புத்த குருமார்களை வாதத்தில் வென்று சைவத்தை நிலைநாட்டி,  தில்லையிலேயே சிவதொண்டு புரிந்து சிவனையே நினைந்துருகி வாழ்ந்து வந்தார் திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகர். வழக்கம்போல் தில்லைநாதனை ஆலயத்தினுள் வேண்டிவிட்டு, திருக்கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது முப்புரிநூல் தரித்த உடல்,முகம் முழுக்க பிரகாசமளிக்கும் திருநீறு என வேதியர் வடிவில் அந்தணர் ஒருவர்,
மாணிக்கவாசகரிடம் தன் வணக்கத்தைச் செலுத்தி, "ஐயா!நான் இந்த ஊரைச் சார்ந்த அந்தணன்.தங்களின் பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன்.அதை நானும் பாராயணம் செய்ய விரும்புகிறேன்.
அதற்காக உங்களின் பாடலைக் குறிப்பாய்,எழுதிக்கொள்ள விருப்பம் கொண்டு இங்கு வந்துள்ளேன்.தாங்கள் எழுதிய 'திருவாசகத்தை',நீங்களே ஒருமுறை சொன்னால்,அப்படியே ஓலைச்சுவடிகளில் நான் எழுதிக் கொள்கிறேன்"என்று அந்தணர் அன்புடன் கேட்டார்.
மாணிக்கவாசகருக்கு இந்த ஒளி பொருந்திய முகத்தை,எங்கோ பார்த்த ஞாபகம்.ஆனாலும் பிடிபடவில்லை.கேட்ட அந்தணருக்கு மறுக்காமல்,"ஆகட்டும் அய்யனே" எனத்திருவாய் மொழிந்தார். அந்தணரும் எழுதத் தயாரானார்.மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே,51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும்
சொல்லச்சொல்ல,அந்தணர் எழுதிக்கொண்டார்.மாணிக்கவாசகரும் தம் திருவாசகத்தை ஒருபாடல் விடாமல் உரைத்து முடிக்க,"அய்யனே சிற்றம்பலத்தானை பாட்டுடைத் தலைவனாக்கி,திருக்கோவைப் பதிகம் ஒன்று படைப்பீர்" என்று வேதியர் கேட்க,அதற்கும் மாணிக்கவாசகர் மறுக்காமல் கோவைப்பதிகத்தை பாடிமுடித்தார்.
முடிக்கும் தறுவாயில் தம் எதிரில் அமர்ந்திருப்பதும்,தம் வாய் மொழியை எழுத்தாய் வடிப்பதும்,என் அப்பன் ஈசன் தான் என்று உணர்ந்து முகம் காண தலை நிமிர்ந்தார்.கணப்பொழுதில், எழுதிய ஓலைச்சுவடியை கயிற்றால் கட்டிக்கொண்டு, மாயமானார் அந்தணர் வடிவிலான ஈசன்.
மாணிக்கவாசகரும் புறத்தே எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 'தம்மை ஆட்கொண்ட இறைவன் தம்முன்னிருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டேனே'என்று எண்ணி,தன் நிலை நினைத்து வருந்தி நின்றார்.வேதியர் வடிவில் வந்த சிவனோ,ஓலைச் சுவடியினை,பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.
மறுநாள் காலை எப்பொழுதும் போல் தில்லை நடராஜரின் பூஜைக்காக வந்த அந்தணர்கள் ஓலைச்சுவடியைக் கண்டு எடுத்துப்பார்த்தனர்.அதில் "அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது" என்றிருந்தது. நாடிநின்று எகிறியவராய் ஒரு கணம் மூர்ச்சையடைந்து,"யார் வைத்தது இவ்விடத்தில். எம் ஈசனின் பெயருள்ளதே எப்படி"என்று
சிந்தித்து,சிவனையே வேண்டி மூவாயிரமவர் சபையில் வைத்தார் இந்த அதிசய ஓலைச்சுவடியை.அக்கூட்டத்தில் ஒருவர் "ஈசனே வந்தாரா அவர்தான் வைத்துச்சென்றாரா" என்று கேட்டார்."ஐயா, அந்த ஓலைச்சுவடியினை யாராவது பிரித்துப்படியுங்கள்.ஈசன் என்ன அருளியுள்ளார் என்பதை அறிவோம்" என்றார்.
இறுதிமுடிவாய் மூவாயிரமவர் தலைவர் சிவனை மனதில் நினைத்து கைதொட்டு வணங்கி பிரித்துப்படித்தார்.அதில் திருவாசகமும், ஈசனை தலைவனாய் கொண்ட திருகோவைப்பதிகமும் இருந்தது.
இறுதி ஓலையில் "திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது"என்றிருந்தது.மீண்டும் திருவாதவூரரான மாணிக்கவாசகரைக்
கொண்டே ஈசன் எதையோ உலகிற்கு உணர்த்த முற்படுகிறார்
என்று எண்ணி, மாணிக்கவாசகரைத் தேடிப் புறப்பட்டனர்.காலை நேரத்தில் சிவ கைங்கரியம் முடித்து,சிவ சிந்தனையில் அமர்ந்திருந்த மாணிக்கவாசகருக்கு,இன்று தன் வாழ்வின் முக்கியமான நாள் என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது.
எல்லாம் ஈசனின் வழி நடப்பதே.எம் கையில் எதுவும் இல்லை என்று சிந்தனையில்,சிவத்தை நிறுத்தி சிவநாமத்தை இடைவிடாது கூறி தியானத்தில் அமர்ந்திருந்தவரிடம்,மூவாயிரவர் தலைவர் அருகில் வந்து "ஐயனே" என்ற பவ்யமாய் அழைத்தார்.எழுந்து வணக்கத்தைக் கூறி,"சொல்லுங்கள் ஐயா.இந்த அடியவனைத் தேடி அனைவரும்
வந்திருக்கிறீர்கள் வந்ததன் காரணம் என்ன?" என பணிவாய்க் கேட்டார் மாணிக்கவாசகர்."ஐயனே.இன்று கோவில் திறந்த அந்தணர்,கருவறையில் வாயிலில் இந்த சுவடி இருந்ததைப்பார்த்தும், அதில் எழுதியிருந்த எழுத்தைப் பார்த்தும் திடுக்கிட்டவராய் என்னிடம் வந்து கொடுத்தார்.
நானும் படித்தேன்.ஆனால் முழுவதும் அதன் அர்த்தம் விளங்கவில்லை.இந்த சுவடியின் கடைசியில் திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்றிருந்தது அதன் விளக்கம் பெற வந்தோம் ஐயனே" என்றார் மூவயிரமவரின் தலைவர்.ஐயா அந்த ஓலைச்சுவடியைத் தாருங்கள் எனக்கேட்டார் ஆவலாய் மாணிக்கவாசகர்.
ஓலைச்சுவடியை கண்ணில் கண்டதுமே,ஆனந்த பரவசத்தால் நீர்ததும்ப ஆரம்பித்தது.கையில் பெற்றார் 'இறையே எம் சிவனே' எனக் கூறியவரே,பிறந்த குழந்தையை பெற்றவன் தாங்குவது போல் தாங்கினார் கையில்.ஆனந்தத்திற்கு அளவில்லை.அவரின் பேரின்பம் பெருங்கடலாய் பெருக்கெடுத்தது.
சிவனை சிந்தையிலேயே நிலைத்தவருக்கு சற்று நேரம் உற்றுப்பார்த்து நின்றார்,அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது என்ற வார்த்தையை.தொட்டு தடவினார் இறையின் கையால் எழுதப்பட்ட தமிழை."அய்யனே.. அய்யனே...உன்னை எவ்வாறு போற்றுவேன்.இந்த அடியவனின் வாய்மொழியை உம் கையால் எழுதியதிற்கு என்ன தவம்,
எப்பிறவியில் செய்தேனோ, இப்பிறவியில் இப்பேறு பெறுவதற்கு" என்று நின்றவரின் முகத்தை அதிசயமாய் பார்த்து நின்றார்கள் மற்றவர்கள்.இறுதி ஓலையைப் பார்த்து பூரித்து நின்ற மாணிக்கவாசகருக்கு, ஈசனே உள்மனதிலிருந்து சொன்னார். "திருவாதவூராரே, நீர் எம் பாதம் புகும் காலம் வந்துவிட்டது.
நான் உமக்களித்த வாக்கை நிறைவேற்றும் காலமும் கனிந்து வந்துவிட்டது.நீ ஆலயத்தினுள் சிற்றம்பலம் வருவாய்.அங்கு எம் பாதம் புகுவாய் மாணிக்கவாசா" என்று சிவன் சிந்தையில்  உரைக்க,
மேலும் ஆனந்தம் பெருக்கெடுத்து உம் வாக்கை சிரமேற்கிறேன் ஈசனே என இறைஞ்சி,நினைவு திரும்பியவராய் வந்தவர்களைப்
பார்த்து,"ஐயா இதில் என்ன சந்தேகம்?" என அன்புடன் கேட்டார் மாணிக்கவாசகர் தலைவரைப் பார்த்து.பாட்டின் பொருள் வேண்டும் ஐயனே.நீரே படைத்தவர் விளக்கம் தாருங்கள்" என்றார் தலைவர்.
"சரி பொருள் தானே என்னுடன் வாருங்கள்" என்று அரைவேட்டியும், திருநீறும்,ருத்திராட்சம் அணிந்த கோலத்துடன் வாசகர்
முன்செல்ல,மற்றவர்கள் அவரை பின் தொடர,நேராய் சிற்றம்பலத்திற்கு சென்று நின்றார்.

"பாட்டின் பொருள்தானே வேண்டும்,அதோ அழகிய புன்முறுவலுடன் ஒற்றைக் காலால் உலகத்தைத் தாங்கி,அடியவருக்கு அடியவனாய் எளியவருக்கு எளியோனாய் அபயம் அளித்து,மூன்று உலகத்தையும் உருவாக்கி,அதை காத்தும் அழித்தும்
செயல் புரியம், இந்த பொன்னம்பலத்தான் ஆன இவர்தான் இந்த பாட்டிற்கெல்லாம் பொருள்"

அப்படி மாணிக்கவாசகர் கூறியதும்,பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து
சிவ மோட்சம் அடைந்தார் மாணிக்கவாசகர்.
சிவனே சித்தமாய் சிவன் மூலமே தீட்சை பெற்று, சிவ வாக்கை சிரமேற்று, சிவதலம் பல கண்டு, தில்லைநாதனின் பொற்பாதம் புகுந்தார் மாணிக்கவாசகர்.பார்த்தவர்கள் கண் பூரிப்பில் விரிந்தது. ஈசனின் இச்செயலைக் காணும் பேறுபெற்றதை எண்ணி ஆனந்தமடைந்தனர்.
அனைவரின் நாவும் மறவாது உச்சரித்தது,

"தென்னாடுடைய சிவனே போற்றி..
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

திருச்சிற்றம்பலம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

16 Jan
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்குத் தமிழில் அர்த்தம் சொல்வதென்றால்,"ஒரு மனிதரைப் பற்றியோ,ஒரு பொருளைப் பற்றியோ,ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம் அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், "கருத்து" எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியாகத்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமில்லை.கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை,அதற்குரிய தெளிவான அறிவு இல்லையென்றால். ஸ்டீவன் கோவி என்பவர் எழுதிய நூலில்,
ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார்.
ஒரு ஞாயிறு காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தனர்.சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர்.சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்தனர்.
Read 13 tweets
14 Jan
சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்.அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்."மகனே, உனக்கு ஒரு பெரிய சவால்.அதில் வெற்றி பெற்றால்,நீ தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகிவிடுவாய்.இன்று இரவு முழுவதும் நீ தனியாக,இந்தக் காட்டிலேயே இருக்கவேண்டும். Image
உன் கண்கள் கட்டப்படும்.ஆனாலும் நீ பயப்படக்கூடாது.வீட்டிற்கு ஓடிவந்து விடவும் கூடாது" என்றார்.சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.அவனது கண்களை தந்தைத் துணியால் இறுகக் கட்டினார்.பிறகு,தந்தை திரும்பிச்செல்லும் காலடி ஓசை, மெல்ல,மெல்ல மறைந்தது.
அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு,தூரத்தில் ஆந்தை கத்துவதும்,நரி ஊளையிடுவதும், நடுக்கத்தைக் கொடுத்தது.காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ,என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.மரங்கள் பேயாட்டம் ஆடின.
Read 10 tweets
13 Jan
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.  கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை.முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.நான் பிறகு வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
Read 7 tweets
8 Jan
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒருநாள் தெருவில் உலவிக் கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி."ஆஹா!இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே." என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார்.
இதை கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை அந்த முதியவரிடம் இருந்து பறித்துச்சென்றுவிட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லைக்கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டுசென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூடச் சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்துவிட்டார். இதை அறியாத அவரது மனைவி, பரணிலிருந்த பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கச்சென்றாள். பானையை கழுவும்போது உள்ளிருந்த கல்,
Read 12 tweets
7 Jan
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப்பார்த்த குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம், Image
எனக்கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனைப்பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள்.
உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக்கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும், நக்கலாக அவன் சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனை குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?” எனக்கூறி சிரித்தான்.
Read 6 tweets
6 Jan
மூதுரை - பிளவு 

உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா?அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா?வந்த கோபம் இன்னும் உள்ளதா?யோசித்துப் பாருங்கள்.

இந்த கல்லு இருக்கிறதே.அது ஒருமுறை உடைந்துவிட்டால்,பின் ஒட்டவே ஒட்டாது.என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும்.
பொன் இருக்கிறதே,அதில் கொஞ்சம் பிளவு வந்துவிட்டால் உருக்கி ஒட்ட வைத்துவிடலாம்.ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.

இந்தத் தண்ணீரின் மேல் அம்பைவிட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப்பொழுதில் மீண்டும் சேர்ந்துக்கொள்ளும். அம்புபட்ட தடம் கூட இருக்காது.
கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால்,வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள்.நமக்கு எப்படி மறுதீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள்.இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!