#மஹாளயபக்ஷம் (மகாளயபட்சம்) 21.09.2021 முதல் 06.10.2021 வரை. மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் (சில சமயம் 16) மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து நம்மோடு தங்கிச் செல்லும் காலமே ImageImage
மகாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மகாளய அமாவாசை. மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்று பெரியவர்கள்
சொல்வார்கள். அதாவது ஒரு வருடமாக திதி கொடுக்க மறந்தவர்களுக்கான வாய்ப்பு இந்த 15 நாட்கள். இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு நாம் கர்ணனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவன் சொர்கத்தில் இருந்த கொஞ்ச காலத்திலேயே தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறான். சொர்க்க
வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள். தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார்.
கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து காரணம் என்ன என வினவுகிறான். குரு, கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய். ஒரு
முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த
புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது என்றார். கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறான். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும். நான் போய்
அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறான். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.
கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறான். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறான். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித
உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறான். யமன், மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீ எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தாயோ அதை முழுமையாக முடித்து விட்டு, உன் வார்த்தையை
காப்பாற்றி விட்டாய். நீ இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.
கர்ணன், யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட
சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறான். யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார். யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், Image
அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம்
செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.
நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம்/திவசம் செய்வோம். ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும்.
புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம
சாந்திக்காக ப்ரார்த்தனை செய்து வர வேண்டும். அந்தணர்களுக்கு வஸ்திரதானம் ஏழைகளுக்கு அன்னதானம் பொருளாதார நிலையில் பின் தங்கிய மாணவர்களுக்கு வித்யாதானம் இவைகளை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும். நம் நாட்டின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும்
பலர் தங்களின் மூதாதையர்கள் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினரின் பெயர்களை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படி செய்தால்
தான் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு தர்ப்பணம் ஸ்ரார்த்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும், தலைமுறைக்கே லாபம். மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் தனித்தனியாக பல்வேறு பலன்கள் கிடைக்கும். நம் முன்னோர் இறந்த திதி தெரிந்தால் அன்று
தர்ப்பணம் செய்வது சிறந்தது
21-9-21 பிரதமை திதி
22-9-21 துவிதியை
23-9-21 திருதிதியை
24-9-21 சதுர்த்தி (மஹாபரணி)
25-9-21 பஞ்சமி
26-9-21 ஷஷ்டி
28-9-21 ஸப்தமி (மஹா வியதீ பாதம்)
29-9-21 மத்யாஷ்டமி
30-9-21 நவமி
01-10-21 தசமி
02-10-21 ஏகாதசி
03-10-21 துவாதசி
04-10-21திரயோதசி
05-10-21 சதுர்தசி (போதாயன அமாவாசை)
06-10-21 மஹாளய அமாவாசை,
புண்ணியமான மஹாளய பக்ஷப் பொழுதுகள் லோக பித்ருக்கள் லோகத்திற்கு வந்து நம்மை ஆசிர்வதிப்பதற்காக வருடத்திற்கு ஒரு பக்ஷம் இங்கே சஞ்சரிப்பதால், அவர்களைப் போற்றி வழிபடுதற்குரிய காலம் இது.
அனுதினமும் இந்த ஒரு பக்‌ஷம் முழுவதும் ImageImage
எல்லா பித்ருக்களுக்கும், லோகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஸ்தூலம் விட்டகன்ற ஒவ்வொரு ஆத்மாவுக்குமாக தர்ப்பணாதி வழிபாடுகளைச் செய்கின்ற பாக்கியம் பெரும் பாக்கியம்🙏🏻 கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு, வீட்டிற்கு திரும்பி வந்து, முன்னோர்களின் படங்கள் இருந்தால் ImageImage
அதற்கு துளசிமாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில், தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் அவர்களுக்கு
பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை, இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது Image
சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தன் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.
நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து, முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

23 Sep
மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் Image
காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான் மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாக
கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே. அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின்
Read 15 tweets
23 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரகலாதன் தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் இரணியன் என்னும் கொடிய அரக்கனின் புதல்வன். விஷ்ணு உண்மையான் கடவுள் அல்ல அவர் தங்கள் குல விரோதி என்று இரணியன் நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற ImageImage
முடியவில்லை. எத்துணை துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். விஷ்ணு பக்தர்கள் கேட்டதை உடனே கொடுப்பவன். நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு. அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்தான். நீயே கதி என
சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பவன். ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொன்னதே
இல்லை. அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன். அதனால் தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நாரஸிம்ஹவபு ஶ்ரீமான் கேசவ புருஷோத்தம: என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.
Read 6 tweets
22 Sep
Heard from an Archakar that HR&CE inspector a convert came to inspect their small temple which came under it. Sealed the temple removed the idols & put them in a godown since he declared the temple was not secure. Look what all games these converts play to prevent Hindu worship.
Many have asked me to name the temple. The villagers and well wishers are dealing with it. They did dharna and have been able to restore the idols from the godown and now they are all in one small room (madapalli of the temple) & Pujas are being performed. What they say is at the
end of the day they are at the mercy of the HRCE. So antagonizing them even in a small way brings them a lot of head aches. The sole Archakar there has requested for sanction, for repairs to make the temple safer. Even to get the sanction and carry out the repairs he needs their
Read 7 tweets
22 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் இரண்டு மரக்கட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு மிதந்தன. ஒரு கட்டை நதியில் குறுக்காக நின்று வெள்ள ஓட்டத்தை தடுக்கப் பெருமுயற்சி செய்தது. வெள்ளமே உன்னை மேலே போக விடமாட்டேன் என்று கூறிக் கொண்டே குறுக்கே படுத்துக் Image
கொண்டு கறுவியது. நதியின் வேகத்தினால் அந்த மரக்கட்டை தாறுமாறாக அலைக்கழிக்கப் பட்டது. நதியின் போக்கில் மயிரிழை மாறுதல் செய்ய முடியாவிட்டாலும் நதியை எப்படியாவது நிறுத்தியே தீருவேன். உயிரே போனாலும் இந்த நதியை அடக்கியே தீருவேன் என்று அலறிக் கொண்டே திணறியது. வெள்ளப் போக்கில் மூழ்கி,
முட்டி, திணறி அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. நதிக்கு அத்துரும்பின்/ மரக்கட்டையின் குரல் கேட்கவும் இல்லை. அதன் இருப்பை நதி உணரவும் இல்லை. மற்றொரு துரும்போ தன்னை அந்தப் பிரவாகத்தில் விட்டுவிட்டது. அது நதியின் குறுக்காக அல்ல, நதி போகும் திசையில் மிதக்க வசதியாக நேராக
Read 9 tweets
21 Sep
#ஶ்ரீகிருஷ்ணகதைகள் விஷ்ணு பக்தன் பிரகாசம் என்பவன் தனது பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். விஷ்ணு அவனுடைய பூலோக வாழ்க்கையில் செய்த நன்மைகளைப் பாராட்டி, நீ செய்த நன்மைகளால் உனக்கு வைகுண்ட வாழ்வு கிடைத்திருக்கிறது. இங்கு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார்.
அவன் பரமாத்மாவிடம், Image
எனக்குப் பூலோகத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் என் மனம் குறையுடன் உள்ளது. அந்தக் குறையை நீங்கள் போக்க வேண்டும் என்றான்.
அவனுடைய மனக்குறையை விஷ்ணு அறிந்திருந்த போதிலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அப்படியா, வைகுண்ட வாழ்வைப்
பெற்ற உனக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாதே. உன் மனக்குறையைச் சொல். அந்தக் குறையை உடனே தீர்த்து வைக்கிறேன் என்றார். பரந்தாமனே! நான் பூலோகத்தில் இருந்த பொழுது மக்களிடம் நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற நிலையே அதிகமாக இருந்தது. இந்தக் கேள்வியால் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன
Read 9 tweets
18 Sep
#புரட்டாசி #சனிக்கிழமை
ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய🙏🏻
மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள். இதற்கு ஒரு காரணம் உள்ளது. சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர்
சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வர். புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார். நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார். ஒருமுறை சனிபகவான்
கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார். அப்போது எதிரே நாரதரைச் சந்தித்தார். தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற, அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தப்பி தவறி கூட திருமலை பக்கம் சென்று
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(