#நீலகண்டதீக்ஷிதர் இவர் ஒரு மகாவித்வான்! பதினெட்டு வயதுக்குள் எல்லா வேத சாஸ்திரங்களையும் படித்து அனைத்து சில்ப சாஸ்திரங்களையும் பயின்று பெரிய மேதையாக விளங்கினார்! அதனால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மகாராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு மந்திரியாக இருந்தார். நீலகண்டதீக்ஷிதர்
மந்திரியாக அபாரமான செயல்களை செய்துள்ளார். இன்றும் நாயக்கர்கள் செய்த சேவை நம் தேசத்துக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறது. ஒரு முறை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தன்னுடைய சிலையும், தன்னுடைய மனைவிமார்கள் சிலையையும் வவைக்க ஆசைப்பட்டார் அரசர். நீலகண்டதீக்ஷிதர் அந்தச்
சிலைகளைச் செய்ய பொறுப்பேற்றுக் கொண்டார். ராணியின் சிலை செய்பவன் சிலையை வடிக்கும்பொழுது முட்டிக்குமேல் ஒரு இடத்தில் சில்லு தட்டிவிடுகிறது. அதை இவரிடம் சிற்பி சொன்னபொழுது நீலகண்டதீக்ஷிதர் ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு அந்த இடத்தில் ராணிக்கு ஒரு மச்சம் இருக்கும் என்று அவர்
மனத்தில் படுகிறது. அதனால் அது அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று சொல்லிவிட்டார். ராஜா சிலையை பார்த்தபோது ஏன் இப்படி செய்தாய் என்று சிற்பியிடம் கேட்டார். அவன் தீக்ஷிதர் ஐயா அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார் என்று சொன்னவுடன் அரசருக்கு ராணியுடைய மச்சம் அவருக்கு எப்படி
தெரிந்தது என்று சந்தேகம் வந்தது. ஆட்களை அனுப்பி அவரைக் கைது செய்து கொண்டு வர சொல்கிறார். காவலர்கள் வரும்பொழுது தீக்‌ஷிதர் பூஜை செய்துகொண்டு இருந்தார். சேவகர்கள் உங்களை கைது செய்ய வந்திருக்கிறார்கள் என்று சொன்னவுடனேயே அவருக்குப் புரிந்துவிடுகிறது. கற்பூர ஆரத்தி பண்ணப் போனவர்
இரண்டு கையில் இரண்டு கற்பூரத்தை ஏத்தி, கண்மேல் வைத்து கொண்டுவிடுகிறார். வெளியில் வந்து அரசர் என்ன எனக்கு தண்டனை கொடுக்கணும் என்று நினைத்தாரோ அதை நானே எனக்குக் கொடுத்துக் கொண்டு விட்டேன் என்று அரசரிடம் போய் சொல்லுங்கள் என்று சொல்கிறார். இதை அவரிடம் சொன்னவுடனே அரசர் ரொம்ப தவித்துப்
போய்விட்டார். ஒரு மகானிடம் அபச்சாரம் பண்ணிவிட்டோமே என்று ஓடோடி வந்து அவர் காலில் விழுந்து, தெரியாமல் பண்ணிவிட்டேன் உங்களுடைய ஞானத்ருஷ்டி பற்றி தெரியாமல் நான் தப்பாக புரிந்து கொண்டு விட்டேன், மன்னித்துவிடுங்கள் என்று இறைஞ்சுகிறார். பரவாயில்லை, சந்தேகம் வருவது சகஜம்தானே என்று
தீகிஷதர் பதில் உரைத்தார். அப்படி நீங்க சொல்லக்கூடாது, கண் தெரியாமல் இருந்தால் ஒவ்வொரு நாளும் நான் வருத்தப்பட்டு, அதிலேயே எனக்கு உயிர் போய்விடும் என்று சொன்னார் அரசர். உங்களுக்கு திரும்பவும் கண் வரவேண்டும். மீனாக்ஷியிடம் வேண்டிக்கொள்ளுங்கள். கண்களால் கருணை செய்கிறவக் அவள்! தயவு
செய்து நீங்க பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள் என்று அரசர் கெட்டு கொண்டதால் உடனே, #ஆனந்தஸாகரஸ்தவம் என்னும் ஸ்லோகத்தை மீனாட்சி மேல் இயற்றினார் நீலகண்டதீக்ஷிதர். 62வது ஸ்லோகத்யில், ‘அம்மா! உன்னுடைய பாத தரிசனம் எனக்கு கிடைக்குமா? கிடைத்தால் கூட எந்த கண்ணைக் கொண்டு நான் அதை பார்ப்பேன்?’
என்று சொல்கிறார். இதை உட்குறிப்பா காஞ்சி மகா பெரியவாளும் சொல்லிருக்கார். அதனால் அப்படி சொன்னவுடன் அவருக்கு கண் பார்வை வந்துவிட்டது என்று கூறியுள்ளார். மீனாக்ஷி அவருக்கு கண்ணை கொடுத்துவிடுகிறாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ராஜ சேவகம் போதும் என்று சொல்லிவிட்டு திருநெல்வேலியில்
பாலாமடை என்னும் இடத்தில் (தற்போது நீலகண்டஸமுத்திரம்) அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் அவதரித்து மீனாக்ஷி தேவியின் அத்யந்த பக்தராக விளங்கிய மகாவித்வான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் தனுர் மாசம் சுக்ல பக்ஷ அஷ்டமி திதியில் சித்தி அடைந்தார். இன்று அங்கு அவருடைய அதிஷ்டானத்தில் அந்த மஹானின்
ஆராதனை கொண்டாடப் படுகிறது. அவருடைய படைப்புகளான சிவலீலார்ணவம், ஆனந்தஸாகரஸ்தவம், கலி விடம்பனம் முதலியவை சம்ஸ்கிருத பண்டிதர்களால் இரசித்து கொண்டாடுபவை. அவரை வணங்கி அவர் ஆசி பெறுவோம்🙏🏻

Edited from valmikiramayanam.in/?p=3746 நன்றி🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

23 Dec
நம் வீடுகளில் எல்லா சுப காரியங்கள் நடக்கும்போதும் ஆலயங்களிலும் கேட்கும் ஒரு சின்ன சில நிமிஷ ஸமஸ்க்ரித மந்திரம் இது. செவிக்கினிமையான ''மந்த்ர புஷ்பம்''. அதன் பொருளை புரிந்து கொண்டால் அதன் அருமை புரியும். விரும்பி மனப்பாடம் செய்ய தோன்றும். வேதத்தில்
தைத்ரீய அரண்யகம் என்ற பகுதியில் வருகிறது. நீரின்றி அமையாது உலகம். எனவே எங்கும் நீர் வளம் பெருக, வேண்டும் மந்திரம் இது. நீர் ஒன்றே சுபிக்ஷத்தின் அறிகுறி.

யோ பாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
சம்த்ரமா வா அபாம் புஷ்பம் |
புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
ய ஏவம் வேத’ | யோஉபாமயத'னம்
வேத'| ஆய்தனவான் பவதி |
நீர் என்பதே ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதை புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேருகின்றன. பூக்களாகிய குழந்தைகள்,ஆநிரை , ஆடு முதலிய செல்வங்கள் சேருகின்றன. சந்திரன் என்னும் நிலவு நீரின் குளுமையில் பூவாகிறது. நீரின் ஆதாரம் புரிந்தவன்
Read 10 tweets
21 Dec
முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ₹10 கோடியை குருவாயூர் கோவிலுக்கு திருப்பித் தரவேண்டும் என்று பினராயி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. #இந்துகோவில்நிதிஅரசுநிதிஅல்ல குருவாயூர் கிருஷ்ணன் கோவில் அசையும் அசையா சொத்துகளுக்கு சொந்தக்காரர் குருவாயூரப்பன் மட்டுமே.
தேசஸ்வம் போர்ட் அறங்காவலர் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளவர். பக்தர்களின் தேவைகளை-குடிநீர், தங்குமிடம், மருத்துவ வசதிகளை செய்யவும் கோவிலின் கலாச்சாரம் பரவவும், இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும், சமஸ்கிருதம் மலையாள மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடு
படவும் கோவில் நிதியை அறங்காவலர் பயன்படுத்த முடியும். இதர இந்து கோவில்களுக்கு நன்கொடை வழங்கலாம். இவை தான் தேவசம் போர்டின் பணிகளாக இருக்கவேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். மதச்சார்பற்ற அரசு இந்து கோவில் நிதியை மட்டும் தன்னிச்சையாக எடுத்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
Read 4 tweets
20 Dec
இரண்டே வரி ஸ்லோகம் ஆஞ்சநேயர் மீது ஆனால் அத்தனை சக்தி வாய்ந்த ஸ்லோகம்!

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

அனுமனை ஸ்மரணை செய்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது: முதலில் ‘புத்தி’–எல்லாவற்றுக்கும் Image
முதன்மை தேவை அறிவுதான். அது அறிவு 'பலம்’, அடுத்து உடல் பலம். ‘யசஸ்'- புகழ். ‘தைர்யம்’- வீரம். ‘நிர்பயத்வம்’ – அஞ்சாமை. ‘தைர்யம்’ என்றாலே அஞ்சாமையும்தான் ஆனால் நிர்பயத்வம் என்றும் வருகிறது. காரணம் ‘தைர்யம்’ என்பதற்கு இன்னும் பல பொருள் உள்ளன. மனோதிடம், சாந்தகுணம் முதலியவற்றைக்கூட
‘தைர்யம்’ குறிக்கும். ‘அரோகதா’ என்றால் ஆரோக்யம். ‘அஜாட்யம்’ - ஜடமாக இல்லாத தன்மை என்று பொருள். புத்தி மந்தித்து, சுருசுருப்பில்லாமல், உற்சாகமில்லாமல் சோம்பேறியாக இருப்பது ஜடத்தன்மை.
அனுமன் அஜாட்யம் என்ற பண்பின் ஊற்றாக உள்ளார். ஊக்கத்தை கொடுப்பார். ‘வாக்-படுத்வம்’-வாக்குதன்மை
Read 9 tweets
16 Dec
#குசேலோபாக்கியானம் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இன்று தான் குசேலர் கிருஷ்ணனை துவாரகையில் சந்தித்த நாள். கிருஷ்ணன் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாள். பக்தர்கள் இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை வைத்து வணங்குவது வழக்கம்.
குசேலரும் கிருஷ்ணனும் சாந்தீபனி என்ற முனிவரிடம் ஒரே குருகுலத்தில் 64 நாட்கள் ஒன்றாகப் பயின்றனர். பின் வரும் நாட்களில் கிருஷ்ணன் மதுராவின் அரசரானார். குசேலனோ 27 குழந்தைகளோடு வறுமையில் வாடினார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்க என்ன வழி என்று யோசித்த குசேலரின் மனைவிக்கு தன் கணவரின்
பால்ய நண்பரும் துவாரகை மன்னருமான பகவான் கிருஷ்ணரின் நினைவு வந்தது. பகவானை நோக்கி நம்மை வழிப்படுத்துவது குருநாதராக இருப்பார். இங்கே குசேலரின் மனைவி அவரை துவாரகை கண்ணனிடம் அவர் கடவுள் என்று அறியாமலே ஆற்றுப்படுத்தினார். மேலும் கண்ணனுக்குக் கொடுக்க அக்கம்பக்கத்தில் யாசித்துப் பெற்ற
Read 12 tweets
15 Dec
பூஜை பாராயணங்களுக்கு மார்கழி முதல் நாள் இன்றே. மாதம் இன்றிரவு பிறக்கிறது. #திருப்பாவை #ஆண்டாள்திருவடிகளேசரணம்
1. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த
கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள்
இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின்
Read 15 tweets
14 Dec
சிவன் சாருடைய “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” புத்தகத்திலிருந்து ஸ்ரீதர ஐயாவாள் என்கிற பகுதி. ஆந்திர தேச ராஜ்யங்களுள் ஒன்றில் அமைச்சராக பணியாற்றி காலகதி அடைந்துவிட்ட தந்தையின் ஸ்தானத்தை ஏற்க அரசன் தனையருக்கு உத்தரவிட்டான்.  சாஸ்திர கலைகளில் மஹா மேதையாக விளங்கி வந்த தனையர், Image
தெய்வீகத்திலேயே ஈடுபட்டு வந்ததினால் அத்தகைய உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்ள இயலாததை அரசனிடம் தெரிவித்துக்கொண்டார்.  அரசன் மேலும் வற்புறுத்தவில்லை.
இதையடுத்து வேதியர் தன் மனைவியுடன் தென் திசையை நோக்கி க்ஷேத்திர யாத்திரையை மேற்கொள்ளலானார். மேலும் ஆசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு
வந்த பிரம்பு பெட்டியில் அமர்ந்து வந்த பகவானும் தனது யாத்திரையில் அன்றாட பூஜையை தவறாமல் நிரைவேற்றிக் கொண்டார். இவ்வாறு பல க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே சோழ நாட்டை அடைந்தார். சோழ நாட்டின் இயற்கை வளங்களையும், ஏராளமான நதிகளுடன் கூடிய நீர்வளத்தையும், ஆங்காங்கு சோலைகளுக்கிடையே
Read 31 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!