கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று சொல்லுவதே ஒரு மந்திரம் தான். அதில் #மீனாக்ஷி தேவியின் சரித்திரம் அற்புதமானது. மலயத்வஜ பாண்டிய மன்னர் மதுரையில் பிள்ளை வரம் வேண்டி அஸ்வமேத யாகம் செய்கிறார். இந்திரன் வந்து நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய் அந்த அம்பாளே உனக்கு வந்து
பிறப்பாள் என்று கூறுகிறார். மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலை போன பிறவியில் அம்பாளே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டியவள். அதற்கேற்ப மன்னரும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்கிறார். அந்த யாக குண்டத்தில் இருந்து மூணு வயது குழந்தையாக, அம்பாள் பச்சை நிறத்தில் வெளி
வருகிறாள். காஞ்சனமாலை எடுத்து அணைத்து பால் கொடுக்கறாள். குழந்தைக்கு ஆச்சரியமாக மூன்று ஸ்தனங்கள் உள்ளன! மன்னரும் சுந்தரேச பெருமானிடம் போய் வேண்டியவுடன் ‘நீ வளர்த்துக் கொண்டு வா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறார் இறைவன். அவ்வாறே
மலையத்வஜ பாண்டியன் வளர்த்துக் கொண்டு வருகிறார், பின் ஒரு நாள் அவருக்குக் கைலாச பிராப்தி கிடைத்து விடுகிறது. அதன் பின் காஞ்சனமாலை வளர்த்து வருகிறாள். மீனாக்ஷி, ஆண்மகன்களைக் காட்டிலும் மிகுந்த வீரத்தோட இருக்கிறார். மீனாக்ஷியே ராணியாக அரசாள்கிறார். தாய் அவளைத் திருமணம் செய்துகொள்ள
வற்புறுத்திய போது நான் திக்விஜயம் செய்யப் போகிறேன் எனக் கூறி உலகத்தில் உள்ள எல்லா தேசங்களையும் பெரும்படை எடுத்துக் கொண்டு போய் வெற்றியுடன் திரும்புகிறார். இந்திராதி தேவர்களையும் ஜெயித்து பின் கைலாசம் வருகிறார். அவர் வீரத்தை கண்டு பூதகணங்கள், நந்தி பகவான் அனைவரும் நடுங்குகின்றனர்
அப்பொழுது பரமேஸ்வரன் தானே போர் புரிய வருகிறார். ஸ்வாமியை பார்த்தவுடனே வீரம் காதலாக மாறிவிடுகிறது. அம்பாளுக்கு வெட்கம் வந்து குனிந்து கொள்கிறார். மூன்றாவது ஸ்தனம் மறைந்து விடுகிறது! மதுரைக்கு திரும்பி வந்தவுடனே, பரமேஸ்வரன் வந்து பெண் கேட்கிறார். உலகங்களையும் வென்று, பரமேஸ்வரனுடைய
மனத்தையும் கவர்ந்து கொண்டு வந்திருக்கிறாள் மகள் என்று காஞ்சனமாலை, சுந்தரேஸ்வரருக்கும் மீனாக்ஷிக்கும் திருமணம் செய்து வைத்து சுந்தரேஸ்வரரை அங்கேயே இருக்க சொல்கிறாள். அப்படிஒரு அழகான வரலாறு. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் பிரம்மாண்டமான கோவில். கோவிலுக்கே நிறைய உத்சவங்கள்.‘சித்திரை
உத்சவம்’ பிரமாதமாக நடக்கும். மாணிக்கவாசகருக்கு ‘பிட்டுக்கு மண் சுமந்த உத்சவம்’, இன்னொரு பெரிய உத்சவம். ஊரே கோவில் அங்கே! வீதிகளின் பெயர்களும் அழகு தமிழில், ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, தமிழ் வளர்த்த, சங்கம் கண்ட நகரம் மதுரை நகரம்! அந்த மதுரையில் மீனாக்ஷி ஆட்சி செய்து
கொண்டிருக்கிறார். ஹிமாச்சலத்தில் பர்வதகுமாரி’யாக, தெற்கே ‘கன்யாகுமரி’யாக கிழக்கே ‘காமக்யா’வாக, நம் பாரத தேசம் முழுவதிலும் சக்தி வழிபாடு எங்கும் நடந்துள்ளது! அப்படிப்பட்ட சக்தி தேவியான #மீனாட்சி யின் மேல் #ஆதிசங்கரர் #மீனாக்ஷிபஞ்சரத்னம் என்று அற்புதமான ஒரு ஸ்லோகம் இயற்றியுள்ளார்.
அதன் முதல் ஸ்லோகம்

உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்
பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம் ।
விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் || 1 ||
“உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” – கோடி சூர்யப் பிரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை – எல்லா மஹான்களும் அம்பாளின் தரிசனம் கிடைத்தவுடன் ஒளி தரிசனத்தை தான் முதலில் பெறுகின்றனர். ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று தான் அபிராமி பட்டரும் தொடங்கினார்.
“ப்ரணதோ3ஸ்மி ஸந்ததம் அஹம்”!
‘அஹம்‘ –நான், ‘ஸந்ததம்‘– இடையறாது, ‘ப்ரணதோ3ஸ்மி‘–வணங்குகிறேன். ‘மீனாக்ஷி’ என்கிற பெயருக்கே மீன் போன்ற நீண்ட கண்கள் என்று பொருள். தமிழில் அங்கயற்கண்ணி, ‘கயல்’ என்றால் மீன்,‘அம்’ ‘கயற்’ கண்ணி’, அழகான மீன்போன்ற கண்கள், என்பது மீனாக்ஷி! மீனின் கண்கள் மூடவே மூடாது. அந்த மாதிரி,
மீனாக்ஷி ‘காருண்ய வாராம் நிதிம்‘ ‘கருணை கடல் என்கிறார். ‘கண்ணை இமைக்காமல் தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். மீன் முட்டைய கண்ணால பார்த்தே பொரித்து விடும்! அது போல மீனாக்ஷி நயன தீக்ஷைனால ஞானத்தைக் கொடுப்பவள். அவர் ராணி அல்லவா, மஹாராஜ்நீ, “கேயூரஹாரோஜ்ஜ்வலாம்” –
கைவளையல்கள், தோள்வளையல்கள் கழுத்தில் மாலைகள் அனைத்தும் ஜொலிக்கின்றன.
“பி³ம்போ³ஷ்டீ²ம்” – கோவைப்பழம் போன்ற உதடு.
“ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம்” – புன்னகையோடு கூடிய அழகான பல்வரிசை.
“பீதாம்ப³ராலங்க்ருʼதாம்” – தங்கப் பட்டாடை அணிந்து கொண்டிருக்கிறாள். மஹாராஜ்நீ! ராஜராஜேஸ்வரி,
“விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்” மீனாக்ஷி தேவியை விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான எல்லா தேவர்களும் வணங்குகிறார்கள். “தத்வஸ்வரூபாம்”–மற்றதெல்லாம் சித்தாந்தங்கள், கொள்கைகள். அத்வைதம் தான் தத்வம். அந்த தத்வஸ்வருபமா விளங்கக்கூடிய பரம்பொருள் காமாக்ஷி, மீனாக்ஷ
“ஶிவாம்”–மங்கள வடிவானவள். இந்த மீனாக்ஷியை, கருணைக்கடலான இந்த மீனாக்ஷியை, “ஸந்ததம்”–இடையறாது, “அஹம் ப்ரணதோ3ஸ்மி”–நான் வணங்குகிறேன்.

valmikiramayanam.in/?p=3725
@threader_app please compile
பிழை திருத்தம்- மாணிக்கவாசகருக்காக பிட்டுக்கு மண் சுமக்கவில்லை. வந்தி என்ற பிட்டு விற்கும் மூதாட்டி தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில மண்ணை சுமந்து போட்டுக்கொண்டிருந்தார். முதுமையின் தள்ளாமையால்  அவரால் மண்ணை சுமக்க முடியவில்லை.எனவே கடவுளிடம் வந்தி தன் நிலை குறித்து முறையிட்டார்
வந்தியின் நிலையை கண்ட ஈசன்  ஒரு கூலியாள் வடிவில் அங்கே தோன்றினார். கிழவியிடம் மண்ணை சுமக்கிறேன். அதற்கு  பதிலாக நீ எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார். என்னிடம்  கூலியாக கொடுக்க  என்ன இருக்கிறது? உன் பசி போக்க இந்த பிட்டினை தருகிறேன். என்று கூறினார். அதற்கு இசைந்த ஈசன்
புட்டை வாங்கி உண்டுவிட்டு வேலை செத்தாமல் உண்ட களைப்பில் உறங்கிவிட்டார். மேறொஆர்வை பார்க்க வந்த அரசன் வேலை செய்யாமல் உறங்கும் ஈசனை எழுப்பி வேலை செய்ய சொன்னார். அவர் மறுத்ததால் அவரை பிரம்பால் அடிக்க சொன்னார். அந்த அடி அங்கிருந்த அனைவர் முதுகிலும் ஏன் அரசன் முதுகிலும் விழுந்தது.
வந்திருப்பது சொக்கநாதர் என்று புரிந்துகொண்டான் அரசன். இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது ஆவணி மாதத்தில். அதனால் வருடா வருடம் இவ்விழா ஆவணி மாதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.
#மீனாக்ஷிபஞ்சரத்னம்
2வது ஸ்லோகம்

முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம்

ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணித⁴ராம் பத்³மப்ரபா⁴பா⁴ஸுராம் ।

ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம்

‘மீனாக்ஷி‘ –ராஜராஜேஸ்வரி
அதனால் தலையில் முகுடம் அணிந்து கொண்டிருக்கிறாள். அந்த முகுடம் முக்தாஹாரங்கள் வைக்கப்பட்டு மிகுந்த அழகுடன் விளங்குகிறது.
“முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம்” – அம்பாளின் முகம் பூர்ணசந்திரனைப் போல் உள்ளது!
“ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணித⁴ராம்” – அம்பாள் காலில் ஒலி
எழுப்பக்கூடிய மணிகள் சேர்ந்த சலங்கை, கிங்கிணி என்று நூபுரத்தை அணிந்து கொண்டிருக்கிறாள். “பத்³மப்ரபா⁴பா⁴ஸுராம்”–தாமரை போன்ற பிரபை. மீனாக்ஷியின் முழு ஒளியும், தாமரை வர்ணத்தில் உள்ளது.
“ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம்”-அனைத்து நலன்களையும் கொடுக்கக்கூடிய அம்பாள்!
"கி³ரிஸுதாம்”–மலையின் மகள்
“வாணீரமாஸேவிதாம்”–“ஸசாமரரமாவாணி ஸவ்யதக்ஷிண ஸேவிதா” இரண்டு பக்கமும், லக்ஷ்மிதேவியும் சரஸ்வதிதேவியும், மீனாக்ஷி தேவிக்கு சேவை செய்கிறார்கள்!
“மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம்”–இந்த கருணைக் கடலான மீனாக்ஷி தேயை நான் அடிக்கடி நமஸ்காரம் செய்கிறேன்.
3வது ஸ்லோகம் #மீனக்ஷிபஞ்சரத்னம்

ஶ்ரீவித்³யாம் ஶிவவாமபா⁴க³நிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்

ஶ்ரீசக்ராங்கித பி³ந்து³மத்⁴யவஸதிம் ஶ்ரீமத்ஸபா⁴ நாயிகாம் ।

ஶ்ரீமத்ஷண்முக²விக்⁴னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜக³ன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ||
”ஶ்ரீவித்³யாம்” –ஞானத்தைக் கொடுக்கிறவள் அம்பாள்.
“ஶிவவாமபா⁴க³நிலயாம்”–பரமேஸ்வரனின் இடதுபாகத்தில் உறைபவள்.
“ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்”–ஹ்ரீங்காரம் என்கிற மந்திரத்தில் ஜொலிப்பவள்
“ஶ்ரீசக்ராங்கித பி³ந்து³மத்⁴யவஸதிம்”-ஸ்ரீசக்கரத்தின் பிந்து மத்தியில் வசிப்பவள்.
“ஶ்ரீமத்ஸபா⁴நாயகீம்
–தேவர்களுடைய சபையில் வணங்கப்படுபவள்.
“ஶ்ரீமத்ஷண்முக²விக்⁴னராஜஜனனீம்“– பிள்ளையாருக்கும் முருகனுக்கும் அம்மா.
“மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம்” -கருணைக்கடலான மீனாக்ஷி தேவியை இடையறாது வணங்குகிறேன்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

25 Apr
இன்னிக்கு ராமநவமி இல்லை தான். அதுக்காக ராமனை நினைக்காமல் இருக்கலாமா? ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. தாயான கௌஸல்யா மகனை வாத்சல்யத்துடன் ராமபத்ரா என்று அழைத்து வந்தாள். சிற்றன்னை
கைகேயி, ஶ்ரீராமன் குழந்தையாக இருந்தபோது ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள், அவள் ராமச்சந்திரா என்று அழைத்து வந்தாள். ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று
அழைத்தார். அயோத்யா நகரத்து மக்கள் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற பொருளில் ரகுநாத என்று அழைத்தனர். ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள். அப்படி அழைப்பதற்கு சீதைக்கு மட்டுமே உரிமை உண்டு. மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று
Read 4 tweets
10 Apr
I got a forward in my school group. So many Hindus in the group were going 👏🏽👌🏼👌🏼 over it! I am posting the FW & my reply given there!
A pregnant mother asked her daughter, What do u want- A brother or a sister?
Daughter: Brother
Mother: Like whom?
Daughter: Like RAVAN
Mother:
What the hell are you saying? Are you out of your mind?
Daughter: Why not Mom? He left all his Royalship & Kingdom all because his sister was disrespected. Even after picking up his enemy’s wife, he didn’t ever touch her. Why wouldn’t I want to have a brother like him?
What would
I do with a brother like Ram who left his pregnant wife after listening to a Dhobi though his wife always stood by his side like a shadow? After giving Agni Pareeksha & suffering 14 years of exile. Mom, you being a wife & sister to someone, until when will you keep on asking for
Read 23 tweets
10 Apr
Jaya Jaya Sankara Hara Hara Sankara,
I really don’t know what to say except for the fact that humanity is dying right in front of our eyes. This shows one thing clearly, rapidly deteriorating dharma and a big gaping hole in this Punniya Bhumi when it comes Gho Matha Samrakshanam.
All these cows that were cruelly attacked have been roaming around in severe pain for several days with the Madurai public watching it doing nothing about the situation despite it being in the local news papers. What is more inhumane and pathetic some local groups took pictures
of the cows, flaunted it in social media, collected funds but did nothing for the cows. While there are animal welfare activists in many areas who take interest in such incidents and come forward to help, they do not have the people, resources, funds, experience, or other means
Read 5 tweets
10 Apr
மகாபாரத #கர்ணன் என்பவன் எப்படிப்பட்டவன்? ஹீரோ சிவாஜிக்காக எழுதிய திரைக்கதை தானே நமக்கெல்லாம் ரெபரன்ஸ்? அதில் அவன் உத்தமன். ஏமாற்றப்பட்டவன். ஆனால் இதிகாசப்படி கர்ணன் மிகுந்த அசூயை உடையவன். வள்ளலா இருக்கலாம் ஆனால் நல்லவனா? துஸ்ஸாசனால் சபைக்கு இழுத்து வரப்பட்ட துரௌபதிக்கு மாதவிடாய்
நேரம் அது. அவள் ஒரே ஒரு துணி அணிந்திருந்தாள். ரத்தப்போக்கு தரையை நனைத்தது. அங்கு கூடியிருந்த சபையோரை கேட்கிறாள், தருமர் தன்னைப் பணையம் வைத்தப் பின் என்னை பணையம் வைத்தாரா அல்லது அதற்கு பின்பா என்று, ஏனென்றால் அதற்குப் பின் என்றால் அவரே அடிமையாகிவிட்ட பிறகு என்னை பணையம் வைக்க என்ன
உரிமை என்று. அப்பொழுது அனைவரும் வாய் மூடி இருக்கையில் துரியோதனின் ஒரு சகோதரன் விகரணன் மட்டும் சபையில் எழுந்து நின்று அண்ணனிடம், உனக்கும் பாண்டவர்களுக்கும் ஆயிரம் இருக்கலாம் ஆனால் ஒரு பெண்ணை அவமானம் செய்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறான். அங்கிருந்த கர்ணன் என்ன சொல்கிறான்
Read 4 tweets
9 Apr
அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு
நமக்கும் கிடைக்கும். ஈஸ்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம் மனஸ் கல்லாக இருந்தால், கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி அநுக்ரஹத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால் அதுதானே விரிந்து ஜலத்தை இழுத்துக்
கொள்கிறது. துணியை வெளியே இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி லேசாகத் துணி மாதிரி ஆக்கிக் கொண்டால் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற அநுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ளலாம். ஜீவனுக்குச் செய்கிற பெரிய உபகாரம் அவனுக்குக் கருணாமூர்த்தியான ஈசனிடம்
Read 4 tweets
9 Apr
நகைச்சுவை நடிகராக இருந்த காலத்தில் #சோ அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை கையாண்டார். கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்று வேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது. காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர்
பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று பின் காமராஜரையே அழைத்து வைத்து நாடகம் நடத்திய காட்சிகளும் உண்டு. காமராஜரை முழுக்க புரிந்தவர் சோ, அதனால்தான் அவர் இறந்த அன்று, இந்திராகாந்தியும் கருணாநிதியும்
காமராஜர் உடல் அருகே நின்றபொழுது ஆத்திரத்தின் உச்சியில் எழுதினார் சோ. யார் காமராஜரை கொன்றார்களோ அவர்களே அஞ்சலியும் செலுத்துகின்றார்கள். என அவர் எழுதிய வரிகள் சாகா வரம் பெற்றவை. நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!