குருஷேத்திரப்போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துக் கொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க,ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?"என வருத்தமுடன் கேட்டார்.அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன்.அதன்பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.நீ அதற்கு பதில் சொன்னால்,நான் உனக்கு பதில் தருகிறேன்"என்ற பகவான்,
கதையைக் கூறினார்.

அந்த அரசன்,மிக நல்லவன். நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான்.சைவ நெறிப்படி வாழ்ந்தவன்.ஆனால்,அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்.அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன்.அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா,அசைவமா
என்று கண்டறிய முடியாது.இந்த ஆசாமிக்கு ஒரு விபரீதமான- கொடூரமான ஆசை வந்துவிட்டது.அதாவது, அசைவ உணவை சைவம் போல் தயாரித்துக் கொடுத்து அரசனைச் சாப்பிட வைக்க வேண்டும்,பின் பல பரிசுகள் பெறவேண்டும் என்பதே.அரசன்,தனது அரண்மனையில் பல அதிசயப் பறவைகளை வளர்த்து வந்தான்.
அவற்றில் ஓர் அன்னப்பறவையும் உண்டு. அது தினமும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொறித்து வந்தது.ஒரு நாள்,இந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றை பிடித்து வந்த சமையற்காரன், அசைவ உணவு என்று அறிய முடியாதபடி பக்குவமாகச் சமைத்து மன்னனுக்குப் பரிமாறினான்.
அது அசைவ உணவு என்பதை அறியாத மன்னனும்,"அடடா… பிரமாதம்!"என்றபடி ரசித்து ருசித்து சாப்பிட்டான்.இதைக் கண்ட சமையற்காரன் மகிழ்ந்தான். அரசரையே ஏமாற்ற வைக்கும் தன் திறமையை எண்ணி வியந்தான். இதே போல் அன்னப்பறவையின் நூறு குஞ்சுகளையும், மன்னனுக்குப் பரிமாறினான்.
சமையலில் அவனது கைப்பக்குவத்தைப் பாராட்டிய மன்னன், ஏராளமான பரிசு வழங்கி கௌரவித்தான்."கதையைக் கூறி முடித்த கிருஷ்ணர்,"சக்ரவர்த்தியே, எங்களது சந்தேகம் இதுதான்! மன்னனை ஏமாற்றி, புலால் உணவு சாப்பிடச் செய்த சமையற்காரன் குற்றவாளியா? அல்லது அசைவம் என்று அறியாமல் புலால் உணவு சாப்பிட்ட
மன்னன் குற்றவாளியா? இருவரில் தண்டனைக்குரியவர் யார்?” என்று கேட்டார். திருதராஷ்டிரர் பதில் கூறினார்: ”கண்ணா,சர்வ வியாபியான உனக்குத் தெரியாத நீதியா?குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு பரிபூரணமான நீதிநெறிகளை உபதேசித்த நீ, என்னிடம் விளக்கம் கேட்கிறாயே.சரி, எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன்
சமையற்காரன் செய்தது பெரிய குற்றமல்ல.வேலைக்காரர்கள், நேர்மையாகவோ அல்லது ஏமாற்றியோ தங்கள் எஜமானனை திருப்தியடையச் செய்து,பரிசுகள் பெறுவது உலக இயல்பு.ஆகவே, அவன் செய்தது சிறிய குற்றமே.ஆனால்,மன்னனின் நிலை அப்படியல்ல.அவன் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மிக நுட்பமாக கிரகிக்க வேண்டும்.
தன் பணியாளர்களது செயல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தவறினால், எதிரிகளது சூழ்ச்சியால் நாட்டையும்,ஏன் தன் உயிரையே கூட இழக்க நேரிடும். கிருஷ்ணா! கதையில் நீ குறிப்பிட்ட மன்னன் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை.ஆக, அவன் கடமை தவறியது முதல் குற்றம்.கண்ணற்றவன் போல் நடந்துகொண்டான்.
சமையற்காரன் ஒருவனிடம் ஏமாந்தது இரண்டாவது குற்றம். புலால் உண்டது மூன்றாவது குற்றம். இவற்றை அவன் அறிந்து செய்ய வில்லை என்றாலும் அவனே குற்றவாளி. மேலும், பறவையின் கொலையில் மன்னனுக்கு மறைமுகத்தொடர்பு உள்ளதால், அவனே அதிக குற்றங்களைச் செய்தவன் ஆகிறான்.
எனவே, மன்னனுக்கே தண்டனை வழங்கவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர்.இதைக் கேட்டுப் புன்னகைத்த கிருஷ்ணர்,
"சக்ரவர்த்தி! தங்களிடம் நான் சொன்னது கதையல்ல.உண்மைச் சம்பவம்.இந்தக் கதையின் நாயகன் தாங்களே. முற்பிறவியில செய்த தான-தர்மத்தின் பலனால்,இந்தப் பிறவியில் நல்ல மனைவி, நல்ல மந்திரிகள்,
வளமான நாடு, நிறைய சந்ததிகள் என்று சகலமும் வாய்க்கப் பெற்றீர்கள்.இதேபோல், பாவத்தின் விளைவால் இப்போது,புத்திர சோகத்தில் தவிக்கிறீர்கள்.சமையற்காரன் செய்த உயிர்க்கொலை, தாங்கள் அறியாமல் நடந்தது என்றாலும், அவன் சமைத்த புலால் உணவைச் சாப்பிட்டதால், கொலை செய்த பாவம் தங்களையும்
ஒட்டிக் கொண்டது. "மன்னனே குற்றவாளி,அவனுக்கே தண்டனை" என்ற நியாயத்தை தாங்களே சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

பாவம் என்பது நெருப்பைப் போன்றது! நாம் அறியாமல் தொட்டாலும் நெருப்பு நம்மைச் சுட்டுவிடும். அதேபோல் அறியாமல் பாவம் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
நீங்களும் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாகவே, இப்போது புத்திரர்களை இழந்து, பார்வையும் தண்டனையை அனுபவிக்கிறீர்கள்” என்று முடித்தார் பகவான் கிருஷ்ணர்.

திருதராஷ்டிரர், தருமர் மற்றும் உடன் இருந்த அனைவரும் அதிர்ச்சியால் வாயடைத்துப் போயினர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

30 Dec 20
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை

வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்."இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது.பார்த்து வாருங்கள்.ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.
பேருந் மற்றும் புகைவண்டி நிலையம் போன்றப் பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.
உங்கள் மனதையும் உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக்கொள்வான்,சரியான கள்வன்.மனதைத்திருடுவது மட்டும் அல்ல,திருடியபின்,அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பிவிடுவான்.
உங்களை நீங்கள் இழந்தது கூட,உங்களுக்குத் தெரியாது.எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்பாக எச்சரிக்கிறார்.
Read 6 tweets
28 Dec 20
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர்படுத்திக்  கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று, தன் நான்கு குஞ்சுகளுடன்  வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப்படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்துவிட்டது.
தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தென்பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “கிருஷ்ணா! நாளைப்போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்துவிடும்.நீதான் காப்பாற்ற வேண்டும்”
Read 14 tweets
27 Dec 20
இரணியன் வதம் - ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்

நரசிங்கத்தின் உருத்திர உருவத்தைக் கண்டு சேனைகள் சிதறி ஓடின.இரணியனின் சேனைப்பெரியது.ஆயிரக்கணக்கான வீரர்கள்.
இங்கே கம்பனின் கற்பனை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.
ஓடும் ஒவ்வொரு வீரர் முன்னாலும் ஒரு நரசிங்கம் நின்றதாம்.எப்படி?
அவ்வளவு வேகமாக அது வீரர்களிடையே புகுந்து புறப்பட்டது. ஒவ்வொரு வீரரும் அந்த நரசிங்கம் தன் முன்னால் நிற்பது மாதிரி தெரிந்து அலறுகிறார்கள்.சிங்கமுகம் எப்படி இருக்கும்?கோரைப்பற்களுடன், பிடரிமயிர் சிலிர்க்க பயங்கரமாக இருக்கும்.
கம்பன் சொல்கிறான், திருமுகம் என்று.
அவனுக்கு அந்த ஆக்ரோஷமான முகம் கூட அருள் வழியும் முகமாக தெரிகிறது.நரசிங்கத்தின் தோள்கள் பொன்னைப் போல ஒளி வீசுகின்றன.கண்கள் தீயைப் போல சிவந்து,ஜ்வாலை விடுகின்றன.
Read 7 tweets
27 Dec 20
ஒரு ஊரில், ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும்,ஒரு செல்வந்தரும் இருந்தனர்.செருப்புத் தொழிலாளி தினமும்,தன் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து,அதை வணங்கி வந்தார்.செல்வம் இல்லாவிட்டாலும்,சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.
செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.ஆனாலும்,பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து,"அந்தச் செல்வந்தர்
மிகுந்த பக்திமானாக இருக்கிறார்.தினமும் உங்களுக்கு, பல மணி
நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”என்றார்.விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு, நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.
Read 11 tweets
25 Dec 20
இரணிய வதம்  - நரசிங்கம் வளருதல் 

தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து.மிகப் பெரிய உருவம் கொள்கிறது.பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல.கம்பன் வருணிக்கிறான்.மிக பிரமாண்டமான வடிவம்.கற்பனைக்கு எட்டாத வடிவம்.
பாடல்

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை 
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
பொருள்:

பிளந்தது தூணும் = தூண் பிளந்தது

ஆங்கே பிறந்தது, சீயம் = அதிலிருந்து பிறந்தது சிங்கம்

பின்னை வளர்ந்தது = பின் அது வளர்ந்தது

திசைகள் எட்டும் = எட்டு திசையும் வளர்ந்தது

பகிரண்டம் முதல மற்றும் அளந்தது = எல்லா அண்டங்களையும் அளந்தது
Read 7 tweets
25 Dec 20
சூதாட்டத்தில் தோற்றப் பாண்டவர்கள்,தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன்,"கர்ணா!இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம்.அக்னி பகவானின் பரிசாக,அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்"என்றான்.
ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
"நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை"என்று சொன்னான் கர்ணன்."ஆஹா!நீ அல்லவோ சுத்தவீரன்?அர்ஜுனன் வில்லை நம்புகிறான்.
நீ உன் திறமையை நம்புகிறாய்"என்று கர்ணனை துரியோதனன் பாராட்டினான்.அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்த சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.இதைக் கேட்டுச்சிரித்த வியாசர்,"கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது!அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை"என்றார்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!