மதம் மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிக்கிறதா?
மதம் சொல்லும் ஒழுக்கம் என்ன?
*மதம் கணவனுக்கு கீழ்படியாத பெண்களை அடிக்க சொல்கிறது
*மதம் சிறுமிகளை திருமணம் செய்வது தவறு இல்லை என்று சொல்கிறது
*மதம் கற்பழிப்பை தவறு என்று சொல்வதில்லை மாறாக ஒருபெண்ணை கற்பழித்தால் அவளை திருமணம் செய்துகொள் அல்லது அவளது அப்பாவிற்கு (உரிமையாளருக்கு) பணம் குடு என்கிறது.
*மதம் நெருங்கிய உறவுக்குள் உருவாகும் தகாத உறவுகளை கற்று தருகிறது.
ஒழுக்கத்தை நோக்கி முன்னேறும் போதெல்லாம் அதை எதிர்த்தது மதங்கள் தான்.
கறுப்பின அடிமை முறையை ஒழித்ததை எதிர்த்தது மதம் தான். அது மதவாதிகள் தான் மதம் இல்லை, கடவுளின் தவறு இல்லை என்று சொல்ல கூடாது. அந்த மதவாதிகள் அதை எங்கிருந்து கற்றனர்? மதநூல்களில் இருந்து தானே கற்றனர்.
மதநூல்கள் தானே கடவுள் எப்படி உலகை படைத்தார், எப்படி வாழ வேண்டும் என்கிற விதிமுறைகள் எல்லாம் வகுக்கின்றன. அந்த விதிமுறைகள் படி தானே மத அடிப்படைவாதிகள் நடந்து கொள்கின்றனர். அப்படியெனில் அது மதத்தின் தவறு தானே.
பெரியார் சொன்னது போல தான். வெறும் சாதியை மட்டும் ஒழிக்க முடியாது. சாதியை கற்பித்த மதத்தையும், அந்த மதத்தை இயக்கும் கடவுளையும் ஒழித்தால் தான் சாதி ஒழியும். இல்லை என்றால் கடவுளின் வார்த்தையான புனிதநூலில் அப்படிதானே இருக்கிறது என்று கொடுமைகள் தொடரத்தான் செய்யும்.
புனித நூல்கள் சொல்லப்பட்டு இருக்கும் விதிகளின் படிதானே பெண்களுக்கு கல்வி, ஓட்டுரிமை வழங்கியதை, உடன்கட்டை ஏறுதல் தடை செய்யப்பட்டதை, தேவதாசி முறையை ஒழித்ததை எல்லாம் மக்கள் எதிர்க்கிறார்கள். கருக்கலைப்பு பாவம் என்று சட்டம் இயற்றுகிறார்கள்.
அதனால்தான் அந்த புனித நூல்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கு.

You don't need god or religion to be a good person...
மதங்கள் சொல்லி தரும் ஒழுக்கம் எல்லாம் மூணாங் கிளாஸ் பாட book ல வர மாதிரி, பொய் பேசாதே, திருடாதே, அம்மா அப்பாவிற்கு கீழ்படிந்து நட இதெல்லாம் தான் மதம் சொல்லும் ஒழுக்கம். இதுக்கு எதுக்கு மதம்? மூணாங்கிளாஸ் பாட book போதாதா?
“With or without religion, good people can behave well and bad people can do evil; but for good people to do evil - that takes religion.” Steven Weinberg

மதம் பொய் சொல்லாதே சொன்னால் மறுமையில் உனக்கு தண்டனை இருக்கு என்கிறது. பொய் சொல்லாத மக்கள் இங்கு யார் இருக்கிறார்கள்.
எல்லாரும் பொய் சொல்லுகிறார்கள். கடவுளை நம்புபவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏன் பொய் சொன்னேன் என்பதற்கு ஒரு சாக்கு சொல்லி மனதை சமாதானப் படுத்திக் கொள்கிறார்கள். ஒருவேளை மதம் ஒழுக்கத்தை போதிப்பதாக இருந்தால் மனிதன் பொய் சொல்ல கூடாது தானே?
நாம் அதை கேள்வி கேட்டால், ஈசாக்கை ஏமாற்றிய யாக்கோபை கடவுள் உயர்த்தவில்லையா? அதே போல என்னையும் உயர்த்துவார் நீ யார் கேட்பதற்கு என்றுவிடுவார்கள். அதே சமயம் சட்டத்திற்கு மனிதன் பயப்படுகிறான். ஏமாற்றி உயிலை பெற்றால் சிறை தண்டனை என்று யோசிக்கிறான். தயங்குகிறான்.
அப்படியானால் சட்டம் போதாதா? மதம் எதற்கு?
மத நூல்கள்படி ஆட்சி செய்யும் நாடுகளின் நிலை எல்லாம் எப்படி இருக்கிறது?
கடவுள் செய்ய சொன்னார் என்றால் யோசிக்காமல் மனிதன் பெற்ற பிள்ளையையும் கொல்ல தயங்க மாட்டான். அதுதான் மதத்தின் ஆபத்து.
கடவுளை பற்றிய நம்பிக்கையை பொய்யாக்குவதின் மூலம் மனிதன் பகுத்தறிவுடன் வாழ பழகுகிறான். நிதர்சனங்களை ஒப்புக்கொள்கிறான். கடவுள் நம்பிக்கை இல்லாத நாடுகளை பாருங்கள். அங்கு குறைந்து இருக்கும் குற்ற செயல்களே கடவுள் பற்றிய நம்பிக்கைகளைப் பொய்யாக்குவதன் மூலம் விளையும் நன்மை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

28 Oct
ஆபிரகாமிய மதங்கள் என்பது யூத மதம், கிரிஸ்துவ மதம் மற்றும் இஸ்லாமிய மதம். இவை மூன்றையும் ஆபிரகாமிய மதங்கள் என்று கூற காரணம் இவை மூன்றும் ஆபிரகாம் என்கிற patriarch இல் இருந்து தோன்றிய மதங்களாகும்.

இந்த மூன்று மதங்களுக்கும் ஒரே கடவுள் தான். இவர்களின் கடவுளுக்கு பெயர் இல்லை.
கடவுள் என்பதை Hebrew மொழியில் யெகோவா என்று யூதர்களும், ஆங்கில மொழியில் God என்று கிறிஸ்துவர்களும், அல்லா என்று அரேபிய மொழியில் இஸ்லாமியர்களும் அழைக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று பேர் தொழும் கடவுள் ஒருவரே.
ஆதாமின் வம்சாவளி இந்த ஆபிரகாம். ஆபிரகாமிற்கு குழந்தை இல்லாததால் அவனது மனைவி சாராள் அவனை அவர்களது எகிப்திய பணிப்பெண் ஆகார் மூலமாக ஒரு குழந்தை பெற்று கொள்ளும்படி சொன்னாள். இவர்களுக்கு பிறந்த மகன் தான் இஸ்மவேல் அல்லது இஸ்மாயில். இஸ்மவேல் பிறந்தபின் சாராள் கருவுற்று ஒரு மகனை பெற்றாள்
Read 31 tweets
28 Oct
Franz Kafka's Metamorphosis in lowest price...

'One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin.'

Thus begins The Metamorphosis, cited as one of the seminal works of fiction of the twentieth century.
A story of Gregor Samsa, a travelling salesman, who wakes up one day to discover that he has metamorphosed into a bug, The Metamorphosis is a book that concerns itself with the themes of alienation, disillusionment and existentialism.
As Samsa struggles to reconcile his humanity, Kafka, very deftly, weaves his readers into a web that deals with absurdity of existence, alienating experience of modern life & cruelty & incomprehensibility of authoritarian power, leaving them at once stunned & impressed.
Read 4 tweets
22 Oct
Leonardo da Vinci

லியோனார்டோ டாவின்சியை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. பிரபலமான சர்ச்சைக்குரிய டாவின்சி கோட் படம் அல்லது புத்தகம் பார்த்தவர்களுக்கு தெரியும். பிரசித்தி பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் இவரே.
பல புகழ் பெற்ற ஓவியங்களுக்காக இவர் அறியப்பட்டாலும் இவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல. கவிஞர், தத்துவமேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுணர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, மனித உடற்கூறு ஆய்வாளர், நீர்ப்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர், இசை ஆர்வலர்,
கதாசிரியர் இப்படி ஆல் இன் ஆல் அழகுசாமி.
இத்தாலியின் வின்சி நகரில் உள்ள `ஆன்கியானோ' என்ற கிராமத்தில் 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி `செர் பியரோ தா வின்சி - கத்தரீனா' இணையருக்குத் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர் லியோனார்டோ டா வின்சி.
Read 8 tweets
21 Oct
சுட்ட செங்கல்லால் வீடுகட்டிக் கொள்ளவும், மாடி கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக்கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது.
பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும் பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிரகாரங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்ற சாதியாருக்கு வழங்கவில்லை.
சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகள் அரசர்களால்
வகுக்கப்பட்டிருந்ததை அறிய பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு
பன்னிரண்டாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த
இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை
வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
Read 9 tweets
20 Oct
அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லோரும், அமைதியான சமூகத்திற்கு ஒரு ஆபத்தாக தான் பார்க்கப்படுகிறார்கள். புராணக்கதைகளில் இருந்து இந்நாள் வரை இது தான் நடக்கிறது.
நெருப்பை திருடிய Prometheus, கேள்வி கேட்ட சாத்தான், சம உரிமை கோரிய லிலித் என்று கேள்வி கேட்பவர் எல்லோரும் ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறார்கள். சாத்தான் அவன் அகங்காரத்தால் வீழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
எது அகங்காரம்? தனக்கு சரி என்று பட்டதை கேட்பது அகங்காரமா? சம உரிமை கோரியது அகங்காரமா? உன் விருப்பத்தை என் மேல் திணிக்காதே என்பது அகங்காரமா?
Read 5 tweets
19 Oct
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட், மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்து இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய சிந்தனையாளர்களில் ஒருவர்.
சிக்மண்ட் பிராய்ட் வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி - மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(