நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட், மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்து இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய சிந்தனையாளர்களில் ஒருவர்.
சிக்மண்ட் பிராய்ட் வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி - மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார்.
கனவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். ‘உள்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு’ என்றார். தன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சைகள் முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதியுள்ளார்.உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அல்ல.
அது தொடர்ந்து மாறுவது என்றார். அதை உயிரோட்டமுள்ள உளவியல் (Dynamic Psychology) என்றார். இது அவரது முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இயக்கவியல் விதிகளை மனிதனின் ஆளுமைக்கும் அவனது சிகிச்சைக்கு கூட பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தது இவரது மிகப் பெரிய சாதனை.
மனநல மருத்துவத்துறையில் இது ஒரு மைல்கல் கண்டுபிடிப்பாகும். பாலியல் விருப்பு என்பது மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என்றார். கவிஞர்கள், சிந்தனையாளர்களுக்கு ஆழ்மனதின் தாக்கம் அதிகம் என்பதையும் கண்டறிந்து கூறினார். இவரது பெயர் இல்லாத உளவியல் புத்தகத்தை பார்க்க முடியாது.
Oedipus complex இவரது சர்ச்சைக்குரிய மற்றும் பிரபலமான தியரி. இதைப்பற்றி தனது Interpretation of Dreams (1899) என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இடிபஸ் காம்ப்பிளக்ஸ் (Oedipus complex) என்பது குழந்தைகளுக்கு எதிர் பாலின பெற்றோரிடம் ஏற்படும் அளவுக்கு அதிகமான அன்பாகும்.
இதனால் சிறுவர்கள் தந்தையிடம் வெறுப்பும் தாயுடன் கண்மூடித்தனமான அன்பும் காட்டுவர். சிறுமிகள் தாயிடம் வெறுப்பும் தந்தையிடம் கண்மூடித்தனமான அன்பும் காட்டுவர். காமத்தை அடிப்படையாகக் கொண்ட உளவியல் சிக்கல் இது.
2 வயதுக்கும் 5 வயதுக்கும் இடையேயான பருவத்தில் இது ஏற்படுகிறது. பின்னாட்களில் வரும் பலவிதமான உளவியல் சிக்கல்களுக்கு இது அடிப்படையாக அமைகிறது. இந்த Oedipus complex இன் பெயர் காரணம் ஒரு கிரேக்க கதை அதை கொஞ்ச நேரத்துல சொல்றேன்... 🤪

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

5 Oct
Pangea:

280-230 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்போது இருக்கும் எல்லா கண்டங்களும் ஒன்றாக ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அதுதான் Pangea.
பூமி தட்டுகள் ( tectonic plates) அசைவாலும், எரிமலை வெடிப்புகளாலும் அந்த ஒரே நிலப்பரப்பு மெல்ல மெல்ல பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பிரிந்து தனி தனி கண்டங்களாக ஆனது. இந்த நிகழ்வை சில இறையாளர்கள் பூமி ஒரே நிலப்பரப்பாக இருக்கும்போது அதன் மைபுள்ளியாக இருந்தது தற்போதைய middle East தான்.
அதனால் தான் எல்லா prophet உம் Abrahamic religion உம் அங்கு உருவானது. அங்கு இருந்துதான் மக்கள் பிரிந்து சென்றார்கள் அது babel கதையை நிறுவுகிறது என்கிறார்கள். ஆனால் இது சாத்தியமற்றதே. ஏனென்றால் Pangea இருந்தது 280-230 மில்லியன் வருடங்களுக்கு முன்பு.
Read 6 tweets
24 Sep
ஐசக் அசிமோவ் பேரன் டா...

இந்த வரி எந்திரன் படத்தில் வரும் ராஜாளி பாடல் வரி. ரோபோ சம்பந்தபட்ட கதைகள் படித்தவர்கள், படம் பார்த்தவர்களுக்கு அசிமோவின் மூன்று ரோபோடிக்ஸ் விதிகள் பரிச்சயம் ஆகி இருக்கும்.
1. ரோபோ ஒரு மனிதனுக்கு எந்தத் தீங்கும் இழைக்கலாகாது. தனது செயலற்ற தன்மையால் தீங்கும் நேரும்படியும் செய்யகூடாது.

2. முதல் விதிக்கு முரண்படாத வகையில் ரோபோ மனிதனின் உத்தரவுக்கு இணங்க வேண்டும்.

3. முதல் இரண்டு விதிகளுக்கு உட்பட்டு ரோபோ தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று விதிகளை வகுத்த ஐசக் அசிமோவ், அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடி. ரஷ்யாவில் பிறந்த இவர் 5 வயதில் தானாகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார்.

11 வயதில் கதை எழுதினார்.
Read 9 tweets
18 Sep
Jacob பையன் Joseph அ அவனோட brothers Egypt க்கு அடிமையாக வித்துறுவாங்க ஆனா அங்க இருந்த Pharoah கிட்ட நல்ல பேரு வாங்கி அவரு நல்ல position க்கு வந்துடுவாரு. அப்புறம் ஒரு பெரிய பஞ்சம் வரும் Joseph அவரு சொந்தக்காரங்க எல்லாரையும் Egypt க்கு வாங்க நான் இங்க நல்ல நிலைமையில் இருக்கேன்
உங்க எல்லாரையும் பார்த்துக்கறேன் அப்படினு கூப்பிடுவார். இதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஒரு தனி thread ஆ போடுறேன். அங்க போய் இந்த Israelites பல்கி பெருகிடுவாங்க. ஜோசப் செத்து போய்டுவாரு அவர support பண்ணுன Pharoah வும் செத்து போய்டுவாரு. புது Pharoah வந்து என்னடா இது நம்ம நாட்டுல
இந்த Israelites ஜன தொகை இவளோ அதிகமாக போச்சே விட்டா நம்மள ஓரம்கட்டி நாட்ட இவங்க கைபற்றிடுவாங்க போல அப்படினு அவங்கள கொடுமை படுத்துனது மட்டும் இல்லாம புதுசா பிறக்குற பிள்ளைங்க எல்லாம் கொன்னு போடுங்க என்று order போட்டாரு. இதுக்கு பயந்து மோசஸ் அம்மா மோசஸ் அ ஒரு பெட்டியில் வச்சு
Read 6 tweets
18 Sep
எல்லா அறிவியல் பெயர்களும் லத்தீன் ல தான் வைக்கப்படும்.
காரணம் ஒரு பொது பெயர் அவசியமா இருக்கு செம்பருத்தி பூவோட குணாதிசியங்கள் பற்றி ஒரு அறிவியலார் விளக்குறார்.
இன்னொருவர் மந்தாரா பூவோட குணாதிசியங்கள் பற்றி விளக்குறார் ரெண்டுமே ஒரே பூ தான், ஆனா வேற வேற பெயர் என்பதால் குழப்பங்கள் வரும். செம்பருத்திக்கு தெலுங்கு ல மந்தாரா அனால் தமிழ்ல இருவாட்சிக்கு மந்தாரை அப்படினும் சொல்லுவாங்க.
இது போன்ற குழப்பங்களை தவிர்க்க உலகம் எங்கும் ஒரே பொது பெயர் தேவை பட்டது அதுதான் Scientific name. செம்பருத்திக்கு Hibiscus rosa-sinensis.
Read 8 tweets
16 Sep
Time travel லில் இரண்டு வகை உள்ளன. ஒன்று எதிர்காலத்திற்கு பயணிப்பது. மற்றொன்று இறந்த காலத்திற்கு பயணிப்பது.

நீங்கள் விண்வெளிக்கு சென்று அங்கு light speed க்கு ஈடான வேகத்தில் பயணித்தீர்கள் என்றால், உங்களுக்கு நேரம் மெதுவாக செல்லும். பூமியில் நேரம் வேகமாக செல்லும்.
நீங்கள் திரும்பிவரும்போது பூமியில் பல வருடங்கள் ஓடி இருக்கும். ஆக நீங்கள் எதிர்காலத்தை வந்து அடைவீர்கள்.

Black hole அருகே நீங்கள் இருந்தால், நேரம் அங்கே மெதுவாக தான் இயங்கும். ஆகையால், நீங்கள் பூமிக்கு திரும்பி வரும்போது உங்களுக்கு சிறிய அளவிலான காலம் தான் கடந்து இருக்கும்.
ஆனால் பூமியில் பெரிய அளவிலான காலம் கடந்து போய் இருக்கும்.

இப்படியாக எதிர்காலத்திற்கு பயணிப்பது என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒரு விஷயமல்ல. சாத்தியமான ஒன்றாக தான் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.
Read 7 tweets
12 Sep
Book of Daniel (2 BCE)

இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
Read 34 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(