உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் உள்ளிட்ட 67 ஆயிரம் கோடி ரூபாய் திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
மாலையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம், சென்னை வர்த்தக மையம் 309 கோடி ரூபாயில் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜக நிர்வாகிகளை நாளை அவர் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளார். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சார வியூகம் பற்றியும் கட்சியினரிடம் எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
அமித்ஷா வருகையையொட்டி, விமான நிலையம், அவர் தங்கவிருக்கும் ஓட்டல், கலைவாணர் அரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் விடிய விடிய ரோந்துப் பணி முடுக்கிவிடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாலிமர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புதுடில்லி: தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா உள்ளிட்டோர் மீதான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாறுகிறது.
காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் விடுவதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச., 21ல் தீர்ப்பு அளித்தது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள், கனிமொழி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தவறாக பிரசாரம் செய்ய சதி நடத்திய ஜே.என்.யு., மாணவர் திட்டம் அம்பலம்
புதுடில்லி : இந்தியாவில், சிறுபான்மையினருக்கு துன்புறுத்தல்கள் இழைக்கப்படுவதாக, உலக அளவில் தவறாக பிரசாரம் செய்யும் நோக்கத்தில்,
அதிபர் டிரம்ப் வருகையின்போது, டில்லியில் வன்முறைகளை அரங்கேற்ற ஜே.என்.யு., மாணவர் காலித் திட்டமிட்டது,
தெரியவந்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
குற்றப்பத்திரிகைஇங்கு, மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கடந்த பிப்ரவரி, 24ம் தேதி நடந்த போராட்டத்தின்போது வன்முறைகள் வெடித்தன. அதில், 53 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய, 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம்: கடும் எதிர்ப்பால் கைவிட்டார் பினராயி
திருவனந்தபுரம் : சமூக வலை தளம் உட்பட அனைத்து செய்தி ஊடகங்களிலும், தனிநபரை இழிவுபடுத்தும், தவறான செய்திகளை வெளியிட்டால், சிறை தண்டனையுடன்
அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக, கேரள முதல்வர், பினராயி விஜயன்
அறிவித்தார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
சட்டத் திருத்தம்
இங்கு, கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு, கவர்னர், ஆரிப் முகமது கான் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். அதன்படி, இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
அனுபசாலியான என்னுடைய பாட்டி கூறிய மூன்று வழிகள்! முதுமையை எளிமையாகக் கடக்க அவர்கள் அந்தக் காலத்திலேயே கடைபிடித்தவை..
60 வயதுக்கு மேல்;குருடனாக இரு!
(எதையும்,கண்டும் காணாமலிரு)
குழந்தைகள் அனாவசியமாக வாங்கிக் குவிக்கும் போது எப்படி கண்டும் காணாமல் இருக்க,முடியும்..
கண்ணை மூடினாலும் அதுதானே
தெரிகிறதே....
செவிடனாக இரு!
(யாராவது,குறை கூறினாலும் திட்டினாலும் காதில்
போட்டுக் கொள்ளாதே)
பாழாய்ப்போன காது நன்றாக;கேட்கிறதே...
எனது தோழி, "காது சுத்தமா கேட்கலை ஆனா, அது ரொம்ப சௌகரியமாக இருக்கு. " என கூறுகிறாள்
இந்த வேல் திமுகவை அழிக்க வந்த வேல்: வேல் யாத்திரை குறித்து பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேட்டி
எங்களைக் கைது செய்தாலும், வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலை, பீளமேட்டில் பாஜக மாநகர் மாவட்டக் கட்சி அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (23-ம் தேதி) நடந்தது. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மத்திய இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்று புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டினர்.
இதில், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவர்கள் கனகசபாபதி, அண்ணாமலை, மாநகர் மாவட்டத் தலைவர் நந்தகுமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.