நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாவை மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிராகரித்துவிட்ட நிலையில், இரண்டு வருடங்களாக அதை பற்றி வாய் திறக்காத எடப்பாடியே .
நீயெல்லாம் பேசலாமா ?
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதை நாடு முழுவதும் மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு கட்டாயமாக்கியது.
இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் வரைவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வெளியில் சொன்ன மத்திய அரசு ஆனால் இந்த மசோதா நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்போதுதான் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட விவாகரம் வெளிச்சத்து வந்தது.
இதனால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அரசு கடிதம் இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தமிழக அரசின் நீட் மசோதா நிராகரிக்கப்பட்து தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அன்றைக்கு தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்த பூவைலிங்கத்திற்கு
மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் நீட் விஷயத்தில் வாய் திறக்காதது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் கடிதம் வரவில்லையா 2 ஆண்டுகளாக தமிழக மக்களை, ஒடுக்கப்பட்ட ஏழை மாணவர்களை நீட் விலக்கு தருவதாக கூறி ஏமாற்றியது மத்திய அரசா? மாநில அரசா?. அமைச்சர் சண்முகம், மத்திய அரசு பதலே தரவில்லை என்கிறார். அப்படி என்றால் மத்திய அரசின் 2017 கடிதம் இன்னமும் தமிழக அரசுக்கு
வரவில்லையா? என்ற சந்தேகம் எழுகிறது.வாய் திறக்கவில்லை 2017-ல் நீட் விலக்கு இல்லை என சொல்லிவிட்டோம் என்கிற பாஜக இதுநாள் வரை மவுனமாக இருந்தது எதனால்? தமிழக மாணவர்கள் மரணித்த பின்னரும் வாய் திறக்காதது ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
நீட் விலக்கை பெற்றுத்தருவோம் என நம்ப வைத்து மத்திய மாநில அரசுகள் ஏமாற்றிவிட்டதாக தமிழக மக்கள் தற்போது விமர்சித்து வருகிறார்கள்
அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ நீளும் நீட் மரணங்கள்-அதிமுக அரசுக்கு உறுத்தவில்லையா?
அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்கிற மாணவியும் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுள்ளது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் பலிகள்
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நீட் நுழைவுத் தேர்வால் கடந்த ஆண்டு அனிதா பலியானார். ஆனால் அதோடு நிற்கவில்லை.இந்த ஆண்டு பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது. நீட் தேர்வு நடக்கும்போதே மாணவர்களின் தந்தையர்
இருவர் பலியானார்கள். ஒருவர் நீட் தேர்வு எழுதச் சென்ற இடமான கேரள மாநிலத்திலும் இன்னொருவர் மதுரையிலும் பலியானார்கள்.
பிரதீபா, சுபஸ்ரீ, அருண் பிரசாத்
தேர்வு முடிவு வெளியானதும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான பிரதீபா என்ற மாணவி எலி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியைச் சேர்ந்த மாணவர்
அருண்பிரசாத் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நேற்று திருச்சி டோல்கேட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தூக்குப் போட்டுத்தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீட் தேர்வால் நிகழும் மரணங்கள், தமிழக கல்வித்துறையில் இதுவரை எந்தக் காலத்திலும் நிகழ்ந்திராத வரலாற்றுத் துயரம் ஆகும். நீட் தேர்வானது கல்வியை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதல்ல; சமூகத்தின் மேலடுக்கில் இருக்கும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி
படைத்த வட மாநிலத்தவருக்காக, அவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும்; குறிப்பாக தமிழர்களை மருத்துவத் துறையிலிருந்தே அப்புறப்படுத்தி தமிழகத்தின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும் என்ற தீய நோக்கில் நுழைக்கப்பட்டதுதான் இந்த நீட் நுழைவுத் தேர்வு.
காவு வாங்கும் நீட்
இதன் நடைமுறைகள் அனைத்தும் மோசடியாக இருப்பதே இதற்குச் சான்று. ஆனால் நீட் தொடங்கியதிலிருந்து இத்தனை உயிர்களைக் காவு வாங்கிய பின்னும் அதனை எந்தவித நெருடலுமின்றி கடந்துசெல்கிறது தமிழக அதிமுக அரசு.
நீட்-விலக்கு மசோதா ஒப்புதல் தரப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது; இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் நீட் தேர்வு குறித்த வழக்கும் நிலுவையில்தான் உள்ளது உச்ச நீதிமன்றத்தில். இவற்றின் மூலம் சட்டப்படி நீட்டை விலக்குவது சாத்தியமே. ஆனால் அதைச் செய்ய அதிமுக அரசு தயாராக இல்லை; ம
த்திய பாஜக மோடி அரசுக்குத் துணைபோவதன் மூலம் தமிழகத்துக்குத் துரோகம் செய்கிறது. நீட் பயிற்சி மையங்கள் என்னும் பல்லாயிரம் கோடி முதலீட்டு கார்ப்பொரேட் கொள்ளைக்கு வழிவிடுகிறது. நீட் தேர்வால் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும்
அதனைக் கண்டுகொள்ளாமல் நீட்டை அனுமதித்துவருகிறது அதிமுக அரசு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.