத்தைப்” பெறட்டும், அருளைத் தரட்டும்;
🔥🔥🔥
நம்மிடத்திலிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்
🔥🔥🔥
ஆள் நடமாட ஒரு உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம், இந்திரன் இருக்க ஒரு உலகம், நாகன் தங்க ஒரு உலகம், மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்!
🔥🔥🔥
அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபோலோக, மகாலோக, சத்தியலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே. நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்;
🔥🔥🔥
நன்செயும் புன்செயும், சாலையும் சோலையும், வாவியும், நீரோடையும், நதியும், மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும்.
காம தேனுவும் கற்பகவிருட்சமும், ரம்பையும் ஊர்வசியும், இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடி சூட்டிக் கொள்ளட்டும்!
🔥🔥🔥
நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ்ஜாதி என்று கொடுமை இன்றி, நாமார்க்குங் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக் கொள்கிறோம்.
🔥🔥🔥
நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது, சேரியும் கூடாது, அக்கிரகாரமும் ஆகாது.
🔥🔥🔥
யோக, யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை "இந்து" என்று கூறிக்கொள்ள முடியும்?
மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்?
🔥🔥🔥
இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் "இந்து" என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்?
🔥🔥🔥
தென்னிந்தியாவில் உள்ள முகமதிய மதம், கிறிஸ்தவ மதம் போக இந்த ஜனங்கள் எந்த மதம் என்று கேட்கிறோம். அவர் எல்லோரும் வேதத்தை ஆதார முறையாக பின்பற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. பிராமணர்கள்கூட பழக்கங்களில் வேதாகமங்கள்படி நடப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
🔥🔥🔥
இப்படியிருக்க எல்லோருக்கும் பொதுவான மதம் என்று சொல்ல எப்படி துணிந்தாய்?
- பேரறிஞர் அண்ணா
திராவிட நாடு / 26.09.1943.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தீ பரவட்டும்! அண்ணாவின் மாபெரும் தமிழ் கனவு வெல்லட்டும்!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். 1/25
ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம். 2/25
சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும். 3/25
இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
அத்தியாயம் 9 செய்யுள் 3
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
அத்தியாயம் 5 செய்யுள் 147
இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது."இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான்
அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால்,
இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.
ஆனால் ஒருவர் கூட ஒரு சாதனையும் குறிப்பிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது... எம்ஜிஆர் சாதனைகளே செய்யவில்லையா? அவரும் சில சாதனைகள் புரிந்துள்ளார், 1. ஒவ்வொரு குடிசைக்கும் மின் விளக்கு 2. இலவச வேட்டி சேலை திட்டம் வருடத்தில் 2 3. குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம்