"மு.க.ஸ்டாலின், ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது ஜாதகம் சரியில்லைன்னு " சொன்னவங்களுக்கு தான் ஜாதகம் சரியில்லை😄
"மு.க.ஸ்டாலின், ஒரு நாளும் பிரதமர்ர் ஆக முடியாது ஜாதகம் சரியில்லைன்னு சொல்ல வந்துட்டாங்க !
அப்போ தளபதி பிரதமர் இலக்கை நோக்கி பயணிப்பது தெளிவாகிவிட்டது.
பிரதமர் ஆகி ஜாதகம் சரியில்லைன்னு " சொன்னவங்களுக்கு தான் ஜாதகம் சரியில்லைன்னு மூஞ்சில கரியை பூசும் நாள் வெகு விரைவில் உள்ளது 😄
“என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன்? ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா” என்று சொல்வது போல் சம்பவம் செய்வார் தளபதி !
70 ஆண்டுகளாக இந்தியா சேர்ந்த சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் டீ விற்ற டீ விற்பது போல் எளிமையாக விற்று-பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடியே எந்த கூச்சமும் இல்லாமல் பிரதமராக் இருக்கும் போது
1983-ம் ஆண்டின் இறுதியில் தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
2008-ம் ஆண்டு தி.மு.க-வின் பொருளாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.
2017-ம் ஆண்டு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு தி.மு.க பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார்.
2018 தி.மு.க தலைவர் கருணநிதியின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தனது 14 வயது முதல் அப்பாவிடமே அரசியல் பயின்ற ஸ்டாலின் பொருளாளார், செயல் தலைவர் என திமுகவின் கட்சிப் பதவிகளை அலங்கரித்தார்.
ஸ்டாலின் வகித்த பதவிகள் இரண்டு முறை சென்னை மேயர், உள்துறை அமைச்சர், துணை முதல்வர் எனப் பல பொறுப்புகளில் இருந்த அனுபவம் கொண்டவர் ஸ்டாலின்.
கட்சிப்பதவிகளிலும் தொண்டர்களை கட்டுப்கோப்பாக வைத்திருந்தார். கருணாநிதிக்கு எத்தனையோ வாரிசுகள் குடும்பத்தில் இருந்தாலும் ஆரம்பம் முதலே தனது அரசியல் வாரிசாக வார்த்தெடுத்தவர் ஸ்டாலின்தான்.
தலைவர் பதவிக்கு 26ஆம் தேதியன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஸ்டாலினுக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஸ்டாலின்.1967 ஆம் ஆண்டு 14 வயதில் மாணவர் பருவத்தில் திமுகவில் பயணத்தை தொடங்கிய மு.க.
ஸ்டாலின் 51 ஆம் ஆண்டு அரசியல் வாழ்வில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சந்திராஷ்டம தினத்தில் பதவியேற்பு ஆகஸ்ட் 28,2018 திமுக வரலாற்றில் மிக முக்கியமான நாள். தேய்பிறை செவ்வாய்கிழமை தினமான இன்று முழுவதும் மரணயோகம். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. நல்ல காரியங்கள் செய்வதற்கு இன்று நல்ல நாள் இல்லை என்று
ஜோதிடப்படி சொல்வார்கள். ஆனால் மூட நம்பிக்கைகளை முறியடித்து தலைவராக இன்று பதவியேற்றார் ஸ்டாலின். அவர் தலைவராக அறிவிக்கப்பட்ட போது எமகண்ட நேரம் முடிந்து விட்டது. தங்களின் தளபதி தலைவராக பதவியேற்றதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
மே 09, 2021 முதல் தமிழகத்தின், 13வது முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று பதவியேற்றார். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' எனக்கூறி, பதவிப் பிரமாணம் எடுத்தார். முதல்வரைத் தொடர்ந்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
100 நாட்களில் எண்ணற்ற சாதனைகள்- முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு அரசியல் கட்சிகள் பாராட்டு
1950-ஆம் ஆண்டு சமூகநீதிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது ஆகஸ்ட் 14-ஆம் நாளைத்தான் வகுப்புரிமை நாளாக அறிவித்து தந்தை பெரியார் போராட்டம் தொடங்கினார். அந்தப் போராட்டத்தின் மூலமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டது. அத்தகைய
முக்கியமான நாள் தான் இந்த ஆகஸ்ட்-14. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில்தான் நமது அரசு நூறாவது நாளை எட்டுகிறது.
ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான். ஆனால், இந்த 100 நாட்களின் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவானது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.
* கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காத்தல்
* எந்த அலையையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறையை மாற்றுதல்
* மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்
* பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
* கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 இலட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்
* இந்தியாவின் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகைப் பொருட்கள்
* குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை
வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு
* நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு
* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
- என முத்தான பத்துத் திட்டத்தை வழங்கி இருக்கிறோம். 120-க்கும் மேற்பட்ட முக்கியமான அறிவிப்புகள், முன்னெடுப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதில்
ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான முதன்மையான திட்டங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளேன். இந்த 100 நாட்களில் கழக அரசு செய்த சாதனைகளின் மூலமாக, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களித்தவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். வாக்களிக்கத் தவறியவர்கள்,
'இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே' என்று வருந்துகிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் மகத்தான மாபெரும் சாதனையாகும். ஏழை, எளிய மக்களின் மனம் குளிரும் அரசாக என்றும் செயல்படுவோம்!
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று 'உங்கள் தொகுதியில்
ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி மூலமாக மனுக்களைப் பெற்றேன். இந்த மனுக்களை 100 நாட்களில் தீர்ப்பேன் என்றும் வாக்குறுதி வழங்கினேன். அப்படி நிறைவேற்றாவிட்டால் என்னைக் கேள்வி கேட்கலாம் என்றும் சொன்னேன். பெட்டியில் வைத்துப் பூட்டினேன். கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில்
ஆட்சியை அமைத்தாலும், அந்த வாக்குறுதியை நான் மறக்கவில்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தனித்துறை உருவாக்கப்பட்டது. இதுவரை பெறப்பட்ட 4.57 லட்சம் மனுக்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இத்துறை உருவாக்கப்பட்ட பத்தாவது நாள்
முதலே கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடங்கினோம். இதுவரை 2.29 லட்சம் மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொன்னாலும் அதை நிராகரிக்கவில்லை. அந்தக் கோரிக்கையை வைத்தவர்கள் அரசிடமே மேல்முறையீடு
செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கி இருக்கிறோம். ஒவ்வொரு மனுதாரரையும் அரசு அலுவர்கள் அழைத்துப் பேசி இருக்கிறார்கள். பயன் பெற்றவர்கள் அளிக்கும் பேட்டிகளை ஊடகங்களில் நான் பார்க்கும்போது, நான் நெகிழ்ந்து போகிறேன்.
இது தனிப்பட்ட ஸ்டாலினின் சாதனை அல்ல. மக்களின் சாதனை. உங்களுக்கு உழைக்க எனக்கு நீங்கள் உத்தரவிட்டதால் கிடைத்த பயன் இது. 'ஸ்டாலின் இந்தப் பெட்டியைத் திறக்கவே முடியாது. அவரால் ஆட்சிக்கு வரவே முடியாது. கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவதாக மக்களை ஏமாற்றுகிறார்' என்று தி.மு.க.வின்
அரசியல் எதிரிகள் ஏளனம் செய்தார்கள். அந்தக் குறுமதியாளர்களின் ஏளனம், இந்த 100 நாட்களில் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளது. தனியொரு மனிதன் நினைத்த கனவானது, ஒரு அரசாங்கத்தின் கனவாக மாறி இவ்வளவு விரைவாக நிறைவேறும் என்று மக்களே எதிர்பார்க்கவில்லை. இத்தகைய வியப்புகள் நிறைந்ததாக
எமது அரசு என்றும் செயல்படும்!
இன்றைய தினம், ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறேன். தகுதிபடைத்த அர்ச்சகர்கள், ஆலயப் பணியில் ஈடுபட அவர்களது சாதி தடையாக இருக்கக் கூடாது என்பது திராவிட இயக்கத்தின்
மனித உரிமைக் குரல் ஆகும். சுயமரியாதை இயக்க காலம் முதல் பல்வேறு ஊர்களில் கோயில் நுழைவு உரிமையை நிலைநாட்டியது தமிழ்நாடு ஆகும். ஆனால் அந்த ஆலய நுழைவு உரிமைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. தந்தை பெரியாரின் கோரிக்கையை ஏற்று
1970-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அர்ச்சகர் சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனாலும் பெரியாரின் காலத்தில் அது நிறைவேற இயலாமல் போய்விட்டது.
'பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்' என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக
2006-ஆம் ஆண்டு மீண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக உரிய பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இப்போது நேர்முகத் தேர்வு மூலமாகத் தேர்வு வைத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கனவை, கலைஞர் முன்னெடுத்ததைச் செயல்படுத்தி வருகிறேன் என்ற பெருமகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது.
இத்தகைய கொள்கைப்பூர்வ அரசாக என்றும் செயல்படுவோம்!
அரசியலையும் மக்கள் பணியையும் தொழிலாகக் கருதுபவனல்ல நான். அதை வாழ்க்கையாக, மூச்சாகக் கருதுபவன். 23 வயதில் இந்திய நாட்டின் ஜனநாயகம் காக்கப்பட நெருக்கடி நிலையை எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்டவன் நான். 'ஸ்டாலின் அரசியலுக்கு
அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டவன்' என்று ஒரு வரியில் எனது அரசியல் வாழ்க்கையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இன்று அதை நினைத்துப் பார்க்கிறேன். நாளைய தினம், பழம்பெருமை வாய்ந்த சென்னைக் கோட்டை கொத்தளத்தில் இந்தியத் திருநாட்டின் எழுச்சிமிகு சின்னமான
தேசியக் கொடியை ஏற்றி வைக்க இருக்கிறேன். அதுவும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிகு தருணத்தில் ஏற்றப்படும் புகழ்க் கொடி அது.
மக்களுக்காக உண்மையாக உழைத்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் தனிப்பட்ட மரியாதை அல்ல இது. கழகத்தின்
இலட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் எண்ணமும், கழகத்துக்காக வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பும் இணைந்து என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அதுதான் என்னைச் செயல்பட வைக்கிறது. அதுதான் என்னை உழைக்க வைக்க வைக்கிறது.
நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
100 நாட்கள் அளித்த உற்சாகத்தால் நூற்றாண்டுக்குப் பெயர் நிலைக்கும் சாதனைகளைச் செய்வோம். சாதனைகளால் சொல்வோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.