இலங்கையில் பா.ஜ., காலத்தின் கட்டாயம்

இலங்கையின் தமிழ் முன்னோடிகளில் ஒருவர், மறவன் புலவு சச்சிதானந்தன். காந்தளம் பதிப்பகத்தின் அதிபர். தமிழக தலைவர்கள் பலரோடும் தொடர்பில் இருப்பவர்.
பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், அந்த நாட்டில் கட்சி துவங்க போவதாக தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது...
கட்சிக்கு 'இரவல் பெயர் எதற்கு?'

இந்தியாவின் விடுதலை இயக்கமான, இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகளை பார்த்து, இங்கு சிங்களரும், தமிழரும் இணைந்து உருவாக்கியது தான், இலங்கை தேசிய காங்கிரஸ்.
ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில், காந்தியை வரவேற்ற அமைப்பு, யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ்.
பார்லிமென்ட் தேர்தல் ஒன்றை புறக்கணிக்குமாறு இயக்கம் நடத்தியதும், அதே காங்கிரஸ்.

ஜவகர்லால் நேரு இலங்கை வந்தபோது, மலையக தமிழருக்காக ஏற்படுத்திய அமைப்புக்கு சூட்டிய பெயர், இலங்கை இந்திய காங்கிரஸ்.
பின், ஜி.ஜி.பொன்னம்பலம், தமிழர்களுக்காக துவங்கிய தனி கட்சியின் பெயர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.ம.பொ.சிவஞானம் தமிழகத்தில் உருவாக்கிய தமிழரசு கழகத்தின் பெயரில், தமிழரசு கட்சியை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உருவாக்கினார். இலங்கை தி.மு.க.,வை, கொழும்பில் வாழ்ந்த மணவைத் தம்பி துவங்கினார்.
கொட்டடியில் வணிகராக இருந்த, ம.தி.மு.க., ராசா, அ.தி.மு.க.,வை உருவாக்கினார்.

இப்படி, இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை வைத்து, இலங்கையில் கட்சி துவங்குவது என்பது வாடிக்கை தான்.
இலங்கையில் இப்படி என்றால், பல நுாற்றாண்டுகளாகத் தமிழகத்தில் அறக்கட்டளைகள் பலவற்றை அமைத்தவர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள். அந்த அறக்கட்டளைகளுக்கு இலங்கைப் பெயர்களே சூட்டப்பட்டிருக்கின்றன.
இப்படி, தமிழகத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டுப் பெயர்களை விட்டுச் சென்ற சுவடுகள் ஏராளம்.
இலங்கை வரலாறு என்பது, ஒருவகையில் இந்தியப் பண்பாட்டு ஊடுருவலின் வரலாறு தான். இந்திய - அரசியல், சமூக, மருத்துவ அறிவியல், ஜோதிட மற்றும் வாழ்வியல் கூறுகளை, இலங்கைச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கியது வரலாறே.
இலங்கையில் சிவசேனை அமைந்ததும், இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி என அரசியல் கட்சி துவங்குவதும், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான, உலக மனித விழுமியப் படியெடுப்பு வரலாற்றின் பிம்பங்கள் தான்.
எதற்காக பாரதிய ஜனதா கட்சியை இலங்கையில் துவக்க வேண்டும்?

இது, காலத்தின் கட்டாயம். இலங்கையின் கண்டி, நுவரேலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத் தீவு, வவுனியா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள், சைவ இனத்தவர் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகள்.
கடந்த பல ஆண்டுகளாக, இந்தப் பகுதிகளில் ஊடுருவும் முகமதியர்களும், கிறிஸ்துவர்களும், சிங்களர்களும், அங்குள்ள தமிழர்களை மதம் மாற்றுகின்றனர்.

சைவ கோவில்களை தொடர்ச்சியாக அழித்து வருகின்றனர். சைவ பண்பாட்டு சின்னங்கள் பலவற்றையும் சிதைக்கின்றனர்.
சைவர்கள் வாழும் இடங்களை அடாவடியாக ஆக்கிரமிக்கின்றனர். மொத்தத்தில், சைவர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.

மலையக தமிழர்கள், காலம் காலமாக வாழ்ந்து வரும் பகுதிகள் முற்றிலுமாக அழிக்கப் படுகின்றன. இது, நீண்ட காலமாக நடந்து வருவது தான்.
தமிழர் விடுதலை போராட்டம் முடக்கப்பட்ட பின், அது வேகமாக நடக்கிறது. அதிபராக, பிரதமராக இருந்த அனைவரிடமும், தமிழர் பிரதிநிதிகள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். நானும் பல ஆண்டுகளாக சொல்லி பார்த்தேன். ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே, சிறிசேன என, பார்க்காத தலைவர்கள் இல்லை.
பிரச்னைகளை களைவோம் என்று வாக்குறுதி கொடுத்தனரே தவிர, எதுவும் செய்யவில்லை.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், சைவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு அரசியல் இயக்கம் தேவைப்படுகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில், ஹிந்துக்களுக்கும், சைவர்களுக்கும் பாதுகாப்பான இயக்கமாக இருப்பது, பாரதிய ஜனதா கட்சி தான்.

அதன் முன்னணி தலைவராக உள்ள இந்திய பிரதமர் மோடி, உலகம் முழுதும் உள்ள இந்தியர்களுக்கு மட்டுமல்ல; மொத்த சைவ சமூகத்தவருக்கும் பாதுகாவலராக இருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தாலும், மோடி, அமித் ஷாபோன்ற தலைவர்களாலும் மட்டுமே, இலங்கையில் சைவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை களைய முடியும். அதனால் தான், இங்கே பாரதிய ஜனதா கட்சியை துவங்கும் முடிவுக்கு வந்திருக்கிறோம்.
முஸ்லிம்கள் மீது அதீத பற்று இருப்பதாக காட்டிக் கொள்ளும், ஸஹ்ரான் என்ற தலைவர், சைவ மதத்துக்கு எதிராக வேகமாக செயல்படுகிறார். அவர் தான், முஸ்லிம்களை சைவர்களுக்கு எதிராக துாண்டி விடுகிறார்.
தமிழகத்தில் நடந்த ஒரு முஸ்லிம் மாநாட்டுக்குச் சென்று வந்த பின், அவரது செயல்பாடுகள் வேகமாகி இருக்கின்றன.

அவர், தமிழகம் வந்த போது, அங்கிருக்கும் அரசும், உளவுத்துறையும் அவரை கண்டு கொள்ளாமல் விட்டன. இலங்கை திரும்பியவர், இங்கும் தலைமறைவாக இருந்து தான் செயல்படுகிறார்.
அதேபோல, முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
'அமைச்சர் பதவியை முழுமையாக பயன்படுத்தி, சைவர்களை ஒடுக்கி இருக்கிறேன்; அவர்களை, ஓட வைத்திருக்கிறேன்' என்று.
விரைவில் இந்தியா வந்து, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறோம். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையால், சைவர்கள் பிரச்னைக்கு விடிவு கிடைக்கும் என, நம்புகிறோம்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

23 Feb
முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்:

* ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.
* திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
* கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களன் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.
Read 10 tweets
23 Feb
👆🏼 ** இராமசாமி நாயக்கர் ஹரிஜன மக்களுக்காக போராடியவர்அல்ல. உண்மையில் ஹரிஜன மக்களின் தந்தை  மதுரை வைத்தியநாத ஐயர் தான். Image
தமிழ்நாட்டின் திராவிட கட்சிக்களால் மறைக்கப்பட்ட அல்லது மறைக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகியும் ஹரிஐன மக்களின் தந்தை என்றும் அழைக்கப்பட்ட மதுரை வைத்யநாத ஐயர். ...தியாகி கக்கன் இவருடைய சீடர்.
மொழிப்போர் தியாகிகள் என இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வேடிக்கை பார்க்கும் போது அடிபட்டு இறந்தவர்களை ஆண்டுக்கு ஒரு முறை நினைவில் கொள்கிறார்கள் ..இவர் என் ஜாதி என தேசியத் தலைவர்களை ஸாதி வட்டத்தில் அந்த அந்த ஜாதியினர் தத்தெடுத்து ஆண்டுக்கு ஒருமுறை குருபூஜை அன்று நினைவு கூறுகின்றனர்.
Read 22 tweets
23 Feb
இந்தியா அதனை சத்தமில்லாமல் சாதித்து காட்டியிருக்கிறது விவரிக்கிறது இந்த தொகுப்பு

உலக வரலாற்றில் முதன் முறையாக ராணுவ துருப்புக்களை போருக்கான ஆயுதங்களுடன் முழுமையாக களம் இறக்கி சண்டை நடைபெறாமல் வெற்றி பெறுவது என்பது அசாதாரணமானது. அது இந்திய வரலாற்றில் நடந்துள்ளது Image
இந்தியா அண்டை நாடுகளுடன் கூட்டாக களம் இறங்கவில்லை. அத்துமீறல் இல்லை. ரத்தக்களறி இல்லை அட இவ்வளவு ஏன் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை.

ஆனாலும் உலகின் இரண்டு பெரிய ராணுவத்தினர் களம் இறங்கிய தளத்தில் சீதோஷ்ண நிலை மனிதர்கள் வாழும் சூழலும் இல்லை. பனி அளவுக்கு அதிகமாக இருந்தது
ஒரு வாரம், இரண்டு வார முற்றிகை அல்ல. 2 வருட முற்றுகை.. சீனா ராணுவம் 3 முறை போர் பயிற்சி செய்தது, இருந்தும் அசரவில்லை இந்தியா. அமைதி மட்டுமே காத்தது

இங்கே தான் ஒரு சம்பவம் நடந்தது..

இந்திய ராணுவத்தினர் தொடை அளவு பனியில் கபடி விளையாடிக் கொண்டு இருந்தனர்.
Read 20 tweets
23 Feb
காங்கிரஸ் எம்எல்ஏவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ரூ.450 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல்
மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ நிலே தாகாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 450 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அன்று பெதுல் மற்றும் சத்னா மாவட்டங்களில் உள்ள 22 இடங்கள், மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
Read 5 tweets
23 Feb
கும்பலாக சுற்றுவோம் தொக்கா மாட்டிக்கிட்டா அய்யோ அம்மான்னு கத்துவோம்..! கிராம புள்ளிங்கோஸ் சோகங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு மாணவனை முட்டிபோடவைத்து அடித்து உதைத்து அதனை முக நூலில் பதிவிட்ட மாணவனை எதிர் தரப்பு பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பலாக சுத்துவதும், எதிர் தரப்புகிட்ட சிக்கிகிட்ட அய்யோ அம்மான்னு கத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கும் நகர்புறத்து புள்ளிங்கோக்களுக்கு எந்த விதத்திலும் குறையாமல் கிராமத்திலும் வீண் வம்பு இழுக்கும் முக்கால் பேண்ட் புள்ளீங்கோஸ் பெருகிவிட்டனர்..!
Read 14 tweets
23 Feb
குஜராத் உள்ளாட்சி தேர்தல்: 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், அங்குள்ள 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.
குஜராத்தில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. அதில், ஆமதாபாத் மாநகராட்சியில் 192 வார்டுகள், சூரத் மாநகராட்சியில் 120 வார்டுகள், வதோதரா மாநகராட்சியில் 76 வார்டுகள், ராஜ்கோட் மாநகராட்சியில் 72 வார்டுகள், பவ்நகர் மாநகராட்சியில் 52 வார்டுகள், ஜாம்நகரில் 64 வார்டுகள் உள்ளன.
கடந்த 2015 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆமதாபாத்தில் பா.ஜ., -143; காங்கிரஸ் -48 வார்டுகளிலும், சூரத்தில் பா.ஜ.,-80; காங்கிரஸ் - 36 வார்டுகளிலும், வதோதராவில் பா.ஜ.,-58; காங்கிரஸ் - 14 வார்டுகளிலும், ராஜ்கோட்டில் -பா.ஜ.,38; காங்கிரஸ் -34 வார்டுகளிலும்;
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!