#சரபேஸ்வரர் உலகை காக்க சிவபெருமான் எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்” அவதாரம். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருபுவனம் என்னும் ஊரில் காவிரி தென்கரையில் அழகிய ஸ்ரீ கம்பகரேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது
வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின் கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக இவர் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க
கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில். இங்கு சரபேஸ்வரக்கென என தனி சன்னதி உள்ளது. சரபேஸ்வரர் என்பவர் மிகுந்த சக்தி வாய்ந்த உருவம் கொண்டவர். சரபேஸ்வரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரர் எட்டு கால்களும், இரண்டு
முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்டு ஒரு விசித்திரமான தோற்றத்தோடு
கழுத்து முதல் இடுப்பு வரை மனித உடலோடும் மற்றும் சிம்மம் போன்ற கால்களும் வாலும் கொண்டு கடும் உஷ்ணத்துடன் காட்சி அளிக்கிறார். எனவே இவர் சரபேஸ்வரர் என்றும் கலியுக வரதன் என்றும் என அழைக்கப் படுறார்.
இவர் அவதார காரணம்: #இரணியகசிபு என்ற அசுரர் குல தலைவன் சிவனை நோக்கி சாகா வரம் வேண்டி
கடும் தவம் செய்தான். அதன் பயனாக சிவனிடமிருந்து தனக்கு தேவர்களாலும், மனிதர்களாலும் , விலங்குகளாலும் முதலிய யாவராலும் மற்றும் பகலிலோ அல்லது இரவிலோ வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது உட்புறத்திலோ மேலும் எந்த ஒரு ஆயுதங்களாலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற அறிய வரத்தை பெற்றான். தன்னைத்
தானே கடவுள் என்று கூறிக்கொண்டு, எதிர்ப்பவர் யாருமின்றி தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என்றும் மற்ற தெய்வங்களை வணங்க கூடாது என்று கூறி கொடுமையான ஆட்சி செய்து வந்தான். ஆனால் அவனுக்கு பிறந்த மகன் #பிரகலாதன் தன் தாயின் வயிற்றில் கருவுற்று இருக்கும் பொழுதே நாரத முனிவர் மூலம்
திருமாலின் பெருமைகளை கேட்டு சிறந்த ஒரு பரந்தாமனின் பக்தனாய் பிறந்தான். சதாசர்வகாலமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதைக் கண்டு கடும் கோபம் கொண்டான் இரணியன் எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத தன் மகன் பிரகலாதனை பல வழிகளில் அழித்திட முயன்றான். திருமாலின் அருள் பெற்று இருந்த
பிரகலாதன் அனைத்திலிருந்தும் தப்பினான். அப்பொழுது இரணியன் பிரகலாதனை நோக்கி எங்கே உன் நாராயணன் எனக் கேட்க பிரகலாதனோ என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என கூறினான். அதைக் கேட்டு இரணியன் கடும் கோபம் கொண்டு அருகிலிருந்த தூணை தன் காதையல் தாக்க அதிலிருந்து நரசிம்ம
உரு கொண்டு வெளிப்பட்டார் திருமால். இரணியனது வரத்தின் படியே மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ அல்லாது அனைத்தும் கலந்த ஒரு உருவமாக நரசிம்மமாய் வந்து இரவோ பகலோ அல்லாத அந்திப்பொழுது நேரத்தில் எந்தவித ஆயுதமும் இன்றி தன் நகத்தினை கொண்டு வீட்டின் உள்ளும் வெளியும் இல்லாது வாசற்படியில்
வைத்து இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் ஆக்ரோஷமானார். அவரை சாந்தப் படுத்த யாராலும் முடியவில்லை. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் அனைவரும் சிவனிடம் நரசிம்மரின் கோபம் தணிக்க வேண்டிக்கொண்டார்கள். அவர்களை காக்க சிவன் எடுத்த அவதாரமே சரேபேஸ்வர வடிவமாகும். காஞ்சி
புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மர் வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டதால் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மரின் கோபத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.
#பிரத்தியங்கராதேவியும், சூலினி என்கிற தேவியும் சரபேஸ்வரரின் துணையாக இருப்பவர்கள். அதில் மூத்தவர் பிரத்யங்கரா தேவி, இளையவர் சூலினி. இருவரும் இரு இறக்கைகளாக சரபேஸ்வரருடன் சதா வாசம் செய்கிறார்கள். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த அக்னியில் உதித்தவர் பிரத்யங்கரா தேவி
என்றும் சொல்வர். தேவியின் உதவியுடன் தான் சரபேஸ்வரர், நரசிம்மரின் உக்கிரம் தணித்து சாந்தியடைய வைத்தார் என்கிறது புராணம். இந்த சரபேஸ்வரரைப் ‘பட்சிகளின் அரசன்' ‘நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி’ என்றும் ‘சாலுவேஸ்வரன்' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.
எதிரி பயத்தை போக்கும்
சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. எதிரிகளால் ஏற்படக்கூடிய பில்லி, சூனியம், ஏவல் மட்டுமல்லாமல் எல்லா விதமான நோய்களையும் தீர்த்து வைப்பார். மேலும் வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும், நினைத்த காரியங்கள் நடைபெறும். தீவிரமான நோய்ப்பிணி கொண்டவர்கள் அதிலிருந்து
சுகமடையவும், பயம், பீதி, இனம் காண முடியாத சஞ்சலத்தில் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபடவும், பகைவர்களை ஒழித்து ஜெயம் காணவும் சரபேஸ்வரர் வழிபாடு உதவும். சரபேஸ்வரர் கால பைரவர் அம்சமே. கால பைரவரையும் சேர்த்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் வந்து சேரும். ஸ்ரீ சரபேஸ்வரரின் மூலமந்திரத்தை
தினமும் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இவரை வணங்க ஞாயிற்றுக்கிழமை உகந்த நாளாகும் மேலும் ராகு கால நேரத்தில் வணங்குவது சிறப்பாகும். செவ்வாய், சனி கிரக சேர்க்கையால் நீங்கள் படும் துன்பங்கள் தீரும். அத்துடன் கர்ம வினை பாவங்களும் நீங்கும்.
9 அகல்
விளக்குகளில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் வாழை தண்டு நார் மூலம் உருவாக்கப்பட்ட திரிகளை போட்டு ஏழு ஏலக்காய்களை நுணுக்கி விளக்குகளில் சிறிது சிறிதாக போட்டுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை சரபேஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வாருங்கள்.
சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் சரபேஸ்வரருக்கு சன்னதி உள்ளது. மற்றும் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி சன்னதி உள்ளது. காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேஸ்வரர் உள்ளார். வேறு
எங்கும் இவ்வாறு லிங்க சரபேஸ்வர் இல்லை. ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.

சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்:

ஓம் ஸாலுவேசாய வித்மஹே
பஷீ ராஜாய தீமஹீ
தந்நோ சரப ப்ரசோதயாத்.

உங்களின் சங்கடங்கள் நீங்க வாழ்வில் மகிழ்ச்சி பெருக ஶ்ரீசரபேஸ்வரர் அருள் புரியட்டும்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

27 Jun
#பிரம்ம_முகூர்த்தம்
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது.
அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம். இந்நேரத்தில் எழுந்து ஜபிப்பது, தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் தொடங்குவது சிறந்த பயனைத் தருவதோடு் நினைவாற்றலையும் அதிகப்
படுத்துகிறது. பிரம்மா முகூர்த்தம் அதிகாலை 3:30 மணியிலிருந்து கிட்டத்தட்ட 5:30 அல்லது 6:00 வரை இருக்கும், அல்லது சூரிய உதயம் வரை. இது பிரம்ம தேவரின் நேரத்தை குறிக்கிறது. இந்த கால நேரம் ஒருவர் பிரம்மன் அல்லது படைப்பின் மூலமாக மாறுவதற்கான சாத்தியத்தை அளிக்கிறது. நாம் விரும்பும்
Read 18 tweets
26 Jun
பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் #சாந்தீபனி என்ற குருவிடம் கற்றுக் தேர்ந்தபின் கண்ணன் அவரிடம் குருதக்‌ஷணையாக என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இருவரும் என்னிடம் பயின்றதே பெரும் பாக்கியம் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்
மனைவிக்கு தங்களின் இறந்து போன ஒரே புதல்வன் திரும்ப உயிருடன் வரவேண்டும் என்கிற ஆசை இருந்ததால் மனைவிக்காக அதை கேட்கிறார். உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா, உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன்
வினவியபோது, பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான்
கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் #பாஞ்சஜன்யம் என்னும்
Read 6 tweets
26 Jun
MLA E.R.ஈஸ்வரனனின் சொந்த ஊர் கொக்கரையான்பேட்டை கிராமம், நாமக்கல் மாவட்டம். E.R.ஈஸ்வரனின் தாயாரான முத்தாயிக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே முத்தாயியை விட்டு பிரிந்து போய் வேறு ஒரு கல்யாணம் செய்து கொண்டு விட்டார் ராமசாமி. அதே ஊரைச்
சேர்ந்த #தஸ்தஹீர் என்கிற முஸ்லிமோடு வாழ்க்கையை அமைத்து கொண்டார் முத்தாயி. அவர்களுக்குப் பிறந்தவர் தான் E.R.ஈஸ்வரன். அப்பா ஸ்தானத்திலிருந்து படிக்க வைத்து ஆளாக்கியது எல்லாமே தஸ்தஹீர் தான். அந்த வகையில் E.R.ஈஸ்வரனை ஒரு முஸ்லிம்மாக தான் பார்க்கின்றனர் அந்த கிராமத்து மக்கள். இது
E.R.ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்து போன போது E.R.ஈஸ்வரனோ அவரது தாயாரோ எந்த சடங்கிலும் ஈடுபட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம் சில வருடங்களுக்கு முன்பு தஸ்தஹீர் இறந்து போக முஸ்லிம் வழக்கப்படி சில சடங்குகளை செய்திருக்கிறார் E.R.ஈஸ்வரன்
Read 5 tweets
26 Jun
#பூரி #ஜகந்நாதருக்கு ஜுரம் வருமா? அதுவும் #க்ரோனா மாதிரி ஜுரம் வருமா? இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல் நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு. அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழ்கிறோம். சொந்த கிராமத்திலிருக்கும்
குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மகா க்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம். சிதம்பரத்தில் இருக்கக்கூடிய தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை
கொண்டாடுகிறார்கள். அதே போல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள். நாம் கோகுலாஷ்டமிக்கு மட்டுமே குழந்தையாக க்ருஷ்ணனை பூஜித்து பலகாரங்கள் செய்வோம்.
ஜகன்னாதபுரியிலோ என்றுமே தங்கள் குழந்தையாகவே அவரைக் கருதுவதால் தான்,
Read 16 tweets
25 Jun
#துக்காராம் பக்த துக்காராம் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் பிறந்தவர். இவர் விட்டலரின் பரம பக்தர். ஒரு சமயம் அவர் மனைவியான ஆவளீ ஏதோ வீட்டில் இருந்த சிறிது மாவை வைத்து இரண்டு சுக்கா ரொட்டி தயார் செய்து கொண்டு செல்ல ஆயுத்தமானார். பாவம் அதற்கு தொடு கறி செய்ய கூட இயலாத வறுமை.
துக்காராம் மகராஜ் பண்டார மலை என்னும் இடத்தில் விருட்ச வல்லி மரத்தின் கீழே அமர்ந்து அபங்கம் இயற்றி பாடி கொண்டிருப்பார். காட்டின் மைய பகுதிக்கு சென்று கொண்டிருக்கும்போது அவள் காலில் ஒரு விஷமுள் தைக்க அங்காயீ (அங்காளம்மன்) என அவளது குலதெய்வத்தை அழைத்தார். சடார் என பாண்டுரங்கன் வந்து
நின்றான். இந்த பெண்மணிக்கோ விட்டலனை கண்டால் பிடிக்காது. ஹே கருப்பா. நீ ஏன் இங்க வந்த நான் உன்ன கூப்பிடலயே. என் வீட்டுக்காரர பைத்தியமாக்கி இப்படி உட்கார வச்சி இருக்கியே உனக்கு இது நியாயமா சொல்லு. விட்டலன் சிரித்து கொண்டே ஆவளீ உங்களுக்கு என்ன குறை வச்சேன் உன் வீட்டுகாரர் கடனெல்லாம்
Read 5 tweets
24 Jun
ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட "Transperancy international" பத்திரிக்கை ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 125 வது இடத்தை பிடித்துள்ளது. மோடி பதவி ஏற்கும் போது இந்தியா 62 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே #தமிழகம் 16 வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் பெற்றிருக்கிறது! 2010 #திமுக ஆட்சியின் போது தமிழகம்தான் இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகித்ததாகவும் அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் மத்திய அரசின் துறைகளில்
எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்கட்சியாக முதலிடத்தை #காங்கிரஸும் 2ஆம் இடத்தை #திமுகவும் 3ஆம் இடத்தை #கேரளகம்யூனிஸ்ட்டும் நான்காவது இடத்தை #ஆம்ஆத்மி கட்சியும் பிடித்திருக்கிறது. இதில் ஆம்ஆத்மி 2 கோடி
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(