”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” வெளியானது ஐ.பி.சி.சி.யின் அறிக்கை.
கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்து பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிப்பிலிருந்து
மீண்டுகொண்டோ இருந்தது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த
அறிவியலாளராலும் கணித்திருக்க முடியவில்லை. அறிவியலாளர்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த பேரிடர்களை முன்கூட்டியே கணித்து விடும் அறிவியல் தொழில்நுட்பங்களால் கூட இந்த வெள்ள பாதிப்பை கணித்திருக்க முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் காலநிலையில் குறிப்பிட்ட அளவு மாற்றம் நிகழும் என
ஏற்கெனவே நாம் கணித்திருந்த பல அளவுகோல்களை சுக்கு நூறாக உடைத்தது ஜூலை மாதத்தில் நடந்த தீவிர காலநிலை நிகழ்வுகள். இந்த பின்னணியில்தான் ஐ.பி.சி.சி. அமைப்பு இன்று ஜெனிவாவில் தனது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.சி.சி. தற்போது தனது ஆறாவது மதிப்பீட்டு காலத்தில் உள்ளது. இந்த
காலத்தில் அமைப்பின் முதல் பணிக்குழுவின் Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்தும் மனிதர்களால்தான் காலநிலையில் மாற்றங்கள் உண்டாகின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தினாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலையானது 3°செல்சியசை தொட்டுவிடும் என்பதே ஆகும்.2014ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு
அறிக்கையில் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் நடவடிக்கை காரணம் என்று குறிப்பிட்டிருந்தது. இன்று வெளியாகியிருக்கும் அறிக்கையில் 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்பதை
அறிவியலாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் புவியின் மீதான மனிதர்களின் செல்வாக்கு ஏற்கெனவே புவியின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வானிலை மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகளை பாதித்துள்ளது.
2014ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்குப்
பிறகு வெப்ப அலைகள், கனமழை, வறட்சி, புயல் போன்ற பேரிடர்களின் தீவிரத்திற்கு மனிதர்களின் நடவடிக்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது அதிகமாகவோ, நடுத்தரமாகவோ அல்லது குறைவாகவோ என எந்தப் பாதையில் சென்றாலும் புவி வெப்பமானது 1.5 செல்சியஸ் அல்லது 2 செல்சியஸ்
அளவை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் எட்டிவிடும். புவி வெப்பமயமாதலானது நீர் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் பருவமழைப் பொழிவு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் அதி தீவிர மழைப்பொழிவும், வறட்சியும் ஏற்படும். சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் தொடச்சியாகவோ அல்லது ஒரே
நேரத்திலோகூட நிகழும்.இதனால் பாதிக்கப்படும் மக்கள் அதிலிருந்து மீளவே முடியாத நிலை உண்டாகும்.
கார்பன் டை ஆக்ஸ்டு உமிழ்வு அதிகமாகும் பட்சத்தில் நிலமும் கடலும் கார்பன்டை ஆக்சைடை உள்வாங்கும் திறனை இழக்கும்.
பசுமை இல்ல வாயுக்களின் கடந்த கால மற்றும் எதிர்கால உமிழ்வால்கடல், பனிப்பாறைகள்,
கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்.
2019ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் செறிவானது அதற்கு முந்தைய 2மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவானது அதற்கு முந்தைய
800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். 1970ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும்.
1900ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும்.
2100ஆம் ஆண்டில் 2மீ அளவிற்கும் 2150ஆம் ஆண்டில் 5மீ அளவிற்கும் உயர வாய்ப்புள்ளது. கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கையானது 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஆர்க்டிக் கடற் பகுதியில் உள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979 முதல் 1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு
இடைப்பட்ட காலத்தில் 40% மற்றும் 10% குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம். அறிவியல் ஆதாரங்களுடன் காலநிலை மாற்றத்தின் தற்போதைய நிலை மற்றும் தீவிரத்தை இந்த அறிக்கை நமக்கு எடுத்துரைத்துள்ளது. பாரிஸ் ஒப்பந்ததின் படி உமிழ்வை குறைத்தால் கூட இனி நமது
இயல்பு வாழ்க்கையானது பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும் என்பதே இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தியாகும். தற்போது இருக்கும் உமிழ்வு அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல் மிக வேகமாக நம் வாழ்விடங்களை பேரிடர்களில் இருந்து தப்பிக்கும் வகையில் தகவமைத்துக் கொள்ள நாம் முயல வேண்டும்.இனி நாம்
வெளியிடும் ஒவ்வொரு சிறு உமிழ்வும் இப்புவியின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசோ, தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும், அனல்மின் நிலையங்களையும், நிலக்கரி மற்றும்
யுரேனிய சுரங்கங்களையும் திறப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.அதோடு மட்டுமில்லாமல் இது போன்ற திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களையும் திருத்தி அமைத்து நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. அறிவியல் நம்
இருத்தியலின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கையை கொடுத்து விட்டது.அதற்கு செவிமடுத்து செயல்பட வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.அண்மையில் MSSRF அமைப்பின் ஆண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலநிலை மாற்றத்தை இந்த அரசு மானுட குலத்திற்கு ஏற்பட்ட முக்கியமான
பிரச்சனையாக கருதுவதாக தெரிவித்திருந்தார். மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய உரையாக அது அமைந்தது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும் தகவமைத்துக் கொள்ளவும் நமது மாநிலத்திற்கென சிறப்பான
காலநிலை மாற்ற செயல் திட்டம் ஒன்றையும் சட்டம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். மாவட்ட அளவில் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டம் மற்றும் மையங்களை அமைக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோருகிறோம்.
ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் டாலர்கள் சம்பாதிக்கும் "Sadio Mane of Senegal" (West Africa) என்றழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் தனது டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் ஆங்காங்கேத் தோன்றினார்.
ஒரு நேர்காணலில் அதுகுறித்துக் கேட்கப்பட்டபோது
நான் அதைச் சரி செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார். மீண்டும் “ஏன் நீங்கள் அதைச் சரிசெய்வதற்குப் பதிலாகப் புதிய மொபைலை வாங்கக்கூடாது?” என்று கேட்கப்பட்டபோது “என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 பெராரி கார்கள், 2 ஜெட் விமானங்கள், வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை வாங்கமுடியும்.
ஆனால் நான் ஏன் அவற்றை வாங்க வேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்டார்.
தொடர்ந்து “நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், என்னால் படிக்க முடியவில்லை, அன்று எனக்கு விளையாடக் காலனிகள் இல்லை, நல்ல ஆடைகள் இல்லை, உணவு இல்லை; ஆனால் இப்போது என்னிடம் ஏராளம் இருக்கிறது, அதை வெளிக்காட்டிக்
கடந்த வாரம்தான் பாக்கிஸ்தானில் உள்ள ஒரு நகரமும், ஐக்கிய அரபு எமீரகத்தில் ஒரு நகரத்திலும் “வெட் பல்பு வெப்பநிலையை” (wet-bulb) எட்டிவிட்டது என்று கவலையோடு @Poovulagu குழுவில் விவாதித்து கொண்டிருந்தோம்,ஆனால் இன்று சென்னை நகரமே அந்த வெப்பநிலையை நெருங்கி கொண்டிருப்பதாக செய்திகள்
வருகின்றன. ஒவ்வொரு நகரத்திற்கும் பகுதிக்கும், அதன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் (humidity) இவற்றைக்கொண்டு இந்த வெட் பல்பு வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. இந்த வெப்பநிலையை ஒரு பகுதி எட்டிவிட்டால் அதன்பிறகு நம் உடல் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் தன்மையை இழந்துவிடும். அதற்குபிறகு
குளிர்சாதன வசதியில்லாமல் இருக்கமுடியாது. அப்படியெனில் விவசாயம், கட்டிடவேலை போன்ற வெளிப்புரத்தில் நடைபெறக்கூடிய வேலைகளை செய்யமுடியாது. எவ்வளவுதான் அதிக வெப்பத்திற்கு பழகியிருந்தாலும் இந்த WBT 32’டிகிரியை எட்டிவிட்டாலே அதன்பிறகு எந்தவேலையும் செய்யமுடியாது, 35டிகிரியை எட்டிவிட்டால்
தமிழ்நாட்டை இராணுவமயமாக்க ஒன்றிய அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் அணுவுலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான், உலகமே கைவிட்ட ஈனுலைகள் மூன்று கல்பாக்கத்தில் அமைக்கப்படுகின்றன. ஈனுலைகள்தான் ப்ளுட்டோனியத்தின் ஊற்று, இந்தியாவில் உள்ள கனநீர் உலைகளின்
அணுக்கழிவுகள் கல்பாக்கத்தில்தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இரண்டாவது மறுசுழற்சி மையமும் கல்பாக்கத்தில் அமைகிறது, மறுசுழற்சி மையங்களில் அணுக்கழிவுகளில் இருந்து ப்ளுட்டோனியம் பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. கூடங்குளத்தில் 6உலைகளும் அமைக்கப்படும்
பட்டச்சத்தில் உலகில் ஒரே இடத்தில் 6000மெவா உற்பத்தி செய்யும் அணுவுலைகளின் பட்டியலில் இணைந்துவிடும், இங்கேயே மென்நீர் உலைகளிலிருந்து வரும் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஆலைகள் அமைக்கப்படும்.இன்னும் 20-30ஆண்டுகளில் நியூட்ரினோ ஆயுதங்களை உருவாக்க பயன்படும்ஆய்வகம் தமிழ்நாட்டில்
ஆண்டிபயாடிக்ஸ் பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த நெறிமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக்ஸால் நம் உடம்பில் உள்ள “நோய்க் கிருமி எதிர்ப்பு கட்டமைப்பு” வலுவிழக்கிறது. ஆங்கிலத்தில் Anti-microbial resistance (AMR) என்று
அறியப்படும் இந்த கட்டமைப்புதான் பல்வேறு கிருமிகளால் நமக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது. ஏஎம்ஆர்தான்“சுகாதார துறையின் காலநிலை மாற்றம் என்கின்றன” ஆய்வுகள்.அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் 1கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில்
பயன்படுத்தப்படும் மருந்துகளை தவிர தொழில்முறை இறைச்சி உற்பத்தியிலும் பயன்படுத்தபடும் ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளும் ஏம்எம்ஆரை வலுவிழக்கச் செய்யும் வேலையை செய்கிறது. அதனால்தான் “மருந்தை மீறிய காசநோய் மற்றும் மலேரியா நோய்கள்”(drug resistant TB &Malaria) அதிகமாகின்றன.
கொரோனா தொற்று நமக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இனிமேல் மனித நலன் என்ற ஒன்று தனியாக கிடையாது, காட்டுயிர் நலன், தாவர நலன், சூழலியல் நலன் இவை எல்லாமும் இணைந்ததுதான் மனித நலனாக இருக்க முடியும். காலநிலை மாற்றம் தாவரங்களின் ஊட்டச்சத்து அளவை (Nutritional value) சுமார் 10-12% வரை
குறைக்கிறது, அதனால் நமக்கு தேவைப்படும் உணவின் அளவு அதிகரிக்கும். காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர்களின் வாழ்விடங்கள் சுருங்குகின்றன, இவை எல்லாம் மனித நலனில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
உலகநாடுகள் எல்லாம் "ஒருங்கிணைந்த நலன்" (One Health) குறித்த முன்னெடுப்புகளைதான்
அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இது குறித்த விவாதங்கள் துவங்கவேண்டும். ஒருங்கிணைந்த நலன் எதை குறிக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமுறைகளின் ஒருங்கிணைந்த மருத்துவம் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது குறித்தெல்லாம் இன்று இரவு 9.15 மணிக்கு நம்முடன் ட்விட்டர் ஸ்பேசஸில்
மீண்டும் பீட்டா:-மாட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு பதிலாக“தாவரப் பாலை”(plant milk)பயன்படுத்துமாறு @Amul_Coop க்கு @PetaIndia கடிதம் எழுதியுள்ளது.இந்த அறிவுரைக்கு சொல்லப்பட்டுள்ள காரணம்,“உலகம் முழுவதும் வீகன் (vegan)உணவை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான்”என்று சொல்லப்பட்டுள்ளது.
பீட்டா சொல்லும் தாவர பால், மரபணு மாற்றப்பட்ட சோயாவிலிருந்து(GM Soya) உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பயிர்களுக்கு எதிரான மனநிலை உருவாகிவரக்கூடிய நிலையில் தங்கள் நிறுவனங்களின் மரபணு விதைகளுக்கு புதிய சந்தையை தேடும் முகமூடிதான் இந்த தாவரப் பால்.
பீட்டாவின் இந்த “அறிவுரைக்கு” தக்க பதிலை தந்துள்ளார் @Rssamul . கால்நடைகளை வளர்த்து அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும் 10கோடி பங்குதார்ர்களில் அதிகமானோர் நிலமற்றவர்கள் எனவும், பலபத்தாண்டுகளுக்கு முன்னர் அமுல் கூட்டுறவு இவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை கெடுக்கவே இந்த