#இன்றையசிந்தனைகள்

#இராமகிருஷ்ணரின்உபதேசம்

எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி.
இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.
#சுவாமிவிவேகானந்தரின்
#வீரமொழிகள்
இல்லறத்தான் இறைபக்தி கொண்டவனாக இருக்க வேண்டும் இறை ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும்.அதேவேளையில் அவன் இடையீடின்றிச் செயல்புரிய வேண்டும்.செயல்கள் அனைத்தின் பலனையும் அவன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
#ஆசாரக்கோவை

எச்சில் அற - எச்சில் அறும்படி
முக்கால் குடித்து - முக்குடி குடித்து

வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.
#சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
ஒருவனுடைய ஆயுள், செய்யும் வேலை, வசதி, கல்வி, மரணத்தின் தேதி ஆகியவைகள் கருவிலேயே நிச்சயக்கப்படுகிறது.
#நாலடியார் மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்
#திரிகடுகம்
ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக்
கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின்
சீலம் இனிது உடைய ஆசானும்,- இம் மூவர்
ஞாலம் எனப் படுவார்.
#திருக்குறள்
செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்
#பகவத்கீதை
வினையின் விளைவையும், நஷ்டத்தையும், துன்பத்தையும், தன் திறத்தையும் எண்ணிப்பார்க்காமல் மயக்கத்தால் எக்கர்மம் தொடங்கப்படுகிறதோ அது தாமஸம் எனப்படும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🇮🇳🚩துர்கா 🚩ஜெய்ஹிந்த்🕉️🔱🚩

🇮🇳🚩துர்கா 🚩ஜெய்ஹிந்த்🕉️🔱🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbilshanmu

9 Aug
#மாயை
இதற்கான பல விளக்கங்களில் ஒரு விளக்கம் யாதெனில்...

நாம், காண்பவை அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க விளையும் போது அது விரிந்து கொண்டே செல்கிறது. அதற்கு உதாரணம் வானம். அதைப் பார்க்கும் போது அதன் எல்லைகள் முடிவில்லாமல் விரிந்து கொண்டே இருப்பதுதான்...1

நாம் தனியாக ஒரு பொருளை
மாத்திரம் எடுத்து அதை நுணுக்கமாக அறிய விரும்பி பொடித்துக் கொண்டே போனால், அணுக்களாகி, குவார்க்குகளாகி இன்னும் என்னவெல்லாமோ ஆகி, ஆகி, ஆகிக்கொண்டே இருக்கும்.2
ஆக,நாம் இந்த இரு extremeகளையுமே தொடர்ந்து விரட்டிக் கொண்டே போகும்போது..

"இந்தா புடிச்சிக்கோ"வென அவைகளும் விரிந்து கொண்டும்,
நுணுகிக் கொண்டும் செல்லும்.

இதுதான் "அடியையும்-முடியையும்" காணச்சென்று தோற்பது என்பது!

அதனால்தான் மாயைக்குப் பின்னால் ஓடப்பிடாது என்பது!

இருப்பது இறைவனாகிய ஆத்மன் ஒருவனே!

நம்மால் ஏதாகிலும் அடைய முடியும் என்ற ஒன்றிருந்தால்,

அது இந்த இறைவனாகிய ஆன்மா மாத்திரம்தான்!
Read 6 tweets
9 Aug
#பகவத் #கீதையில் #பகவான்

கிருஷ்ணன் உபதேசம்; திருநீறு
'விபூதி பூதிரைச்வர்யம்' என்று ‘அமர கோச’த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்த பின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னியுடம் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மகா பஸ்மம்.
எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்துவிட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மகா பஸ்மம். அவன் பஸ்மமாக நீற்று வெளுத்துப் போனதற்கு முந்திய மாறுதல் கருப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐஸ்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
ரொம்பவும் விலைமதிப்பான வைரமும்
Read 6 tweets
7 Aug
ஓம் சரவணபவ 🙏

மனிதனுக்கு உயிரை கொடுத்தவன் இறைவன்

அந்த மனிதனுக்கு விதி முடிந்தால் அவனது மரணம் தவிர்க்க முடியாது.

இறைவனின் அங்கமாக இருந்து வரும் இயற்கைக்கு எதிராக‌‌..விரோதமாக..‌. மனிதன் செயல்பட்டால்..

நோயின் தாக்கத்துக்கு ஆட்பட்டு நோயாளி ஆகி துன்ப்படுகிறான், துயரப் படுகிறான். Image
அத்தகைய கொடிய நோயின் தாக்கத்துக்கு உள்ளான் மனிதனுக்கு...

இறைவனின் கருணை பார்வை கிட்டினால்..

இறைவன் அவனை நாடினால்..

எந்தவித நோயானலும் அந்த நோயிலிருந்து விடுபடுகிறான், குணமாகிறான்.என்பது

உலகில் பிறந்து..இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகின்ற உலக மக்கள் 99% சதவீத நம்பிக்கையாகும்.
அந்த மனிதனின் தனது கோரிக்கை இறைவனிடம் வைத்து அதை நிறைவேற்றிக் கொள்ளவும்

மனிதன் இயற்கையோடு இணைந்து வாழவும் மனிதனை நல்வழிப்படுத்தவும் தான்

இறைவனின் இல்லங்களான
திருக்கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் இருக்கின்றன.

இத்தகைய சிறப்புமிக்க
இறைவனின் இல்லங்களை அந்த
Read 4 tweets
28 Jul
பத்தர்தமக்கு எளியோனே ...

அந்த காட்டில் ஒரு வேடன் மிருகங்களை வேட்டையாடி தம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருந்தான்.அவன் போதாத நேரம் அதே காட்டில் தவத்திற்காக தங்க வந்த ஒரு துறவி அவனிடம் , "இப்படி மிருக்கங்களைக் கொன்று பாவம் சேர்க்கிறாயே..இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற
நினைப்பு உன்னிடம் இல்லவே இல்லையா..?"என்றார்.
"சாமி...என்னைப் போல ஆட்களுக்கு எல்லாம் உங்களைப் போல பெரியவங்கதான் சாமி...எனக்கு எல்லாம் எப்படி சாமி கண்ணுக்குத் தெரிவார்.."
துறவிக்கு தவம் கெடக்கூடாது ...இவன் வேட்டை யாடுவது அவருக்கு இடைஞ்சல்,, .. "இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்...
உனக்கும் நேரில் வருவான்...நீ நாளை காலை சூரிய உதயத்தில் குளித்து ஈர ஆடையுடன் ஆற்றின் கரையில் வட திசை பார்த்து நில்..உன் கண்ணில் எது முதலில் படுகிறதோ அதையே நினைத்து 48 நாட்கள் தியானம் செய்..கடவுள் தோன்றுவார்..." என்று துறவி சொன்னார்.அவன் அப்படியே விடிந்ததும் குளித்து முடித்து
Read 11 tweets
28 Jul
#அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய மாலை வணக்கம் ..!🙏🙏🙏

#திருச்சிற்றம்பலம் ..!

23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?

ஆமாம் உண்மை தான் .

நீங்கள் கிரிவலம் போகும் பாதையில் அமைந்துள்ளது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்
அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது .

1 ஸ்ரீ அப்புசாமி சுவாமிகள்
2 அய்யன் சுவாமிகள்
3 அவிநாசி லிங்கம் சுவாமிகள்
4 அருணாசல சுவாமிகள்
5 இராமலிங்க சுவாமிகள்
6 இராமகிருஷ்ண சுவாமிகள்
7 கண்ணப்ப சுவாமிகள்
8 சங்கலி சுவாமிகள்
9 பட்டாம்பி சுவாமிகள்
10 மணி சுவாமிகள்
11 சங்கர நம்பி சுவாமிகள்
12 சடைச் சுவாமிகள்
13 காளத்தி சுவாமிகள்
14 பிச்சாண்டி சுவாமிகள்
15 சுந்தர சுவாமிகள்
16 சிவனேசன் சுவாமிகள்
17 பத்தராசலம் சுவாமிகள்
18 லோகநாத சுவாமிகள்
19 சிவசாமி சுவாமிகள்
20 கண்ணாடி சுவாமிகள்
21 குட்டி சுவாமிகள்
Read 4 tweets
27 Jul
இனிய மாலை வணக்கம் நண்பர்களே

திருஞானசம்பந்தர் சுவாமிகள்
தேவாரத்திரட்டு
திருச்சிற்றம்பலம்

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ
🌹வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் வாளை மீன்கள்
துள்ளிச்செல்கின்றன; பெண்கள் குளத்தில் குளிக்கின்றனர். இப்படி இருப்பது கோலக்கா என்னும் தலம். இங்கே இருக்கிறான் சிவன்.
இச்சிவன் சடையில் பிறை சூடி இருக்கிறான்; உடம்பில் விபூதி பூசி இருக்கிறான்; கீள்உடை கட்டி இருக்கிறான். இப்படிப்பட்ட உருவத்தை ஏன் கொண்டான்?
நலங்கொள் காழி
ஞான சம்பந்தன்
குலங்கொள் கோலக் கா உளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வதே.

🌹🌹**
பல நன்மைகளை உடையது சீர்காழியில்
உள்ளவர் ஞான சம்பந்தர். அவர் திருக்கோலக்கா இறைவனைப் பாடி இருக்கிறார். அத்தலம் பெருமை உடையது. அவர் பாடிய பாடல்கள் வலிமை உடையவை.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(