Flicker Fusion Rate என்றால் என்ன? எந்த விலங்கிற்கு இது அதிகமாக உள்ளது?
"Flicker Fusion Rate" என்பது உயிரினங்களின் பார்வை சார்ந்த ஒரு அளவீடு.
வெளிச்சம் இருந்தால் தான் நாம் ஒன்றை பார்க்க முடியும், நம் கண்களால் ஒரு அழகான மரத்தை பார்க்கிறோம் என்றால் (1/9)
அது எவ்வாறு சாத்தியமாகிறது, அந்த மரத்தை அடைந்த வெளிச்சம், சிதறி பிரதிபலிப்பதை தான், நாம் மரமாக பார்க்கிறோம். எனவே, அந்த வெளிச்சம் நம் கண்களை அடைந்து, மின் சமிக்ஞைகளாக நம் மூளையை அடைகிறது. நம் மூளையில் ஏற்கனவே மரங்களை பற்றிய சேமித்த தகவல்கள் இருப்பதால், (2/9)
அது மரம் என உணர்ந்துகொள்கிறோம்.
இன்னொரு பரிமாணமாக, நகரும் ஒன்றை நாம் பார்க்கிறோம் என்றால், அதை நாம் பார்ப்பது எவ்வாறு சாத்தியமாகிறது. அதுவும் படங்கள் வழியாக தான்!
நாம் திரைப்படம்/காணொளியை காண்கிறோம் என்றால், (3/9)
அதை படமாக்குவதில் ஒரு தொழிற்நுட்ப பதம் இருக்கும், "Frames per second", உதாரணமாக, 24 FPS என்றால், ஒரு நொடிக்கு 24 படங்களை அந்த திரைப்படம்/காணொளி நமக்கு காட்டும், அந்த 24 படங்களை மிகச்சிறிய நேர இடைவேளையில் பார்ப்பதால் தான், அவை நகரும் படங்களாக நமக்குத் தெரிகிறது. (4/9)
ஒரு நொடிக்கு 24 படங்களை நம்மால் காண முடிகிறது, ஒருவேளை ஒரு நொடிக்கு 200 படங்களை கொண்டிருக்கும் காணொளியாக இருந்தால், மனிதர்களால் தெளிவாக காண முடியாது. அதற்கு காரணம், மனிதர்களின் Flicker Fusion Rate அல்லது Critical Flicker-Fusion Frequency(CFF), 30 - 60 Hz தான். (5/9)
Flicker Fusion Rate-ஐ, மிகச் சுருக்கமாக விளக்கினால், அதிவேகமாக மாறும் ஒளியின் அலைநீளங்கள், மற்றும் விரைவாக நகர்பவை, ஆகியவற்றை கண்டு, அவற்றை தெளிவாக அடையாளம் காண முடிகின்ற பொழுது, அவை நமக்கு நிலையான படங்களாக தெரியும், அந்த குறிப்பிட்ட அளவீடு தான் CFF. (6/9)
மனிதர்களின் CFF, 30 - 60 Hz என்பதால், ஒரு நொடிக்கு 30 - 60 படங்கள் அல்லது 30 - 60 Hz அலைநீள வேறுபாடு கொண்ட படங்களை தான், மனிதர்களால் தெளிவாக காண முடியும். அதற்கு மேலுள்ளவற்றை, மனிதர்களால் கண்களுக்கு தெளிவாக புலப்படாது.
மாடப்புறாவின் (Pigeon) CFF 100 Hz, (7/9)
மேலும் சில வகை பறவைகளுக்கும் இந்த மதிப்பு 100-க்கும் அதிகம் தான்.
உயிரினங்களில் அதிகமான CFF கொண்டது, ஈக்கள் தான், அவற்றின் CFF 250 Hz. நாம் வேகமாக நகரும் ஒன்றை காணும் பொழுது, ஈக்களுக்கு அது குறைந்த வேகத்தில் தெரியும், எனவே அச்சுறுத்தல்களை எளிதாக கண்டு தப்பிவிடும். (8/9)
இந்த காரணத்தினால் தான், ஈக்களை பிடிக்க நினைப்பது மனிதர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். (9/9)
முடிந்த அளவுக்கு எளிதாகத்
தந்திருப்பதாய் நம்புகிறேன்.
சில பயனுள்ள Google செயலிகள் குறித்தும் அதனை பற்றிய சில தகவல்களுடன் பார்ப்போம்:- 👇👇
1.Google Assistant : இந்தியர்களிடம் மாட்டிக்கொண்டு ரொம்பவே சிரமப்படும் ஒரு செயலி. அதிகம் பேர் லவ் புரபோஷ் செய்த ஒரு பெண் (Sorry செயலி). (1/Cont)
ஏழைகளுக்கு ஏற்ற எள்ளு உருண்ட மாதிரி iphone சிரி இல்லாதவர்களுக்கு Google Assistant. கண் பார்வை அற்றவர்கள் சிலர் உபயோகிப்பதை பார்த்து இருக்கிறேன். (2/Cont)
LTE Long Term Evolution LTE என்பதை 4G என்றும் கூறலாம். 3G காட்டிலும் 10 மடங்கு இன்டர்நெட் ஸ்பீட் கொண்டது. ஆனால், இதில் உள்ள ஓர் பின்னடைவு நம் இன்டர்நெட் உபயோகிக்கும்போது யாராவது voice call செய்தால், (1/9)
இன்டர்நெட் இணைப்பு தானாக துண்டித்து விடும் அல்லது தடங்கல் ஏற்படும்.
இதனை Overcome செய்ய வந்ததே VOLTE. VOLTE Voice Over Long Term Evolution LTE இல் உள்ளதை போலவே இதிலும் 4G நெட்ஒர்க்கை பயன்படுத்தலாம். மற்றும் அதில் இல்லாத மற்றும் ஒன்றான இன்டர்நெட் வசதியையும், (2/9)
வருகின்ற Calls-களையும் ஒரே நேரத்தில் எவ்வித இடையூறும் இன்றி, பயன்படுத்தி கொள்ளலாம். (Capable of managing and improving high-speed voice and data services over 4G LTE networks) இந்த ஒரு வேறுபாட்டினை சார்ந்தே மற்றவைகளும் அமைந்திருக்கும். (3/9)
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா(93) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தா இன்று அதிகாலையில் உயிரிழந்தார். சாந்தா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.(1/5)
தன் வாழ்நாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு வி.சாந்தா அர்ப்பணித்தவர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றி ருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர்(2/5)
அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் (3/5)
தேசிங்கு ராஜா அரசவையில் மூச்சை நிறுத்தி வீர மரணம் அடைந்த தமிழச்சி கதை தெரியுமா?
'முதல் நாள் ஒரு கையை வெட்டுங்கள், மறுநாள் மற்றொரு கை, அடுத்து மார்பு, அதன் பின் முதுகு சதையை கிழி, பிறகு மூக்கறு, பின்னர் காதுகள், இடையிடையே வெந்நீரை ஊற்று, (1/15)
பின் குதிகாலை கொளுத்துக'இப்படி ஒரு தீர்ப்பைச் சொன்னது செஞ்சியை ஆண்ட விரத்திற்கும் தீரத்திற்கும் பேர் போன ராஜா தேசிங்கு...
'மன்னராட்சியில் குற்றவாளிகளுக்கு கொடும் தண்டனை கொடுப்பது வழக்கம்தானே..!' என்கிறீர்களா..! அதுதான் இல்லை... டெல்லியில் பாதுஷா ஷா ஆலம் ஆட்சி (2/15)
அப்போது ஆற்காடு நவாப்பின் கட்டுபாட்டில் செஞ்சி. செஞ்சி பாளையப்பட்டின் தலைவன் தேசிங்கு. இவர்தான் இப்போதும் ராஜா தேசிங்கு என அழைக்கப்படுகிறார்.
இவரின் வீரத்தைப்பற்றி நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இவரின் ஆட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்...? அதைச் சொல்கிறது (3/15)
பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?
இந்த பங்கு மார்க்கெட் தொழிலில் என்ன செய்யலாம் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்....
1. அத்தியாவசிய தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை கொண்டு இங்கே முதலீடு செய்யாதீர்கள்..(1/11)
2. நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் பணம் சில பல நாட்களுக்கு உங்களிடம் சும்மாவேதான் இருக்கிறது (surplus fund) என்றால் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம்.
3. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஓரளவுக்கு நியாயமான லாபத்தை (resonable returns) எதிர்பாருங்கள்..(2/11)
சந்தைக்குள் வரும் போதே குறுகிய காலத்தில் வாரன் பஃப்பட்டையும், ராகேஷ் ஜூன் ஜூன்வாலவையும் போல ஆகிவிடலாம் என்று கற்பனை கட்டுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு வாருங்கள்..
4. முதலீடு செய்யப்படும் பணத்தில் இருந்து மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகை வரும் என்று (3/11)