பாபர் மஸ்தித் தீர்ப்பை முன் கூட்டியே கணித்தவர் கலைஞர் அவர்கள் அதை நெகடிவ் அப்ரோச்சாக ராஜாஜி மண்டபத்திலே முன்பே சொல்லிவிட்டார் .
இது குருட்டுத் தீர்ப்பல்லவா என்று பித்தன் கேட்கிறான் என தொடங்கிய கணீர் குரலில்
அடையாளம் கண்டுகொண்டிருந்தால் அயோத்திப் பிரச்சனை அல்லவா வரும் ?
எனவே இது நெகடிவ் அப்ரோச் –எதிர்மறை அணுகுமுறையைக் கொண்டு ,ஒரு பாசிடிவ் அப்ரோச்சுக்குக் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள்
உங்கள் தீர்ப்பு
உண்மையில்
தீர்ப்பல்ல
ஒரு பக்க வாதம்
ஒன்சைடு ஆர்க்யூமெண்டாம்-தமிழிலே ஒரு வாதம் : நிறுத்தி சொன்னால் ஒரு பக்கவாதம்.
(19.07.1998) அன்று நிகழ்ந்த கவிக்கோ” அப்துல் ரகுமானின் மணி விழாவில் “மாண்புகு முதல்வர் கலைஞர்” ஆற்றிய உரையிலிருந்து.
ரகுமான் அவர்கள் எழுதிய “பித்தன் “ என்ற நூலிலே சில கவிதை வரிகளை உங்களிடத்தில் எடுத்துக் காட்டுவதை நான் பெருமையாக கருதுகிறேன் .
பித்தன் ஆடையை கிழித்துக் கொண்டிருக்கிறான் .அவனுடைய செயலைப் பார்த்து ரகுமான் கேட்டிருக்கிறார் .
சட்டையை ஏன்
கிழிக்கிறாய் ? என்றேன் .
அதற்கு பித்தன் சொல்கிறான் –
கடிதத்தைப் படிக்கவேண்டும்
என்றால் உறையைக்
கிழிக்கத்தானே வேண்டும் “
என்கிறான் .எவ்வவளவு அருமையான தத்துவம் இதிலே அடங்கியிருக்கிறது என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் தெரிந்து கொள்ளாலாம் .
மேலும் பித்தன் தொடருகிறான் .
பூக்களும் பறவைகளும்
ஆடை அணிவதில்லையே ?
நீங்கள் ஆபாசமானீர்கள்,
அதனால் உங்களை
ஆடையால் மறைத்தீர்கள் .
மனிதர்கள் ஆபாசமானவர்களாம்-பூக்களும் பறவைகளும் ஆபாசமர்ரவைகளாம் –இவ்வாறு சொல்லிவிட்டு மேலும் சொல்கிறான்.
தேங்கிய நீர்தான்
பாசியை
உடுத்திக் கொள்கிறது .
தேங்கிய நீரிலே பாசி படிகிறதே ,அதைத் தான் கவிஞர் பித்தன் வாயிலாக ஆடை என்று சொல்கிறார்.
தோல் கூட ஆடைதான் என்பதை பாம்பு அறிந்திருக்க்கிறதாம் .இந்த ஆடை என்பது –நான் முதலிலே குரிப்ப்பிட்டேனே -தேங்கிய நீர் தான்
பாசி பாசியை உடுத்திக் கொள்கிறது என்று .அதைப் போலப் பாலைக் கூட சூடாக்கி காய்ச்சி ஆற வைத்தால் ,மேலே ஆடை உருவாகிறது .அதை ஆடை என்கிறோம் .அந்த ஆடையைக் கொண்டு வந்து தேங்கிய நீரில் திணிக்கிறார் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் .அது கூடப் பாசியை உடுத்திக் கொள்கிறது .
இந்தப் என்ற கவிதை தொகுப்பு முழுவதையும் படித்துப்பார்த்தால் –எனக்கு தோன்றுகின்ற எண்ணம் , அவரே முன்னுரையிலே குறிப்பிட்டது போல எதிர்மறையாக எல்லாவற்றையும் சொல்வது என்கிற முடிவோடு சொல்லப்பட்ட விஷயங்கள் . எதிர்மறை உடன்பாடு என்பதில் எதிர்மறையாகச் சொல்லப்பட்டவை . “பாசிட்டிவ்”
“நெகட்டிவ்“ என்று ஒன்றாகச் சேர்த்தால் தான் ஒளியே கிடைக்கும் .முதலில் “நெகட்டிவ்“ தயாராகிறது :பிறகு பாசிட்டிவாக படமாக உருப்பெருகிறது .அதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் எல்லாம் பாசிட்டிவ்விலேயே –அந்த அணுகு முறையிலேயே பித்தனுடைய கவிதைகள் வெளியாகிருக்கின்றன
என்று தெரிந்து கொள்ளலாம்.
அனாதை என்ற தலைப்பில் –
யார் அந்த
அனாதை ?என்று கேட்டேன்
கவிஞர் கேட்கிறார் –அதற்கு பித்தன் சொல்கிறான்.
“உண்மை “ என்றவன் ,
அந்த அனாதை என்பவன் உண்மையாம் .
கடைத்தெருவில்
அது அனாதையாக
அழுது கொண்டிருத்தது
அதை யாருமே
அடையாளம் கண்டுகொள்ளவில்லை
என்று கூறினான்.
ஏன் ? என்றேன்
நெற்றியில் திருநீரோ ,
நாமமோ இல்லை ,
மார்பில்
சிலுவை இல்லை ,
தலையில்
தொப்பியில்லை
அதனால் அதை
யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை ‘
என்றான்.
அடையாளம் கண்டுகொண்டிருந்தால் அயோத்திப் பிரச்சனை அல்லவா வரும் ? எனவே இது நெகடிவ் அப்ரோச் –எதிர்மறை அணுகுமுறையைக் கொண்டு ,ஒரு பாசிடிவ் அப்ரோச்சுக்குக் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள்
இவைகள் எல்லாம் இருந்தால்கூட எல்லோரும் ஒன்றுதான் என்பதை நிலை நாட்டுவதற்காக அதைச் சொல்கிறார்.
இப்போது கூட பாருங்கள் .இந்த ஒரு காலத்தில் நான் கலந்துகொண்ட விழாக்களில் முதலில் கலந்து கொண்டது திருநாவுக்கரசு அவர்களின் பொன் விழா .
இன்று நான் கலந்துகொள்கிற விழா கவிஞர் அப்துல் ரகுமானின் மணி விழா.
இந்து –கிறித்துவர் –முஸ்லிம் என்ற இந்த மூன்று விழாகளிலே கலந்து கொள்கிறேனே இது அடையாளம் தெரிந்தாலும் கூட எல்லா வற்றிலும் நானே கலந்து கொள்வதிலிருந்து எல்லாமே ஒன்று தான் .
இந்துவாக இருந்தாலும்
கிறித்துவராக இருந்தாலும்
இந்து முஸ்லிம் சீக்இ சாயி. ஆபஸ் மே ஹை பாயி ,பாயி என்பார்களே அந்தப் பாடலை உள்ளடக்கிய அந்த உணர்வை எடுத்துக்காட்டத்தான் நெகட்டிவ் அணுகுமுறையிலே கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் ஒரு பாசிட்டிவ் செய்தியை நமக்கு சொல்கிறார்.
‘பக்கவாதம் “ எனும் ஒரு தலைப்பு .அதிலே ,ஓர் அருமையான தத்துவம்.
ஒன்றை
நல்லது என்றீர்கள்
ஒன்றைக் கெட்டது என்றீர்கள் ,
இது குருட்டுத் தீர்ப்பல்லவா என்று பித்தன் கேட்கிறான் .
உங்கள் தீர்ப்பு
உண்மையில்
தீர்ப்பல்ல
ஒரு பக்க வாதம்
ஒன்சைடு ஆர்க்யூமெண்டாம்-தமிழிலே ஒரு வாதம் : நிறுத்தி சொன்னால் ஒரு பக்கவாதம்.
போர்வையைக்
குளிர்காலத்தில்
நல்லது என்கிறீர்கள்
கோடைக்காலத்தில்
கெட்டது என்கிறீர்கள்
போர்வையில் இல்லை
நல்லதும் கெட்டதும்
விசிறியைக்
கோடைக்காலத்தில்
விரும்புகிறீர்கள்
குளிர்காலத்தில்
வெறுக்கிறீர்கள்
விசிறியிடம் இல்லை
விருப்பும் வெறுப்பும் .
மழை பெய்தால்
குடியானவன் போற்றுகிறான்
குயவன் தூற்றுகிறான்
மழையிடம் இல்லை
பாரபட்சம்
இது நல்லது
இது கெட்டது
என்று பிரிப்பதற்கு
நீங்கள் கீறும் கோடும்
ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா ?
எவ்வளவு அருமையான உவமை பாருங்கள் !
நல்லது கெட்டது என்ற இரண்டு சொல்லுக்கிடையில் –இந்த இரண்டு தன்மைக்கு இடையிலே இருப்பது பெரிய இடைவெளி அல்ல.
மிகச் சிறிய இடைவெளிதான்.
ஓர் இழை போன்ற இடைவெளிதான் என்று சொல்ல வந்த கவிஞர் இந்த இடைவெளி
பெரிய அகழி என்று சொல்லவில்லை
.
சிறிய வாய்க்கால் என்று சொல்லவில்லை.
பிறகு என்ன சொல்கிறார் ?
நல்லது கெட்டது என்று பிரிப்பதற்கு நீங்கள் கீறும் கோடும்
ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா ?
ஓடுகின்ற நீரில் கோடு கிழித்தால் எவ்வளவு நேரம் தாங்கும் அது ?
கிழிக்கும் போதே இரண்டும் ஒன்றாகி விடும் .
அந்த அளவிற்கு மெல்லிய இடைவெளி தான்.
நல்லது கெட்டது என்ற இந்த இரண்டு தன்மைகளுக்கு இடையே இருக்கிறது என்கிறார் .
மற்றொன்று எதையெதை நாம் சசிக்க மாட்டாமோ,அதையெல்லாம் பித்தன் ரசிக்கிறான். பித்தனா ரசிக்கிறான் ?
பித்தன் என்ற பெயரில் அப்துல் ரகுமான் ரசிக்கிறார் –காயங்களை ரசிக்கிறார் .
காயங்களை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
இருட்டின் உடலில்
இந்த
நட்சத்திர காயங்கள்
எவ்வளவு அழகாக
இருக்கின்றன
என்றான் .
பித்தன் என்ற மனசாட்சி ரகுமானிடம் இவ்வாறு கூறுகிறது .
மற்றொறு அழகான அருமையான சிந்திக்கத் தக்க நினைத்து நினைத்துப் பாராட்டத்தக்க ஒன்று .
காயம்படும் ஓலைதான்
சுவடியாகிறது
எழுத்தாணியால் சுவடியாகிறது
காயம்படும்
கல்தான் சிலையாகிறது
உளியினால்
காயம்படும் மூங்கில் தான்
கானம் பாடுகிறது
காயத்திற்கு இப்படி வக்காலத்து வாங்குகிறார் .
அடுத்து பாரம் :
பாரம் என்றால் எல்லோரும் வெறுப்பார்கள் .இந்தப் பாரத்தை தூக்கிக்கொண்டு போ என்று சொன்னால் ஒரு சலிப்பு வரும் .
ஆனால் பித்தன் சொல்கிறான் .
பாரத்தை
இறக்கி வைப்பது
மகிழ்ச்சியானது
என்கிறீர்கள்ஆனால்
மரணத்தில் அழுகிறீர்களே ,ஏன் ?
உயிர் பாரம் என்கிறோம் .உடம்பு சுமை என்கிறோம் .சரி இதைப் பெரிய பாரம் என்று சொல்லுகின்ற நீ மரணம் என்றவுடன் அழுகிறாய் ? அது தான் சுமை இறங்கி விடுகிறதே .
இப்படி இந்த பித்தனுடைய உவமைகளை ,கவிதைகளை , தத்துவங்களையெல்லாம் படித்துப் படித்து நானே அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகி விட்டேன் என்பதை ராஜாஜி மண்டபத்தில் நான் அறிவிக்கின்றேன் .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாக்-இ பாபர் என்பது ஆப்கானிசுத்தானின் தலைநகரமான காபுலில் உள்ள ஒரு வரலாற்றுப் பூங்கா ஆகும். முகலாயப் பேரரசை நிறுவி அதன் முதல் பேரரசராக இருந்த பாபரின் சமாதியும் இங்கேயே உள்ளது. இப் பூங்கா 1528 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பாபரின் குறிப்புக்களான "பாபர்நாமா" என்னும் ஆவணத்தில், காபுலில் ஒரு பூங்காவைக் அமைக்க பாபர் ஆணையிட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பாபர் கோவிலை இடித்தாரா?
எந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதியைக் கட்டினார் என்று சொல்லப்படுகின்றதோ அதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை
முகலாயர்களின் காலம் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெற்றது. சுமார் 450 வருட காலங்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த முகலாயர்களின் ஆதி அரசர் எனக் கருதப்படுபவர்தான் தைமூர்.
முகலாயப் பேரரசர் பாபரின் முப்பாட்டன். ஒருவகையில், தற்போது பெயர் சூட்டப்பட்டிருக்கும் பிள்ளை தைமூருக்கு, மரபணு ரீதியிலான தொடர்புடையவர்தான் அரசர் தைமூர்.
Emir Timur in the Gur-e-amir Mausoleum in Samarkand, Uzbekistan.
அரசர் தைமூர், முகலாயர்களில் கொடுங்கோல் அரசராகக் கருதப்பட்டவர். நாடோடி அரசர்களில் கடைசி தலைமுறை என்று கருதப்பட்டவர். அவருக்குப் பின்னான முகலாயர்கள் நிலையான ஒரு நிலத்தில்தான் தங்களது ஆட்சியை நிறுவினார்கள். செங்கிஸ்கானின் வழித்தோன்றலாகத் தன்னை அறிவித்துக்கொண்ட தைமூர்,
"பேரழகியான ஜஹானாரா மீது ஷாஜகான் பைத்தியமாக இருந்தார். தந்தையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டார் ஜஹானாரா. அவரால் மேற்பார்வையிடப்பட்ட உணவு மட்டுமே அரசருக்கு வழங்கப்படும் என்ற அளவுக்கு ஜஹானாராவின் கண்காணிப்பு இருந்தது".
ஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்?
"தந்தைக்கும் மகளுக்குமான உறவு குறித்து பரவலாக பேசப்பட்டது. இதுபற்றி ஜாடைமாடையாக பேசிய சில அரசவை அதிகாரிகள், 'தான் நட்ட மரத்தில் விளையும் பழங்களை பறித்து உண்ணும் உரிமை அரசருக்கு உண்டு" என்று கூறியதாக பெர்னியர் கூறுகிறார்.
முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மூத்த மகள் ஜஹானாராவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராணி மும்தாஜ் மஹலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது.
உடனே தாயின் அறைக்கு ஓடிச் சென்ற ஜஹானாரா, தாயின் பிரசவம் சிக்கலாக இருக்கிறது; குழந்தை கருப்பையில் இருந்து
பாதவத்தி எத்தனை பேரோட வாழ்ந்து அத்தனை பேரையும் கொன்று சந்தோஷ பட்டவள் .
கிளியோபாட்ராவின் மரணம். பெரிய கிளியோபாட்ராவின் வாழ்க்கை, காதல் மற்றும் இறப்பு.
கிளியோபாட்ரா VII (கிமு 69 - 30) - எகிப்தின் கடைசி ராணி, பண்டைய காலத்தின் மிகவும் பிரபலமான பெண்.ஒரு வேசி ராணி, எகிப்தின் தீய மேதை. நயவஞ்சகமான, கொடூரமான, கோழைத்தனமான மற்றும் நயவஞ்சகமான, மற்றவர்களின் துரதிர்ஷ்டங்களின் மீது அவளது நல்வாழ்வைக் கட்டியெழுப்ப,
இறுதியில் அவள் இறக்க நேரிட்டது, அவளுடைய சொந்த சூழ்ச்சிகளின் வலையமைப்பில் சிக்கிக்கொண்டது.
அறிவார்ந்த மற்றும் படித்த கிளியோபாட்ரா உலகின் மிக புகழ்பெற்ற பெண். அழகான மனிதர்களின் அரிய கலையை கிளியோபாட்ரா தேர்ச்சி பெற்றார், மேலும் வலிமை இன்னும் ஆண்களின் கைகளில் இருந்ததால், எகிப்திய
நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).