ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா நடந்துக்கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு  அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
"கிருஷ்ணா"என்ற இந்த வார்த்தையில் என்னதான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம்,"கிருஷ்ணா!கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே.அதனால் என்ன கிடைத்து விடும்?எனக்குப் பசிக்கிறது?உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்
பெரியவர் அந்த இளைஞனிடம்,"கிருஷ்ண நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்" என்றார்.இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
ஊருக்கு அடுத்தாற் போல் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான்.அவன் வாயில் "கிருஷ்ணா"என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை. திடீரென்று அந்தப் பக்கம் யாரோ வருவது போல சப்தம் கேட்டதும், ஒரு மரத்தின் மீது ஒளிந்து கொண்டான் இளைஞன்.
ஒரு வழிப்போக்கன் அந்த மர நிழலில் அமர்ந்து, அவன் கொண்டு வந்த கட்டுச்சோற்றை சாப்பிட்டான். அசதியில் அங்கேயே தூங்கி விட்டான்.இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே கிருஷ்ண நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்து விட்டு வழிப்போக்கன் சென்று விட்டான்.கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான்.ஆனால், வந்த வேகத்தில் அவன் அப்படியே நின்றுவிட்டான்.
எவனோ வழிப்போக்கன் மறந்துவிட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதில் அவனுக்கு  உடன்பாடில்லை.உண்மையில்
கிருஷ்ண நாமத்திற்கு மகிமை இருக்குமானால், இந்தச்
சாப்பாட்டை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை
பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.திரும்பவும் மரத்தின் மீது ஏறி அமர்ந்தான்.
சூரியன் மறையும் வேளை வந்தது.அப்போது காட்டுப் பாதையில் சில கள்வர்கள் தாங்கள் திருடிய  பொருள்களுடன் வந்து மரநிழலில் அமர்ந்து பங்கிட்டுக்கொண்டிருந்தனர். கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.
தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன்,மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்.ஆனால் கள்வர் தலைவன்,
“இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது.
நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான்.அந்தச் சோற்றை அவனுக்கே கொடுப்போம்!” என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான்.
இளைஞன் சாப்பிட்டப் பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள்,உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர். இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடு இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான்.
"நம்பிக்கையில்லாமல் கிருஷ்ண நாமம் சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே"என்று எண்ணியவன்,அழியாத செல்வம் கிருஷ்ண நாமம்தான் என்ற முடிவுக்கு வந்தான்.காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்தப் பணத்தை உண்டியலில் போட்டான்.
"இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,” என்று கிருஷ்ணனிடம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான்.ஆகவே பகவானின் பெயரில் நம்பிக்கை வையுங்கள்! அவர் நாமம் நாளும் சொல்லிப் பயனடையுங்கள்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

25 Dec
இரணிய வதம்  - நரசிங்கம் வளருதல் 

தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து.மிகப் பெரிய உருவம் கொள்கிறது.பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல.கம்பன் வருணிக்கிறான்.மிக பிரமாண்டமான வடிவம்.கற்பனைக்கு எட்டாத வடிவம். Image
பாடல்

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை 
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
பொருள்:

பிளந்தது தூணும் = தூண் பிளந்தது

ஆங்கே பிறந்தது, சீயம் = அதிலிருந்து பிறந்தது சிங்கம்

பின்னை வளர்ந்தது = பின் அது வளர்ந்தது

திசைகள் எட்டும் = எட்டு திசையும் வளர்ந்தது

பகிரண்டம் முதல மற்றும் அளந்தது = எல்லா அண்டங்களையும் அளந்தது
Read 7 tweets
25 Dec
சூதாட்டத்தில் தோற்றப் பாண்டவர்கள்,தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன்,"கர்ணா!இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம்.அக்னி பகவானின் பரிசாக,அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்"என்றான். Image
ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
"நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை"என்று சொன்னான் கர்ணன்."ஆஹா!நீ அல்லவோ சுத்தவீரன்?அர்ஜுனன் வில்லை நம்புகிறான்.
நீ உன் திறமையை நம்புகிறாய்"என்று கர்ணனை துரியோதனன் பாராட்டினான்.அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்த சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.இதைக் கேட்டுச்சிரித்த வியாசர்,"கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது!அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை"என்றார்.
Read 13 tweets
23 Dec
இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள் 

இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களைக் கொண்டது, இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள். இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று.
கம்பன் ஏதோ அருள்வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். "தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன்" என்று பிரகலாதன் வாயிலாகச் சொல்கிறான்.

பிரகலாதன்-ஒரு சாண் அளவிலும் இருக்கிறான்.அணுவை நூறாகப் பிளந்தால்,அந்தத் தூளிலும் அவன் குணம் இருக்கும்.மேரு மலையிலும் அவன் இருக்கிறான்.
இந்தத் தூணிலும் இருக்கிறான்.நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான்.நீ இதை விரைவில் காண்பாய்.
Read 9 tweets
23 Dec
யமுனை நதியில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாது
திகைத்து நின்று கொண்டிருந்தனர்.எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.
அதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்
கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்
அவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.அன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காக
உபவாசம் இருக்கின்ற தினம்.கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.
அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.அது தெரிந்த கோபிகைகள் "ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றை கடந்துச்
செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்"என்றார்கள்."சரி"என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த
பானைகளைப் பார்த்தார்.உடனே, அவர்கள், "ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.
Read 11 tweets
22 Dec
"மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே!"

என்று திருப்பாவையில் அழகாகப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பாடலில், கண்ணனின் புகழை பறைசாற்றிக் கொண்டே வந்த அவள், ஒரு இடத்தில் மட்டும்,"ஏலாப்பொய்கள் உரைப்பானை...'' என்று சாடி விட்டாள்.ஆம் இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான்.இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள்.
கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான்.ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாக சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள்,"ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா
என பார்க்கத்தானே!உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே!
Read 7 tweets
22 Dec
பால்யப் பருவத்திலிருந்தே உத்தவர் கிருஷ்ணருக்கு தேரோட்டியாகவும்,மற்றும் பல சேவைகளையும் செய்து வந்தார். அவர் கிருஷ்ணரிடம் யாதொரு வரமும் கேட்டதில்லை. தன் அவதாரத்தின் நோக்கம் முடிவடையும் சமயத்தில்,கிருஷ்ணர் உத்தவரை அழைத்து
"உத்தவா,இந்த அவதாரத்தில் பலரும் பலவித ஆசைகளை பூர்த்தி செய்துகொண்டு,வரங்களையும் என்னிடம் பெற்றுள்ளனர்.ஆனால் நீ என்னிடம் எதுவுமே கேட்டதில்லை.இப்பொழுதாவது உனக்கு என்ன வேண்டுமோ கேள்,நான் தருகிறேன்.உனக்கும் ஏதேனும் செய்த திருப்தியுடன் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேன்.” என்றார்.
உத்தவர் தனக்காக எதுவும் கேட்காவிட்டாலும்,சிறுவயது முதல் கிருஷ்ணரை கவனித்து வந்தவர்.கிருஷ்ணரின் சொற்களுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இல்லாததைக் கண்டு,உத்தவர் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறார்.இதற்கான காரணத்தை அறிய விரும்பினார்.ஆதலால் அவர் கிருஷ்ணரிடம்,
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!