#இந்தியாவின்_கருநாடக #மாநிலத்தின்_மாண்டியா #மாவட்டத்தில் #பாண்டவபுராவருவாய் #வட்டத்தில்_மேல்கோட்டை #என்ற_திருநாராயணபுரம் #எனும்_மலையூரில் #அமைந்துள்ளது.

இங்குள்ள மலைக்குன்றின் மீது யோக நரசிம்மர் உறைந்துள்ளார்.

மூலவர் பெயர் திருநாராயணர்;

உற்சவர் பெயர் செல்வநாராயணர்; Image
தாயார் பெயர், திருநாராயணி.

தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தை.

#அமைவிடம்

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51 கி. மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 133 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

#வரலாறு

12ஆம் நூற்றாண்டின் Image
முற்பகுதியில் இராமானுசர் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விட்டுணுவர்த்தனின் உதவியோடு நிருமாணம் செய்து "திருநாராயணபுரம்" என அழைக்கும்படி செய்தார். Image
#வைரமுடி_சேவை

#பங்குனி_மாதப்
#பூச_நட்சத்திரத்தில் நடைபெறும்
'#வைரமுடிச்_சேவை' விழாவில், இராமானுசர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து வைரமுடிச் சேவை கொண்டாடுகின்றனர்.

#பின்_தங்கத்தாலான #கருட_வாகனத்தின்_மீது நான்கு
மாடவீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச் செய்யப்படுகிறது.

இவ்வைரமுடிச் சேவை இப்போதும் இரவுப்பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது.

#திருவிழாக்கள்

1. பங்குனி மாத பிரம்மோற்சவம்
2. நரசிம்ம ஜெயந்தி
3. இராமானுசர் ஜெயந்தி,
4. பங்குனி பூசத்தில் வைர முடிச்சேவை.
#தலச்_சிறப்பு

இங்குள்ள கல்யாணி தீர்த்தத்திலிருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மரைத் தரிசிக்கலாம். இவரது சன்னதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன.

யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்குப் படிகளாக இருப்பதாக ஐதீகம். நரசிம்மரைத் தரிசித்தவர்க்கு கிரகதோசம்
அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

மலையில் இராமானுசரின் பாதம் உள்ளது. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம்.

தீர்த்தக்கரையில் #பிந்துமாதவன், #நாராயணன், #இலட்சுமிநரசிம்மர், #மாருதி சன்னதிகள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கிருஷ்ணதாசன்

கிருஷ்ணதாசன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @krishnananban55

15 Jul
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய வெண்கல உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

அது சரி.. குருவாயூர் கோயிலில் Image
இதற்கு அப்படி என்ன விசேஷம்..?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது.
ஆனால் குழந்தை கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்கு கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது....

அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய
Read 12 tweets
15 Jul
சினிமாவைக் கொண்டு நம் இதிகாசத்தை அழிக்கும் முயற்சி.

சிவாஜி நடித்த பழைய கர்ணன் திரைப்படத்தில் உண்மையான மகாபாரதம் எப்படி பொய்யாக திரிக்கப்பட்டது –ஒரு பார்வை.....

ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் Image
ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது.....

ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடும் வாய்ப்பே அதிகம்...

இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி:

இறுதியில் கிருஷ்ணர்
கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி. எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை என்பதால், பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்று வரையில் நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் இதில் எள்ளளவும்
Read 17 tweets
13 Jul
கலங்காதே !

எதற்கும் கலங்காதே !

உன்னைப்பற்றி எத்தனை
அவதூறு சொன்னாலும்
கலங்காதே !

உன் மேல் வார்த்தைகளை
நெருப்பாய் உமிழ்ந்தாலும்
கலங்காதே !

உன் மேல் அபாண்டமாய்
பழி சுமத்தினாலும்
கலங்காதே !

உன்னை புழுவைவிட
கேவலமாக நடத்தினாலும்
கலங்காதே !

உன்னை மனிதராய்
நடத்தாவிட்டாலும் Image
கலங்காதே !

உன்னை எவ்வளவு பாடாய்
படுத்தினாலும்
கலங்காதே !

நீ செய்யாத பாவங்களை நீ
செய்தாய் என்று
பொய்சத்தியம் செய்தாலும்
கலங்காதே !

உன்னை பலரோடு தொடர்பு
செய்து பேசினாலும்
கலங்காதே !

உன்னிடம் காரியங்களை சாதித்துக்கொண்டு உன்னை எச்சில் இலையாக
வீசி எறிந்தாலும்
கலங்காதே !
உன்னை நம்பவைத்து ஏமாற்றி
கழுத்தை அறுத்தாலும்
கலங்காதே !

உன்னை அழிப்பதற்காக உன்னிடம்
நன்றாகப் பழகுபவர்களே உனக்குக்
குழி பறித்தாலும்
கலங்காதே !

உன்னைப் பற்றி எத்தனை
மோசமாகப் பேசினாலும்
கலங்காதே !

உன் வளர்ச்சியைத் தடுக்க
எத்தனை சூழ்ச்சி செய்தாலும்
கலங்காதே !
Read 7 tweets
13 Jul
தேர் இழுப்பதினால்
இவ்வளவு நன்மைகளா?
நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில்
காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார்.
அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.
ஒரு முறை தேர்வடம் Image
இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார். “ தேர்
இழுத்தாயோ ….” என பெரியவர் வினவ ஆம் அதன்பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார்.
தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும்.
Read 10 tweets
12 Jul
உத்தவரின் ஆசை

துவாரகை அரண்மனையில், கண்ணன் அருகே அமர்ந்திருந்தார் உத்தவர். அவரது முகத்தில் கடும் யோசனை. கண்ணன் பிரியமாகக் கேட்டான்: "உத்தவரே! எதைப் பற்றியது உங்கள் ஆழ்ந்த யோசனை? நான் தெரிந்துகொள்ளலாமா?'' எல்லாவற்றையும் தெரிந்த கடவுளிடமிருந்து எதுவுமே தெரியாததுபோல் ஒரு வினா! Image
உத்தவர் நகைத்துக் கொண்டார். பகவானிடம் தான் வெளிப்படையாக இருப்பது அவசியம் என்பதையும் அவர் அறிவார்.

ஒருபெருமூச்சுடன் சொல்லலானார்: "பிரபோ! நானும் எத்தனையோ ஜபதபங்கள் செய்துவிட்டேன். என்னை எல்லோரும் ரிஷி என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், மகரிஷி என்ற பட்டம் மட்டும் இன்னும் எனக்குக்
கிட்டவில்லை. முனிவர்களிடையே நானும் ஒரு மகரிஷி என்ற அந்தஸ்தைப் பெற விரும்புகிறேன், என்றார்.

கண்ணன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். "ஆசையையெல்லாம் முற்றும் துறந்த முனிவருக்கு, மாபெரும் துறவி' என்ற பட்டம் பெறும் ஆசையைத் துறக்க முடியவில்லையே! பற்றற்றான் பற்றினைப் பற்றிக்கொண்டு
Read 40 tweets
5 Jul
#ஸ்ரீ_க்ருஷ்ணாஷ்டகம்

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூரமர்தனம் |
தேவகீ பரமானந்தம் க்றுஷ்ணம் வந்தேஜகத்குரும் ||

என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன் ஜகத் காரணம் என்பதால்! ஹே! கிருஷ்ணா,தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு
கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால்தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்கொண்டிருக்கிறார்..
கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே.அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? )

அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(