🙏🇮🇳திருப்பதி_பற்றிப்பலரும்_அறிந்திராத_செய்திகள்*
கண்டிப்பாக குடும்பம் முழுவதும் ஒன்றாக இருந்து படித்து காட்டுங்கள் வந்த அருமையான தகவல்

🙏🇮🇳1
*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*

🙏🇮🇳2
*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*

🙏🇮🇳3
*2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.*

🙏🇮🇳4
*3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.*

🙏🇮🇳5
*4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 🙏🇮🇳6
1803ஆம் ஆண்டு முதல்,பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில்தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.*

🙏🇮🇳7
*5.திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீபகாலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது.*

*6. திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.*

🙏🇮🇳8
*7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.*

🙏🇮🇳9
*9.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனிமாதம்,தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவு−செலவுக்கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. 🙏🇮🇳10
பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.*

🙏🇮🇳11
*10. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.*

🙏🇮🇳12
*11. சென்னை ஆளுநராக இருந்த சர்.தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும்,தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக்கட்டளை ஏற்பாடு செய்தார். 🙏🇮🇳13
இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோவில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.*

🙏🇮🇳14
*12. திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். 🙏🇮🇳15
இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்.*

🙏🇮🇳16
*12. ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. 🙏🇮🇳17
வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.*

🙏🇮🇳18
*13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.*

*14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.*

🙏🇮🇳19
*15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டுவிட்டன.*

🙏🇮🇳20
*16. ஏழுமலையான் கோவிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோவில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.*

*17. தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்.*

🙏🇮🇳21
*18. ஏழுமலையான் கோவிலில், மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப்படுபவை. 🙏🇮🇳22
இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்.*

🙏🇮🇳23
*19. திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.*

🙏🇮🇳24
*20. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. 🙏🇮🇳25
இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பரஞ்செய்து ஏலம் விடுகிறார்கள்.*

🙏🇮🇳26
*21. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.*

*22. ஏழுமலையான் கோவிலின் தலமரம் புளியமரம்.*

*23. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.*

🙏🇮🇳27
*24. ஏழுமலையான் கோவிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.*

🙏🇮🇳28
*25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோவிலே ஆகும். (எ.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.*

🙏🇮🇳29
*26. ஏழுமலையானுக்குத் தினசரி , ஒருமுறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்.*

*#ஸர்வம்_ஸ்ரீ_கிருஷ்ணார்ப்பணம்*

🙏🇮🇳30
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

🙏🇮🇳31
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

27 Jan
திமுக ஆட்சியில் 1060 விவசாயிகள் தற்கொலை: பா.ஜ., துணை தலைவர் காட்டம்

நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், என பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மள்ளங்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அவர் பேசியதாவது: ஈ.வெ.ரா., பிறந்தபின்னரே தமிழகம் உருவானது போல பாடத்திட்டங்களில் உள்ளது. நாயன்மார்கள், ராஜராஜ சோழன், பாண்டியர்கள் பற்றி இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் 2009-ல் மட்டும் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். நரேந்திரமோடி விவசாயிகளை தலைநிமிர வைத்திருக்கிறார்.
Read 6 tweets
27 Jan
500 கிலோ நகை மோசடி கும்பல் சொத்து வாங்கி குவித்தது அம்பலம்
சென்னை : 'முஸ்லிம்களுக்கு வட்டியில்லா நகை கடன் வழங்கப்படும்' என, 500 கிலோ தங்க நகைகள் சுருட்டிய வழக்கில் கைதாகியுள்ள கும்பல், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருப்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், சையது ரகுமான். இவரது சகோதரர், அனிசூர் ரகுமான். இவர்களுக்கு, வேலுார் மாவட்டம் ஆம்பூரிலும் வீடு உள்ளது. இவர்கள், சென்னை, மேற்கு மாம்பலம், ஈஸ்வரன் கோவில் தெருவில், 'ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்டு பேங்கர்ஸ்' என்ற, கடையை நடத்தி வந்தனர்.
Read 10 tweets
26 Jan
குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி; மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலானோர் எழுந்து நின்று கைத்தட்டினர்
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி அணிவகுத்து வந்த போது மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலோனோர் எழுந்து நின்று கைத்தட்டினர்.
நாட்டின் 72-வது குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரியரியம், தனித்துவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
Read 4 tweets
26 Jan
பிழைப்புக்காக சென்னையிலிருந்து தென்காசி பட்டணம் சென்றவர்.. ஸ்ரீதர் வேம்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
நகரங்களில் மட்டும்தான் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட வேண்டுமா... ஏன் கிராமங்களில் செயல் பட முடியாதா... அதற்கு விடையளித்த தமிழகத்து பில்கேட்ஸ்  ஸ்ரீதர் வேம்வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அருகேயுள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தான் ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இவர்.
Read 12 tweets
26 Jan
உஷாரய்யா உஷாரு! பணப்பரிவர்த்தனையின் போது போலி விளம்பரங்கள்அலட்சியமாக இருந்தால் காலியாகும் வங்கிக்கணக்கு
கோவை:'வாழ்த்துக்கள்! நீங்கள், ரூ.499 பணத்தை வென்றுள்ளீர்கள். இலவச ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டி பரிசை பெறுங்கள். பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு எடுத்துச் செல்ல, கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்'- இப்படித்தான் அந்த விளம்பரம், அந்த தொழிலதிபருக்கு பரிச்சயமானது.
யாராக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற்று பணம் வருகிறது என்றால், சபலம் ஏற்படத்தானே செய்யும். விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டியவருக்கு, 499 ரூபாய் வென்றதாக செய்தி வந்தது.
அதில் குறிப்பிட்டது போல், பட்டனை அழுத்திய பின் எந்த ஒரு தகவலும் வரவில்லை.
Read 9 tweets
26 Jan
தலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த சீனா

புதுடில்லி : கொரோனா நெருக்கடி காலத்தில், பிற நாடுகளுக்கு உதவிகளை செய்து, தலைமைப் பண்புடன் விளங்கும் இந்தியாவால், சர்வதேச அரங்கில், சீனா, தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதும், சில அமெரிக்க பத்திரிகைகள், 'இந்தியாவில் கொரோனாவால் பேரழிவு ஏற்படும்' என்ற செய்திகளை வெளியிட்டன. எனினும், அந்த செய்திகள் பொய்யாகின. நம் நாட்டில், வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் குறைந்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இதற்கிடையே, நம் நாட்டில், கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்துகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!