#திராவிடம்னாஎன்ன ? #ஜஸ்டிஸ்கட்சி #திராவிட வரலாறு., ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றிய காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அன்று தமிழர்களை தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களுக்கு இங்கு லண்டன் போல ஆட்சி/நிர்வாகம் செய்ய பல (1/n)
குமாஸ்தாக்கள், கிளர்க்குகள், வக்கீல்கள் மற்றும் கலெக்டர்கள் தேவைப்பட்டனர். அன்று ஆட்சி அதிகாரமோ, நிலபுலன்களோ அற்ற வேத மந்திரங்கள் மட்டுமே ஓதி, கோவில்களில் பூஜை செய்து வாழ்க்கையை ஓட்டிய பிராமணர்கள், நிற்க.,நீங்கள் தில்லை தீட்சதர்களை போல செல்வாக்கு கொண்டவர்களைக் குறிப்படுவது (2/n)
கேட்கிறது., அனைத்திற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு, அது போல தான் அவர்களுமே மற்றபடி 90% பிராமணர்கள் அன்றாடங்காய்ச்சிகள் தான். தன் தேவைக்கு ஆங்கிலேயன் உருவாக்கின பல புதிய வேலை வாய்ப்புகள் பிராமணர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. உணவற்று தங்கள் பிள்ளைகள் இறப்பதைக் காட்டிலும் (3/n)
ஆங்கிலேயனுங்கு வேலை செய்வது பரவாயில்லையன அவர்கள் முடிவெடுத்து அவனின் ஆங்கில கல்வியையும் கற்று அந்த வேலைவாய்ப்புகளில் அமர்ந்தனர். கிட்டத்தட்ட அனைத்து வேலைகளிலும் அவர்களே இருந்தனர். அதுவரை ஆண்டபரம்பரைகளாக இருந்த தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள ஜாதியினர் இப்போது தங்களை நம்பி (4/n)
முன்பிருந்த பிராமணர்களிடம் சரிசமமாக இருக்க நேரிட்டது. இங்கு தான் பிராமண வெறுப்பு தொடங்குகிறது, தங்களை நம்பி இருந்தவன் இன்று தம்மிடமே அதிகாரமும் நிர்வாகமும் செய்வதா ?என்கிற மனோவியாதியின் வெளிப்பாடே பிராமண வெறுப்பு. பின்பு இவர்களும் ஆங்கிலம் கற்கலாயினர் இருப்பினும் (5/n)
பல்லாயிரம் வருடங்களாக மந்திரம் கற்று ஞாபகத்திறனை வளர்த்து வைத்திருந்த பிராமணர்களுக்கு இவர்களால் ‘டப்’ கொடுக்க முடியவில்லை, நூறு வேலையிடங்களில் தொண்ணுறு இடங்களில் பிராமணர்கள் தேர்வானார்கள், இங்கு தான் இட ஒதுக்கீட்டிற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன இதன் தொடர்ச்சியாக (6/n)
1916ல் நடந்த மெட்ராஸ் பிரசிடண்சி தேர்தலில் நாயர், செட்டி, ரெட்டி வேட்பாளர்கள் பிராமணர்களிடம் தோற்றனர். இதன் எதிரொலியாக 1916 தேர்தலுக்குப் பின் வேப்பேரியில் இருந்த எத்திராஜலு வீட்டில் நாயர், நாயுடு, ராவ், ரெட்டி, பிள்ளை, ஆற்காடு முதலியார் சமூகப் பிரபலங்கள் மற்றும் (7/n)
உஸ்மான் சஹிப் மற்றும் பாட்ரோ கூடி விவாதித்து தங்களுக்கென்று வலிமையான ஒரு சங்கம் வேண்டும் அப்போது தான் ஆங்கிலேயனின் அதிகாரங்கள் தங்களுக்கும் கிடைக்கச் செய்வான் என முடிவெடுத்து ஒருங்கிணைந்தனர். பின் 1916ல் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ யை தொடங்கினர் (8/n)
இதன் முதல் பிராமண எதிர்ப்பு மாநாட்டை கோயம்புத்தூரில் 1917ல் நடத்தினர். பிரித்தாளும் வித்தைகளைக் கரைத்துக்குடித்த ஆங்கிலேயன் இவர்களின் பசிக்கு மாக்ஸ் முல்லரின் ‘ஆரிய-திராவிட இனவாதம்’ என்கிற கற்பனை கதையை இரையாகப் போட்டான். இவர்களும் அதை கப்பென்று பிடித்துக் கொண்டு (9/n)
அதைப் பற்றி இல்லாத ஆதாரங்களையும், வரலாறுகளையும் மக்கள் மனதில் வன்மத்தோடு பதித்தனர். அதை நம் மக்களும் வேறு ஏதும் வழியின்றி முழுதாய் நம்பினர் இதன் நீட்சியாக இவர்கள் ஆங்கிலேய அடிமைகளாயனர் ‘வெள்ளையனே வெளியேரு’ போன்ற நாடு தழுவிய சுதந்திர போராட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்த்தனர் (10/n)
இவர்களின் வன்மப் பிரசரசாரங்களுக்காக பல பத்திரிக்கைகளைத் தொடங்கி மக்களுக்கு பிராமண எதிர்ப்பு வன்மத்தை மட்டுமே கற்பித்து 1920ல் மெட்ராஸ் பிரசிடன்சியில் ஆட்சியைப் பிடித்தனர், பிராமணர்களை வென்றனர். அத்தோடு இவர்கள் பிராமண எதிர்ப்பை கைவிட்டிருக்கலாம் ஆனால் சுகம் கண்ட இவர்களால் (11/n)
அப்படி இருக்க முடியவில்லை. ஈவேராவை காங்கிரஸில் இருந்து நாயுடுகள் ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு கூப்பிட்டு வந்தார்கள். ஈவேராவின் வருகைக்குப் பின் இவர்கள் உருவாக்கிய பிராமண எதிர்ப்பு பூதம் மிக மிக உக்கிரமாக உருவெடுத்து ஈவேராவின் கைகளுக்குச் சென்றது. அதை இவர்களால் தடுக்க முடியவில்லை (12/n)
தனக்கு இவர்களால் என்றும் தொல்லையிருக்கும் அதுபோக ஆங்கிலேயன் கொடுக்கும் அன்பையும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஈவேரா தேர்தல் வழக்கில் இருந்து ஜஸ்டிஸ் பார்ட்டியை பிரித்து பின் கொள்கை பேசும் இயக்கமாக (13/n)
மாற்றினான் இதற்கு வேறொரு காரணமும் உண்டு அது இந்திய சுதந்திர போராட்டம் பெருவேகமெடுத்தது, ஆங்கிலேய அடிமைகளான இவர்களை மக்கள் தேர்தல்களில் புறக்கணிக்கத் தொடங்கினர் ஆகையால் புறமுகுதிட்டு ஓடினான் ஈவேரா. பூதம் இப்போது ஈவேராவின் கையில் மிக பயங்கரமாக வளர்ந்தது (14/n)
பிராமண எதிர்ப்பு தேர்தல்களில் சற்று எதிர்மறையாக பிரதிபலிக்கவே அதை இந்து மத எதிர்ப்பு + பிரிவினைவாத திராவிட நாடு என்ற கோட்டில் நிறுத்தி ஆங்கிலேயன் கொடுத்த பணத்திற்கு ஏதுவாக இயக்கம் நடத்தினான். இக்காலகட்டத்தில் தான் நல்லறிவு கொண்ட நன்மாணக்கர் பலரும் (அண்ணத்துரை போல) (15/n)
இவனது பேச்சில் ஈர்க்கப்பட்டு ஜஸ்டிஸில் இணைந்தனர், தன் பின்னால் சக்தி கொண்ட மாணவர் கூட்டம் இருப்பதை உணர்ந்த ஈவேரா மற்ற தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு 1944ல் நடந்த மாநாட்டில் ‘#திராவிடர் கழகம்’ என்று பெயரிட்டு தேர்தல் முறையில் இருந்து விலகி காசு பார்க்கும் கொள்கை இயக்கமாக (16/n)
மட்டும் நடத்தினான். பின்பு ஜின்னாவிற்கு கடிதம் எழுதி திராவிட நாடு கோரிக்கைக்கு ஆட்கள் சேர்க்கவும், இந்து மத வெறுப்பை விதைத்து கலாச்சார முறிவை ஏற்படுத்தி மதமாற்றம் ஏற்படுத்தும் முயற்சிகளைத் துவக்கினான். 1947ல் இந்திய சுதந்திரத்தை கருப்பு தினமாக அனுசரித்து மெம்மேலும் தனது (17/n)
இந்திய தேச துரோகத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றான். இந்த இடத்தில் தான் அண்ணத்துரை சுதாரித்தான், தனக்கு இன்னும் வந்துள்ளது பலமாக ஒரு கூட்டமுள்ளது, மக்களைக் கவர எதுகை மோனைப் பேச்சுள்ளது எனவே இனியும் தாமதிக்காமல் தலைவராக வேண்டுமென எண்ணினான். ஈவேரா மணியம்மையை திருமணம் (18/n)
செய்து கல்தா கொடுக்கவே கோபமாக வெளியேறி ‘ #திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தேர்தல் இயக்கம் கண்டான். அப்போது நேரு ராஜாஜியின் #இந்தி மொழி கல்வித்திட்டம் வரவே #திமுக விற்கு ‘ஆக்சிஜன்’ கொடுத்தனர். அண்ணத்துரைக்கு #கருணாநிதி யும் #எம்ஜியார் கிடைக்கவே 1967ல் சுமார் 33 வருடங்கள் (19/n)
கழித்து #ஜஸ்டிஸ்பார்ட்டி -> #திராவிடர்கழகம் -> #திமுக என உருமாறிய கொரொனாவாக வந்து மீண்டும் வென்றது இந்த வெறுப்பு அரசியல். இந்த கேடுகெட்ட வரலாற்றில் புரிவது ஒன்றே 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தை பெரும் பலம் கொண்ட இந்துத் தமிழன் ஆளவில்லையென்பதே (20/n)
இன்று இந்துவாக நாம் ஒன்றிணைவது எவ்வளவு முக்கியமோ அதுபோல போலித் தமிழராய் இருந்து தமிழருக்கு வெறும் துரோகத்தை மட்டுமே செய்த இந்த திமுகவை தோலுரிப்பதும் மிக மிக முக்கியமான காரியம். இனிமேலும் ஒருவான் தான் திராவிட அரசியலை ஆதரிப்பவன் எனச்சொல்ல வெட்கப்பட (21/n)
வேண்டும். இதைச் செய்ய தூய தேசிய சிந்தனை கொண்ட இம்மண்ணின் சமயமான இந்துமத தமிழரால் மட்டுமே முடியும்., #முறியடிப்போம்_திராவிடத்தை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🔱 Pulikeshi 🔱

🔱 Pulikeshi 🔱 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!