மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மக்களுக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கும் சேவை உரிமை சட்டத்தின் மூலம் அரசு அலுவலங்களில் அரசின் சேவைகளுக்காக பொது மக்கள் கெஞ்சி காத்திருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும்.
இவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த மாதிரி சட்ட வரைவு.
முழுமையாக படிக்க: arappor.org/RTS

இந்த மாதிரி சட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே விளக்கி உள்ளோம்.
1.இந்த சட்டம், அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் ,குறிப்பிட்ட கால அவகாசத்தில் அச்சேவைகளைப் பெறுவது அவர்களின் உரிமை என உறுதியளிக்கிறது.
2.சேவைகள்,அச்சேவைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி,தேவையான ஆவணங்கள் கட்டணம் ,விண்ணப்பிக்கும் முறை,அந்த சேவையை தரவேண்டிய அரசு அலுவலரின் தகவல்கள் மற்றும் அச்சேவையை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் ஆகியன குடிமக்கள் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு,
ஒவ்வொரு அரசு அலுவலகம் மற்றும் வலைத்தளத்திலும் ,இந்த சாசனம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

3.ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனித்துவமான எண்ணுடன் கூடிய ஒரு ஒப்புகை ரசீது வழங்கப்பட வேண்டும். இந்த தனித்துவமான ஒப்புகை எண் மூலம் விண்ணப்பதாரர்,
தனது சேவை விண்ணப்பத்தின் சமீபத்திய நிலையை இணையதளம் மூலம் அறிய முடியவேண்டும். மேலும் ஒப்புதல் ரசீதில் , விண்ணப்பித்த சேவை வழங்கி முடிக்கப்பட வேண்டிய கடைசி தேதி குறிப்பிடபட்டிருக்க வேண்டும்.

4.சேவை விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையும் ,
அதற்கான தெளிவான காரணங்களையும் முறையாக விண்ணப்பதாரருக்கு ,தபால் மூலமாகவோ ,இணைய தளம் மூலமாகவோ , முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும் . விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
'போதுமான ஆவணங்கள் இல்லை ' போன்ற பொதுப்படையான காரணங்கள் அனுமதிக்கப்படாது. நிராகரிப்புக்கு காரணமான குறிப்பிட்ட ஆவணம் அல்லது பிற காரணங்களை தெளிவாக நிராகரிப்பு ஆணையில் குறிப்பிட வேண்டும்.

5.சேவை நிராகரிப்பு, விண்ணப்பத்தைப் பெற மறுத்தல் அல்லது ஒப்புதல் ரசீது வழங்க மறுத்தல்
ஆகியவற்றால் பாதிக்கப்படும் விண்ணப்பதாரர், 30 நாட்களுக்குள் முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டாளர் அதே தனித்துவமான ஒப்புதல் ரசீது எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் அதே ஆன்லைன் போர்டல் மூலம் முதல் மேல்முறையீட்டின் நிலையைக் கண்காணிக்கலாம்.
6. மேல்முறையீடு பெறப்பட்ட 15 நாட்களுக்குள் அந்த மேல் முறையீட்டை, முதல் மேல்முறையீட்டு அதிகாரி முடிக்க வேண்டும். முதல் மேல்முறையீட்டு அதிகாரி தனது ஆணையை எழுத்து மூலம் விண்ணப்பதாரர் மற்றும் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆகியோருக்கு ஆன்லைன் போர்டல் மற்றும் அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் ஆணை பெறப்பட்ட 5 வேலை நாட்களுக்குள் அந்த சேவையை அந்த நியமிக்கப்பட்ட அதிகாரி வழங்க வேண்டும்.

7.மாநில அரசு, அரசிதழில் அறிவித்து தன்னிச்சையாக இயங்கும் அதிகாரம் கொண்ட ‘தமிழ்நாடு சேவை பெறும் உரிமை ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
இந்த அமைப்பு முதல் மேல்முறையீட்டின் ஆணைக்கு எதிராக , அல்லது முதல் மேல்முறையீடு அதிகாரி எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்காததற்கு எதிராக அல்லது மேல்முறையீட்டின் ஆணைக்கு எதிராக நியமிக்கப்பட்ட அதிகாரி சேவை வழங்கவில்லை என்றாலோ
குடிமக்கள் சாசனம் மக்கள் பார்வைக்கு வைக்கப்படாததற்கு எதிராக முறையீடு செய்ய உருவாக்கப் படவேண்டும். இந்த ஆணையம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் குறைந்த பட்சம் 10 ஆணையர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
தலைமை ஆணையர்/ஆணையர்கள் ஆகியோர் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (அல்லது தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட அமர்வில் இருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதி) ஆகியோர் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.
8.சேவை ஆணையத்தின் ஆணையர்கள் மேல் முறையீட்டாளரையும் சேவை வழங்கும் அதிகாரியையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடிந்தளவு மேல் முறையீட்டாளரின் மாவட்டத்திலேயே நடத்தபபட வேண்டும்.
முடியாத பட்சத்தில் மேல் முறையீட்டாளர் விருப்பப்படி மேல் முறையீட்டாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமோ அல்லது மேல் முறையீட்டாளர் விருப்பப்பட்டால் தலைமை அலுவலகத்திலோ நடத்தலாம். இரண்டாம் மேல்முறையீடு விசாரணை 30 நாட்களுக்குள் முடிக்கபட வேண்டும்.
9.அரசு ஊழியர் சேவை வழங்க வேண்டும் என்று முடிவாகும் பட்சத்தில் அந்த சேவையை மனுதாரர் பெறும் வரை வழக்கு தள்ளுபடி செய்யப்படாது. இது மனுதாரர் சேவை பெறுவதை உறுதி செய்யும். வேண்டுமென்றே தாமதம் செய்த அரசு ஊழியருக்கு அபராதமாக
சேவை வழங்கி இருக்க வேண்டிய நாள் முதல் சேவை வழங்கப்படும் நாள் வரை நாள் ஒன்றுக்கு ரூ 250 ம் அதிகபட்சமாக ரூ 25000 வரை அவர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். மேலும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
10.எங்கெல்லாம் மக்களுக்கு அவர்கள் தவறின் காரணம் அல்லாமல் சேவையில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு கண்டிப்பாக நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அது ரூ 500 முதல் அபராதத் தொகையின் 90% வரை வழங்கப்படலாம்.

#Arappor #RTS #ModelDraft #Tamilnadu

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Arappor Iyakkam

Arappor Iyakkam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Arappor

22 Jul
#PunishTheCorrupt #Tangedco #Viswanathan #Thangamani
1) தமிழ்நாடு அரசாங்கத்தின் மின் உற்பத்தியை குறைத்து, மத்திய பங்கீட்டில் இருந்து மாநிலத்துக்கு கிடைக்கும் மின்சாரத்தை முறையாக பயன்படுத்தாமல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க 2013ம் வருடம் ஜெயலலிதா தலைமையிலான
2) அதிமுக அரசு 15 வருட காலத்திற்கு டெண்டர் போடுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை ரூபாய் 2.50 முதல் ரூபாய் 3.50 என்று இருக்க அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூபாய் 4.90 முதல் ரூபாய் 6.00 வரை அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடுகிறார்.
3) இதனால் சராசரியாக ஒரு வருடத்திற்கு மின்சார வாரியத்துக்கு 6000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அடுத்து மின்துறை அமைச்சராக பதவி ஏற்ற தங்கமணி அவர்களும் இந்த டெண்டர் மூலம் மின்சாரம் வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகிறார். இது வரை கிட்டத்தட்ட 54000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Read 5 tweets
16 Jul
1) கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் அரங்கேற துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலம் EMD (டெண்டர் வைப்புத்தொகை) செலுத்த வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் மணலியில் டெண்டர் விண்ணப்பிக்க..
2) EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
3) இந்த குண்டர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுப்பியது யார்? திருவற்றியூர் திமுக MLA திரு.சங்கர் @KPShankarMLA பதில் சொல்வாரா? உள்ளாட்சி அமைச்சர் @KN_NEHRU இது குறித்து விசாரணை நடத்துவாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் ஆன்லைன் மூலம் EMD செலுத்தும் முறையை உடனடியாக கொண்டு வருவாரா?
Read 4 tweets
15 Jul
#PunishTheCorrupt #Viswanathan
1 தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து டெண்டர் செட்டிங் செய்யப்படுகிறது. அப்பொழுது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். Image
2 வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்திய
3 முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புதுறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா?

சட்டம் தன் கடமையை செய்யுமா?
Read 4 tweets
11 May 20
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவர்களும், ஊழியர்களும் கடந்த 8ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கல்லூரி வளாகத்தின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அவசர சிகிச்சை பிரிவையும்,கொரோனா காய்ச்சல் பிரிவையும் இடைவெளி விட்டு தனித்து அமைக்க வேண்டும்.

2. கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் தொடர்புகள் அனைவருக்கும், உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.
3. சுகாதார ஊழியர்களின் கொரோனா சோதனை அறிக்கையை, சோதனை செய்யப்பட்ட தினமே முன்னுரிமை கொடுத்து வெளிப்படைத்தன்மையோடு வழங்க வேண்டும்.

4. தங்கும் விடுதிகளையும், சாப்பாடு இடங்களையும் சரிவர தூய்மைப்படுத்த வேண்டும்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(