#புலிகளின்காவலர்_வீரமணி

”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?” விகடனின் கேள்வி

”விடுதலைப் புலிகளின் தலைவர் #பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் Image
பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.

1986-ம் ஆண்டு Image
நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி Image
விரும்பினார்.

தன் விருப்பத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடமும் தெரிவித்து, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார் ராஜீவ். எம்.ஜி.ஆர் தமது உளவுத் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு முழுக்கத் தேடியும் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது உடல் நலம் சரியில்லாமல் நான் Image
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
அங்கே வந்து தமிழக காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர், என்னைச் சந்தித்தார்.

'எப்படியாவது பிரபாகரனை பெங்களூருக்கு அனுப்பி, ஜெயவர்த்தனேவைச் சந்திக்கச் செய்யுங்கள்’

-என்று முதல்வர் உங்களிடம் தகவல் சொல்லச் சொன்னார்’ என்றார்.
அந்த அதிகாரிக்கு எங்களைப் பற்றி தெரியும். அப்போது பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று உண்மையாகவே எனக்குத் தெரியாது.

‘தகவல் அனுப்ப முடிந்தால், அவசியம் சொல்லி அவரை பெங்களூருக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்’ என்றேன்.

ஆச்சர்யமாக, அதே நாளில் எனது உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனை-
க்கு திடீரென்று வந்து நின்றார் #தம்பி_பிரபாகரன்! என்னால் நம்பவே முடியவில்லை.

பிரபாகரனிடம் எம்.ஜி.ஆரின் ஆலோசனையைப் பற்றி சொல்லி, அவரை பெங்களூருக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை.

ஆனால் ‘நீங்கள் செல்லாவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு
நல்விளைவு ஏற்படுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்கிற பேச்சு உருவாகும்’ என்றெல்லாம் அவரைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன்.

இறுதியில், “அந்தச் சந்திப்பினால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனாலும், தமிழக முதல்வர் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.
அவரது கணிப்புதான் பிறகு சரி என்று ஆனது! பின்னர், புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை தமிழக அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் பிரபாகரன்.

‘உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டுப் போராடுங்கள்’ என்று அறிக்கை விடுத்தேன். அதை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள
முன்வந்தனர் புலிகள். சென்னை இந்திரா நகரில் நடந்த உண்ணாவிரதத்தை பழரசம் கொடுத்து நாங்கள் முடித்துவைத்தோம்.

ஆயுதங்களையும் திரும்பத் தரும் நிலை உடன் வந்தது. புலிகள் இயக்கத்தின் தளபதி கிட்டு ஆற்றலும் அறிவும் பண்பும் நிறைந்தவர். ஆன்டன் பாலசிங்கமும் எங்களிடம் பல நேரங்களில்
அறிவார்ந்த ஆலோசனைகளைப் பெறுவார். பேபி (சுப்பிரமணியம்), எப்போதும் அன்புடன் பழகிய அதிகம் பேசாத தம்பியின் தளகர்த்தர்.

இப்படி பலரும் அன்புடன் பழகியவர்கள். இதையெல்லாம் நினைவுகூர்ந்து எழுதும்போது என்னை அறியாமல் கண்கள் பனிக்கின்றன!”

ஆசிரியர் கி.வீரமணி பதில்கள் | விகடன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tamilselvan🖤❤️

Tamilselvan🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Dravidan_dk

20 Oct
கடவுளானாலும்...?

கடவுளானாலும், காந்தியார் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறவரைதான் - பயன்படவில்லை என்றால் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி அவை குப்பைக் கூடையில்தான்.
இதோ ஒரு தகவல்:

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்களோ 'எங்கள் ஆட்சியில் அய்யா பெரியார் போராட்டம் நடத்துவதா?' என்று கூறி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
ஒருமுறை அல்ல, இருமுறை சட்டம் இயற்றினார்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டு 206 மாணவர்கள் 18 மாதங்கள் பயிற்சி பெற்று தீட்சையும் பெற்றனர் (2008).
Read 8 tweets
13 Oct
Marriage..

-Periyar

Married couple should behave to each other like bosom
friends. In any matter, the bridegroom should not have the vanity that he is
the husband. The bride also should behave in such a manner as not to think of
herself as her husband's slave and cook.
Married couple should not be hasty in bringing forth children. It will be good
if children are born at least three years after the marriage.
Married people should spend according to what they earn. They should not
borrow. Even if the income be meagre,
they should save at least a little. This
is what I would call discipline in life.
Married people should have a helpful bent of mind. Even if they cannot do
good, they should desist from doing harm.
Read 15 tweets
10 Oct
ஆச்சாரியாருக்கு பெரியார் பதில்! “நாங்கள் எறும்புகள் தான்”

நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார்.
நாம் உண்மையில் எறும்புகளைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக்ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார்.
நம்மிடம் விஷம் இல்லை என்று தெரிந்து கொண்டார். விஷமிருப்பதாக அவர் நினைத்திருந்தால் தேள், பாம்பு என்று சொல்லியிருப்பார். திராவிடர் நிலை இத்தகு நிலையில் கீழாகப் போய் இருக்கிறது. மிக மிகத் தாழ்வான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
Read 11 tweets
9 Oct
தத்துக்கிளி

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.

பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.

சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?
பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரி : ஆஹா, உண்டு!
அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்-இல்லாவிட்டால் அந்தப் பையனைப் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன் தான்.
Read 5 tweets
9 Oct
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!"

பிற எந்த மதமும் சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தவில்லை. ஜெகத் குருக்கள் 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொல்லுவதில்லை. பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் - தேவடியாள் மக்கள் என்று இழிவு செய்வதில்லை.
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானத்தோடு பொங்கி எழுந்தால் 'பார் பார்', பிற மதங்களை எதிர்க்காமல் 'இந்துக்களை' மட்டும் எதிர்க்கிறார்கள் என்று 'சூ' காட்டும் தந்திரத்தை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு ஆரியம் கடைப்பிடிக்கப் போகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும், சங்கராச்சாரியாரே பூணூல் போடும் சூட்சமம் என்ன? கடவுள்களையே ஜாதிவாரியாகப் பிரிக்கும் கும்பல் இன்னொரு மதத்தைப் பற்றிப் பேச யோக்கியதை உடையது தானா? 'வைத்தியரே முதலில் உமது சீக்கைச் சரி செய்து கொள்வீர்.
Read 8 tweets
8 Oct
பிராமணாள் ஸ்வீட்ஸ்!'

மத்தியில் பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தாலும் வந்தது - உச்சிக்குடுமிகள் வெளியே தெரிய - நெளிய ஆரம்பித்து விட்டன!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உச்சிக்குடுமிகளை வெளியே தெரியும் அளவுக்குப் பார்ப்பன வக்கீல்கள் நடமாட ஆரம்பித்துவிட்டனர்.

நெற்றிப் பட்டைகளும் சாங்கோபாங்கமாகப் பளிச் சிடுகின்றனவாம்!
‘‘பிராமணாள் ஸ்வீட்ஸ்'' Prepared by 100% Brahmins என்ற சொற்களோடு இணையத்தில் ஒரு விளம்பரம் வலம் வந்து கொண்டுள்ளது. இதனைக் கண்ணுற்ற தோழர் அந்தக் கடைக்காரரிடம் உரையாடியதும் இப்பொழுது இணையத்தில் உலாவருகிறது.

பிராமணாள் ‘ஸ்வீட்' சுவை யாக இருக்கிறதோ இல் லையோ,
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!