பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர்படுத்திக்  கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று, தன் நான்கு குஞ்சுகளுடன்  வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப்படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்துவிட்டது.
தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தென்பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “கிருஷ்ணா! நாளைப்போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்துவிடும்.நீதான் காப்பாற்ற வேண்டும்”
என்று கெஞ்சிக்கேட்டது."நீ சொல்லுவது எனக்குக்கேட்கிறது. ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது”என்று பதில் சொன்னார் கிருஷ்ணர்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம்,நீதான் எங்களைக் காப்பவர். எங்களைக் காப்பதையும்,அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்”என்றது குருவி.
"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”. இது ஒன்றே ஸ்ரீகிருஷ்ணர் சொன்ன பதில். குருவிக்கும்,ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.
போருக்கு முன் கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச்சொன்னார்.அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்.
போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய கிருஷ்ணர்,எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரியவில்லை.ஆனாலும் அவற்றை எடுத்து கிருஷ்ணரிடம் கொடுத்தான்.
ஸ்ரீகிருஷ்ணர்,ஒரு யானை மீது அம்பைத்தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.யானையைக் குறிவைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த கிருஷ்ணரை,கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.
“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்.ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லிவிட்டார் கிருஷ்ணர்.
“ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம், “அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டை கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்.
அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்கவில்லை.
போர் நடந்துமுடிந்து, பாண்டவர்கள் 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர். அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வந்தார். தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்,"ஹே அர்ஜுனா! இந்த மணியைத்தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்டார்.
"எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும்போது, இப்போது அறுந்துபோய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய்விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியை கையில் எடுத்தான்.
அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக்குருவியும், நான்கு குஞ்சுகளும் சந்தோஷமாக பறந்துச்சென்றன. தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம்வந்து, 18 நாட்களுக்கு முன், தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள்
தன் குடும்பத்தை வைத்து,
பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும், நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது.

"பகவானே! என்னை மன்னித்து விடு. உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால், நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்சகாலம் புலப்படாமல் போய் விட்டது" என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.
அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும். அவனிடம் சரணாகதி அடையுங்கள். மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.
மற்றவை நம்மைப் படைத்தவனின் பொறுப்பு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

27 Dec
இரணியன் வதம் - ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்

நரசிங்கத்தின் உருத்திர உருவத்தைக் கண்டு சேனைகள் சிதறி ஓடின.இரணியனின் சேனைப்பெரியது.ஆயிரக்கணக்கான வீரர்கள்.
இங்கே கம்பனின் கற்பனை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.
ஓடும் ஒவ்வொரு வீரர் முன்னாலும் ஒரு நரசிங்கம் நின்றதாம்.எப்படி?
அவ்வளவு வேகமாக அது வீரர்களிடையே புகுந்து புறப்பட்டது. ஒவ்வொரு வீரரும் அந்த நரசிங்கம் தன் முன்னால் நிற்பது மாதிரி தெரிந்து அலறுகிறார்கள்.சிங்கமுகம் எப்படி இருக்கும்?கோரைப்பற்களுடன், பிடரிமயிர் சிலிர்க்க பயங்கரமாக இருக்கும்.
கம்பன் சொல்கிறான், திருமுகம் என்று.
அவனுக்கு அந்த ஆக்ரோஷமான முகம் கூட அருள் வழியும் முகமாக தெரிகிறது.நரசிங்கத்தின் தோள்கள் பொன்னைப் போல ஒளி வீசுகின்றன.கண்கள் தீயைப் போல சிவந்து,ஜ்வாலை விடுகின்றன.
Read 7 tweets
27 Dec
ஒரு ஊரில், ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும்,ஒரு செல்வந்தரும் இருந்தனர்.செருப்புத் தொழிலாளி தினமும்,தன் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து,அதை வணங்கி வந்தார்.செல்வம் இல்லாவிட்டாலும்,சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.
செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.ஆனாலும்,பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து,"அந்தச் செல்வந்தர்
மிகுந்த பக்திமானாக இருக்கிறார்.தினமும் உங்களுக்கு, பல மணி
நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”என்றார்.விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு, நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.
Read 11 tweets
25 Dec
இரணிய வதம்  - நரசிங்கம் வளருதல் 

தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து.மிகப் பெரிய உருவம் கொள்கிறது.பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல.கம்பன் வருணிக்கிறான்.மிக பிரமாண்டமான வடிவம்.கற்பனைக்கு எட்டாத வடிவம்.
பாடல்

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை 
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
பொருள்:

பிளந்தது தூணும் = தூண் பிளந்தது

ஆங்கே பிறந்தது, சீயம் = அதிலிருந்து பிறந்தது சிங்கம்

பின்னை வளர்ந்தது = பின் அது வளர்ந்தது

திசைகள் எட்டும் = எட்டு திசையும் வளர்ந்தது

பகிரண்டம் முதல மற்றும் அளந்தது = எல்லா அண்டங்களையும் அளந்தது
Read 7 tweets
25 Dec
சூதாட்டத்தில் தோற்றப் பாண்டவர்கள்,தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன்,"கர்ணா!இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம்.அக்னி பகவானின் பரிசாக,அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்"என்றான்.
ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
"நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை"என்று சொன்னான் கர்ணன்."ஆஹா!நீ அல்லவோ சுத்தவீரன்?அர்ஜுனன் வில்லை நம்புகிறான்.
நீ உன் திறமையை நம்புகிறாய்"என்று கர்ணனை துரியோதனன் பாராட்டினான்.அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்த சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.இதைக் கேட்டுச்சிரித்த வியாசர்,"கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது!அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை"என்றார்.
Read 13 tweets
24 Dec
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா நடந்துக்கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு  அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
"கிருஷ்ணா"என்ற இந்த வார்த்தையில் என்னதான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம்,"கிருஷ்ணா!கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே.அதனால் என்ன கிடைத்து விடும்?எனக்குப் பசிக்கிறது?உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்
பெரியவர் அந்த இளைஞனிடம்,"கிருஷ்ண நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்" என்றார்.இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
Read 13 tweets
23 Dec
இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள் 

இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களைக் கொண்டது, இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள். இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று.
கம்பன் ஏதோ அருள்வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். "தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன்" என்று பிரகலாதன் வாயிலாகச் சொல்கிறான்.

பிரகலாதன்-ஒரு சாண் அளவிலும் இருக்கிறான்.அணுவை நூறாகப் பிளந்தால்,அந்தத் தூளிலும் அவன் குணம் இருக்கும்.மேரு மலையிலும் அவன் இருக்கிறான்.
இந்தத் தூணிலும் இருக்கிறான்.நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான்.நீ இதை விரைவில் காண்பாய்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!