எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.
-(புறநானூறு 5,
பாடியவர்:நரிவெரூஉத்தலையார்)
அருஞ்சொற்பொருள்:
1. இடை = இடம். 2. பரத்தல் = பரவுதல். 4. ஓர் = ஒப்பற்ற. 6. நிரயம் = நரகம். 7. ஓம்பு = காப்பாற்றுவாயாக; மதி - அசைச் சொல். 8. அளிது = செய்யத் தக்கது.
உரை: எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன். அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல்,
தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with G.M.ANANDI

G.M.ANANDI Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @gmuruganandi

3 Nov
#பத்துப்பாட்டு
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
-(மதுரைக்காஞ்சி,
மாங்குடி மருதனார்)
அறம் கூறு அவையம் – நீதி மன்றம்  அறநூல் முறைப்படி அறம் கூறும் தருமாசனத்தார்
செற்றம்-பகை
ஞெமன்கோல்-துலாக்கோல்
நடுவு நிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவர்க்குத் தோல்வியால்  நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி (அவர்தம் உளம் கொள விளக்கிக் கூறி)
Read 4 tweets
2 Nov
#எட்டுத்தொகை
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 
-(குறுந்தொகை 146,
வெள்ளி வீதியார்) ImageImage
அருஞ்சொற்பொருள்: புணர்ப்போர் = சேர்த்துவைப்பவர்கள்; தண்டு = ஊன்றுகோல்; வெண்டலை = வெண்+தலை = நரைத்த முடி உடையவர்கள்; சிதவல் = கந்தைத் துணி (இங்கு தலைப்பாகையைக் குறிக்கிறது.); மாக்கள் = மக்கள்; ஆங்கண் = அங்கே; கொல் -  அசைச்சொல்.
உரை: தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! அங்கே, அந்தக் கூட்டத்தில், கையில் ஊன்றுகோல் உடையவர்களும்,  நரைத்த முடியையுடைய தலையில் தலைப்பாகை அணிந்தவர்களுமாகத் தலைவனது உறவினர்கள் வந்துள்ளார்கள். அவர்கள்  ”நன்று நன்று” என்று கூறுகிறார்கள். நம்மவர்கள்,  ”இன்று நீங்கள் வந்தது
Read 4 tweets
31 Aug
#சான்றோர்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
-(புறநானூறு 218,
கண்ணகனார்)
அருஞ்சொற்பொருள்:
1. துகிர் = பவளம்; மன்னிய = நிலைபெற்ற. 2. பயந்த = தந்த; காமர் = விருப்பம். 3. தொடை = தொடுத்தல். 5. பால் = பக்கம்
உரை: பொன், பவளம், முத்து, நிலைபெற்றப் பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும் பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, அவை ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதுபோல, எந்நாளும் சான்றோர்கள் சான்றோர்களையே
Read 4 tweets
15 Aug
விடுதலைநாள்...
இத்தனை ஆண்டும்
வாயில் சிரிப்புதிர்த்து
களிப்போடுகூடிநின்று
தேசியக்கொடிவணங்கிய
இனிப்புடன் கூடிய விடுமுறைநாள்..
இன்றோ படிக்கும்பருவமதை தீநுண்மிதிருடிப்போனது
விஞ்ஞானம் கண்டறிந்து
விந்தைபல விளைவித்து
மெதுமெதுவாய்
இயற்கை மறந்து
விண்ணும் மண்ணும்
அடிமையென்ற இறுமாப்பில்
இயல்புநிலை மறந்ததால்
அடிவேரும் வலுவிழக்க
அல்லவைபலநாடியே இன்றுவேதனையின் பிடியினிலே
உயிரோட்டம்டம் விடும்மூச்சிலும் உறைந்ததே நம் விடுதலை..
ஒற்றுமையும் அன்புமேஉலகு
ஒருங்கிணைக்கும்
ஆகப்பெரும் சக்திஎன
துள்ளிவரும் பிள்ளைகள் மனத்திருத்தி
தாழ்ந்திடாத அன்பில்
மகிழ்ந்து இறகாய்அசைந்து  பறவையாய் விடுதலைச்சிறகுவிரித்து
மானிடம் பெருக
மனம்நிதம் மகிழ
போராடி வெல்வோம்!!
தீநுண்மியே வெளியேறு!
Read 6 tweets
10 Aug
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இந்த வைரஸ் குழந்தைகளை பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்குள்ளே இருக்கும் சிறுவர், சிறுமிகள் எத்தனை பேர் ஊரடங்கை எவ்விதம் பயனுள்ளதாக
கழிக்கிறார்கள் என்ற வினா எழத்தானே செய்கிறது.
சில குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை சேகரிப்பதோடு, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
Read 15 tweets
28 Jul
#மூதூர்க்கலம்
கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
-(புறநானூறு 256,
பாடியவர்: பெயர் தெரிந்திலது)
அருஞ்சொற்பொருள்:
1. கோ = குயவன். 2. சாகாடு = வண்டி; ஆரம் = ஆர்க்கால். 4. சுரம் = வழி. 5. வியன் = பெரிய; மலர்தல் = விரிதல்; பொழில் = நிலம். 6. வனைதல் = செய்தல்.
உரை: மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! இப்பெரிய நிலத்தில், பெரிய இடங்களையுடைய பழைய ஊரின்கண் மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! வண்டியின் அச்சுடன் பொருந்திய ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல்,
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!