🌺நவராத்திரி ஆறாம் நாள்...🌺

இந்திராணி ரூபத்தில் மஹாலக்ஷ்மி...

இந்த்ராணி என்பவள் தேவர்களின் ராணி, அதாவது இந்த்ரனின் துனைவியாகக் காட்டப்படுகிறாள்.

நவராத்திரியின் ஆறாம் நாளான் இன்று, மெல்லிய சிவப்பு வர்ண ஆடையால் அவளை அலங்காரம் பண்ண வேண்டும்.
செம்பருத்திப் புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.
மாதுளை முத்துக்களை உதிர்த்து வைத்து, தேங்காய் சாதம் வைத்து வழிபட வேண்டும்.

இன்று எட்டு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பாதபூஜை செய்து, நலங்கிட்டு, சிவப்பு கண்னாடி வளையல், பட்டுத்துணி வழங்குதல் விசேஷம்.
இந்த்ராணி காயத்ரி மந்த்ரம்:

ஓம் கணத்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ இந்த்ராணிஃ ப்ரசோதயாத்

இந்த்ராணி தேவியாய் ஸ்ரீதேவி நமக்கு எல்லா வளமும் நலமும் தந்து ரக்ஷிக்கட்டும்

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

23 Oct
@naturaize ji, you are 100% correct. சில காலங்கள் கொடுமைகள் நடந்தது உண்மை. ஆனால் ப்ராமணன் மட்டுமா செய்தான்?

இன்று ஒரு ப்ராமணனை அப்படிக் காட்டட்டும்... ஆனால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களே தங்களுக்குள் அதிகத் தீண்டாமையை மெற்கொள்கின்றனரே?

இதைப் பேசும் பெரியார் பேத்தி ஒருத்தி
தன் வீட்டில் வேலைக்காரி கழுவிய பாத்திரங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து எடுப்பதும்,

பால்காரிக்கு வைத்த சொம்பிலிருந்து, ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, அந்த சொம்பை வெளியில் தனியாக வைத்திருப்பதும்,

வேலைக்காரி வீடு பெருக்கிச் சென்றதும், ஒரு முறை ஈர Mop-ல்
வீட்டைத் துடைப்பதும் கண்ணால் கண்டேன். ஏனென அவரைக் கேட்டால்,

“என்ன ஆனாலும், என்னளவுக்கு சுத்தமா இருப்பாங்களா தெரியாது. அவங்க வீட்டையே சுத்தமா வச்சிருக்க மாட்டாங்க. மாத்திக்கவும் மாட்டாங்க... எனக்கு பிடிக்காதுப்பா இப்படி இருந்தா...” என்கிறார்.

இதில் இரண்டு விஷயம் உள்ளது.
Read 23 tweets
21 Oct
🌺நவராத்திரி ஐந்தாம் நாள்...🌺

மோகினி மற்றும் வைஷ்ணவி ரூபத்தில் மஹாலக்ஷ்மி...

பாற்கடலினின்று எழுந்தருளிய ஸ்ரீதேவியை ஆட்டொண்ட எம்பிரான், அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு, மோகினி ரூபமெடுத்து வருகிறார்.

அவரின் முகத்தில் ஸ்ரீதேவியின் அழகு தெரிகிறது. அது கண்ட அசுரர்கள், Image
”சற்று முன்பு இதில் தோன்றிய பெண்ணல்லவோ இவள்?” என ரஸிக்கும்படி, தாயார் மோகினி மேனியிலும் முகத்திலும் அலங்காரமாய்த் தவழ்ந்தார்.

இன்றைய தினம் லக்ஷம் அர்ச்சனை, அல்லது காசுகள் கொண்டு, ஸ்ரீதேவியை வழிபடுவர். இந்த பக்தியால் தாயார் நமக்கு தன, தானியத்தை அள்ளித்தருவாள்.
இன்று பறவைக் கோலமிட்டு, பாரிஜாதம் எனும் பவளமல்லியில் தாயாருக்கு மாலையிட்டு, நறுமணப் புஷ்பங்களால் அலங்காரம் செய்து பூஜிக்க வேண்டும்.

திராக்ஷை முந்திரி கலந்த க்ஷீராமுது (பால்பாயஸம்), தஹியண்ணம், புளியோதரை, உளுந்தண்ணம் போன்றவற்றை வைத்து நைவேத்யம் பண்ண வேண்டும். Image
Read 6 tweets
20 Oct
🌺ரௌத்திரம் பழகு…🌺

ரௌத்திரம் பழகு ரௌத்திரம் பழகு
ரகசியத் தீபோல் ரௌத்திரம் பழகு...

ரௌத்திரம் பழகு கலியுக வாழ்வில்
திருப்பி யடிக்கும் ரௌத்திரம் பழகு... Image
கல்விச் சாலைகள் வணிகச் சாலைகள்
ஆவது தடுக்கவே ரௌத்திரம் பழகு...

திருமண வைபவம் அடிமைச் சாசனம்
கேட்பதை மிதிக்கும் ரௌத்திரம் பழகு...

மருத்துவக் கூடம் உயிர்விலை மறந்தால்
அறுவைச் சிகிச்சை ரௌத்திரம் பழகு...
வாங்கும் பொருளில் நயமது இலையேல்
அரக்கிட்டுப் பூட்டும் ரௌத்திரம் பழகு...

நேர்மை விலையாய் வாழ்க்கை இழந்தால்
அழித்தவன் அழித்திடும் ரௌத்திரம் பழகு

அரசியல் வியாதிகள் ஓட்டுக் கேட்டால்
நோட்டா போட்டிடும் ரௌத்திரம் பழகு
Read 6 tweets
20 Oct
🌺நவராத்திரி நான்காம் நாள்...🌺

அலைமகள் ரூபத்தில் மஹாலக்ஷ்மி...

அமிர்தம் எடுக்க பாற்கடலைக் கடைந்த போது வந்ததால், மஹாலக்ஷ்மிக்கு அலைமகள் என்று பெயர். பாற்கடலிலிருந்து தோன்றிய ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மியை மஹாவிஷ்ணு ஆட்கொண்டருளுகிறார்.
தாயாருக்கு இன்று பச்சரிசி மாவில் மஞ்சள் கலந்து மனைக்கோலம் இட்டு, அதில் அக்ஷதை தூவவேண்டும்.

ஜாதிமல்லிப் பூவால் மாலையிட்டு, கதிர்பச்சை எனும் இதழால் அர்ச்சனை பண்ண வேண்டும். கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றாலும் மாலையிட்டு அலங்கரிக்கலாம்.
கொய்யாப்பழம் வைத்து, தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, போன்றவற்றில் எவை கொண்டும் நைவேத்யம் பண்ணலாம்.

மஹாலக்ஷ்மி காயத்ரி:

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத் Image
Read 5 tweets
15 Oct
🌺ஆய்ந்தறிய முடியா அதிசயமோ... ஈசா நீயேவோர் ரகசியமோ...🌺

நமது காங்கேயம் காளைகளுக்கு மட்டுமல்ல, அதை வாகனமாக்கிய ஈஸ்வரன் புகழையும் ஜொலிக்கச் செய்வது.

ஆனால் அந்த ஒளிரழகு என்னவென நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

இதோ - அதனருகே உள்ள நத்தக் காடையூர் எனும் அதிசய கோயில் பற்றிக் காண்போம்...
காங்கேயத்தின் சென்னிமலை - பெருந்துறை சாலையிலிருந்து 3Km அருகே உள்ளது நத்தக் காடையூர். இத்தலத்தில் உள்ள சிவபெருமான் திருமேனி சதுர ஆவுடையாருடன் லிங்கத்திருமேனியாக வடிக்கப்பட்டுள்ளது.

இது அப்பர் பிரானால் பாடப்பட்ட வைப்புத்தலம் எனும் புண்ணியம் பெற்றது. இது பரன்பள்ளி, பரஞ்சேர்பள்ளி,
நட்டூர், மத்யபுரி எனப் பல பெயருடன் அழைக்கப் படுகின்றது.

பரன் - ஈசன். பள்ளி - கோயில். எனவே, பரன்பள்ளி(ஈசன்பள்ளி), பரஞ்சேர்பள்ளி(ஈசனைச்சேரும் பள்ளி) போன்ற காரணப் பெயர்களுடனும்,

ஸமஸ்க்ருதத்தில் மத்யபுரி என்பது நடுவான ஊர் எனும் அர்த்தம் தருவதால், தமிழில் அது நடுவூர், நட்டூர் எனும்
Read 8 tweets
15 Oct
🌺கொஞ்சம் கவனிப்போமா....🌺

🍂காவிய தேனமுது மஹாபாரதம் யக்ஷனின் கேள்விகளுக்கு இன்றும்... என்றும்... பொருந்தும் தர்மரின் பதில்கள்.... நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் படிக்கலாம்.🍂

🌳 பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம்... அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக
அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது.

அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை அனுப்பினார் தருமபுத்திரர். தண்ணீர் பிடிக்கச் சென்ற சகாதேவன் நெடுநேரமாகியும் வராது போகவே, நகுலனை அனுப்பினார்.
நகுலனும் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படியே அர்ஜுனன், பீமன் ஆகியோரை அனுப்பியும் எவருமே திரும்பிவரவில்லை.

மாலை நேரமாகியும் தம்பிகள் திரும்பவில்லையே என்கிற ஆதங்கத்தில் பதட்டத்தோடு தருமர் தேடிச்செல்ல, வழியில் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!