ராயல்டி விசயத்தில், ராகங்கள் மட்டுமல்ல; ராஜாவும் புதிது தான்!

”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை”
எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.
இந்த நான்கு வரிகளிலேயே இசையின் எதார்த்தம் அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர்
என்ற இம்மூவரின் கீர்த்தனைகளையோ அல்லது இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தமிழிசை மும்மூர்த்திகளான, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை போன்றோரின் கீர்த்தனைகளையோ, பின்னாட்களில் தமிழிசை நால்வராக இணைக்கப்பட்ட பாபநாசம் சிவன் போன்றோரின்
கீர்த்தனைகளையோ பயன்படுத்தாமல், இத்தனை பாடல்களை இளையராஜாவால் இசையமைத்திருக்க முடியுமா? என்பது அவருக்கே வெளிச்சம்.
”ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது”
இந்த பாடலில் கூட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை, இளையராஜா சுட்டிக்காட்டிருப்பார். இப்படியான இசையின் எதார்த்தத்தை 80களிலேயே நன்றாக புரிந்து வைத்திருந்த இளையராஜா, இன்றைய இசையமைப்பாளர்கள் போல வெளிப்படையாகவே காப்பியடிக்காமல்
கீர்த்தனைகளில் காப்பியடிப்பதெல்லாம் ராயல்டியில் வருமா? வரதா? என்பதை அவரது மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும். மேலும், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி போன்ற மூத்த இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களை காப்பியடித்த பாடல்களும்
இளையராஜாவின் ஹிட்லிஸ்டில் இன்றளவும் இருக்கிறது என்பதை இளையராஜா உணராதவர் கிடையாது; அதை ஒருசில மேடைகளில் அவரே சொல்லியும் இருக்கிறார். அப்படிப்பட்ட இளையராஜா இப்போது சமீப காலமாக ராயல்டி விசயத்தில் மல்லுக்கட்டுவது தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது.

@MKT_Bhagavathar
இசைக்கு சாதியுமில்லை; மதமுமில்லை; அது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும், கலையாகவும் தான் ஆதிகாலம் தொட்டே விளங்கி வருகிறது.
தொலைத்தொடர்பு வளர்ச்சியில் உச்சம் தொட்டுவிட்ட இக்காலத்தில், செல்போன் இல்லாதவர்களே அநேகமாக இருக்க முடியாதென்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிராமம், நகரம் என எவ்வித பாகுபாடுமின்றி செல்போன்களும்,
அதன் வழியாக இசையும் இங்கே முழுவதுமாக பரவிக்கிடக்கிறது. திரையிசை சம்பந்தமாக இங்கேவொரு கணக்கெடுப்பு நடத்தினால், இளையராஜாவின் பாடல்கள் சேமிக்கப்படாத செல்போன்களோ, மெமரி கார்டுகளோ இருக்கவே முடியாதென்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.
சமூகத்திலுள்ள அனைத்து நிலை மக்களின் மனதோடும் நெருங்கிப்போன இசைக்கு யாரிடம் ராயல்டி கேட்க முடியும்? சமீபமாக பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் இசையமைப்பாளர்களே, உரியவரிடம் அனுமதி வாங்குவதில்லை.
இன்னும் சில ரீமிக்ஸ் பாடல்களுக்கு நீதிமன்றம் அளவுக்கு பிரச்சனை வந்தபோதும் கூட, அதையெல்லாம் வெகு எளிதாக தயாரிப்பாளர்களே சரி செய்து விடுகின்றனர். ”பொதுவாக இசையமைப்பாளர்கள் அனைவருமே, யாரோவொரு தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு தானே,
குறிப்பிட்ட படத்திற்கு இசையமைத்து கொடுக்கிறார்கள்; அப்படியென்றால் அந்த இசைக்கான ராயல்டி, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு தானே சென்றடைய வேண்டும். இடையில் ஏன் இசையமைப்பாளர்கள் உரிமை கோருகிறார்கள்?” என கேட்கும் சாமானியனின் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதாக யாரும் பதில் சொல்லிவிட முடியாது.
சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பாக, தன் அண்ணன் பாவலரோடு பொதுவுடைமை கொள்கைகளை தெருமுனை பிரச்சார பாடல்களாக உருவாக்கியும், அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தும் தானே, பின்னாட்களில் இளையராஜாவாக உருவெடுத்தார். அந்த தெருமுனை பரப்புரை பாடல்களின், மூலஇசை யாருடையது?
அன்றைக்கு பிரபலமான கே.வி.எம்., எம்.எஸ்.வி., போன்ற இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட திரையிசைப்பாடல்களின் வரிகளை மாற்றியமைத்து தானே, தன் இசையாளுமையை அதே மெட்டுகளோடு மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
அன்றைக்கு தங்களது பொருளாதாரச்சூழலுக்கு கைக்கொடுத்த கே.வி.எம்., எம்.எஸ்.வி. போன்றோரின் இசைக்கு, அவர்கள் என்றாவது பாவலர் & கோ விடம் ராயல்டி கேட்டிருந்தால் நிலைமை என்னவாகிருக்கும் என்பதையும் இசைஞானி இளையராஜா சிந்தித்திருக்கலாம் என்பதே பலரது மனநெருடல்களாக இருக்கிறது
.”இதற்கு மேலுமா அவர் சம்பாரிக்க வேண்டும்? அவரிடம் காசே இல்லையா? அவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை? அவரால் நாலுபேர் வாழ்ந்துட்டு போகட்டுமே” என்றெல்லாம் கேட்கும் எளியவர்களுக்கு, ராயல்டி பற்றிய உள்ளார்ந்த விசயங்கள் விளங்காமல் இருக்கலாம். ஆனால் இந்த ராயல்டி பிரச்சனையால்,
இளையராஜா பேசுபொருளாகி இருக்கிறார். பலரது ஏசுபொருளாகவும் மாறியிருக்கிறார். புகழின் உச்சத்தை என்றைக்கோ தொட்டுவிட்டு, இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக உச்சாணிக்கொம்பில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜா,
இந்த ராயல்டி விசயத்திலும் இன்னும் கொஞ்சம் பெருந்தன்மையாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.
நகரமயமாக்கப்பட்ட போதும் கூட, அங்கே வசிக்கும் பெரும்பான்மையினரின் பூர்வீகம் ஏதோவொரு கிராமமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட கிராமங்களில் நடைபெறும் ஒவ்வொரு வருட திருவிழாவிலும் அரிச்சந்திர நாடகமோ, வள்ளித்திருமண நாடகமோ கூட இப்போது அரங்கேற்றுவது குறைந்து கொண்டிருக்கிறது.
ஆனால், ஆடலும் பாடலும், ஆர்க்கெஸ்ட்ரா என இசை நிகழ்ச்சி இல்லாமல் எந்தவொரு கிராமத்தின் திருவிழாக்களும் முழுமையடைவதில்லை. சாமானிய இசை ரசிகர்களாக, எவ்வித பொருளாதார பின்னணியும் இல்லாமல் எத்தனையோ ஆர்கெஸ்ட்ரா குழுக்களிலுள்ள எளியவர்கள் அன்றைய
இளையராஜாவின் பாடல்களால் தான் இன்றைக்கும் தங்களது பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இது தான் எதார்த்தம். அவர்களுக்கெல்லாம் இளையராஜா என்பவர் இசைஞானி மட்டுமல்ல, ”ஓர் தேவ தூதன்”,
”பிழைப்பை கொடுக்கும் கடவுள்”; அப்படியாகத்தான் நினைத்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ பேர், இளையராஜா என்ற ஒற்றை மனிதரால் நாள்தோறும், திருமண விழா, ஊர்த்திருவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள் என பல வடிவங்களில் பலன்பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்காகவது இசைஞானி, கெடுபிடிகளை தளர்த்தி இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம். இதன் மூலம் பணம் வேண்டுமென்றால் கிடைக்காமல் போகலாம்; ஆனால் முகம் தெரியாத எத்தனையோ பேரின் அழ்மனதிலிருந்து வெளியெழும் அன்பு கிடைக்குமே?!
அதற்கு நிகராக வேறேதும் உண்டா இவ்வுலகில்? இந்த ராயல்டி விசயத்தில் இசைஞானியின் இசைவுக்காக தான் காத்திருக்கிறது, ஒட்டுமொத்த இசைப்பிரியர்களின் மனங்களும்!
காயம்படும் ஓலைதான்

சுவடியாகிறது

எழுத்தாணியால் சுவடியாகிறது

காயம்படும்

கல்தான் சிலையாகிறது

உளியினால்

காயம்படும் மூங்கில் தான்

கானம் பாடுகிறது
பாரம் என்றால் எல்லோரும் வெறுப்பார்கள் .இந்தப் பாரத்தை தூக்கிக்கொண்டு போ என்று சொன்னால் ஒரு சலிப்பு வரும் .

ஆனால் பித்தன் சொல்கிறான் .

பாரத்தை

இறக்கி வைப்பது

மகிழ்ச்சியானது

என்கிறீர்கள்ஆனால்

மரணத்தில் அழுகிறீர்களே ,ஏன் ?
போர்வையைக்

குளிர்காலத்தில்

நல்லது என்கிறீர்கள்

கோடைக்காலத்தில்

கெட்டது என்கிறீர்கள்

போர்வையில் இல்லை

நல்லதும் கெட்டதும்

விசிறியைக்

கோடைக்காலத்தில்

விரும்புகிறீர்கள்
குளிர்காலத்தில்

வெறுக்கிறீர்கள்

விசிறியிடம் இல்லை

விருப்பும் வெறுப்பும் .

மழை பெய்தால்

குடியானவன் போற்றுகிறான்

குயவன் தூற்றுகிறான்

மழையிடம் இல்லை

பாரபட்சம்

இது நல்லது

இது கெட்டது

என்று பிரிப்பதற்கு

நீங்கள் கீறும் கோடும்

ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா ?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

23 Sep
பெரியாரும் தேவர்களும்!

1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகச் துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை
இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடை என்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார்.
1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும் தான் என்பது
Read 28 tweets
23 Sep
தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்!-தட்சன பிரதேசம்

1956 இல் நேரு தட்சிணப் பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு.
அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி. இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார்,
கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்றார்.
Read 21 tweets
23 Sep
வேடிக்கை பார்த்த தேவர் !

முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கார் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது
அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டு பிளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
Read 42 tweets
23 Sep
நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.
90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?
தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா?
Read 44 tweets
22 Sep
இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்-வே. மதிமாறன்

இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா?
பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும்
‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,

பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,
Read 19 tweets
22 Sep
வீடு

வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களை
பார்த்து

பித்தன் சிரித்தான் .

ஏன் சிரிக்கிறாய் ?

என்று கேட்டேன் ,

கூடு கட்டுவதாக

நினைத்துக்கொண்டு

இந்தப் பறவைகள்

கூண்டுகள் செய்கின்றன

‘என்றான் .
அவன் மேலும் சொன்னான் :

வீடு கட்டுவதற்கு

மலையிலிருந்து

கற்களைக்

கொண்டு வருகிறீர்கள் .

மலையின் மௌனத்தையும்

உங்களால்

கொண்டுவர முடிந்திருந்தால் .....

காட்டிலிருந்து

மரங்களை

கொண்டு வருகிறீர்கள் .
காட்டின்

சுதந்திரத்தை

உங்களால்

கொண்டுவர முடிந்திருந்தால்...

கடலிலிருந்து

சிப்பிகளைக்

கொண்டு வருகிறீர்கள்.

கடலின்

பெருமையையும்

உங்களால்

கொண்டுவர முடிந்திருந்தால்...
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(