// தேவையற்ற திசை திருப்பல் //

சமூக ஊடகங்களில் சில வாரங்களாக விடுதலை புலிகள் தான் தமிழ் முகவரி என்று நாம் தமிழர் மற்றும் சில தோழர்கள் பேசி வருகிறார்கள்.

விடுதலை புலிகள் பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கக்கூடும் அது அவரவர் பார்வையை பொறுத்தது.
யாரும் யாரையும் ஒரு சித்தாந்தத்தை பின்பற்ற சொல்லி கட்டாயப்படுத்த முடியாது அது நியாயமும் அல்ல.

பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் தங்களது திராவிட இயக்க சித்தாந்தத்தை கொள்கை ரீதியாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார்களே தவிர அதை மக்களிடம் திணிக்க ஒரு நாளும் முற்படவில்லை.
இந்நிலையில் நாம் தமிழர் மற்றும் சில தோழர்கள் ஒருங்கிணைந்து சமூக ஊடகங்களில் வழிய ஒரு சூழலை உருவாக்கி ஈழத்தின் அடையாளம் விடுதலை புலிகள் என்றும் தமிழின தலைவர் பிரபாகரன் என்றும் தி.மு.க துரோகி என்றும் பேசி திணிக்க இதற்கு சிலர் தக்க எதிர்வினைகளை ஆற்றினர்.
ஈழ தோழர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

~750 கோடி மக்கள் தொகையில் தினசரி சமூக ஊடகங்களில் களமாடுவோர் ~200 கோடி கூட அல்ல. அவ்வகையில் இங்கே மட்டுமே ஈழ அரசியலை பற்றி பேசி முழு பயனை ஈட்ட முடியாது.

2009 க்கு பிறகு விடுதலை புலிகளுக்கு பிறகு அங்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது?
களத்தில் ஈழம் குறித்து நாம் தமிழர் அல்லது மே 17 குடையின் கீழ் ஒருங்கிணைந்து ஏதாவது அரசியல் முன்னெடுப்புகள் நடந்துள்ளதா? இல்லை.

தமிழ் நாட்டின் அன்றாட பிரச்சினைகளை பேச சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் கிடைக்கும் சிறு நன்மை கூட ஈழ விவகாரத்தில் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தி.மு.க அரசு ஆற்றி வரும் மக்கள் நற்பணிகளை பற்றி பேசவிடாமல் அதை திசை திருப்ப முயல்கிற ஒரு செயலாக விடுதலை புலிகள் பற்றிய பேச்சுகளை வழிய பேச நாம் தமிழர் தொடங்கி இருத்தல் வேண்டும்.

நாம் தமிழர் பேசியதால் தனது இருப்பையும் பதிவு செய்ய விடுதலை புலிகளை பற்றி பேச மே 17 உள்ளே வருகிறது.
எது எப்படியிருந்தாலும் விடுதலை புலிகள் பிரபாகரன் பற்றிய எண்ணங்கள் அவரவர் கொள்கையை பொறுத்தது.

தயவு செய்து இதை கடந்துவிட்டு தமிழ் நாட்டு அரசியல் கதைக்கு அனைவரும் திரும்ப வேண்டுகிறேன்.

யதார்த்தம் புரியாமல் வெற்று நம்பிக்கையில் காலத்தை கடத்தாதீர் நேரத்தை வீணாக்காதீர்.
ஏனெனில் நாளையே உலக அதிசயமாக "ஈழம்" கிடைத்துவிட்டாலும் அதில் தமிழ் நாட்டுக்கான கடந்தகால அங்கீகாரத்தை "சில பல" ஈழ மக்கள் தரப் போவதில்லை.

போற்றுவார் போற்றட்டும்

தூற்றுவார் தூற்றட்டும்

போகட்டும்! கடப்போம்!

இயல்பு நிலைக்கு திரும்பிடுங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

17 Jun
தொன்மையான இனங்கள் (காலகட்ட வரிசையில் எழுதப்படவில்லை)

நீக்ராய்டு = Negro
மலாயர்கள் = Malayans
காகசாய்டு = Caucasian
திராவிடர்கள் = Dravidians
ஆஸ்ட்ரலாய்டு = Australians
அமெரிக்கர்கள் = Americans
மங்கோலாய்டு = Mongolians

*மேற்கண்ட தகவல்கள் மேலும் ஆய்வுக்குரியது.
இன்றைய ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் வந்து பழங்குடியின ஆஸ்திரேலியர்களை அழித்தொழித்து 18-19 ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.

பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் வேறு இன்றைக்கு வாழும் ஆஸ்திரேலியர்கள் வேறு.
இன்றைய அமெரிக்கர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வந்து பழங்குடியின அமெரிக்கர்களை (Native Americans) அழித்தொழித்து 15 ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.

பழங்குடியின அமெரிக்கர்கள் வேறு இன்றைக்கு வாழும் அமெரிக்கர்கள் வேறு.
Read 9 tweets
12 Jun
இந்து மதத்துக்கும் பிற மதத்துக்கும் அப்படி என்னங்க வித்தியாசம் இருக்குது? எல்லா மதத்திலும் பிரச்சினை இருக்கத் தானே செய்கிறது? என்று சில "அன்பர்கள்" கேட்கிறார்கள்.

// என் பார்வையில் அந்த அன்பர்களுக்கான சிறு விளக்கம் கீழே //
உலகின் பல மதங்களில் இருப்பது "பிரிவு" தான்

பிரிவு = Section

Example ⬇️

+2 A & B Section = வேற வேற Section ஆனா ஒரே பாடங்கள் அது போல

Christianity RC & Protestant = வேற வேற Section ஆனா ஒரே நம்பிக்கை இயேசு

Islam Shia & Sunni = வேற வேற Section ஆனா ஒரே நம்பிக்கை அல்லா
சுருங்கச்சொன்னால் பல மதத்திலும் "பிரிவு" உண்டு. மேலும் அங்கே "வழிபாடு" மாறுப்படும் ஆனால் யாருக்கும் யாரும் இயன்றவரை "ஏற்றத்தாழ்வு" இல்லாமல் இருப்பார்கள்.

சிலுவை போர், இஸ்லாமிய போர் நடந்ததை எல்லாம் நான் மறுக்கவில்லை ஆனால் இன்றைய நிலை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா?
Read 9 tweets
10 Jun
இன்றைய கேள்வி

தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நாவல் எது?
விடை = பிரதாப முதலியார் சரித்திரம்

# சரியான விடையை அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

# 1876 இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்ட "பிரதாப முதலியார் சரித்திரம்" தான் தமிழில் வெளிவந்த முதல் நாவல் ஆகும்.

# இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இவரது கொள்ளுப்பேரன் ஆவார். ImageImageImage
Read 4 tweets
29 May
# அவங்க சொன்னா சரியா இருக்கும்னு நினைச்சேன் அதான்.

# அவங்க தப்பா நினைச்சுறக் கூடாதுன்னு நினைச்சேன் அதான்.

இவை தான் பெரும்பாலும் வாழ்க்கைப் போக்கை தொலைத்த பலரும் சொல்லும் காரணங்கள்.

Get advice if needed but decision should not be due to a Courtesy Call.
Never ever take a Courtesy Call for parents sake or friend's sake regarding your Education, Career, Stay, Marriage & Banking.

When you don't have ownership control over your outcomes, you are LOST.
After your failure, people who advised you or suggested you would finally say "இப்படி நடக்கும்னு நான் நினைக்கலப்பா ஆனா நீ தானப்பா தெளிவா யோசிச்சு செஞ்சு இருக்கனும்".

So, only experienced people would often say that "World's easiest job is Advice".
Read 5 tweets
22 May
உலகில் இதுவரை எத்தனையோ வைரஸ் வந்துட்டு போயிருக்கு ஆனா Covid 19 வைரஸ் மட்டும் 100% சரியாகிடும் என்று கூற முடியாததற்கு காரணமென்ன?

பின்னாடி வந்தா பார்த்துக்கலாம், சமாளிக்கலாம், உயிர் போகாது போன்ற பதில்களை தான் கேட்க இயலுகிறது.

மொத்தத்தில் கொரோனா வைரஸ் 100% சீராகுமா ஆகாதா?
கொரோனாவில் இருந்து நிரந்தரமாக தற்காத்து கொள்ள S-M-S முறையை வாழ்வியல் பழக்கமாக கொள்ள வேண்டும் என்கிறார்கள். இங்கே "நிரந்தரம்" என்பது எதன் அடிப்படையில் அறிவுறுத்தப்படுகிறது?

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டால் போதுமா அல்லது அடுத்தடுத்து டோஸ் தொடர வாய்ப்பு உள்ளதா?
கடந்தகால பல வைரஸ் வரலாறுகளை தேடித்தேடி படித்த பிறகு நிகழ்கால Covid 19 வைரஸ் வரலாறை படிக்கும் போது கிடைக்கப்பெறும் செய்திகள் மகிழ்விக்கும் வகையில் இல்லை.

உண்மையில் என்ன தான் நடக்கிறது?

1-2 வருடங்களில் இந்த கொரோனா வைரஸ் "குறைந்து" Pandemic to Epidemic ஆகிடுமா?
Read 5 tweets
21 May
இன்றைய கேள்வி

தொல்லியல் ரீதியாக உலகில் அறியப்பட்ட முதல் பழங்கதை எது?
பின் குறிப்பு

இதுவரை உலகில் தொல்லியல் ரீதியாக பல்வேறு கதைகள் கிடைக்கப்பெற்று உள்ளது.

எனது கேள்வி என்னவென்றால் இதுவரை அறியப்பட்டதில் மிகப் பழமையான கதை (பழங்கதை) அல்லது இலக்கியக் கதை எது?
விடை = கில்காமேஷ்

# உலகத்திலே அகழாய்வு படி அக்காடியா மொழியின் எழுத்து வடிவிலுள்ள பழமையான இலக்கியக் கதை "கில்காமேஷ்" ஆகும்.

# சுமேரியா நாட்டில் உருக் (தெற்கு ஈராக்) தேசத்தை ஆட்சி செய்த மன்னன் கில்காமேஷ் மற்றும் அவனது காலத்தில் நடந்த நோவா வெள்ளப்பெருக்கை பற்றி பேசும் கதையாகும்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(