#கண்ணகி க்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை!!

கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க!!

#HBDமேதகுPRABHAKARAN
பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிறங்கி, யானை மீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து!!

ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து!!

#HBDமேதகுPRABHAKARAN
கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை நான் கண்டதில்லை.

#மௌரியமன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து

#HBDமேதகுPRABHAKARAN
செருப்பாழி எறிந்த சோழ மாமன்னன் #இளஞ்செட்டிசென்னி யை கண்டதில்லை!!

குழந்தை பருவத்திலேயே ஐந்து வீரவேளிர்களை, இரு பேரரசர்களை எதிர்த்து பெருவெற்றிகொண்டு தோற்றோடியவர்களை அவர்கள் நாட்டிலேயே போய் அழித்து தலையாலங்கானத்து போரில் வரலாற்று வெற்றியைப் பதிந்த

#HBDமேதகுPRABHAKARAN
கடாரம் கொண்ட #பாண்டியன்நெடுஞ்செழியன் ஐ கண்டதில்லை.

பாரதப்பெரும்போரில் ஓரைவர், ஈரைம்பதின்மருக்கு பெருஞ்சோறு அளித்த சேரப்பேரரசன் #பெருஞ்சோற்றுதியன் ஐ கண்டதில்லை.

நீதிகாக்க மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதி #சோழனை கண்டதில்லை.

#HBDமேதகுPRABHAKARAN
சேரநாடே களையிழந்து சோகத்தில் மூழ்கச்செய்த வெண்ணிப் பறந்தலைப்போர், ஒன்பது மன்னர்கள் ஒன்றிணைந்து எதிர்த்த வாகைப்பறந்தலை போர், சேர பாண்டிய மன்னர்கள் ஒன்றிணைந்த வெண்ணிப்போர் 3 இவற்றில் வெற்றிகொண்டு.

எதிர்க்க ஆளின்றி தோள்தினவெடுத்து

#HBDமேதகுPRABHAKARAN
வடதிசை சென்று வச்சிர, மகத, அவந்தி மன்னர்களிடம் திறைகொண்டு ஆரியப்படை வென்று யவனர்களை வென்று இமயத்தில் புலிப்பொறி நாட்டிய சோழமாமன்னன் #கரிகால்பெருவளத்தான் ஐ கண்டதில்லை.

கடம்பழித்து கடல் நடுவே இருந்த கடம்பரின் சின்னமான கடம்ப மரத்தை அழித்து யவனர்களை

#HBDமேதகுPRABHAKARAN
அடிபணியவைத்து கடலாதிக்கம் செலுத்திய சேரன் #செங்குட்டுவன் கண்டதில்லை.

புள்ளலூர் போரில் புலிகேசியை கொன்ற பல்லவ மாமன்னன் #மகேந்திரவர்மன் ஐ கண்டதில்லை.

நரசிம்ம பல்லவனுக்காக வாதாபி கொண்டு போர் அழிவை கண்டு அருட்புகழை நாடிய ₹பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டரை

#HBDமேதகுPRABHAKARAN
(63நாயன்மாரில் ஒருவர்) கண்டதில்லை.

இலங்கையை வெற்றிகொண்ட மாமன்னன் #நரசிம்மபல்லவன் ஐ கண்டதில்லை.

இரு கால்களிழந்து உடம்பில் 96 விழுப்புண்களை கொண்டு தன் மகன் மாதண்ட நாயகனாக களம்புகுந்த "திருப்புறம்பியம் போரை" 90 வயதில் நேரடியாகக் காணவந்து

#HBDமேதகுPRABHAKARAN
பல்லவ- சோழ படை தோற்கும் நிலையில் இரண்டு வீரர்களின் தோள்மீதமர்ந்து கையில் வாளுடன் வெறியாட்டம் ஆடி வெற்றிக்கனி பறித்த மாவீரன் #விஜயாலயசோழன்‌ ஐ கண்டதில்லை.

காந்தளூர்ச் சாலை முதல் மாலத்தீவு வரை தெற்காசியாவை கட்டியாண்ட பேரரசன் பெருவுடையார் கோவில் கண்ட

#HBDமேதகுPRABHAKARAN
மாமன்னன் #இராசராசன் ஐ கண்டதில்லை.

தன் உடம்பில் 64 விழுப்புண்களை கொண்டு எம் தலைவனே வியந்த #பழுவேட்டரையர் ஐ கண்டதில்லை.

12 லட்சம் படைவீரர்களை கொண்டு மாலத்தீவு முதல் இன்றைய பீஜாப்பூர் வரை வென்றெடுத்து தோல்வி காணாத மாமன்னன், தந்தை இராசராசனை விட வீரமகன்

#HBDமேதகுPRABHAKARAN
கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய #இராசேந்திரசோழன் ஐ கண்டதில்லை.

சீனம் , பர்மா, காம்போசம், கன்னோசி, கடாரம் முதல் பல நாடுகளில் சுங்கப்பகிர்வு முதல் பல விசயங்களில் நட்புறவு பேணிய #குலோத்துங்கசோழன் ஐ கண்டதில்லை.

#HBDமேதகுPRABHAKARAN
ஆனால் இவர்களை இவர்கள் வீரம், ஆளுமை, செருக்கு, குடிகள் மீதான அன்பு, எதிரிக்கும் இரங்கும் நற்பண்புகளை கொண்ட எம் தலைவன் #பிரபாகரன் அவர்களின் தளபதிகளை, தலைவனுக்காக தன் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களை ஒருங்கே கண்டு அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.
காவிரியில் கல்லணை கட்டி நீரின் போக்கை மாற்றி கால்வாய் வெட்டி விவசாயம் காத்தவன் #கரிகால்பெருவளத்தான்.

தன் படை தோற்றாலும் சரி இரணைமடு குளத்தை (அணையை) உடைக்க அனுமதிக்க மாட்டேன், என் மக்களின் விவசாயம் பாதிக்கும் என உறுதியாய் நின்றவன் எம் தலைவன்.

#HBDமேதகுPRABHAKARAN
இராசேந்திர சோழனுக்கு பின் அவருக்கு நிகரான எந்த மாவீரனும் அவதரிக்க வில்லை. அதேபோல ஆயிரமாண்டுக்கு பின் எம் தலைவன். இன்னும் ஆயிரமாண்டு கடந்தபின்னும் அவர் புகழ், வீரம் போற்றப்படும்.

தமிழன் தலைநிமிர்ந்த நாள்
தலைவன் பிறந்த நாள்.

#HBDமேதகுPRABHAKARAN

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_

Abdullah_ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

27 Nov
தாயகக் கனவினில்
சாவினை தழுவிய
சந்தனப் பேழைகளே!!
வீரவணக்கம்!! வீரவணக்கம்!!

கிட்டு
நடுக்கடலிலிருந்து எழுப்புகிறான்.

அங்கயற்கண்ணி
ஆழ்கடலிலிருந்து எழுப்புகிறாள்.

திலீபன்
பட்டினி பந்தலிலிருந்து எழுப்புகிறான்.

மில்லர்
வெடி வாகனத்தோடு எழுப்புகிறான்.

#மாவீரர்நாள்2020
தமிழ்ச்செல்வன்
புன்னகையோடு எழுப்புகிறான்.

மாலதி
போர்க்களத்திலிருந்து எழுப்புகிறாள்.

நடேசன்
வெள்ளைக்கொடியோடு எழுப்புகிறார்.

ஒருலட்சம் உயிர்கள்
ஓலமிட்டபடி எழுப்புகிறது.

சலனமற்ற விழிகளால்
இதயத்தை எழுப்புகிறான்
பாலசந்திரன்.

எத்தனை உயிர்கள், துயர்கள், வலிகள்!!

#மாவீரர்நாள்2020
அழிந்துபோகுமோ அத்தனையும்
புதைந்துபோகுமோ மொத்தமும்
முடிந்துபோகுமோ
உறங்கா இரவுகள்??

ஒளிர்ந்து கருகியது
உரமாகத்தானே
தமிழீழ மண்ணில்
தலைமுறை விளையாடத்தானே!!

சாவை அணைத்துக்கொண்டது
அறத்தால்தானே!!
யாரொருவரும் முன்நிற்க முடியா
மறத்தால் தானே!!

அலைஅலையாய்
மாவீரர்
தன்னை கொடுத்தார்.
Read 5 tweets
27 Nov
ஆஸ்திரேலியாவுக்கு
அருகே உள்ள குட்டி தீவு நாடு. #நவுரு.

ஜனத்தொகை 10,000 மட்டுமே.
தீவின் நீளம் ஐந்து கிமீ, அகலம்
மூன்று கிமீ.
30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு.

மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது!!
ஆம்.தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க #பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன.

பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.

தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.

அதன்பின் பன்னாட்டுக் கம்பனிகள்
வந்து இறங்கின.
பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன.
அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.

ஒரு கட்டத்தில் 10,000பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170கோடி டாலர்கள் இருந்தன.

கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர்.

அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1கோடி ரூபாய்களை கொடுத்திருக்கமுடியும்.
Read 10 tweets
27 Nov
சகோதர இந்துக்களுக்காக!!

1.கோவிலுக்கே போகாத இந்துக்கள் உண்டு!!

2.கோவிலுக்குள் சென்று திருநீறு வாங்காத இந்து உண்டு!!

3.கோவிலுக்குள் சென்று அமர்ந்து மட்டும் வரும் இந்து உண்டு!!

4.போகிற வழியில் இருக்கும் கடவுளை வணங்கும் இந்து உண்டு!!

5.குலதெய்வமே தெய்வமென வாழும் இந்து உண்டு!!
6.நாள் கிழமை திதி பார்த்து மூச்சு விடும் இந்து உண்டு!!

7.என்ன நாள் என்ன திதி என்பதே தெரியாமல் வாழும் இந்து உண்டு!!

8.தெய்வம் என்னடா தெய்வம்??
வேலைய ஒழுங்க செஞ்சா போதுமென வாழும் இந்து உண்டு!!

9.நான் இந்துவே இல்லடா
தமிழன்டா!! என சொல்லும் இந்துவும் உண்டு!!
10.கடவுளே இல்லை எல்லாம் இவனுக பிழைக்க செய்யற வேலைனு சொல்லும் இந்துவும் உண்டு!!

11.கடவுளே இல்லை ஞானமே கடவுள் என சொல்லும் இந்துவும் உண்டு!!

இன்னும் இன்னும் பல
இந்துக்கள் உண்டு
அவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!!

ஆனால்??

#மதவாத_பிழைப்பு_பாஜக_கூட்டம
Read 6 tweets
13 Oct
#பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,

1. 🌴ஆண் பனை
2. 🌴பெண் பனை
3. 🌴கூந்தப்பனை
4. 🌴தாளிப்பனை
5. 🌴குமுதிப்பனை
6.🌴சாற்றுப்பனை
7. 🌴ஈச்சம்பனை
8. 🌴ஈழப்பனை
9. 🌴சீமைப்பனை
10. 🌴ஆதம்பனை
11. 🌴திப்பிலிப்பனை
12. 🌴உடலற்பனை
13. 🌴கிச்சிலிப்பனை
14. 🌴குடைப்பனை
15. 🌴இளம்பனை
16. 🌴கூறைப்பனை
17. 🌴இடுக்குப்பனை
18. 🌴தாதம்பனை
19. 🌴காந்தம்பனை
20. 🌴பாக்குப்பனை
21. 🌴ஈரம்பனை
22. 🌴சீனப்பனை
23. 🌴குண்டுப்பனை
24. 🌴அலாம்பனை
25. 🌴கொண்டைப்பனை
26. 🌴ஏரிலைப்பனை
27. 🌴ஏசறுப்பனை
28. 🌴காட்டுப்பனை
29. 🌴கதலிப்பனை
30. 🌴வலியப்பனை
31. 🌴வாதப்பனை
32. 🌴அலகுப்பனை
33. 🌴நிலப்பனை
34. 🌴சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவு பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
Read 7 tweets
11 Oct
அப்பாவி தவிக்கிறான்.

இன்றைய பொழுதில் அநேக மக்களுக்கும் ஒன்று விளங்கி இருக்கும்.

முகம் காட்டாத யாரோ ஒரு கூட்டம் நம்மை ஆட்டி வைக்கிறது.

அது நம்மை கண்காணித்தும் வருகிறது.

அதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

செயற்கைகோள் துவங்கி cctv தொலைக்காட்சி தொலைபேசி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவை அனைத்துமே மேலோட்டமாக பார்க்கும் போது சில நண்மைகள் உள்ளது போலத் தெரிந்தாலும்!!

அதனை ஒரு கூட்டம் உருவாக்கியதன் நோக்கம் நம்மை கண்காணிக்க மட்டும் கட்டுப்படுத்த தான்.

காற்றில் உள்ள அலைக்கற்றைகளை பயன்படுத்தி யார் ஒருவர் ரேடியோ கண்டு பிடித்தாரோ.

அவரை உருவாக்கியவர்களும்.
#டெஸ்லா போன்ற மிகப்பெரிய அறிவியல் நிபுணர்களின் அறிவியல் வளர்ச்சிக்கு #பண_உதவி செய்தவர்களும்.

முதல் & இரண்டாம் உலகப் போர் காலங்களில் யார் ஒருவர் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து இருந்தார்களோ.
(அதற்கான காரணம்)

அவர்களின் கரிசனம் கடந்த 50 ஆண்டுகளாக #அலோபதி மருத்துவ முறையின் மேல்
Read 12 tweets
4 Oct
சவுகார்பேட்டை - எச்சரிக்கை!

சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன.

அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.
ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும் தனியார்ப் பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.

1. AG JAIN Higher secondary school
2. Gujarathi Kendal Higher secondary school
3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school
5. MFSB Higher secondary school
6. Ganesh Bhai Kannada Higher secondary school
7. Sugni Bhai girls Higher secondary school
8. Moonbei Bhai girls Higher secondary school
9. Manilal Mehta higher secondary school
உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!