அந்த ராமலிங்க முதலியார் செங்கல்பட்டு பக்கம் 17ம் நூற்றாண்டில் வசித்தவர், பெரும் வியாபாரி வெள்ளையனோடு வியாபாரம் செய்த காலத்தில் நன்றாக ஆங்கிலம் கற்று அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.
இந்தியாவில் அவரை போன்ற ஆட்கள் அவசியம் என்பதால் தங்கமும் வெள்ளியும் கொட்டி தனக்கு சமமான அந்தஸ்தில் திவான் போல கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்தது. பெரும் அரண்மனையும், குதிரை வண்டியும் வீடெல்லாம் தங்க பாளமும் வெள்ளி கட்டியுமாக பெரும் வாழ்வு வாழ்ந்தவர்.
அவர், அப்பொழுதே “அல்பேகா” எனும் கருப்பு கோட்டு அணிந்தவர். எப்பொழுதும் மூட்டை மூட்டையாக நாணயம் கொட்டப்படும் அள்ளப்படும் சத்தம் கேட்டு கொண்டே இருந்த வீடு அது. அவர் வியாபாரம் நடத்தியவர் என்றாலும் வெள்ளையனிடம் கவுரவ பதவியிலும் இருந்தார்.
அப்பொழுதுதான் பாணர்மேன் நெல்லை மேல் படை எடுத்து கட்டபொம்மனை பிடித்து விசாரித்து தூக்கிலேற்றினான், அப்பொழுது கயத்தாரில் கட்டபொம்மனினின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.
அவர்தான் பின்பு ஊமைத்துரையினை பிடித்து கொல்லுமுன் விசாரித்த இடமான அந்த பாளை மியூசியம் இருக்கும் மாளிகையில் சாட்சியாய் நின்றவரும் அவர்தான். வெள்ளையன் இங்கு மக்களை சுரண்டும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்தான் சாட்சி,
அதுவும் நெல்லை பக்கம் அவன் செய்த அவ்வளவு அட்டகாசத்துக்கும் அவரே மவுன சாட்சி. மெக்காலே என்பவனுக்கு அந்த ராமலிங்க முதலியாரே வலகரமாய் இருந்தார், அப்பொழுதுதான் மெக்காலே அவரை திருவனந்தபுரம் அழைத்து சென்றான். ஒரு கட்டத்தில் அந்த ராமலிங்க முதலியார் நெல்லை பக்கமே தங்க வேண்டியதாயிற்று.
உள்ளூர வலி இருந்தாலும் வெள்ளையனை எதிர்க்கும் நிலையில் அவர் இல்லை, அன்று யாரும் இல்லை அந்த அளவு அவர்கள் காலூன்றியிருந்தார்கள். எனினும் இக்கொடுமை எல்லாம் தன் மகன் சுலோச்சனர் என்பவரிடம் சொல்லி வந்தார்.
சுலோச்சன முதலியாரும் தந்தை வழி சொத்துடன் கவுரவ வேலையாக அரசில் இருந்தவர், அவரையும் நெல்லை பக்கம் தாசில்தார் போன்ற பணியான சிராஸ்தார் வேலைக்கு வைத்தான் வெள்ளையன். அந்த தாமிரபரணி நெல்லைக்கும் பாளையங்கோட்டைக்கும் இடையில் ஓடும் நதி, அது வற்றா நதி.
அதை கடக்க அன்று பரிசலும் படகுமாக பெரும் சண்டை நடந்தது. பல வகையான மோதல்களும் பிரச்சினைகளும் கட்ட பஞ்சாயத்தும் இருந்தன, ஒரு கட்டத்தில் கொலைகளும் விழலாயிற்று. நெல்லையப்பர் கோவில் முதல் வணிக சந்தை எல்லாம் அப்பக்கம் இருக்க,
இப்பக்கம் மக்கள் திணறினர், பணம் இருந்தால் பரிசலில் செல்லலாம் இல்லாவிட்டால் நீந்தலாம் உயிரோடு இருந்தால் கடக்கலாம். ஆம் அப்படித்தான் நிலை இருந்தது, மன்னர்கள் காலத்தில் இருந்த ஒழுங்கு வெள்ளையன் காலத்தில் இல்லை.
ஆங்கிலேய அரசு பாலம் கட்டுவதே தீர்வு என சொல்லிற்று. 1836ல் நெல்ல கலெக்டர் ஈடன் அதை முடிவு செய்தார். அரசு கட்டுங்கள் என சொன்னதே தவிர சல்லிகாசு கொடுக்கவில்லை. 1840 ஆண்டு பிரச்சினை பெரிதாகி ஆற்றங்கரையில் கலவரமும் கொலைகளும் நடக்க அன்றைய கலெக்டர் தாம்ஸன் பாலம் கட்ட தீர்மானித்தான்.
பாலம் வரைபடம் தயாரானது. ஹேர்ஸ்லி என்பவர் அதை வடிவமைத்தார். பாலம் லண்டனின் தேம்ஸ் நதியில் இருக்கும் வாட்டர்லூ பாலம் போலவே வடிவமைக்கபட்டது, 800 மீட்டர் நீளம், 21 அடி அகலம், 60 அடி விட்டம் உள்ளிட்ட 11 வளைவுகளுடன் அது வரைபடமாக மிளிர்ந்தது.
அவனும் அரசு காசில் கட்டவில்லை, அரசும் காசு கொடுக்கவில்லை.
இது மக்களுக்கான திட்டம் என்பதால் மக்களிடம் காசு வசூலித்து கட்ட சொல்லி சுலோச்சன முதலியாருக்கு உத்தரவிட்டான்.
அந்த நெல்லை வறுமையில் இருந்தது, அவர்கள் உழைப்பெல்லாம் வரி என ஆங்கிலேயனுக்கு சென்றுகொண்டிருக்க மிஞ்சியது வறுமை மட்டுமே. அவர்களை ஆளும் ஆங்கில அரசுதான் நிச்சயம் பாலம் கட்ட வேண்டும் ஆனால் செய்யவில்லை. அடியும் கொடுத்து வண்டியிழுக்க வைக்கும் மாடுகள் போல நடத்தப்பட்டனர்.
இந்நிலையில் பாலம் கட்ட 50 ஆயிரம் ரூபாய் என்றால் எப்படி கொடுப்பார்கள், அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை அணாக்களில் இருந்தது என்றால் அது இன்றைய மதிப்பு பலநூறு கோடிகளுக்கு சமம்.
சுலோச்சன முதலியாருக்கு அம்மக்கள் மேல் அனுதாபம் பொங்கியது, தங்கள் குடும்ப சொத்தில் நெல்லை பகுதி மக்களின் பணமும் இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். கட்டபொம்மனும் ஊமைதுரையும் அவர் நினைவுக்கு வந்து சென்றனர்.
ஒரு கட்டத்தில் தானே பாலம் கட்ட முடிவெடுத்தார் அவரின் மனைவி வடிவம்மாளும் ஒப்புகொண்டார், தன் வீட்டு நகை பணம் சொத்து என அள்ளி கொடுத்து அந்த பாலத்தை கட்டினார் சுலோச்சன முதலியார்.
இந்நாட்டில் பென்னிகுயிக் வந்து அணைகட்டினான் என கொண்டாடுவார்கள், ஆனால் இங்கே ஒரு தமிழன் தன் சொத்தில் பாலம் அமைத்தான் என்பதை ஒருவரும் பேசமாட்டார்கள்.
நிச்சயம் முல்லைபெரியாறு போன்றே அக்காலத்தில் நெல்லை பாலமும் பெரும் சாதனை, அதன் பின்பே போக்குவரத்து எளிதாகி அந்த பகுதி வேகமாக வளர்ந்தது. நிச்சயம் அந்த சுலோச்சன முதலியார் என்பவரின் மனமும் செயலும் பாராட்டப்பட வேண்டும்.
இன்றோடு அந்த பாலத்துக்கு 178 வயதாகின்றது, இன்னும் பல்லாண்டு நிற்கும் வகையில் அது வலுவோடு நிற்கின்றது.
இப்பொழுது அந்த சுலோச்சன முதலியாரின் வாரிசுகள் சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கின்றார்கள், பாலத்தின் நினைவுநாள் அன்று நெல்லைக்கு வந்துவிட்டு போவது அவர்கள் வழக்கம்அவர்களை யாருக்கும் தெரியாது அவர்களும் யாரிடமும் எதுவும் சொல்வதுமில்லை,
அவர்களின் சொத்து ஒன்று பாலம் கட்டியதற்காக ஆங்கிலேயன் கொடுத்த செப்பு பாராட்டுபத்திரம் ஒன்றுதான். ஆம் அது அவர்களிடம் இன்றும் உண்டு.
இன்று பாலம் கட்டுவதே கமிஷனுக்கானது எனும் நிலையில் தன் சொந்த பணத்தையெல்லாம் ஆற்றில் மக்களுக்காக போட்ட அந்த சுலோச்சன முதலியார் வணங்கதக்கவரே.
வ.உ.சி, பாரதி போன்றோர் வரிசையில் அந்த முதலியாருக்கும் நிச்சயம் இடம் உண்டு, சுலோச்சன முதலியாரின் உதவியை விவரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு அதில் பதிக்கப்பட்டது.
அந்தக் கல்வெட்டு 1970 வரை இருந்தது(யானைமேல் அவரை அமரவைத்து மக்கள் அழைத்து வந்து மகிழ்ந்தார்களாம்).
அதன் பின் தமிழகத்தில் காங்கிரஸ் போல் அதுவும் காணாமல் போனது ஆனாலும் சில அடையாளம் மிஞ்சியது. 1970ல் திராவிட ஆட்சியில் வெள்ளையன் போட்ட சாலையும் பாலமும் அண்ணா சாலை என மாறும் பொழுது இந்த சுலோச்சன முதலியாரின் கல்வெட்டு இடித்து வீசபட்டது.
திராவிடம் காக்கும் தமிழர் பெருமை அப்படி. எப்படியோ சுலோச்சன முதலியார் பாலம் என்ற ஒரு சிறிய கல்வெட்டும் ஆவணங்களும் மிஞ்சிவிட்டன.
178 ஆண்டுக்கு முன்பே தன் சொத்துக்களை எல்லாம் இழந்து தன் பெயரையும் வைக்காமல் சிலையும் வைக்காமல் பாலம் கட்டி மக்களை பயனுற செய்த அந்த பெருமகன் எக்காலமும் வாழ்த்துகுரியவர். ஆற்றில் போட்டாலும் அளந்து போடாமல் மொத்தமும் கொட்டிய மாமனிதர் அவர்.
வெள்ளையன் இங்கு அதை கிழித்தான், கல்வி கொடுத்தான் , ரயில் அமைத்தான் என்பதெல்லாம் சுயநலம். தனக்கு லாபமில்லா எதையும் பற்றி அவன் சிந்திக்கவே இல்லை, கல்வி கூட தனக்கு ஒரு அடிமைகளை உருவாக்கும் வகையில்தான் செய்தான். இது வரலாறு எங்கும் காணகிடந்தாலும் நெல்லையில் மிக அழகாக தெரிகின்றது.
நெல்லைக்கு செல்லும் வாய்பிருந்தால் ஆற்றங்கரை ஓரமாக தள்ளி நின்று அந்த கவனியுங்கள், அதன் அழகும் பிரமாண்டமும் தெரியும் அதை விட பிரமாண்டமாக சுலோசன முதலியார் தெரிவார்
மூலம்: ஸ்டான்லி ராஜனின் பதிவு –
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் என ஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனை மடக்குவான்.
ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது, ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான். நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான். டேய்! நீ கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தாய்.
இந்திரா காந்தி 1969 ல் வங்கிகளை தேசியமயமாக்க சட்டம் பிறப்பித்த போது...
இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த போது...
அவற்றை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய போது...
ஆஹா! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கொண்டு வந்த, மக்களுக்கான சட்டத்தை...
எப்படி நீதிமன்றம் தலையிட்டு தள்ளுபடி செய்யலாம்?
EXECUTIVE மற்றும் JUDICIARY க்கு இடையே 'எல்லைக் கோடு' வேண்டாமா?
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட (DEMOCRATICALLY ELECTED) அரசின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் நான்கு பேர் உட்கார்ந்து முட்டுக் கட்டை போடுவது எந்த வகையில் நியாயம்?
நாடாளுமன்றத்தின் உரிமையில் நீதி மன்றம் தலையிடலாமா?
கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன.
🇮🇳🙏1
அவற்றுள் *திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் “பஞ்ச கிருஷ்ண தலங்கள்”* என்ற சிறப்புப் பெற்றவை.
இந்த பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன் ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். 🇮🇳🙏2
ஆனால் இங்கு சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு தயாராக எப்போதும் திருவைகுண்டத்தில் இருப்பது போல நியம கருடனாக சேவை சாதிக்கின்றார்.
இத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்
திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.
🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3