Reservoir induced earthquake: அணைகள் கட்டுவதால் தூண்டப்படும் நிலநடுக்கம்
நிலநடுக்கம் ஏற்படாத/ 100 வருடங்களுக்கு ஒரு முறை ரிக்டர் அளவில் 3 & அதற்கு குறைவான அளவு நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் (stable area) அணைகள் கட்டுவதால் எவ்வாறு நிலநடுக்கம் எற்படுகிறது பற்றிய பதிவு
Induced earthquake பூமியின் tectonic stress எந்த பங்கும் வகிப்பதில்லை. மனிதனின் செயல்பாட்டால் (Dam) நிலநடுக்கம் ஏற்படுகிறது. அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதை பற்றி இணையத்தில் மாடல்/ கார்டூன்/ அனிமேஷன்ஸ் உள்ளது. அவற்றில் உள்ள தவறுகளை அறிவியல் விதிகள் கொண்டு ஆராய்வோம்.
சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள், அறைகுறை சிவில், Geotechnical engineers யின் favorite model, அணையின் எடை பூமியை அழுத்தி, அதனால் பூமியின் அடியில் உள்ள பாறைகள் நகர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த concept எப்படி அறிவியல் விதிகளுக்கு முரணாக உள்ளது என்பதை பார்போம்.
சுமார் 30deg சாய்வான fault plane யின் மீது நிலையாக உள்ள பாறையின் மேற்பகுதியில் அணை கட்டுகிறோம். அணையின் எடையால் பாறை நகர்ந்தால் நிலநடுக்கம் ஏற்படும். பாறை நகர உராய்வு (friction) முக்கியம். உராய்வு குறைவாக இருந்தால் தான் பாறையால் நகரமுடியும்.
Amonton’s முதல் விதி “Friction force is proportional to the normal load”.
அணையின் எடையால் பாறையின் மீது normal load கூடுகிறது, Amonton’s விதிப்படி load அதிகமாகும் போது உராய்வும் அதிகமாகும். உராய்வு அதிகமானால் பாறையால் நகர முடியாது எனவே நிலநடுக்கம் ஏற்படாது. இந்த மாடல் தவறு.
அணைகள் கட்டுவதால் ஏற்படும் நிலநடுக்கத்தை புரிந்து கொள்ள,stress பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பாறை நிலையாக(stable) fault plane யில் உள்ளது. அதன் மீது இரண்டு விதமான stress உள்ளது. Normal stress (sigma) acting perpendicular and shear stress (tau) acting parallel to the fault surface
Normal stress பாறையின் எடையால் ஏற்படுகிறது. பாறையை தள்ளும் போது shear stress ஏற்படுகிறது. அதாவது கார் ரிப்பேராகி நிற்கிறது & அதன் எடை normal stress, பின்னால் இருந்து காரை தள்ள கொடுக்கப்படும் force, shear stress.
நில நடுக்கம் ஏற்படுத்த, Fault plane யின் மீது நிலையாக உள்ள பாறையின் shear stress யை அதிகரித்து அல்லது fault plane யின் சாய்வை அதிகரித்து பாறையை நகர்த்தலாம். அதற்கு பூமிக்கு அடியில் போகவேண்டும் & அது சாத்தியம் இல்லை.
பாறையை நகர்த்த நம்மிடம் உள்ள ஒரே வழி Normal stress யின் குறைக்க வேண்டும்.
பாறையில் உள்ள சிறு துளைகளில் உள்ள நீர் இருக்கும் (நிலத்தடி நீர்) பாறைக்குள் அழுத்தத்தை (Pore pressure) உருவாக்கும். நாம் இந்த பாறையின் மீது அணைக் கட்டி நீரை தேக்குவதால் pore pressure அதிகரிக்கும்.
Normal stress & pore pressure யை Terzaghi equation மூலம் தொடர்பு படுத்தலாம். இயற்பியலுக்கு நியூட்டன் மாதிரி Terzaghi, soil mechanics க்கு தலை
Terzaghi's Principle: when stress is applied to a porous material, it is opposed by the fluid pressure filling the pores in the material
பாறையில் உள்ள நீரினால ஏற்படும் Pore pressure, பாறையின் Normal stress யை எதிர்த்து செயல்படும்.
Effective stress=Normal stress– Pore pressure
Pore pressure யை Normal stress யில் இருந்து கழித்து விட்டால் Normal stress குறையும். Friction குறையும். பாறை நகரும். நிலநடுக்கம் ஏற்படும்
Coulomb Failure Criterion and Mohr envelope மூலம் failure process யை இன்னும் detail லாக விவரிக்கலாம். அணைகள் கட்டுவதால் தூண்டப்படும் நிலநடுக்கம் ஒரளவுக்கு சரியான மாடல் கொடுக்கப்பட்டுள்ளது.
Frictional laws and Terzaghi's Principle மூலம்
Subsidence நிலம் உள்வாங்குதல்
Waste water injection மூலம் ஏற்படும் நிலநடுக்கங்களை விளக்கலாம்.
அணைகள் கட்டுவதால் ஏற்படும் நிலநடுக்கத்திற்கு உதாரணம், 1964யில் மகாராஷ்ட்ராவில் கொய்னா ஆற்றில் கட்டப்பட்ட கொய்னா அணை. கொய்னா அணையால் 1967 யில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (Richter scale 6.6) சுமார் 200 பேர் இறந்தார்கள் & கொய்னா கிராமம் முற்றிலும் அழிந்தது.
கொய்னா அணையில் கிழ் உள்ள fault silp ஆனதால் நிலநடுக்கம் ஏற்பட்டது. Fault slip க்கு தேவைப்பட்ட கூடுதல் pore pressure 75 psi.
கார் டயரில் உள்ள காற்றின் அழுத்தம் 30-35 psi.
அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது என அணைகள் கட்ட என சொல்வதும் சரியல்ல.
அணை கட்டுவதற்கு முன் அந்த பகுதியின் stress, fault யின் சாய்வு கோணம், பாறையின் உறுதித்தன்மை (Rock strength) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
அணை கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் stress, fault யின் சாய்வு கோணம், pore pressure அணை கட்டுவதற்கு சாதகமாக இல்லை ஆனால் பாறையின் உறுதி தன்மை (Rock strength) & material property நன்றாக இருந்தால் அணை கட்டலாம். அதற்கான காரணங்களை பார்ப்போம்.
பாறை வலிமையாக இருந்து, Fault plane யில் சொறசொறப்பாக (asperities) இருந்தால் பாறையால் நகர முடியாது & Fault slip ஆகாது, நிலநடுக்கம் ஏற்படாது.
Fault மெதுவாக slip (Ductile deformation/ creep) ஆகும் போது நிலநடுக்கம் ஏற்படாது. Hydraulic door closer பொருத்தப்பட்ட கதவு மெதுவாக மூடும் அது தான் Creep.
அணைகளை, பாறையின் உறுதித் தன்மை, Asperities & Creep போன்ற material properties நிலநடுக்கம் ஏற்படாமல் காப்பாற்றுகிறது.
கொய்னா அணையில் கிழ் உள்ள fault silp ஆனதால் நிலநடுக்கம் ஏற்பட்டது. Fault slip க்கு தேவைப்பட்ட கூடுதல் pore pressure 75 psi.
கார் டயரில் உள்ள காற்றின் அழுத்தம் 30-35 psi.
அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது என அணைகள் கட்டக்கூடாது ன்னு சொல்வதும் சரியல்ல.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with O2 திருடன்

O2 திருடன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @moodanmani20

15 Feb
இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (60%) முன்னணியில் இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு அம்பானிக்கு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு, சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை என அறிவுறுத்தியது
Read 7 tweets
24 Nov 20
தண்ணீர் தீண்டாமை:
சென்னையில், 80களின் ஆரம்பத்தில் சரியான தண்ணீர் பஞ்சம். திருவல்லிக்கேணியில், வெங்கட்ரங்கம் தெருக்கு கிழக்கில் சேரி, மாட்டாங் குப்பம் & அயோத்தி குப்பம். வெங்கட்ரங்கம் தெருக்கு மேற்கில் TP கோயில் தெரு, பார்த்தசாரதி குளம் & கோவில், பெரிய தெரு – பார்ப்பனர்கள் ஏரியா
பெரிய தெருக்கு மேற்கில் பாய்ங்க ஏரியா.
திகேணியில் pumping station ஐஸ்அவுசில் உள்ளது. அங்கிருந்து தண்ணீர் பைப் லைன், TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு வழியாக கோஷாஸ்பத்திரி (கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை)க்கு போகும். இது மருத்துவமனை தண்ணிர் லைன் என்பதால் எப்போது தண்ணீர் வரும்.
தண்ணீ பஞ்சம் காலத்தில் இந்த இரண்டு தெருக்கள் (TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு) தவிர்த்து வேறு எங்கும் குடிநீர் வராது. அந்த காலத்தில் RO & கேன் நீர் கிடையாது. இந்த தெருவில் இருப்பவர்கள் ஜாதி/ வர்ணம் பார்த்து தான் தங்கள் வீட்டின் அடி பம்பில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்கள்.
Read 8 tweets
4 Aug 20
Pre-Owned Car
புதுக்கார் வாங்கினால் அதிக செலவாகும், எனவே இருக்கும் பணத்திற்கேட்ப Pre-Owned Car/ Used Car வாங்க நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்.
பெட்ரோல் கார்கள் எளிமையானவை, பராமரிப்பு செலவு டீசல் கார்களை விட குறைவாக இருக்கும்.
Used car யில் மாருதி சுசூகி, ஹோண்டா, டோயாடா கார்கள் வாங்கவும். Ford, ஸ்கோடா, VW கார்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் பராமரிப்பது சிரமம். Used காரை தெரிந்தவர்களிடம் வாங்க வேண்டும். பொதுவாக மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கார்கள் நல்ல நிலையில் இருக்கும்.
Used car dealers, இணையம், Authorised car dealers (True Value) etc., வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் எப்படி கார் வாங்குவது என்பதை பார்ப்போம்.
Read 16 tweets
30 Jun 20
பழைய தஞ்சை ஜில்லா வில் பெரு நிலக்கிழாராக இருந்தவர்கள் கருப்பையா மூப்பனார்: திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் பகுதியில் நிலங்கள் இருந்தன, துளசிய்யா வாண்டையார்: தஞ்சாவூர், பூண்டி பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன
வலிவலம் தேசிகர்: நாகப்பட்டினம் கீவளூர் பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன, குன்னியூர் சாம்பசிவ ஐயர்: மன்னார்குடி பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன, உக்கடை தேவர், வடபாதி மங்கலத்தார் etc.,
இவர்களின் பண்ணையில் விவசாய கூலிகளுக்கு பல விதமான தண்டனைகள் அளிக்கப்படும் அதில் முதன்மையானது.
சாணிப்பால்: மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் குழலில், சாணத்தைக் கரைத்து குடிக்கச் செய்வார்கள்.
சவுக்கடி: சாட்டையின் பிரிகளுக்கு நடுவில் கூழாங்கல்லை வைத்து ரத்தம் சொட்ட அடிப்பார்கள்
Read 12 tweets
1 Jun 20
கச்சா எண்ணெய் என்றவுடன் எல்லோரும் அமெரிக்கா, ஈராக், ஈரான், சவுதின்னு நினைக்கிற மாதிரி நமது மூளை டியூன் ஆகிவிட்டது. இந்தியாவில் எப்படி, எப்போது யாரால் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ONGC, IOCL, BHEL, எப்படி உருவாக்கப்பட்டது என பார்ப்போம்.
1860 களில் அசாமில் உள்ள திப்ரூகாட் யில் இருந்து மார்கரீட்டா நிலக்கரி சுரங்கம் இடையே ரயில்பாதை அமைக்கும் போது நிலத்தின் மேற்பகுதியில் கச்சா எண்ணெய் ஊறுவதை அங்கு பணியில் இருந்த பொறியாளர்கள் பார்த்தனர்.
1867 யில் முதல் ஆயில் கிணறு மாக்கமில் தோண்டப்பட்டது. 1859 யில் LP டிரேக் முதல் ஆயில் கிணற்றை அமெரிக்காவில் நிறுவினார். சரியாக 7 ஆண்டுகளுக்கு பின் அசாமில் முதல் ஆயில் கிணறு தோண்டப்பட்டது குறிப்பிடதக்கது.
Read 22 tweets
16 May 20
GST மாநிலரசின் வரிவருவாயை பாதித்துவிட்டது. GST யில் தமிழகத்தின் பங்கை மோடியரசு கொடுக்கவில்லை.
GST யால் மாநிலரசு வரிச்சலுகை கொடுத்து புதிய முதலீடு, தொழிற்சாலைகளை ஈர்க்க முடியாது
மின்கட்டணம் வசூலும் மத்தியரசின் கைகளுக்கு போகிறது.
சரக்கு வாகனங்களுக்கு மாநில அரசு வாங்கிக் கொண்டிருந்த சாலை வரியை இப்போது மத்தியரசு வசூல் செய்கிறது.
தனியார்(white board) வாகனங்களுக்கான சாலை வரியை one India one road tax என மத்தியரசு ஆட்டைய போடப்போகிறது.
நிலம்/கட்டிட பதிவு மூலம் மாநிலரசின் வருவாயை திருட புதியதிட்டம் போடுகிறார்கள்
நிலப்பதிவு மத்தியசிடம் சென்றால் ஊழல்/ லஞ்சம் இருக்காது என சொன்னால் மூளையற்ற மத்தியவர்கம் மத்தியரசிற்கு ஆதரவாகும்.

மின்கட்டணம், சாலைவரி, RTO, வசூல் 6 மாதத்திற்குள் மதியரசிற்கு போகும். 1-2 ஆண்டுகளில் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை மோடியரசு வசூல் செய்யும்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!