தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி, வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர்,
கூறமுடியும், புலமையின் காரணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோறும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்றுகூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விரும்பவில்லை. புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து,
விண்கருக்கும்வரை உழுதாலும் பயனில்லை. புத்தியின் உச்சியை அடைந்துவிட்டதாகக் கருதும் பேர்வழிகளும், புறம்போக்குக்கும் அதிக வித்தியாசமில்லை. புரட்சி வேகம் நாட்டிலே பெருக்கெடுத்து ஓடும்போதுதான், புறம்போக்குகளும், வயலாகி, வளம்பெறும் ஆனால் புரட்சி வேகம் உண்டாக தீவிரவாதிகள் முதலிலே,
ஆரியத்தீயும் ஆரிய வாளியும் கலந்ததெனவரும் இப்பண்டிகையை பகீஷ்கரிக்க வேண்டும். . ஆரியர், திராவிடரை வீழ்த்திய வெற்றிவெறி, அப்பண்டிகை அதை ஆரியர் கொண்டாடினாலாவது பொருள் உண்டு. தோற்கடிக்கப் பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்டத் திராவிடர் அதனைக் கொண்டாடுவது, இனஇழிவுக்கு அடையாளமென்போம்.
தீபாவளியைத் தமிழன் கொண்டாடுவது! ஓநாய்க்கு உபசாரம் செய்ய ஆடு அமர்த்தப்படுவதுபோல, பக்காத் திருடனின் பாதக்குறடுகளை, சொத்தைப் பறிகொடுத்தோன் சுமப்பது போல, உதைக்கும் கழுதையின் காலுக்கு உதைபட்டவன், தங்கத்தால் இலாடம் கட்டுவதுபோல, கொட்டும் தேளைஎடுத்து முத்தமிடுவது போல,
தோளிலே பாய்ந்த வாளினை எடுத்துக்கண்களிலே செருகிக்கொள்வதுபோல, மனைவியைக் கற்பழித்தவனுக்கு மலரபிஷேகம் செய்வதுபோல, எந்த ஆரியம் மூடத்தனத்தை மூட்டித் தமிழகத்தைத் தீய்த்ததோ, மடைத்தனத்தை வளர்த்து தமிழரின் மானத்தை மாய்த்ததோ, சனாதனத்தைப் புகுத்தித் தமிழரின் செல்வத்தைச் சுரண்டிற்றோ,
அந்த ஆரியத்துக்குத் தமிழர் தூபதீப நைவேத்யமிடுவது, அவர்களின் ஆணவத்துக்கு அறிகுறியான நாட்களை, விழாக் கொண்டாடுவதும் ஈனத்தனம் என்போம்.
தீயும் வாளியும், தமிழரைக் கெடுத்ததுபோதும், இனியேனும் தீபாவளி போன்ற தீயரின் திருவிழாக்களைக் கொண்டாடாது, திருந்துவரா, வைதீகர்கள் என்று கேட்கிறோம்.
எத்தனை தமிழர்கள் தீபாவளியை நாங்கள் கொண்டாடவில்லை என்று கூறுகின்றனரோ, என்பதைப் பொறுத்துத்தான், தமிழரின் மறுமலர்ச்சி இருக்கிறது. இந்த நமது உணர்ச்சி, இன்று, சில ஆயிரவருக்கு மட்டுமே உண்டு என்ற போதிலும், அந்தத் தொகை பெருகிவருவது நமக்குப் பெருமகிழ்வூட்டுகிறது.
இன்று நாம், தமிழரை நோக்கி, புதுவைத் தோழர் சிவப்பிரகாசம் அவர்கள் கேட்பதுபோல,
“தீந்தமிழான செந்
தேன் மொழிநாடே
தீமை வைதீகம்
ஏனோ நீ ஏற்றாய்?”
என்று கேட்கும் நிலையில் மட்டுமே இருக்கிறோம். என் செய்வது!
திராவிட நாடு, 24.10.1943
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராம போன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் போக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம்,
அவர்களில் எவருமோ உயிருடனில்லை! அத்தனை பேரும் மடிந்துவிட்டனர்! மண்ணோடு மண்ணாகிவிட்டனர்!
மடிந்தனர்! மறைந்தனர்! ஆனால் அவர் வாழ்ந்த பொழுது வழங்கிய மொழி மட்டும் அழியாது பாதுகாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
பேசியோர் இல்லை-பேசப்பட்ட மொழி இருக்கிறது!
மடிந்த மக்கள்-எனினும் அவர்கள் வாழ்விலே இருந்த மொழியை அழியாது நிலைக்கச் செய்யப் புதுமுறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!
இடிந்த கோட்டை, பாழான அகழ், கலமான மணி மண்டபம், சிதைந்த சிற்பங்கள், சீர் கெட்டுப் போன சித்திரங்கள் என்று காண்கிறோமே, அது போலவே பழையமொழி மாங்க்ஸை கேட்கச் செய்திருக்கின்றனர்.
(இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி)
சதுர்வேதி: எங்கள் தூதுக்குழு அரசியல் சார்பற்றது. சமாதானம், நட்பு ஆகியவைகளைப் பலப்படு்த்தும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறோம்.
தாங்கள் இந்திமொழி பரவுதல் கூடாது எனக் கூறுவதாக கேள்விப்பட்டோம். இந்தி ஆரிய மொழி என்று தாங்கள் கூறுவதாகவும் அறிந்தோம். பல மொழிச் சேர்க்கையால் உருவான மொழியே இந்தியாகும் இதுவே பொது மொழியாக இருக்கும் நிலையிலிருப்பது என்று கருதுவதோடு, அவ்வாறு இருக்க அது அருகதையுள்ளது என்றும் உறுதியாக
நம்புகிறோம். ஆனால் தாங்கள் அது கூடாது என எதிர்ப்பதாகவும் அதற்கு முக்கியக் காரணமாக இந்தி ஆரிய மொழி என்று கூறுவதாகவும் கேள்விப் பட்டோம். ஆகவே, இது பற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறோம்.
அறிஞர் அண்ணா Communal G.O ( Law made by Justice party grants reservation in Madras State ) ரத்து செய்யப்பட்டதை ஒட்டி அதை எதிர்த்து எழுதியக் கட்டுரையின் ஒரு பகுதி
சட்டம்,திட்டமாகக் கூறுகிறது,
‘ஜாதி காரணமாக,யாரையும்,கல்வித் துறையிலே அனுமதிக்க மறுக்கக் கூடாது என்று, இது, பரந்த நோக்கமாம்.ஜனநாயகப் பண்பாம். புதிய இந்தியாவின் இலட்சணமாம். இராமராஜ்யக் கோட்பாடாம்! இதன் விளைவு என்ன ஆகும் என்று எண்ணும் போதே நேர்மையாளர்களின் நெஞ்சம் நடுக்கமெடுக்கிறது.
கம்யூனல் ஜி.ஒ-ரத்தாகி விட்டது – இனி, பார்ப்பன மாணவர் இவ்வளவு எண்ணிக்கைதான் கல்லூரிகளில் சேர்க்கப்படுவர், என்ற முறை இராது, ‘மார்க்கு’ என்னும் தகுதியைக் கவனித்து யாரும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.