#இன்று_ஒரு_கோவிலை_பற்றி
#தெரிந்து_கொள்வோமா.

#உறையூர்_வெக்காளியம்மன்_கோயில்

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள உறையூரில் உள்ளது. இக்கோயில் காலத்தால் முற்பட்டதும் வரலாற்று சிறப்புற்றதுமாகும். Image
தல வரலாறு...

“சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி, உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்” என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரியவருகிறது. Image
இந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.

பழம்பெருமை வாய்ந்த உறையூர்..

காவிரிக்கரையின் தென் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த, சோழர்களின் தலை நகராக விளங்கிய உறையூர், Image
சங்க இலக்கியத்திலும் சரித்திரங்களிலும் பேசப்படும் ஒரு முக்கிய நகரமாகும். இது தற்போது உள்ள திருச்சிராப்பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ளது.

இங்கு பல தொன்மையான சரித்திரப் புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான கோயில் அருள்மிகு வெக்காளி அம்மன் கோயிலாகும். Image
வெக்காளியம்மன் வரலாறு..

வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது (தெற்கு வாசல்)

அந்தி மாலை நேரத்தில் வெக்காளியம்மன் கோவில்
வெக்காளியம்மன் ஒரு ஊர்க்காவல் தெய்வமாகையினால், உறையூரின் எல்லைப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. Image
எல்லைத் தெய்வங்களை வெட்ட வெளியில் அமைப்பது மரபு என்பதால் வெக்காளியம்மனுக்கும் கூரை ஏதுமின்றி அமைத்துள்ளார்கள். ஆனால் வெக்காளியம்மன் கூரையின்றி இருப்பதற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது. Image
வெட்டவெளியில் வெக்காளியம்மன்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டையில் தாயுமான சுவாமிகள் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் செய்கிறார். மலைக்கோட்டைக்கு மேற்கே உள்ளது உறையூர். அங்கு வன்பராந்தகன் ஆட்சி செய்த காலம். Image
அப்போது சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார். அங்குள்ள பூக்களை தினமும் தாயுமான சுவாமிகளுக்கு அணிவித்து வந்தார்.

பிராந்தகன் என்னும் பூ வணிகன் நந்தவனத்துப் பூக்களை அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். Image
நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை சாரமா முனிவர் கண்டுபிடித்தார். பிறகு மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னர் முனிவரை அலட்சியம் செய்தான்.

பின்னர், முனிவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத்தாங்காமல், Image
தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.

அப்போது, மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரனங்களும் தப்பி ஓடிப்பியோடிப் பிழைக்க வழி தேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள தங்களின் காவல் தெய்வமான Image
வெக்காளியம்மனை விட்டால் வேறு வழி இல்லை என்று தஞ்சம் புகுந்தனர்.

வெக்காளியம்மன் தாயுமானவ சுவாமிகளை வேண்டினாள். அதற்குப்பிறகு, மண் மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது. Image
மக்களின் துயர் கண்டு அன்னை வெக்காளி, ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன் என்று அருள் வாக்கு கூறினாள்.

ஆகவே அன்னை வெக்காளி, இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை, Image
வெய்யில் இவைகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வருகிறாள்.

உறையூர் --- நாச்சியார் கோவில --- வெக்காளியம்மன் கோவில்

(கோவிலுக்குச்செல்லும் வழிகாட்டல்)
வெக்காளி அம்மன் கோயிலுக்குச் செல்வதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள Image
சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து "உறையூர் வழியாகச் செல்லும்" பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். பிறகு இங்கிருந்து சிறிது தூரம் (500 மீட்டர்கள்) மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்லலாம். Image
(நாச்சியார் கோவில் நிறுத்தம்)
நாச்சியார் கோவில் நிறுத்தத்தில் எப்போதும் (காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை) தொடர்ச்சியாக பேருந்துகள் கிடைக்கும். பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியது இல்லை. நாச்சியார் கோவில் நிறுத்தத்தில் எப்போதும் ஆட்டோ ரிக்சாக்கள் கிடைக்கும். Image
ஆகவே நாச்சியார் கோவில் நிறுத்தத்திலிருந்து வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்வதில் எந்தவிதமான சிரமமும் இருக்காது.

தங்க ரதம் ..
தங்க ரதத்தில் அருள்மிகு வெக்காளியம்மன்
வெக்காளியம்மனுக்கு, புதியதாக ஒரு தங்க ரதம் செய்ய பட்டுள்ளது. அது முதன் முறையாக பிப்ரவரி 18, 2010 தேதியில் Image
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வெள்ளோட்டமாக இழுத்துச் செல்லப்பட்டது.

அதன் பிறகு, பக்தர்கள் தங்க ரதத்தை இழுப்பதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாக அலுவலகத்தில் செலுத்தினால் குறிப்பிட்ட தேதியில் மாலை 7 மணிக்கு கோவிலின் உட்பிரகாரத்தில் வெக்காளியம்மனின் Image
தங்கத்தேரை உற்றார் உறவினருடன் இழுத்துச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்த தங்க ரத்ததின் உயரம் 9.75 அடி. தங்க ரதத்தை உருவாக்க 10.5 கிலோ தங்கமும் 25 கிலோ வெள்ளியும் பயன்படுத்தப்பட்டது..🙏🙏 @Pvd5888 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

17 Oct
சீன ராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட சீன ராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது என கூறும் சில நண்பர்களுக்காக இப்பதிவு

1. பிரம்மோஸ்

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சி செய்தும் Image
அமெரிக்கா மற்றும் சீனாவால் தயாரிக்க முடியவில்லை

2. பிருத்வி

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை

3. தேஜஸ்

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம்

4. சுகோய்-30

உலகிலேயே அதிவேக போர்விமானம் Image
5. ஆகாஷ்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற ஏவுகணை

6. அக்னி-5

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை
Read 5 tweets
17 Oct
#அருள்மிகு_மாசாணியம்மன்
#திருக்கோயில்_ஆனைமலை
#பொள்ளாச்சி

#ஸ்தல_வரலாறு:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான்.

அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான்.
அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, Image
பயன்படுத்தவோ கூடாது எனவும்கட்டளையிட்டிருந்தான்.

ஓர்நாள்,

ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி,
ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள்.
இதையறிந்த மன்னன்,
அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான்.
ஊர்மக்கள் எதிர்த்தனர். Image
ஆனால்,
மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.
வருத்தம் கொண்ட மக்கள்
மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி,

அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர்.

காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட,

மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர். Image
Read 12 tweets
16 Oct
#இரண்டாவது_திவ்யதேசம்

#அருள்மிகு_அழகிய_மணவாளர் #திருக்கோயில்_உறையூர்_திருச்சி

மூலவர் :- அழகிய மணவாளர்
தாயார் :- கமலவல்லி

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார்

கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் Image
கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
#திருமங்கையாழ்வார்

#தல_சிறப்பு

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், Image
கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், Image
Read 19 tweets
16 Oct
இந்தியா #சற்றுமுன் ருத்ரம் 1 என்ற ஆன்டி ரேடியேஷன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.. இந்த ஏவுகணை நம் சுகாய் விமானத்தில் இருந்து செலுத்த பட்டது..

விமானத்தில் இந்த ஏவுகணையை எடுத்து சென்று தோராயமாக ரேடியேஷன் உள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டால் போதும்.. Image
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து எதிரியின் ரேடார் கதிர் வீச்சு வருகிறதோ அந்த இடத்தை தானாக அழித்து விடும்..

இந்த ஏவுகணை மூலம் எதிரியின் தரையில் ரேடார்கள், கட்டுபாட்டு அறைகள் போன்றவற்றை மிக துள்ளியமாக அழிக்க முடியும்..
நவீன போர் முனையின் கண் எனப்படுவது ரேடார்கள் தான்.. அந்த ரேடார்களையே அழித்து விட்டால், பின் எதிரியை குருடாக்கி விட்டு அவனை உதைப்பதை போன்றது..

சீனாவிடமும் இதே போல் Y 91 என்னும் ஆன்டி ரேடியேஷன் ஏவுகணை உள்ளது ஆனால் அதன் தாக்கும் தூரம் 100 கிலோமீட்டருக்குள் தான்..
Read 7 tweets
14 Oct
#கோட்டை_மாரியம்மன்
#திண்டுக்கல்

🌿பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். Image
அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வாமாக உள்ளது.

🌿மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது. இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், Image
இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.

🌿இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்

🌿அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள் Image
Read 12 tweets
23 Sep
🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️🟤🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️
நாகலிங்கப்பூ விசேஷங்கள் !

நாகலிங்கப்பூ.
இதுவே கடவுள்.

இந்தப் பூவுக்குள்ளே இறைவன் தானே இறங்கி வந்து குடியிருக்கிறான்.

அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.

நாகமுமிருக்கிறது …………..உள்ளே 🌹லிங்கமும் இருக்கிறது.
சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.

உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு 🌹மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.

ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும்
சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் ..

உடல் சிலிர்க்கும்.
உள்ளம் அமைதி பெறும்.
கயிலாயம் கண்ணுக்குள் விரியும்

சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெறவில்லை.

பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(